Monday, October 30, 2017







"மேலாண் மறை"  நாட்டிலிருந்து 

வந்த "அற்புதன் ".....!!!




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாடு நெல்லையில் நடந்தது . கேரளம்,மே .வங்கம், புது டில்லி என்று எழுத்தாளர்கள் வந்திருந்தனர்> அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் எனக்கு வந்தது . 


உருது இந்தி எழுத்தாளர் சங்கத்திலிருந்து தோழர் சஞ்ச்சல் சௌஹான் வந்திருந்தார். புது டில்லி பல்கலையில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருபவர் . வங்கம்,இந்தி எழுத்தாளர்களிடையே தமிழ் எழு த்தாளர் களைப்பற்றி  பேச்சு வந்தது> நானும் என்பங்கிற்கு  இளம்    எழு த்தாளர்களை பற்றி கூறினேன்.  


"பூக்காத மாலை " என்ற மேலாண்மையின் கதை பற்றி  விலாவாரியாக சொன்னேன். "தண்ணீர் எடுக்க குடத்துடன் குள த்திற்கு செல்லும் முப்பது வயது பெண் அவள். திருமணமாக வில்லை.. குளக்கரையில் ரௌடி ஒருவன் உட்கார்ந்து இருக்கிறான் .பயந்து கொன்டே அவள் நீறெடுக்க செல்கிறாள் . வரும் பொது கால் தடுக்க........." அந்த ரௌடி அவளை தாங்கி கொள்கிறான் . அவளை மறைவிடத்திற்குதூக்கி  சென்று  கெடுத்துவிடுகிறான். ஊர் பஞ்சாயத்தில் அவர்களுக்கு திருமணம் நடக்கிறது ........ " அவள் மெதுவாக வீடு  செல்கிறாள் 

கால்தடுக்கும் வரை நிஜம் . அதன் பிறகு நடந்ததாக அவள் நினை க்கிறாள்.நினைவோடை யுக்தியில் .எதுவும் நடக்க வில்லை. அப்படியாவது -ஒரு ரௌடியுடனாவது -தன திருமணம் நடக்காதா ? என்றார் அ ந்த கிராமத்து அபலையின் ஏக்கத்தை சித்தரித்த இந்த கதையை சொன்னதும் அந்த அகில் இந்திய எழுத்தாளர்கள் பேச்சு மூச்சின்றி   நின்றனர். அந்த எழுத்தாளர் வந்திருக்கிறாரா ?நாங்கள் பார்க்க வேண்டுமே என்று ஒரே குரலில் கூவினர் .


மேலாண்மைக்கு அடிக்கடி தலைவலி வரும். மேடைக்கு பின்னல் இருக்கும் திரை மறைவில் துண்டை விரித்து படுத்திருப்பார் . உணவு இடை  வேளை யின் பொது வந்த அந்த சின்னஞ்சிறு உருவத்தை காட்டி இவர் தான் அந்த "பூக்காத மாலை " கதையை எழு த்திய வர்  என்றேன். சஞ்சல் சவுகான் ஓடிச்சென்று அவரைத்தூக்கி எடுத்து முத்தமழை போழிந்தார் . அருகில் இருந்து இந்திவங்காளி,மலையாள  ஏன் இந்தியாவே அவரை மெசசி  கொஞ்சியது .

கல்கத்தாவில் இந்தி உருது எழுத்தாளர் அமைப்பின் மாநாடு. சங்கம் மேலாண்மையும் நானும் செல்ல வேண்டும் என்று பணித்தது .

மேலாண்மையின் கதைகள்,குறுநாவல்கள் பற்றி அவர்களோடு பேசினேன். பாவம் ! மேலாண்மை மொழி தெரியாதலால் " வே இத சொன்னேறா ! அதுசோன்னி ரா  ! " என்று கேட்டுக்கோ ண்டிருந்தார் . போபால்,குஜராத், ராஜஸ்தான்,டில்லி பிஹார் என்று இந்திய இடது சாரி எழுத்தாளர்கள் முன் மேலாண்மை ஜொலித்து நின்ற காட்ச்சியை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.

செம்மலர் ஆசிரியர் குழுவில் அவர் பணியாற்றிய பொது அவரோடு நானும் பணியாற்றினேன் என்பது என் பாக்கியம்.


சாகும் வயதில்லையே ! பொன்னுசாமி !


என்ன அவசரம் !


அஞ்சலிகள் !!! !


Thursday, October 26, 2017






காஸ்யபனின் சிறுகதையும் ,


பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் ...!!!




சென்னை "கலைஞர்   நியூஸ் " தொலைக்காட்ச்சியில் பணியாற்றும் உமா அவர்கள்பத்து நாட்களுக்குமுன்பு நாகபுரி வந்திருந்தார்கள். அண்ணல் அம்பெத்கார் தீட்சை  பெற்ற இடத்தை பார்த்து அதுபற்றிய செய்திகளை சேகரிக்க வந்திடிருந்தார்கள். பது டில்லியில் இருக்கும் "வட க்கு வாசல் " பத்திரிக்கை ஆசிரியர் பென்னேஸ்வரன் நாகபுரியில்வசிக்கும் சத்தியமூர்த்தி (என் மகன்) பெயரை குறிப்பிட்டு உதவி ஏதாவது தேவைப்பட்டால் அணுகும்படி கூறி உள்ளார்.

உமா அவர்கள் கைபேசிமூலம் சத்யமூர்த்தியை  நாகபுரி வந்ததும் தொடர்பு கொண்டார்.அருகில் இருந்த என்னிடமும் பேசினார் . அம்பேத்கார் பற்றி "பேராசிரியர் சுப.வீ "ஒரு நூல் எழுதவிருப்பதாகவும் அதற்கு தான் கூ ட இருந்து ஒத்துழைப்பதாகவும் கூறினார். ஒய்வு நேரம் இருந்தால் வீட்டிற்கு வரமுடியுமா என்று அழைத்தேன் .அவரும் அவருடைய நண்பர் தேவேந்திரன் அவர்களும் வந்தனர்.

மிகவும் உற்சாகமான உமா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். பேராசிரியர் பற்றி மிகவும் பெருமையாக பேசினார் . "திராவிட இயக்கத்தின் அறிவார்ந்த மனிதர் . மிகசிறந்த படிப்பாளி. தேடல்மிகுந்த சிந்தனையாளர் .அவர் திறமைக்கும், நேர்மைக்கும் இன்னும் உயரத்திற்கு போக வேண்டியவர்  , " என்று என் பங்குக்கு நான் கூறினேன்.

நான் எழுதிய   சில நூல்களை உமா அவர்களிடம் கொடுத்தேன் . வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு புறப்பட்டார்.மறுநாள் மதியம் கைபேசி மூலம் தொடர்பு கொண்டார் . என் "கருகமணி " தொகுப்பை பிடித்ததாகவும் அதில் உள்ள "அவளும் அந்த அவளும்  " கதையைப்பற்றி மிகவும் உயர்வாக புகழ்ந்து பேசினார் .இந்த புத்தகங்களை பேராசிரியர் "சுப.வீ " அவர்களிடம் கொடுக்க விருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சென்ற வாரம் யூ டியூபில்  தமிழ் அலைவரிசைகளில் வரும் சர்ச்சை  களை  பார்த்துக்கொண்டிருந்தேன். "சுப.வீ " அவர்களின் நிகழ்ச்சி . கை பேசி   அழைத்தது . நம்பமுடியவில்லை. "சுப.வீ " அவர்களே அழைத்தார்கள். "கருகமணி " தொகுப்பை படிதேன் . ஐந்து ஆறுகதைகளை படித்தேன். சிறப்பாக உள்ளது குறிப்பாக "அவளும் அந்த அவளும் " கதை மிகவும் நன்றாக வந்துள்ளது . "கலைஞர்   டிவி யில் அதுபற்றி பேசலாம் என்றிருக்கிறேன். என்றார் . 

அறிவார்ந்த அந்த மனிதரின் பாராட்டை விட அவரின் பெருந்தன்மை என்னை வியந்து போற்றவைத்தது..


இன்று காலை எனக்கு மின் செய்தி  வந்தது .


"காலம் தாழ்ந்து  விடை அனுப்புவதற்கு மன்னிக்கவும்.நவமபர் 3 வெள்ளிக்கிழமை  காலை  8.30 மணிக்கு,கலைஞர் தொலைக்காட்ச்சியில்  உங்கள் சிறுகதை குறித்து  பேசியுள்ளேன்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறிட வேண்டுகிறேன் "  


பேராசிரியர் சுப.வீ  அனுப்பிய செய்தி அது .


தோழர்களுக்கும், பதிவர்களுக்கும் ஒரு வேண்டு கோள் ! நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்களேன் .








"ராஜாஜி- பெரியார் "

நட்பும் ,அதன் உன்னதமும் ...!!!





"பெரியாரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அவரை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தவர் ராஜாஜி "  என்று பேராசிரியர் சுப.வீர பாண்டியன் ஒரு நிகழ்ச்சியில்   குறிப்பீட்டார்.  முற்றிலும் உண்மை .

பெரியாரின் மனைவியார் நாகம்மை அவர்கள் இறந்துவிட்டார். பிறப்பும் இறப்பும் யதார்த்தமானது. என்ற பெரியார் அழக்கூட இல்லையாம்.  ராஜாஜி இறந்து கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் எரியூட்டப்படும் பொது விக்கி விக்கி அந்த தொண்ணுறுவயது தொண்டு  கிழம் அழுத்தத்தைப்பார்த்து தலைவர்களே அதிர்ந்து போனார்களாம் .


பெரியார் நாத்திகர் ! ராஜாஜி நம்பிக்கை உள்ளவர் .  ஆனால் "பத்தாம்பசலித்தனமான் " நம்பிக்கை கொண்டவர் இல்லை .1930 ஆண்டுகளிலேயே தன மகளுக்கு  பிராமனர்  அல்லாதவரோடு சாதி மறுப்பு திருமணம் செய்வித்தவர் .

அண்ணல் காந்தி அடிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ராஜாஜி. அவருடைய அரசியல் ஆலோசகரும் கூட . வட்டமேஜை மாநாட்டிற்கு தன்னோடு லண்டன் வரவேண்டும் என்று அண்ணல் ராஜாஜியை வற்புறுத்தினார் ,ராஜாஜியோ மறுத்து விட்டார் . "பாப்பான் கடல் கடந்து செல்லமாட்டான் " என்று பலர் ஏகாதிடியம் பேசினர் . பின்னாளில் 1963 வாக்கில் உலக சாமான இயக்கத்தின் தலைவர் பேட்ரண்ட் ரசல் உடன் இணைந்து அமேரிக்கா சென்று ஜான் கென்னடியை சந்தித்து அணு சோதனைகளை தடுக்க உதவும்படி கேட்டுக்கொண்டார்.

"raajaaji is a bundle of contradiction  and a mixer of confusion  "  என்பார்கள்..


1942ம் ஆண்டு காங்கிரஸ் கடசியிலிருந்து வெளியேறினார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்று தலைவர்களிடையே நம்பிக்கை துளிர் விட்டுக்கொண்டிருந்த நேரம். பாகிஸ்தான் பிரிவினை ஏற்றுக்கொண்டால் கிடைக்கும் .காங்கிரஸ் ஏற்கவில்லை. காங்கிரஸ் மாநாட்டில் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொண்டு , இந்திய சுதந்திரத்தை உடனடியாக பெறவேண்டு என்று ராஜாஜி தீர்மானம் கொண்டுவந்தார்தீர்மானம் தோற்றது .காங்கிரசை விட்டு வெளியேறினார் .


1945ம் ஆண்டு மீண்டு காங்கிரசில் சேர்ந்தார் . மவுண்ட் -   பாட்டனுக்கு பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஆனார். 


ராஜாஜியின் பிராமண அடிவருடிகள் அவர் ஒரு சாணக்கியர் என்று பெருமை பேசுவார்கள். பெரியாரின் நாத்திக கடசியின் பெருமையை  உடைக்க அவருக்கு இரண்டாவது திருமண ஆசையை வளர்த்து சிதறடித்தவர் ராஜாஜிதான் என்று வக்கனை பேசுவார்கள்.

உண்மை இதற்கு நேர்ர்மாறானது . பெரியார்- மணியம்மை திருமணம் நடந்த பொது ராஜாஜி கவினர் ஜெனரலாக இருந்தார். கவர்னர் ஜெனரல் தனிநபர் விஷயங்களில் தலையிடக்கூடாது என்பது பிரிட்டிஷ் மரபு.

ஆப்த நண்பர் பெரியாரின் இரண்டாவது திருமணம் அவருடைய பெருமையையும், கடசியின் மதிப்பையும் குலைத்துவிடும் என்று ராஜாஜி கருதினார். நண்பரை காப்பாற்ற முடியாமல் " தடுக்கிறதே மரபு " என்று மாய்ந்தார் .மரபா ? நண்பனா? என்ற நிலையில் நன்பன் என்று முடிவெடுத்தார் . "இரண்டாம் திருமணம் வேண்டாம் " என்று குறிப்பிட்டு அதற்காரணங்களையும் சொல்லி ரகசியமாக கடிதம் எழுதினார்.

பெரியார் என்ன காரணத்தாலோ அதனை  ஏற்கவில்லை .  திருமணம் நடந்ததும், திராவிடர் கழகம்  உடைந்தும் வரலாறாயிற்று.

தி ..க , திமுக வினரில் பலர் ராஜாஜியின் சதிதான் என்று மனதார நமபினார்கள். ராஜாஜியும் மவுனம் சாதித்தார். 


