Wednesday, June 14, 2017






"வை .கோ. " வும் ,


நரேந்திர மோடியும் ,


ஒரே படகில் ...!!!





"வை.கோ "அவர்கள் மலேசியா சென்றார்கள்.பாவம். விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லமுடியாமல் செய்து விட்டார்கள். அங்கேயே ஒரு அறையில் 16 மணிநேரம் சோறு தண்ணி இல்லாமல் வெச்சிருந்து விமானத்திலேற்றி திருப்பி சென்னைல கொண்டுவந்து விட்டுட்டானுக .


வை கோவுக்கு கோபம் !மலேசியாமீதல்ல ! ஸ்ரீலங்கா மீது. அவரும் சொல்லி பாத்திருக்காரு >நான் ஒரு முன்னாள் எம்.பி .னு சொல்லி இருக்காரு.நான் புலிகள் கடசிகாரன் இல்லை. ஆதரவாளன் தான் னு சொன்னாரு. ஒரு பய கேக்கல. சேந்துக்கா   தூக்கி பொட்டணம் கட்டி அனுப்பிசிசுட்டானுக. ஜெர்மனி,பிரான்சு, பிரிட்டன்.ஏன் அமெரிக்க போகமுடியாது.விசா தரமாட்டேங்கங்க. வைகோ மக அமெரிக்காவுல தா ன்  இருக்கு. பாவம் ஏழு எட்டு வருசமா மகளை .பேத்தியை பாக் க போக முடியலை னு வருத்தப்பட்டார்.



இது பத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமவிலாவாரிய எழுதப்போறேன்னு  சொல்லி இருக்காரு.



கிராமங்கள்ல  "மாத்து சேலை இல்லன்னு தங்கச்சி  வீட்டுக்கு போனாளாம் அக்கா! ஈச்சம்பாயை  கட்டிக்கிட்டுஎதுக்க வந்தாளாம் தங்கச்சி !  " னு சொல்லுவாங்க.


மோடி பிரதமர் ! ராஜ்ய உறவு காரணமா அவர் அமேரிக்கா செல்ல "விசா " கொடுத்து இருக்காங்க .2019 அவர் பதவி காலம் முடிஞ்சா அவர் "விசா"வும் ரத்தாயிடும். நரேந்திர மோடி ங்கற தனிமனிதருக்கு "விசா" கொடுக்கப்படவில்லை .


இந்தியாவின் பிரதமருக்கு தான் "விசா "



அவர் 2002 ம் ஆண்டு ஆடிய ஆட்டம் தொங்கிக்கிட்டுதான் இருக்கு !


0 comments: