Thursday, June 29, 2017






வடமாநிலங்களில் ,


1996 ம் ஆண்டு தேர்தல் ....!!!




1996ம் ஆண்டு வடமாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் மார்க்சிஸ்ட் கடசி கலந்து கொண்ட சில தொகுதிகளுக்கு சென்றேன். அதில் ஒன்றுதான் "சிம்லா " தொகுதியாகும்.

முழுக்க முழுக்க மலைப்பகுதி ! தெருக்கள் வித்தியாசமாக இருக்கும். முதல் தெருவுக்கும் அடுத்தத்தெருவுக்கும் நூறடி உயரம் வித்தியாசம்  இருக்கும். பொருட்டாக்களை சுமந்து செல்வதும்நடந்து செல்வதும் சிரமம். சுமை கூலி க்காரர்கள் .அதிகம் அவர்களும் தலைசுசுசுமையாக கொண்டு செல்லமாட்டார்கள்.முதுகில் கட்டிக்கொண்டு கம்பு ஊன்றி தா ன செல்வார்கள்.

சுமை கூலி  தொழிலாளர்கள் சங்கத்தை மார்க்சிஸ்ட் கடசி வைத்திருந்தது.  சிம்லா நகராட்ச்சியில் கடசி யின் செல்வாக்கும் அதிகம். அதனால் ஒரு தெருவிலிருந்து அடுத்த தெருவுக்கு போக "லிப்ட் " வசதி வைத்திருந்தார்கள். அதனை பொதுமக்களும் பயன்படுத்தினார்கள்.

மத்திய நேரத்தில் நான் சுற்றி வந்தேன் . தூரத்தில் ஒரு கோவில் தெரிந்தது. அங்கிருந்தது "ராம் துன் " பாடிக்கொண்டு ஒரு பஜனை கோஷ்டி வந்து கொண்டிருந்தது. அவர்கள் அருகில் வந்தார்கள். பாடிக்கொண்டு நடுநாயகமாக வந்தவர் கையில் கொடி ! அருவாள் சுத்தியல் நட்ஷத்திரம்போட்ட "செங்கொடி " அது.அவர்சட்டையில்   மார்க்சிஸ்ட் கடசியில் சின்னம் "பாட்ஜ் ".ஆக இருந்தது. ஆர்மேனியம், டோல் வாசிப்பவர் ,கூட வந்தவர்களும் சின்னத்தை "பேட்ஜ்" ஆக அணிந்திருந்தார்கள். என்கூட எல்.ஐ.சி தோழர் பட் என்பவரும் வந்திருந்தார் .

" கேரளமாநிலத்தில் 56 ம் ஆண்டு கடசி கங்கிரசு நடந்தது ..அது டிசம்பர் மாதம்  சபரிமலை பக்தர்கள் கூட்டம் அதிகம்ஒலவக்கொடு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததுஏ.கே .கோபாலன் ரயிலில் வருகிறார் அவரை வரவேற்க.தொண்டர்கள் காத்திருந்தனர். ரயில் நிலையத்திற்குள் மெதுவாக வந்தது. திடீரென்று 

ஜிந்தாபாத் ! ஜிந்தாபாத் !!
ஏகேஜி ஜிந்தாபாத் !!
ஐயப்பா ! ஐயப்பா !!
சாமிசாரணம் ஐயப்பா !!
ஜிந்தாபாத் ! ஜிந்தாபாத் !!
ஏகேஜி ஜிந்தாபாத் !!

என்று இருமுடிகட்டிய அய்யப்பன் மார்கள் கோஷம்போட்டனர்."


இதை நான் தோழர் "பட்" அவர்களிடம் கூறினேன் !


குட்டையான ,சிவப்பான , வயதில் மூத்தவரான "பட்"அவர்கள் 


" we are intelectuals  ! we understand Marxisym ! they feel It ! that is the difference Comrade ! என்றார்  


Wednesday, June 28, 2017






எஸ்.வி .சேகர் ,

காயத்திரி,

மூளை  வளர்ச்சி....!!!

"காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் மூளை வளரும் " என்று நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளதாக செய்திகள் வந்தன .

தமிழகத்தில்  புரோகிதர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பள்ளிகள்  உள்ளன. இவர்கள் மந்திரங்களை கற்றுத்தருவார்கள். இந்த மந்திரங்களை எப்படி பிரயோகம் செய்வது என்பதை கற்றுத்தர வாரணாசி தான் செல்ல வேண்டும்.முடியாதவர்கள் அங்கு சென்று கற்று வந்தவர்கள் மூலம்தெரிந்து கொள்வார்கள்.

1994ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இல்லை 96 ம்  ஆண்டு ! நான் வாரணாசி சென்றேன் அந்த தேர்தலில் வாரணாசியில் மார்க்சிஸ்க்கட்சி  போட்டி இட்டது.   

அங்கு திரிபாதி என்று ஒரு வேத விற்பன்னர் இருந்தார். மந்திர பிரயோ கம்  எப்படி செய்யவேண்டும் என்பதை கற்றுத்தரவார். சுமா இருக்காமல் அவரிடம் போய்  சேர்ந்தேன். காயத்திரி மந்திரத்தை பெண்கள் சொல்லக்கூடாதா ? என்று கேட்டேன்.

"முட்டாள்கூட அப்படி சொல்லமாட்டான்.பிரம்ம உபதேசத்தின் பொது மற்றவர் காதில் விழக்கூடாது என்பதற்காக" பட்டால் " கூடாரம் செய்து உபதேசிப்பார்கள். அப்போது புரயோகிதர் ,பிரம்மசாரி,அவன் தாயார், தந்தை ஆகியோர்தான் அங்கு இருப்பார்கள். தாய் பெண் இல்லையா? என்று ஒரு போடு போட்டார்,

"உலகிலேயே மிகவும் பலகீனமான உயிர் மனிதன் தான் .மற்ற உயிரினங்களுக்கு தற்காப்பு க்கான இயற்கை கொடுத்துள்ள வசதி உண்டு. மனிதன் அப்படி இல்லை. அவனுக்கு இருட்டு என்றால் பயம்இருட்டிலிருந்து தப்ப-மற்ற விலங்குகளிடமிருந்து  தற்காத்துக் கொள்ள அவன் கூட்டாக -குழுவாக வாழ்ந்தான். உயரமான மரப்பொந்துகளிலும், உயர்ந்த பாறைகளின் இண்டு  இடுக்குகளிலும் வாழ்ந்தான் . இருட்டின  பிறகுதானமற்ற விலங்குகள் இரை  தேடும்  என்பதால் அவன் தன குழுவை காப்பாற்ற இரவு முழுவதும் காவல் காக்க வேண்டியதாயிற்று.

வெளிச்சம் வர வர அவன் மகிழ்ச்ச்சியுற்றான். அவனுடைய மிகப்பெரிய ஆச்ச்ரியம்  வெளிசம்  தான்.  வெளிச்சம்  அவனுக்கு வெப்பத்தை தருகிறது. வெப்பம் நீரை  ஆவியாக்குகிறது. காற்றில் சலனம் உண்டாகிறது ஆவி மேகமாகிறது.மழை பொழிகிறதுபயிர்ப்  பசசை  ,காய் கனி கிடைக்கிறது. ஆகவே அவன் வெளிச்ச்சத்தை வணங்கினான்.

"ஓம் !தத்ச  வரேண்யம் " என்று காயத்திரி மந்திரத்தை சொன்னான்! உண்மையில்  அது அப்படி சொல்லப்பட்ட கூடாது.

"ஓம் ! தத் சவித: வரேண்யம் " இருக்க வேண்டும். ! சவித : என்றால் வெளிச்சம் . என்று பெரியவர் விளக்கினார்.

இந்த நவீன காலத்திலும் இந்த வணக்கம் தேவையா  ?"என்று கேட்டேன்.

"ஒரு சின்ன பொத்தானை அமுக்கினால்  அணுசக்தி மூலம் சூரியகோடி பிராகாசத்தை மனிதனால் உருவாக்கமுடியும் . மிகவும் பலகீனமான மனிதன் தன ஆற்றலை வளர்த்துக்கொண்டு மற்ற உயிர்களை ஆட்டிப்படைக்கிறான் . ஏன் இயற்க்கையையே வென்று காட்டிவிட்டான். காயத்திரி ஜபம் வேண்டுமா வேண்டாமா என்பதை அவன்தான் தீர்மானிக்க வேண்டும்" என்றார் பெரியவர்.






Wednesday, June 21, 2017






என்னதான்

செய்யப் போறீங்க டா ???




அந்த தாயின் இடுப்பில் இருந்த அந்த குழந்தை துள்ளி திமிறி க்கொண்டிருந்தது . குழந்தையை கீழே இறக்கினாள் . ஓடிப்போய் எதிரே வந்து கொண்டிருந்த "சாமி " யை கட்டிபிடிக்கப் போனது அந்தக்குழந்தை .

பதறிப்போன மற்றவர்கள் "தீட்டு  தீட்டு "அலற ,அந்தத்தாய் குழந்தையை "வெடுக்கெ"ன்று  தூக்கிக்கொண்டாள் .அந்த குழந்தையின் பெயர் கர்ணன்.

முதல்  வகுப்பு படித்து கொண்டிருந்தான் சிறுவன். தாகமாக இருந்தது . ஓரமாக பானையில்  இருந்த நீரை  பருக குவளையை எடுத்தான்.ஓடோடி வந்த வாத்தியார் அவன் முதுகில் ஒரு அரை வைத்தார். "இந்தால " என்று கூறி குவளையில் நிறை சேந்தி வீட்டார் . அவன் வாயருகே கையை வைத்து குடித்தான்.வாத்தியார் ஏன் அடித்தார் அவனுக்கு தெரியாது .அழு தான்.அந்த சிறுவன் பெயர் "கர்ணன்".

அவன் சட்டைக்கு பித்தான் இல்லை ஊக்கு போட அதுவும்  இல்லை ...வாத்தியார் அவனை பெஞ்சின் மேல் நிற்கவைத்தார்.அந்த நாலாம் கிளாஸ் பையன் பெயர் "கர்ணன் ".

பள்ளிப்படிப்பின்  பொது,கல்லூரியில் , சட்டம் படிக்கும் அவன் பட்ட அவமானம் நெஞ்சில் ரத்தம் வரவழைக்கும்.அந்த இளைஞனின் பெயர் "கர்ணன்".

வக்கீலாக . நீதிபதியாக அவன் வாழ்க்கை சபிக்கப்பட்டதாகவே இருந்தது.அவன் தான் "கர்ணன்."

பாவம் கர்ணன்  ! 

கொஞ்சம் கண்ணடித்திருந்தால் கவர்னராகி இருக்கலாம் !

ஏன் ?

குடியரசுத்தலைவராக்கும்வாய்ப்பு கூட வந்திருக்கலாம்!!

கர்ணனை என்னதான் செய்யப்போரிங்கடா !!!






















Monday, June 19, 2017



எனக்கு கிரிக்கெட்டை விட , 

எம் .எஸ் .தோனியை பிடிக்கும்...!!!



சென்ற ஞாயிறு மூன்று மனிக்கு உலகமே காத்துக் கொண்டிருந்தது .! "சாம்பியன் ஷிப் " இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இந்தியா விளையாட்டை காண.

மதியம் 2.45 க்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை ஒரு படத்தை வெளியிட்டது.


முன்னாள் இந்திய காப்டன் எம்.எஸ் .தோனி ஒரு குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சிக்கொண்டிருக்கும் படம் அது.


அந்தக் குழந்தை பாகிஸ்தான் காப்டன்  ஸர்ஃப் ரோஜ் அகமது அவர்களின் குழந்தையாகும் !

எனக்கு கிரிக்கெட்டை பிடிக்கும் ! 


அதைவிட தோனியை யை அதிகம் பிடிக்கும்!







Friday, June 16, 2017






எம்.ஜெ .அக்பர்


என்ற ராஜாங்க அமைசர் ...!!!






மொபாஷார் ஜாவித் அக்பர்  என்ற எம்.ஜெ அக்பர்   மோடி அமைச்சரவையில் ராஜாங்க அமைசராக (MOS ) இருக்கிறார் .


மத்திய அரசு செயலகத்தில் ராஜாங்க அமைச்சர்களுக்கு தனியாக "குளு குளு " வசதி கொண்ட அறை  உண்டு . தனி செயலாளர் வசதி உண்டு. டெல்லி யிலிருந்து எங்கு போகவும் விமானத்தில் பயணம் செய்யலாம் கூட ஒருவரை அழைத்து செல்லலாம் . சம்பளம் பென்சன் எல்லாம் உண்டு.


ஆனால் ஒரு கொப்புகூட அவர்கள் பார்வைக்கு வராது . எல்லாம் துறை அமைசசரோடு  நின்றுவிடும் . துறை செயலாளர் அல்ல - அவருடைய "சப்ராஸி " கூட   மதிக்க மாட்டான்.


இவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கலாம். அமைசசர் என்ன சொன்னாரோ அதை கிளிப்பிள்ளை பொலசொல்லவேண்டும்.பிரதமர் சொன்னதை சொல்லவேண்டும்.


" நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை  உலகம் பூ றாவும் புகழ்கிறார்கள்  "என்று அக்பர் சொன்னார். அவர் படம் போட்டு செய்தியாக வந்தது .

அக்பர் வெளி உறவுத்துறையில் இருக்கிறார். அரபு நாடுகளிடையே மோடி முஸ்லிம்களின் நண்பர் என்று பிரசாரம் செய்வது அவர் பணி  அக்பருக்கு  சௌதி அரேபியாவோடு செல்வாக்கு உண்டு. சர்வதேச இஸ்லாமிக் மையத்தோடு பழக்கமுண்டு. 


வங்காளியான இவர் ஜார்கண்டு மாநிலத்திலிருந்து மாநிலங்கள் அவைக்கு பா.ஜ..க வால்  அனுப்பப்பட்டார்.


இதற்கு முன் இவர் காங்கிரஸ்  எம்பி யாக இருந்தார். கிஷன்கஞ்  தொகுதி எம்>பி ஆக இருந்தார் .ராஜிவ் காந்திக்கு மிகவும் வேண்டியவர் .

பின்னர் என்ன காரணத்தாலோ பா  ஜ.க வில் சேர்ந்தார். 


அடிப்படையில் இவர் ஒரு பத்திரிகையாளர். பத்திர்கையாளர்களை தன் வசப்படுத்த பா.ஜ.காவுக்கு இவர் மிகவும் தேவைப்படுகிறார்.


Wednesday, June 14, 2017






"வை .கோ. " வும் ,


நரேந்திர மோடியும் ,


ஒரே படகில் ...!!!





"வை.கோ "அவர்கள் மலேசியா சென்றார்கள்.பாவம். விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லமுடியாமல் செய்து விட்டார்கள். அங்கேயே ஒரு அறையில் 16 மணிநேரம் சோறு தண்ணி இல்லாமல் வெச்சிருந்து விமானத்திலேற்றி திருப்பி சென்னைல கொண்டுவந்து விட்டுட்டானுக .


வை கோவுக்கு கோபம் !மலேசியாமீதல்ல ! ஸ்ரீலங்கா மீது. அவரும் சொல்லி பாத்திருக்காரு >நான் ஒரு முன்னாள் எம்.பி .னு சொல்லி இருக்காரு.நான் புலிகள் கடசிகாரன் இல்லை. ஆதரவாளன் தான் னு சொன்னாரு. ஒரு பய கேக்கல. சேந்துக்கா   தூக்கி பொட்டணம் கட்டி அனுப்பிசிசுட்டானுக. ஜெர்மனி,பிரான்சு, பிரிட்டன்.ஏன் அமெரிக்க போகமுடியாது.விசா தரமாட்டேங்கங்க. வைகோ மக அமெரிக்காவுல தா ன்  இருக்கு. பாவம் ஏழு எட்டு வருசமா மகளை .பேத்தியை பாக் க போக முடியலை னு வருத்தப்பட்டார்.



இது பத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமவிலாவாரிய எழுதப்போறேன்னு  சொல்லி இருக்காரு.



கிராமங்கள்ல  "மாத்து சேலை இல்லன்னு தங்கச்சி  வீட்டுக்கு போனாளாம் அக்கா! ஈச்சம்பாயை  கட்டிக்கிட்டுஎதுக்க வந்தாளாம் தங்கச்சி !  " னு சொல்லுவாங்க.


மோடி பிரதமர் ! ராஜ்ய உறவு காரணமா அவர் அமேரிக்கா செல்ல "விசா " கொடுத்து இருக்காங்க .2019 அவர் பதவி காலம் முடிஞ்சா அவர் "விசா"வும் ரத்தாயிடும். நரேந்திர மோடி ங்கற தனிமனிதருக்கு "விசா" கொடுக்கப்படவில்லை .


இந்தியாவின் பிரதமருக்கு தான் "விசா "



அவர் 2002 ம் ஆண்டு ஆடிய ஆட்டம் தொங்கிக்கிட்டுதான் இருக்கு !


