Friday, June 09, 2017






அஜய் பவனுக்கு "தீ " வைத்து ,

எம் .ஆர்.வி அவர்களை ,


கொல்ல முயன்றவர்களும்  இவர்கள் தான் ...!!!




இந்திய -சீன எல்லை பிரச் சினை  உச் சத்தில்  இருந் நேரம். கம்யூனிஸ்டுகளை கருவறுக்க வலதுசாரிகள் தயாராக இருந்தார்கள். நேருவின் அரசு கம்யூனிஸ்டுகளை நரவேட்டை ஆடிக்கொண்டு  இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கடசிக்குள்  கருத்து மோதல் பகிரங்கமாக வெடித்திருந்தது.

ஜன சங்கம் நேருவுக்கு ஆதரவான நிலையை எடுத்தது. "ராஜாவை விட ராஜ  விசுவாசியாக " படம் காட்டியது .


அவர்கள் குறி கம்யூனிஸ்டுகளை தாக்குவது மட்டுமே.


தங்களின் காலாட்படையான ஆர்.எஸ்.கும்பலை அனுப்பினார்கள். அடிதடி,கொலை,கொள்ளை ,தீவைப்பு ஆகியவற்றில்நிபுணர்களான ரவுடி  குமபலை சேர்த்த னர் !


ஒன்றாயிருந்த கடசியின் தலைமையகம் "அஜய் பவனில் " இருந்தது .இந்த குமப்பல் அங்கே சென்றது . தயாராக சாக்குகளை கொண்டு சென்றிருந்தார்கள். சாக்குகளை பெட்ரோலில் நனைத்து  கட்டிடத்திற்குள் வீ சி எறிந்தார்கள் .  "தீ "   வைத்தார்கள். 


தமிழத்திலிருந்து சென்றிருந்த அன்றய செயலாளர் எம்.ஆர்.வெங்கடராமன் அவர்கள் முதல் தளத்தில் ஓய்வாக இருந்தார்கள்.

புகையும் நெருப்பும் மூசசை  அடைக்க அவர் எழுந்தார் . தீரமிக்க கட்ச்சி தோழர்கள் ஓடிவந்தனர். நெருப்பையும் புகை முட்டத்தையும் துசச மென மதித்து  தோழரை காப்பாற்றினார்கள். 

இது 60-62 ல்நடந்தது.


1986ம் ஆண்டு தன 80 வயதில் தான் எம்.ஆர்..வி அவர்கள் மறைந்தார்கள்.!



0 comments: