Thursday, October 12, 2017







வேலை இன்மை ,ஆக்ரமிப்பு , 


இந்த இரண்டு வார்த்தைகளும் ,

ஐ. நா வால் வரையறைக்கப்படவில்லை !!!





இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும் ,1945ம் ஆண்டு வாக்கில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியது .இன்றுவரை வேலையின்மை என்றால் என்ன  ?  ஆக்ரமிப்பு என்றால் என்ன  ? என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இந்த சபையால் வரையறுக்கப்படவில்லை.


பொதுவாக ஒருநாட்டின் சகல மானவர்களுக்கும்  வேலை இருந்தால் அந்த நாடு நூறுசதம் வேலை வாய்ப்பு பெற்றதாக கருதப்படவேண்டும் என்று சோவியதோண்றியம் உட்பட பெரும்பான்மையான நாடுகள்றகூறி . ன.இதனை அமேரிக்கா மற்றும் அதனை ஆதரவு நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன . 70 % லிருந்து 800 % சத்தமிருந்தாலே அது முழுமையாக வேலை வாய்ப்பு அடைந்த நாடாக கருதப்பட்ட வேண்டும் என்று அவை கூறின .அப்போது தான் முதலாளி மார்களுக்கு , பேரம் பேச வாய்ப்புஉண்டு. இல்லையென்றால் தொழிலாளர்கள் கை  ஓங்கி விடும் என்பது அவர்கள் நிலையாக இருந்தது. இன்றும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த வேலையின்மை அப்படியே தொங்கி கொண்டிருக்கிறது . 


அதே போன்று ஆக்ரமிப்பு என்பதும் வரையாரைக்கப்படவில்லை. 


தென் அமெரிக்க நாடுகளில் தலையிட்டு அமெரிக்க செய்த அட்டூஷியம் உலகமறிந்த ஒன்று . தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டு அமேரிக்கா அதன்  வேண்டுகோளுக்கு இயங்க ஒருநாட்டில் நான் தலையிடுவேன். அது ஆக்ரமிப்பு அல்ல என்று கூறுகிறது. இதனை "மன்றோ வழிகாட்டுதல் " என்று கூ றி மார்தட்டுகிறது.   


சோஷலிசநாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க எந்த சக்தி முயற்சித்தாலும் அதில் தலையிட  மற்ற சோஷலிச நாடுகளுக்கு உரிமை உண்டு என்று சோவியத் ஒன்றியம் உறுதியான நிலை எடுத்தது . இதனை "பிரஸ்னோவ் வழிகாட்டுதல் " என்றும் அறிவித்து அன்று "டப்செக் " எதிர் புரட்சியை  அடக்கியது செஞ்செனை !


ஆக "ஆக்ரமிப்பு "  என்ற வார்த்தையும் வரையறுக்கப்படாமல்  தொங்கி கொண்டிருக்கிறது.


1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு ஐயா.