பெரியாரும் இதற்கு ராஜாஜி காரணமல்ல என்று தெரிந்துமவுனம் சாதித்தார் .


ஒரு இந்தியன் தன்  ஆப்த நன்பன்  பெருமைக்கு  உரிய  பதவியை அலங்கரித்தவன் "மரபை " மீறினான்  என்ற அவப்பெயர்  வரக்கூடாது என்பதற்காக பெரியார் ரகசியம் காத்தார்.


இந்த  ஒப்பற்ற இரண்டு தலைவர்களிடையே மலர்ந்த நட்பு உன்னதமானதாகும் .


Sunday, October 22, 2017






இஸ்லாமியர்கள் உருவாக்கிய ,

பஜனை பாடல்கள் ...!!!






1952ம் ஆண்டு " பாய்ஜூ  பாவ்ரா " என்ற இந்தி திரைப்படம் வந்தது . அஃபரின் தர்பாரில் தான் சென் கொலோசிக்கொண்டிருந்த காலம் அது. மிகசிறந்த பாடகர் ஒருவர் இறந்து விடுகிறார் தான்சேன் தான் தனக்கு போட்டியாக வருவார் என்று நினைத்து அவரை கொன்றுவிட்டதாக அவரிடைய பதின்ம வயது மகன் கருதுகிறான் .அக்பரின் தர்பாரிலேயே தான் சன் நை வென்று காட்ட சபதம் கொள்கிறான். வென்றும் காட்டுகிறான்.

அந்த இளைஞன் தான் பாய்ஜூ .அவனை கவுரி  என்ற பெண் காதலிக்கிறாள். 


பரத் பூஷன் மீனா  குமாரி  நடித்த இந்த படம் மிகசிறப்பாக பேசப்பட்ட ஒன்றாகும்.

பாய்ஜூ  பாடும் பாடல்கள் போன்று இன்றுவரை எவரும் எழுதவில்லை .எவரும் பாடவில்லை.எவரும் இசை அமைக்க வில்லை.

"கங்கா கி மௌஸிமே "என்ற அந்தப்பாடலை எத்தனை லட்சம் தடவை கேட்டாலும் திகைக்காது


அதே போன்று தான் "பகவான்-பகவான்- பகவான் -!  துனியா கே ரகவாலே " என்ற பாடல். .

"ஹரிதர்ஷன் கோ " என்ற பஜனை பாடல் ஊனை  உருக்கிவிடும். 


இந்த பாடல்களின் மகத்துவம் என்ன தெரியுமா ?

இதற்கான பாடலை எழுதியவர் ஷகீல் பாதயுனி !


இந்த பாடலை பாடியவர் முகம்மது ரஃபி !


இதற்கு இசை அமைத்தவர் நவுஷாத் !!!


மூவரும் பத்திரிகையாளர்களிடம் பின்னாளில் "ஆண்டவன் கருணையால் தான் எங்களால் இப்படி அமரத்துவம் வாய்ந்த பாடல்களை கொடுக்க முடிந்தது . " என்று கூறினார் .

திரைத்துறை ஆரம்பகாலத்திலிருந்தே இணக்கமாக செயல்பட்டுக்கு கொண்டுதான் இருக்கிறது .

"ஜோசப் விஜய்" என்று  கிறுக்குத்தனமாக கூறியதால் ஒன்றும் ஆகிவிட போவதில்லை.!!!



Friday, October 20, 2017







மக்களவை தேர்தலும் ,



நாட்டு  நடப்பும் ...!!!









மக்களவை தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் உள்ளன .ஆளும் பாஜக அதற்கான காய்களை இப்போழுதே நகர்த்த ஆரம்பித்து விட்டது . குஜராத் தேர்தல் அதன் அடிவயிற்றில் பயத்தை கிளப்பியுள்ளது. 

வளர்சசி வளர்சசி என்று முழம் போடும் பிரதமர் அங்கு வளர்ச்சி பற்றி பேசவில்லைஇதுவரைஎந்தபிரதமரும்பேசாதஇனமோதல்களை தேர்ந்தெடுத்து பேசுகிறார் . "காங்கிரஸ் கடசி குஜராத்திகளுக்கு விரோதமானது.சர்தார் படேல், மொரார்ஜி தேசாய் ஆகிய குஜராத்திகளை அகிலஇந்தி அளவில் வரவிடாமல் தவிர்த்தவர்கள் நேருவும் இந்திராகாந்தியும்" என்று வக்கணை  பேசுகிறார்.

குஜராத் மக்கள் குறிப்பாக ,படேல் வகுப்பினர், தலித்துகள், மற்றும் சிறு பான்மையினர் பா.ஜ .க வின் மோசடியான பேச்சினை  நம்பத்தயாராகயில்லை . 20 ஆண்டு பா.ஜ.க  ஆடசி யில் 2லட்சம் கோடி கடன் என்று ஆனது தவிர மக்கள்நல திட்டங்கள் எதுவும் வரவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர் .சமீபத்திய வரி ஏற்றம் , பணமதிப்பு , ஆகியவை சிறு குறு தொழில்களை பாதித்து சாதாரண  மக்களை ஓட்டாண்டியாக்கி உள்ளது . இந்த சந்தர்ப்பத்தில்  வளர்ச்சி பற்றி பேசுவது எடுக்காது என்பதை மோடி அவர்கள் உணர்ந்தே இருக்கிறார் . அதனால் தான் குஜராத்மாக்களின் இன  உணர்வை தூண்டும் வகையில் பேச ஆரம்பித்துள்ளார்.



பொது வாக குஜராத் தேர்தல் முடிவுகள் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் முன்னோடி என்றே அரசியல் பார்வை யார்கள் கருதுகிறார்கள்.

வட கிழக்குமாநிலங்களில் கவர்னரின் உதவியோடு ஆட்சியை பிடித்த பா.ஜ.க காங்கிரஸ் எம் எல்  ஏ க்களை விழு ங்கியது செரிமானம் ஆகாமல்   வயிறு பொருமி தவித்துக்கொண்டு இருக்கிறது .

பஞ்சாப், கையை விட்டு போய்விட்டது . பசு வட்டம் என்ற  பகுதியில் ராஜஸ்தான்.ம பி , உபி  ன் நிலைமை எங்கு சாயும் என்று தெரியாமல் "வியாபம் " ஊழல் தலை விரித்து பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.



அமித் பாய் ஷா பா.ஜ.கவின் தலைவராக்கினதை  ஏற்க முடியாதவர்கள் "அமித் பாய் இந்து அல்ல " ."அவரை ஏன் தலைவராக்கினாய் " என்று முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் .அவர்மகன் ஜெய் ஷாவின் ஊழலை  வெளிக்கொண்டு வந்ததே இவர்கள் தான்.

இந்த லட்சணத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பு ஏடாகூடமாக எதுவுமாகிவிடக்கூடாது என்பது மோடி-ஷா இருவரின் பொது கவலை .

அவர்கள் கடசிக்குள் எந்தவித சமரசத்திற்கு தயாராகி விட்டனர். மோடி ஷாவை கைகழுவ தயார் .ஆர்.எஸ்.எஸ் தலைமை ஜெய் பற்றி விசாரணை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது இதன்  எதிரொலி தான் .

இவ்வளவு  சோதனைகள் இருந்தும் எதிர்க்கட்ச்சிகளால் மோடியையோ,பா.ஜ.க வையோ 2019 ஆண்டு மக்களவைதேர்தலில்  சந்திக்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.



"முடியாது " என்றுதான் நடு நிலையாளர்கள் கருது கிறார்கள்.



எதிர்க்கட்ச்சிகளுக்கு அகில  இந்திய அளவில் மோடிபோன்று அறிமுகமான தலைமை இல்லை ! அவர்களிடையே அப்படி ஒரு தலைமையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை . முலாயமும்  அகிலேஷும், லல்லுவும், சரத்தும்  , என்று ஒன்றாக சிந்திப்பது என்று ஒருசக்தியாக மாறுவது என்று திகைக்கிறார்கள்.

எதிர்க்கட்ச்சிகளின் பலவீனம் தான் மோடிக்கு உள்ள வாய்ப்பு !!!

Monday, October 16, 2017







நாடாளுமன்ற ,


சட்டமன்ற , 


தேர்தல்கள் ...!!!





இந்தியா சுதந்திரமடைந்ததும் 1952ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு ,சட்டமனறத்திற்கும்  ஒரேசமயத்தில் தேர்தல் நடந்தது. 1967மாண்டுவரை இதேமுறையில் நடந்துவந்தது . ஆனால் 1971ம் ஆண்டு இதனை மாற்ற யோசனைகளை வந்தன . நாடாளுமன்ற தேர்தலின் பொது தேசிய அளவில் விவாதங்கள்  உருவாக்கிமுடிவுகள் எடுக்கப்படவேண்டும் அதனால் அதன் சட்டமன்ற தேர்தல்களோடு சேர்க்கவேண்டியதில்லை என்று சொல்லப்பட்டது. இதனை விவாதத்திற்கு கொண்டுவந்த காங்கிரஸ் கடசியின் நிலயை திமுக ஆதரித்தது. ஆனால் இதற்குப்பின்னால் இரண்டு கடசிகளின் சுய நலனே முன் நின்றது .


