Friday, September 01, 2017







"காலமும் ,கடவுளும் ...!!! "





"காலம் என்றால் என்ன ? "என்று அறிவியல்ரீதியாக தெரிந்து கொள்ள முயன்றே.ன் ! அந்த முட்டு சந்தில்  கடவுளைப்பற்றியும் புலப்பட்டது.

"காலம் என்றால் என்ன ? what is Time ? It is an intervel between two phenamena "என்கிறது அறிவியல்.

"காலம் என்பது இரண்டு சம்பவங்களுக்கான இடைவெளி "


கட்டியாரத்தின் சின்ன முள்  1 லயிருக்கிறது .இது ஒரு சம்பவம்  . சின்ன முள் 2 ல் இருக்கிறது இதுவுமொருசம்பவம். இரண்டுக்குமான இடைவெளி ஒருமணி நேரம்.

நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.நீங்கள்பார்க்கிறீர்கள் .இது ஒரு சம்பவம். நான் இந்த பூமியில் பிறந்தேன் .அதுவுமொரு சம்பவம் இரண்டுக்கும் .இடைவெளி 82 ஆண்டுகள். 

காலம் எப்போது ஆரம்பமாகியது.? நான் பிறந்த போதா ? அதற்கு முன் என்தந்தை பிறந்தார் !அப்போதா ? என்பாட்டான் பிறந்த போதா ? அதற்குமுன் ...! நாயக்கர் காலமா? பிரிட்டிஷார் வந்தப்போதா? சேர சோழ பாண்டியர் காலமா? அசோகன் ஆண்டபோதா ? அலெக்ஸ்சாண்டர் வந்தப்போதா? காலம் எப்போது ஆரம்பமாகியது ?

தொடுவானம் போல் நீண்டு கொண்டே  இருக்கிறதே !எதை ஆரம்பம் என்று நினைக்கிறோமோ அது அதற்கு முந்தய சம்பவத்தின் முடிவாக இருக்கிறது எது ஆரம்பம் ? எது first ?

ஆங்கிலத்தில் காலத்தை மேலிருந்து கீழாக சொல்லும் பொது century  என்று ஆரம்பிப்பார்கள். பின்னர் year ! அதன் பிறகு month ,week ,day என்று குறைந்து கொன்டே வரும் . ஒருநாளை 24 மணிநேரமாக சொன்னார்கள்.அதனை hour  என்றார்கள். ஒருமணிக்கு 60 நிமிடம்- மிகக்குறைந்த கால அலகாக ஒரு நிமிடத்திற்கு 60 second என்கிறார்கள்.

60 first என்று வைக்கவில்லை. ஏனென்றால் எது first என்று நிர்ணயிக்க முடியவில்லை. அதனால் second என்று வைத்தார்கள்.


காலத்தின் ஆரம்பம் தெரியவில்லை .  முடிவு எப்போது?எது முடிவான சம்பவம் என்று நினைக்கிறோமோ அது முடிய போகும்  சமபவத்தின் ஆரம்பமாக இருக்கிறது.


ஆரம்பமும் முடிவும் தெரியாததாகஇருக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாமலிருக்கிறது.

நமது ஆன்மிக வாதிகள் ஆதியுமந்தமுமில்லாத அருள் ஜோதி என்கிறார்களே !


அறிவியலும் ஆன்மிகமும் சந்திக்குமிடமா இது ?


கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் பதில் கிடைக்காத கேள்வி !!!


0 comments: