Wednesday, August 23, 2017




"Resque  Operation "



"பா.ஜ.க  பாணி " 





அந்த நகரத்தில் கலவரம் நடந்து கொண்டிருந்தது . தொண்டர் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார் .

தூரத்தில் பெண் ஒருவர் ஒடி வந்து கொண்டிருந்தார்.ஆடைகள்  கலந்திருந்தது..அவரை நான்கு முரடர்கள் துரத்திக்கொண்டு வருகிறார்கள்


"அண்ணா ! என்னை காப்பாற்று ! இந்த காமுகர்களிடமிருந்து ! "என்று அந்த பெண் அலறிக்கொன்டே வந்தாள் !

தொண்டர் திகைத்தார் .அவளை காப்பாற்ற முடிவு செய்தார் . துரத்தி வருபவர்கள் நான்கு பேர். இவர் ஒருவர் .

ஒருகணம் யோசித்தார்.  அவரிடம் கை  துப்பாக்கியிருந்தது .அதில் ஒரே ஒரு குண்டு தான் பாக்கி இருந்தது.

ஆத்திரம் தாங்க முடியவில்லை !


இந்த பெண்ணின கற்பைகாக்க வேண்டும் !


அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயார்   ?


என்ன செய்யலாம் !


துப்பாக்கியை எடுத்தார் !


சுட்டார் !


யாரை ?


அந்த பெண்ணை !!


அவள் கற்பு காப்பாற்றப்பட்டது !!!


 





Monday, August 21, 2017






"துர் சொப்ன நகரே "


(     city of nightmare         )    





வங்கதேசம் உருவானது 1971 ம் ஆண்டு. அதன் வெற்றி மேற்கு வங்கத்தில் சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் ஒரு அரை பாசிச ஆடிசியை கொண்டு வந்தது.அப்போது நடந்த தேர்தலில் மார்க்சிஸ்டுகள் கொல்லப்பட்டனர். வாக்கு சாவடிகள் சூறையாடப்பட்டன . ஜோதி பாசு அவர்கள் தொகுதியில் வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் போகவிடவில்லை .அவர்களே வாக்குகளை போட்டுக்கொண்டார்கள். காங்கிரஸ் கடசியின் மாணவர் இயக்கமான சத்ரபரிஷத்  குண்டர்கள் இதனை அரசின்பாதுகாப்போடு  செய்தனர்.

அப்போதுமாணவர் அமைப்பின் தலைவர்களாக இருந்தவர்கள், மம்தா பானர்ஜி,சுபத்ரோ முகர்ஜி,பிரியறஞ்சன் தாஸ் முன்ஷி  ஆவார்கள்.


தேர்தலமோசடியை கண்டித்த ஜோதி பாசு, அரசு அவர்தோறறார்  என்று அறிவிக்கும் முன்பே conceded defeat . 280 தொகுதியில் 14 தொகுதியில் மார்க்சிஸ்டுகள்  வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலைமையை சட்ட பூர்வமாக சமாளித்து மார்க்சிஸ்க்கட்சி. 

சட்டமன்றம்  an assembly of fraud என்று ஜோதிபாசு அறிவித்தார். ஐந்து ஆண்டுகள் சட்டமன்றத்தை மார்க்சிஸ்ட் கடசி புறக்கணித்தது. 


14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் வரை காத்திருந்த 14 பெரும் தேர்தல் அதிகாரியிடமிருந்த அந்த அறிவிப்பை வாங்க மறுத்தனர் .இதன் காரணமாக தேர்தல் முறைமை முடிவானதாக கொள்ள முடியாதுசட்டமன்றத்திற்கு வராத உறுப்பினர்கள் பெயரை நீக்கவும் முடியாது> சித்தார்த்த சங்கர் ரே மறு  தேர்தலும் நடத்தமுடியாது .


தெருவில்,விதிகளில்,வீடுகளில், சாலைகளில் ,அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனை எதிர்த்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் விஸ்வரூபமாக  எழுந்தனர் .


70ம் ஆண்டுகளிலிருந்தே சிறையில் இருந்த நாடக கலைஞர் உத்பல்  தத் விறு கொண்டு எழுந்தார். baricade ,city of nightmare , now the kings turn ,என்ற மூன்று நாடகங்களை எழுதினர் . மூன்று நாடகங்களும் தடை செயப்பட்டன.


தடையை மீறி நாடகங்கள் நடந்தன .பார்க்க வரும் பார்வை யாளர்களை சத்ரபரிஷத் குண்டர்கள் தாக்கினர் .  ஒரு கையால்   தடிஅடியை  தங்கி கொண்டு மறுகையால் டிக்கட்டை வாங்கிக்கொண்டு  மக்கள் கூட்டம் கூட்டமாக நாடகத்தை பார்த்தனர் .

city of nightma


அரங்கத்தின்  பின் பகுதியி ஒரு சாலை. சாலையின் மையத்தில் போக்குவரத்து மேடை அதன் அருகில் ஒருகுப்பைத்தொட்டி. முன் மேடையின் இடது புறம் "டீ " கடை . வலது முன்மேடையில் முதலாளிமார் அமர்ந்து விவாதிக்கும் அறை .


டீக்கடையில்  கவலையோடு  தொழிலாளர்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்  முதலாளிகளின் வன்முறை, டதொழிற்சங்க ஊழியர்கள் கொலை செய்யப்படுவதுஎன்றுபேசிக்கொண்டிருக்கிறார்கள்.


முதலாளி மார்கள் வலது மேடையில் எப்படி  தொழிலாளர்களை அடக்குவது என்பது பற்றி ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களளோடு டீக்கடையில் இருந்த ஒருவன்   இருக்கிறான் . அவன் அவர்களின் கையாள் . பல கொலைகளை செய்தவன்.குப்பி  சாராயத்திற்காகவும் கோழிக்கறிக்காகவும் எதையும்செய்பவன்  .

ஒருகட்டத்தில் அவன் ஒரு கொலையை செய்ய மறுக்கிறான். 


முதலாளிகள் உஷாராகிறார்கள்.இவனை விட்டு வைத்தால் தங்கள் சதிவேலைகள் அமபலமாகிவிடும்  என்று  அஞ்சுகிறார்கள்.அடியாள்  வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் . 


அவன்  ஓடுகிறார்ன். ஒருபக்கம் அடியாட்கள். பின் மேடையிலிருக்கும் சாலையில் ஓடுகிறான்> எதிரே துப்பாக்கயுடன் போலீசார் . வேறு வழியின்றி அவன் மேடையில் ஏறி தான் செய்த கொலைகளை கூறுகிறான், உண்மையில் நடந்த கொலைகளையும் யார் தூண்டுதலில் நடந்தது என்பதையும் அவன் அறிவிக்கிறான்  போலீசார் சுடுகிறார்கள் அவன் பிணமாகி . 

குப்பை தொட்டியில் வீழ்கிறான்.


அரங்கம்  முழுவதும் செய்தித்தாள் பிரம்மாண்டமாக விரிகிறது .

IN AN ENCOUNTER A TERRIST    WAS KILLED


 

நாடகம் முடிகிறது .


மார்க்சிஸ்ட் கடசியின் உறுப்பினரான உத்பல் தத் ,மும்மை கப்பல் படை எழுச் சியை தன துரோகத்தால் வீழ்த்திய காங்கிரஸ் பற்றி எழுதிய நாடகம் தான் :"கல்லோல் " (துரோகம் ) என்ற நாடகம்., அதற்காகத்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் .அது பற்றி தனியாக எழுத வேண்டும்.


உத்பல்தத்  நாடகக் குழுவின்  பெயர் Liitle Peoples Theatre  



1972ம் ஆண்டு மதுரையில்மார்க்சிஸ்ட் கடசியின் காங்கிரஸ் நடந்தது . அதில் தமிழ் நாடகம் போட கடசி பணித்தது. எல்.ஐ சி,வ ங்கி ஊழியர்கள்,மில் தொழிலாளர்கள் ,பொது தொழிலாளர்கள் கொண்ட நாடக குழு  உருவாக்கியது .


அந்தக்குழு தான் peoples theatre !



அதன் முதல் நாடகத்தை கடசி காங்கிரசில் மேடை ஏற்றியது .


மதுரை முதுபெரும் எழுத்தாளர் ப.ரத்தனம் நெஞ்ச்சுக்குள்  ஒரு கனல்"என்ற நாடகத்தை எழுதினார் .



அதனை இயக்கம் பணியினை அடியேனுக்கு கடசி அளித்தது.





Thursday, August 17, 2017






அற்புதம், அற்புதம், அற்புதம் !!!

வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் அவர்களே !!!




1948அல்லது 49 ஆக இருக்கலாம். நெல்லை டவுனில்நான் எட்டாம் வகுப்புப்படித்துக்கொண்டிருந்தேன். ஓவிய ஆசிரியர் அழகேசன்  சிறு புத்தகங்கள்படிக்கக்கொடுப்பார். கரிபால்டி,  ஆலிவர் க்ராம்வெல், வால்டேர் ஆகியோரின் வாழ்க்கை  பற்றி வே சுவாமினாத சர்மா  எழுதிய  புத்தகங்கள் அவை. கனமான நீல  அட்டை போட்டு 20 அல்லது 30 பக்கங்கள் இருக்கும். ஒருமுறை ஒருபுத்தகத்தை கொடுத்து, இங்கேயே படி.வீட்டுக்கு கொண்டு போகாதே என்று  கூ றி ஒரு புத்தகத்தை கொடுத்தார். அட்டையில் கார்ல் மார்க்ஸ் என்று இருந்தது.

அதன் பிறகு மார்க்ஸ் பற்றியும்,அவருடைய தத்துவம்யுபற்றியும் நிறைய படித்து வருகிறேன்.

இன்று காலை U டியூபில் மார்க்ஸ் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் உரையை கேட்டேன் .

" எல்லோருக்கும் வணக்கம் ! திருப்பூரில் ...." என்று ஆரம்பித்து தங்கு தடை இல்லாத பேசசு .ஆற்றோட்டம் போன்ற சொற் பிரயோகம் எங்கும் பிசிறுதட்டாத உசசரிப்பு. 

மார்க்ஸ் சின் வாழ்கையில் அருகில் இருந்து அனுபவித்தவர்களால்  கூ ட இப்படி சித்தரிக்க முடியுமா ? 

மார்க்ஸ் ஒரு சிந்தனையாளன் தான். அவணுக்குள்ளும்  ஒரு காதல் நெஞ்சம்  உள்ளதே. அவன் காதலி ஜென்னி அவனை வீட நான்கு வயது மூத்தவள்.

"மார்க்ஸ் !   நீ   சின்ன குழந்தையாக இருந்த போதே உன்னை பார்த்தவள் நான் " எத்தனை குறும்புகலந்த காதல் மனம். ராமகிருஷ்ணன் ஜென்னியை பற்றியும் மார்க்ஸ்பற்றியும் பேசும் பொது உணர்ச்சி  வசப்பட்டார். பார்வையாளர்களும் கூ ட . காரணம் அவர்கள் இருவரும் வாழ்ந்த  வாழ்க்கை. .

மார்கஸ்,ஹெகல், ஏங்கல்ஸ் , எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்..

தன்னை நாடற்றவராக மார்க்ஸ் அறிவித்தார் என்று கூறியபோது அவர் குரல் தழுதழுத்தது. .கேட்டுக் கொண்டிருந்த என்கண்களிலுமஈரம் கசிந்தது. 

மார்க்ஸ் வாழ்க்கை  வரலாற்றை படித்திருக்கிறேன்.

ஆனால் ராமகிருஷ்ணன் மூலம் கிடைத்த அனுபவம் என் ஆயுளுக்கும் மறக்க  முடியாதது .

வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் .!!!






















Wednesday, August 16, 2017






"இந்தி "  இலக்கியத்தின் அடித்தளம் ,

"உருது " மொழியே ....!!!




மேலை நாட்டினர் குறிப்பாக அரேபிய ,பாரசீக  மக்கள் இந்தியாவோடு பரிவர்த்தனை செய்த  காலம் உண்டு . அவர்கள் சிந்து நதியை தாண்டிய  மக்கள் பேசும் மொழியை "சிந்துஸ்தானி " என்று அழை த்தார்கள்.பின்னாளில் அது இந்துஸ்தானி யாக மருவியது

சிந்து நதிக்கு கிழக்கேயும் தென்கிழக்கேயும் பறந்து பட்டபகுதியில் (slang )வட்டார மொழியே புழக்கத்திலிருந்தது.கொடுக்கல் வாங்கலில் வர்த்தக ரீதியாக  மொழியிலும் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டது .    


பிரிஜ் பாஷா, அவைத்த பாஷா ,கரி போல் , என்று பேசிவந்த வட்டாரங்களில் ,அரபியும்,,பாரசீகமும் கலந்து ஒருபுதிய மொழி உருவாகி யது. இதனை அன்று "உருது" என்று அழைத்தர்கள் "உருது "என்ற அரேபிய வார்த்தைக்கு "சந்தை என்று பொருள் என்று கூறுகிறார்கள்.

இதுவே தெற்கேயும், தென்கிழக்கேயும் பரவிய பொது அங்கு இருந்த வட்டார மொழி சம்ஸ்கிருத வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்திக்கொண்டது .இதனை "இந்துஸ்தானி "அழைத்துக்கொண்டார்கள்.

தமிழ் இலக்கியம் போல் இந்திக்கு என்று ஒரு தொன்மையான பாரம்பரியம் இல்லை அதுவே ஒரு  நவீன   மொழி. ஒரு தொல் காப்பியரையோ, வள்ளுவரையோ கொண்ட பார ம்பரியம் அதற்கு இல்லை. பண்டைய தமிழை நவீனப்படுத்தியவர்களாக,நாம் கருதும்,பாரதி, , வ,வே சு, புதுமைப்பித்தன் ஜெயயகாந்தன் போன்று  இந்தி மொழியில் அவர்கள் இலக்கிய கர்த்தாவாக  கருதுவது "தன பத்  ராய் " என்ற படைப்பாளியை இவர்தான் இந்தி இலக்கியத்தின் பிதாமகர் என்று கருதப்படும் "பிரேம்சந்த் " .

பத்து நாவல்கள்,250 சிறுகதைகள் ,ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ள இவர் வாரணாசி அருகில் ஒரு கிராமத்தில் 1880 ஆண்டு வாக்கில் பிறந்தவர்.


அங்குள்ள இஸ்லாமிய மதராசாவில்  அரபியும்,பாரசிகமும்   படித்தவர்அப்போதெ ல்லாம் ஆங்கிலப்படிப்பு இல்லை.


ஆரம்பகாலத்தில் இந்தி இலக்கியத்தின் பிதாமகர் என்று கருதப்பட்டமுன் ஷி பிரேம் சந்த்  தன படைப்புகளை "உருது""மொழியிலேயே படைத்தார்.


காந்தி அடிகளின் வேண்டு கோளுக்கு இணங்க தன அரசு பணியை விட்டு வெளியேறினார். "ஹன்ஸ்" என்ற பத்திரிகையை நடத்தினார் .


ஐரோப்பாவில் பாசிசம் உருவாக்கிக் கொண்டிருந்த நேரம். எழு த்தாளர்கள் கலைஞர்கள்  அதனை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர் அதன் எதிரொலியாக, பண்டித ஜவஹர்லால் நேரு ,நம்பூதிரிபாடு ஆகியோர் இந்தியாவிலும் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பை "லக்னோ "வில் 1936ம் ஆண்டு உருவாக்கினார் அதன் முதல் தலைவராக பிரேம்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

Sunday, August 13, 2017





-----------------------------------------

Do not impose Hindi


Down with  Hindi Imperialism 


-----------------------------------------






அஞ்சல் அட்டையைவாங்கி அதில்முகவரி எழுதும் பகுதிக்கு எதிர்புறம் உள்ள பகுதியில்  தலைப்பில் உள்ள ஆங்கில வார்த்தைகளை கட்டம் கட்டி அச்சடித்து  விற்பார்கள். அதனை வாங்கித்தான் நாங்கள் பயன்படுத்தினோம்.


மொழி பிரச்சினை நம் நாட்டில் அவ்வப்போது தலை  எடுக்கத்தான் செய்கிறது. அரசியல் நிர்ணய சபையில் இது பற்றிய விவாதம் வரலாற்றின் இண்டு  இடுக்குகளில் சிக்கி நிற்கிறது .


உத்தர பிரதேசமும்,அன்றய மத்திய மாகாணமும் எதோ தங்கள் தான் இந்தியா என்று மார்தட்டிக்கொண்டிருந்த காலம் அது .இன்று அதனை பசு பிரதேசமாக வர்ணிக்கிறார்கள்.அன்றைய காங்கிரஸ் காரர்கள் நாசுக்காக கையாண்டிருந்தால் நிலைமை மாறி இருக்கலாம்ஆனால் அவர்களுடைய "அவசர குடுக்கைத்தனம்" நிலைமையை மோசமாக்கியது.


கோவிந்த் வல்லபபந்த் ,பி.டி தாண்டன்,,மற்றும் செட் கோவிந்த தாஸ்  மூவரும் முந்திரிக்கொட்டையாக நின்றதால் அரசியல் நிர்ணய சபை திணறியது .


நிர்ணய சபையில் மேற்கு வங்கத்திலிருந்து வந்த உறுப்பினர் சியாமா பிரசாத் முகர்ஜி இது பற்றி கூறினார்> இவர்தான் பின்னாளில் ஜனசங் கட்ச்சியை ஆரம்பித்தவர்.


"இந்த மூவரும்பொத்திக்கொண்டு இருந்திருந்தால் இவர்கள் கேட்டதற்கு மேலேயே கிடைத்திருக்கும்  .என்னசெய்ய ! அவசரப்பட்டு காரியத்தைக்கெடுத்துவிட்டார்கள் " என்று குறிப்பிட்டார்.


இன்று நாட்டின் குரலாக ஒலிக்கும் அளவுக்கு இந்தி வளர்ந்துள்ளதா என்ற கேள்வி பதில் இல்லாமல் தவிக்கிறது .பஞ்சாபி, வங்கமொழி ,தெலுங்கு ,தமிழ் ஆகியவைமிகசிறந்த வளம் கொண்டவை .


மொழி மக்களின் உணர்வை பிரதி பலிப்பவை.தங்கள் குறுகிய  நோக்கத்திற்காக தெலுங்கு பேசும் மக்களை ஆந்திரா, தெலுங்கானா என்று பிரித்தா காங்கிரஸ் திணறிக்கொண்டு நிற்கிறது.


உத்தித பிரதேசத்தில் இந்தி மட்டுமல்லாது உருது மொழியும் சேர்ந்து பயன்படுத்தவேண்டும் என்று 50 ஆண்டுகளில் எழுந்த கோரிக்கை நேரு போன்றவர்களால் ஆதரிக்கப்பட்டது. உருது மொழியை இஸ்லாத்தோடு இணைத்து பிரசாரம் செய்து வந்த இந்துத்வா செல்வாக்கு பெற்று வருவதை கண்டு நேரு அந்த முயற்சியை கைவிட்டார்.


வருங்காலத்தில் மொழிக்கான சுதந்திர கோரிக்கை பலமாக எழத்தான் போகிறது. கர்நாடக தனி  கோடி வேண்டும் என்கிறது. தனி முத்திரை வேண்டும் என்று தமிழ் நாடு கேட்கிறது .


நடப்பது 2017 ம் ஆண்டு. 1950 ஆண்டு அல்ல. மக்களின் அனுபவம்,அரசின் பயன்பாடு , நல்வாழ்வு அவர்களுக்கு பல புதிய செய்திகளையும், சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறது.


கிராமப்புற ஏழ்மை,வேலையின்மை,ஆகியவை ஆந்திரா ,தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவ்ற்றின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளது. இந்த கொள்ளையில் மொழிபிரச்சினையை உருவாக்குவது எரியும் விறகால் தலையை  சொரிந்து கொளவதாகவே இருக்கும்.     


Saturday, August 12, 2017




மாநிலங்கள் அவையிலிருந்து ,

சீத்தாராம் எச்சூரி

விடை பெற்றார்...!!!



12 வருடங்களாக மாநிலங்கள் அவை  உறுப்பினராக இருந்த சீத்தாராம் எச்சூரி அவர்கள் மாநிலங்கள் அவையிலிருந்து விடைபெற்றார் .அவர் விடைபெறும் பொது ஆற்றிய உரையின் இறுதி பகுதி ;


"என்னைப்போன்றவர்கள் பல லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். 

நான் சென்னையில் பொது மருத்துவமமனையில் ஒரு தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். என் தாத்தா ஒரு நீதிபதியாக இருந்ததால், சென்னையில் இருந்த ஆந்திர அமர்வாயத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். பின்னர் குண்டூருக்கு மாற்றலாகிச் சென்றார். நான் 1952இல் பிறந்தேன். 1956இல் ஹைதராபாத்திற்கு புலம்பெயர்ந்தேன். என் பள்ளிப்படிப்பு, ஹைதராபாத்தில் நிஜாம் மன்னர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த ஒரு இஸ்லாமியக் கலாச்சாரப் பள்ளியில் தொடர்ந்தது. பின்னர் தில்லிக்கு வந்தேன். இங்கே படித்தேன். 

பின்னர் திருமணம் செய்துகொண்டேன். அவரது தந்தை ஒரு இஸ்லாமிய மதத்தில் சுஃபி பிரிவைச் சேர்ந்தவர். அவரது தாயார் மைசூரிய ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து எட்டாவது நூற்றாண்டில் புலம்பெயர்ந்து வந்தவர். இப்போது நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு என் மனைவியானவர் தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவராவார். தென்னிந்திய பிராமணன் ஒருவன் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். என் மகனை எப்படி விளிப்பது? அவன் யார்? அவன் பிராமணனா? அவன் முஸ்லீமா? அவன் இந்துவா? அவன் யார்? அவனை இந்தியன் என்று சொல்வதைத் தவிர வேறெப்படியும் அழைத்திட முடியாது. இதுதான் நம் தேசம். இதுவே என் எடுத்துக்காட்டு. நான் என்னை ஓர் உதாரணமாக உங்களிடம் சொல்லி இருக்கிறேன். இதுதான் இந்தியா. இத்தகைய இந்தியாவைப் பாதுகாக்க வேண்டிய அவையில் நாம் வீற்றிருக்கிறோம். இத்தகைய இந்தியாவை நாம் பேணிப் பாதுகாத்திட வேண்டும். இது நடைபெறும் என்று நாம் நம்புவோம். இந்த வாய்ப்பை நல்கியமைக்காக நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். "