1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பொது காங்கிரசை எதிர்த்து காங் (ஓ )லோக்தளம்,சோஷலிஸ்டுகள்,ஜெகஜீவன்ராம் கட்சி என்று பலகட்சிகள் நின்றன. இந்திரா அம்மையார்    தலைமையில் இருந்த காங்கிரஸ் தோற்றது. மொரார்ஜி யும்  சரண்சிங்கும்  9 மாநிலங்களில் இருந்த இ.காங் அரசுகளை நீக்கும்படி ஜனாதிபதியை கேட்டுக் கொண்டனர். அவசரநிலைக்காலத்தில் செய்த குற்றங்களுக்கு இந்த மாநில அரசுகளும் தண்டிக்கப்படவேண்டும் என்பது அவர்களுடைய வாதம். அதனால் 9 மாநிலங்களுக்கு 1978ம் ஆண்டு தேர்தல் நடத்தவேண்டுய நிலை  ஏற்பட்டது.

இதன் பிறகு நடந்த தேர்தல் எப்போது எப்படி நடக்குமென்று சொல்லமுடியாதநிலை தோன்றியது . பல்வேறு மாநிலங்களில் பலவகையான கட்சிகள்  உருவாகின .அவை இன்றிமையாதவை யாகவும் தோன்றின. மத்தியில் பலம் குறைந்த ஆட்சி  ( கூட்டணி )  வரலாயிற்று. 

2014ம் ஆண்டு தேர்தலில் இந்தநிலையை மக்கள்மாற்றினர். பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் ஆட்ச்சியை கைப்பற்றியது. மாநிலங்களில் வேறு கட்சிகள் ஆட்ச்சியை பிடித்தன .


நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் எதிர்க்கட்ச்சிகள் இணைந்து பா.ஜ.கவை  சந்திக்கும் நிலை ஏற்படலாம் . அதன் "பத்தாம்பசலி " கொள்கையை அனுபவித்த மக்கள் எதிரகடசிகளை  ஆதரிக்கும் வாய்ப்பு அதிகமாகிக்கொண்டு வருகிறது.இதனை  கண்டு கொண்ட பா.ஜ.க, ஆர் எஸ் எஸ்  தலைமை நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்று ககூ வ ஆரம்பித்து விட்டது  .அவர்கள் ஆதரவு தேர்தல் கமிஷனும்  நாங்கள் தயார் என்கிறது.

சட்டமன்ற தேர்தலில் உள்ளூர் சண்டியர்களை மோதவிட்டு நாடாளுமன்றம்  பற்றிய விவாதத்தில் தான் தப்பி விடவேண்டும் என்று கருது கிறார்கள்.

பாஜ.க வின் இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கடசி எதிர்க்கிறது.திரிணமுல் காங்கிரஸ்,மற்றும்சில கடசிகள் எதிர்க்கின்றன. திமுக,தெலுங்கு தேசம், இன்னும் சில கடசிகள் ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.


பாஜக.வின் கூட்டணியில் உள்ள சிலகாட்சிகள் எதிர்ப்பதால் மோடியும், அமிடன் ஷாவும் பம்முகிறார்கள். 


நாடாளுமனற ,சட்டமன்ற தேர்தலை ஒரே சமயத்தில் நடத்துவதில் மூலம்,எதிர்க்கட்ச்சிகள் ஒன்றுபடாமல் செய்யவும்,அவர்களுக்குள் அடித்துக்கொண்டு அந்த அமளியில் தன வெற்றியை சாதிக்கவும் பா.ஜ .க திட்டமிடுகிறது .


Thursday, October 12, 2017







வேலை இன்மை ,ஆக்ரமிப்பு , 


இந்த இரண்டு வார்த்தைகளும் ,

ஐ. நா வால் வரையறைக்கப்படவில்லை !!!





இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும் ,1945ம் ஆண்டு வாக்கில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியது .இன்றுவரை வேலையின்மை என்றால் என்ன  ?  ஆக்ரமிப்பு என்றால் என்ன  ? என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இந்த சபையால் வரையறுக்கப்படவில்லை.


