Friday, November 03, 2017






மனித குலம் கண்டெடுத்த 

அற்புத பூமி 

தமிழகம் ...!!!




மனிதகுலம் தோன்றியது ஆப்பிரிக்காவில் என்பது உறுதி செய்யப்பட ஒன்று . ஆப்பிரிக்க கிழக்கு  கடற்கரை வழியாக ஆதி மனிதன் வசிப்பிடம் தேடி அலைந்தான் .60000 ஆண்டுகளுக்கு முன்பாக புறப்பட்ட அவன் மத்திய தரைக்கடல் வழியாக வடக்கே சென்றான். 


ஒரு குழு கிழக்கே சென்றது.மத்திய ஆசியா,சீனம் என்று புலம் தேடி புறப்பட்டது ஒரு சிறு  குழு  கிழக்கே சென்று இந்தியா -தென்னிந்தியா என்று சென்றது .

தென்னிந்தியா வந்த குழு இங்கு ள்ள பூமி அதன் வெட்ப தட்ப நிலை ஆகியவற்றை உணர்ந்து இங்கேயே தங்கி விட்டது.

உலகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு இரண்டு முறை சூரியன் தலைக்கு மேலே வருகிறான். அதனால் இரண்டு கோடை  வருகிறது> இரண்டு கோடை  என்பதால் அதன் வெப்ப சலனத்தால் இரண்டு பருவமழை  கிடைக்கிறது . மிதமான கோடை ,பருவ மழை,மிதமான குளிர், என்பதால் எளிமையான உடுப்புகள் போதும். ஜீவ ஆறுகள், காடுகள் கனி மரங்கள், மலைப்பகுதி, கடற்கரை , வெப்பக்காடுகளின்மரங்கள், கனிமரங்கள் என்று செழிப்பான பூமி ! பசிக்கு இதமான மா,பலா,வாழை மரங்கள், மூன்றும்  கிடைக்கும் பூமி .


விவசாய பூமி . வேறெங்கும் எதற்கும் செல்லவேண்டிய தில்லை  என்று வளம் கொழிக்கும் இந்த பூமியை தேர்ந்தெடுத்த நமது பாட்டன்கள் தங்கள் அனுபவத்தை அறிவாக்கி நிரந்தரமாக இங்கேயே தங்கினான் .

இந்த பூமியை நாம் சென்னையாக,கடலூராக, நெல்லையாக மழை கால த்தில்  வெள்ளமாகவும் ,கோடைகாலத்தில்குடி  நீர் இல்லாமலும் மாற்றி இருக்கிறோம்.

நமக்கு மன்னிப்பே கிடையாது !!!


2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான், மன்னிப்பே கிடையாது.

'பரிவை' சே.குமார் said...

உண்மை ஐயா...
விவசாயத்தையும் தொலைத்து விட்டோம்.