பொதுவாக ஒருநாட்டின் சகல மானவர்களுக்கும்  வேலை இருந்தால் அந்த நாடு நூறுசதம் வேலை வாய்ப்பு பெற்றதாக கருதப்படவேண்டும் என்று சோவியதோண்றியம் உட்பட பெரும்பான்மையான நாடுகள்றகூறி . ன.இதனை அமேரிக்கா மற்றும் அதனை ஆதரவு நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன . 70 % லிருந்து 800 % சத்தமிருந்தாலே அது முழுமையாக வேலை வாய்ப்பு அடைந்த நாடாக கருதப்பட்ட வேண்டும் என்று அவை கூறின .அப்போது தான் முதலாளி மார்களுக்கு , பேரம் பேச வாய்ப்புஉண்டு. இல்லையென்றால் தொழிலாளர்கள் கை  ஓங்கி விடும் என்பது அவர்கள் நிலையாக இருந்தது. இன்றும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த வேலையின்மை அப்படியே தொங்கி கொண்டிருக்கிறது . 


அதே போன்று ஆக்ரமிப்பு என்பதும் வரையாரைக்கப்படவில்லை. 


தென் அமெரிக்க நாடுகளில் தலையிட்டு அமெரிக்க செய்த அட்டூஷியம் உலகமறிந்த ஒன்று . தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டு அமேரிக்கா அதன்  வேண்டுகோளுக்கு இயங்க ஒருநாட்டில் நான் தலையிடுவேன். அது ஆக்ரமிப்பு அல்ல என்று கூறுகிறது. இதனை "மன்றோ வழிகாட்டுதல் " என்று கூ றி மார்தட்டுகிறது.   


சோஷலிசநாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க எந்த சக்தி முயற்சித்தாலும் அதில் தலையிட  மற்ற சோஷலிச நாடுகளுக்கு உரிமை உண்டு என்று சோவியத் ஒன்றியம் உறுதியான நிலை எடுத்தது . இதனை "பிரஸ்னோவ் வழிகாட்டுதல் " என்றும் அறிவித்து அன்று "டப்செக் " எதிர் புரட்சியை  அடக்கியது செஞ்செனை !


ஆக "ஆக்ரமிப்பு "  என்ற வார்த்தையும் வரையறுக்கப்படாமல்  தொங்கி கொண்டிருக்கிறது.


Monday, October 09, 2017






பா . ஜ . க  -

குறுக்கு ஒடிந்த 

விஷ பாம்பு ...!!!




கோடை  விடுமுறையில் நாங்கள் எங்கள் கிராமத்திற்கு செல்வோம். கிராமத்திலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மைல்  துரத்தில் தாமிரவருணி ஆறு ஓடிக்கொண்டிருக்கும் .  சிறுவர்களாகிய எங்களை ஆற்றில் சென்று குளித்துவர சொல்வார்கள். 

வெள்ளி,செவ்வாய், அமாவாசை,மாசப்பிறப்பு என்றால் விடிவதற்கு முன்பே எழுப்பி ஆற்றுக்கு போக எழுப்பி விடுவார்கள்.நாங்களும் கப்பி சாலையில் புழுதி பறக்க  விளையாடிக்கொண்டே செல்வோம் . பாரவண்டிகள் சென்று நொண்டும்  நொடியுமாக சாலை இருக்கும்.

இருபுறமும் வயல் வெளி. சாலையின் பக்கமாக இரண்டு புறமும் தென்னைமரங்களிருக்கும்.அருப்புமுடிந்த வயல்கள் வெரிச்சோடி  இருக்கும் .

விடிவதற்கு முன்பே கிளம்பிவிட்டால்  தாத்தா எச்சரிப்பார் ! " ஏல ! பாத்து   போங்கல ! ரோட்ல  குறுக்கு   ஒடிஞ்ச  பாம்பு  கிடக்கும் !  சாக்கிரதை  !" என்பார்.

    காய்ந்த வயக்காட்டில் இறை கிடைக்காதபாம்புகள்ரோட்டைத்தாண்டி வந்து தவளை,எலியை  விழுங்கும் . வேகமாக ஊர்ந்து  செல்லமுடியாமல் சாலையின்  குறுக்கே கிடக்கும் . பாரவண்டிகளின் சக்கரத்தில் அடிபட்டு குறுக்கு ஒடிந்து     ரோட்டில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ,இதில் விஷ பாம்புகள் என்றால் அதிர்வுகளை உணர்ந்து சீரிக்கொண்டிருக்கும் .அருகில் சென்றால் கொத்திவிடும்.

எங்கள் செட்டில் "சுப்பா "  பெரியவன் . "ஏல !சுப்பா  ! கைல  ஒரு குச்சி வச்சுக்க ! பாம்பு சீ ரித்துநா  குச்சியால   தூக்கி  " வாருகால்ல "  போட்டுடூ " என்பார்  .


குறுக்கொடிந்த விஷ பாமபை வாருகாலில்  தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது .!!!


  

Sunday, October 01, 2017






"காலந்தோறும் ,


தர்ம நியாயங்கள் ....!!! "





மனிதன் தோன்றிய போதே சமூகமனிதனாக உருவாகவில்லை. தாங்கள் மனிதர்கள் என்ற பிரக்ஞை  கூட  இல்லாமல் இருந்தார்கள். சிறுத்தை போல ஒருவருக்கொருவர் சிறுவதும்,நாய்களைப்போல கடித்துக் குதறுவதுமாகவே இருந்திருக்கிறாரகள் . எந்தவித கட்டுப்பாடு,நியா தர்மங்கள் பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.


அப்போது தான் அவர்களிடையே ஒரு மகான் தோன்றினார்.நாம் காட்டுமிராண்டிகளல்ல.நாம் கடவுளின் குழந்தைகள்.நமக்கு என்று  வகுத்த வழியில் வாழ்வோம் என்று உபதேசித்தார்


அந்தமகான் தான் ஆபுறகாம்   .

 உபதேசங்களை பலர் ஏற்றனர். கொஞ்சம்  கொஞ்சமாக  இவர்கள் வளர்ந்தனர். ஒருகட்டத்தில் இவர்கள் பேரவாரியாகவுக் நம்பிக்கையாளராகினர் .நம்பிக்கையற்று ஆப்றக்காமை ஏற்காதவர்கள் காட்டுமிராண்டிகளாக திரிந்தனர்.


அவர் காலத்திற்கு பிறகு நம்பிக்கையாளர்கள் தங்களை மேம்பட்டவர்களாக கருதிக்  கொண்டு  மற்றவர்களை அழித்து தாக்க ஆரம்பித்தனர்.இது அன்றய தர்மமாக கருதப்பட்டது.


இந்த நிலையை போக்க ஒருமகான் தோன்றினார். இனகு ழு  க்களாகஇருந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் கூட்டம் கூட்டமாக அடித்து சாவதை தடுக்க விரும்பினார்.ஒரு குழு வை சேர்ந்தவன்  செய்த தவறுக்காக அந்தக்வைகுழுவையே  கொன்று குவிப்பது தவறு  என்று போதித்தார் ."ஒருவன் உன் கண்ணை காயப்படுத்தினால் அவன் கண்ணை சேதப்படுத்து. ஒருகண்ணுக்கு  ஒருகண்.ஒருக்காலுக்கு  ஒருகால் " என்று உபதேசித்தார் . அவர்தான் "மோசஸ் ". சில நூற்ராண்டுகல் கடந்தன.


மீண்டும்  ஒருமகான் தோன்றினார். "உன் எதிரியையும் நேசி>ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு.அமைதிவழி அகிம்சை வழியில் செல் " என்றார். அவர்தான் ஏசுபிரான்.

மனித வாழ்க்கையின்  உன்னதமான வழிமுறையை மனிதகுலம் கண்டெடுத்தது. ஆனால் வாழ்க்கையில் கடைப்பிடிக்க கடினமாக இருந்தது. அதில் ஒரு சிறு மாறுதலை கொண்டுவந்து அமைதி மார்க்கத்தை கொடுத்தார் மகான் நபிகள்நாயகம்.

ஆயிரம் ஆண்டுகளாகி விட்டது.இந்தமாற்றங்கள் ஏற்பட்டு 


அமெரிக்காவிலிருந்து ஜோன் என்ற தத்துவமேதை இந்தியாவந்தார்> இங்கேயே ஆசிரமம் கட்டி வாழ்ந்தார் .காந்தி அடிகளின் உபதேசங்களைக்கேட்டார்> ஆசிரமம் அமைத்து இங்கேயே தங்கினார்

காந்தியோடு விவாததித்தார் " காந்தியிடம் "ஐயா 1 உங்கள் அஹிம்ஸை வழியில் புதியதாக என்ன இருக்கிறது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏசுபிரான் உன் எதிரியையும் நேசி "என்று கூறிவிட்டார் ! அதைவிட நீங்கள் என சொல்லப்போகிறீர்கள். " என்று கேட்டார்.

அண்ணல் கைராட்டையை சுற்றிக்கொண்டு இருந்தார்>மெதுவாக நிமிர்ந்து ஜோன் அவர்களை பார்த்தார் .தூரத்து  அடிவானத்தை பார்த்துக்கொன்டே கூறினார் '

"எங்கண்ணுக்கு எதிரி யாருமே தெரியவில்லையே ! நான் என்ன செய்ய ? !"என்றார் அண்ணால்காந்தி அடிகள்