Friday, June 09, 2017





"ஜன சங் "  தலைவர் ,


"தீன தயாள் உபாத்யாயா" மரணம் -


விபத்தா ? கொலையா? 




இந்தியா சுதந்திர அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னால்  இடைக்கால சர்க்கார் அமைந்தது> அதில் சியாமா பிரசாத முகர்ஜி அமைசராக இருந்தார். இந்தியா ஒரு இந்து நாடாக இருக்க வேண்டும் என்பவர் அவர் . அதனால் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு போனார். முழுக்க முழுக்க இந்துக்கள் நாடாகி விடுமே !

அமைசச்சரவை இதனை ஏற்கவில்லை. முகர்ஜி ராஜினாமா செய்தார்தனிக்கட்சி  ஆ ரம்பிக்க திட்டமிட்டார்.

காத்திருந்த ஆர்.எஸ்.எஸ் .நேசக்கரம் நீட்டியது. முகர்ஜி தனக்கு உதவியாக இளம் ஆர்.எஸ்.எஸ் காரர்களை கேட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைமை தீன் தயாள்  உபாத்யாயா,நானாஜி தேஷ்முக்,வாஜ்பாய், அத்வானி ஆகியோரை கொடுத்தது .அரசியலுக்காக "ஜனசங் "கம் உதயமாகியது . 

கடசியின் தலைவராக இருந்த முகர்ஜி மறைந்தார். தீன தயாள் உபாத்யாயா பொறுப்பேற்றார் . கடசி மெதுவாக சிறகை விரிக்க ஆரம்பித்தது. ஜன சங் கடசியின் முக்கியஸ்தர்களில் ஒருவர் பால் ராஜ் மோதக. இவர் உபாத்தய்யாயாவின் ஆதரவாளர்.

உபாத்யாயா நாடுமுழுவதும் சுற்றி கடசியை  வளர்க்க முயன்றார்.ஒருமுறை சுற்றுப்பயணமாக அவர் பாட்டனாவிலிருந்து முகால்சராய் என்ற ஊருக்கு பயணமானார் . கடசி தொண்டர்கள் முகால்சராய் ரயிலடியில் தலைவரை வரவேற்க காத்திருந்தார்கள். ஆனால் அந்த பெட்டியில் தலைவர் வந்து இறங்கவில்லை . தேடிப்பார்க்க தொண்டர்கள் இறுதியில் போலீசாரிடம் போனார்கள். 

போலீஸ் விசாரித்ததில் மொகல்சராயுக்கு முன்னாள் தண்டவாளத்தின் அருகில் ஒரு சடலம்  கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் கையி ஒரு ஐந்து ரூ நோட்டு இருந்ததாகவும் சொன்னார்கள். அந்த சடலம் உபாத்யாயாவின் சடலம் என்று உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ரயிலில் வழிப்பறி செய்யும் கொள்ளையர்கள் தான் அவர்கள். இவர்கள் பெட்டியில் ஏறியதை  கண்டுகொண்ட உபாத்யாயா இவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்கமுயன்றிருக்கிறாரா. பயந்துபோன கள்வர்கள் அவரை ரயிலிலிருந்து தள்ளி விட்டுள்ளனர்.

கேஸ் பதிவாகி வழக்கு நடந்தது.இறுதியில் சாட்ச்சிகள் இல்லாததால் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

பால்றாஜ் மோதக போன்றவர்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது.அரசாங்கத்திற்கோ ,அல்லது கடசி தலைமைக்கோஉண்மை தெரிந்திருக்கும்,விசாரணை வைத்தால் தெரிந்துவிடும் என்று பலர் நம்பினர்.கடசி  அசையவில்லை.

பிற்காலத்தில் ஜனசங் கலைக்கப்பட்டு ஜனதா கடசியாக உருவெடுத்தது .இதனை ஏற்காதவர்கள் பால்ராஜ்   மோதக தலைமையில் ஜனசங் கட்சி ல இருந்தார்கள். நானாஜி தேஷ்முக் வன்குடிமக்களுக்க பாடுபடப்போகிறேன் என்று கூறி  கிஷ்கிந்தையில் ஆசிரம்கட்டி போய்விட்டார். வாஜ்பாயும்,அத்வானியும் ஜனதா ஆடசியில் அமைச்சரானார்கள் .


பால்ராஜ்  மோதக இந்த சமயத்தில்முன்று புத்தகங்களை எழுதினர். ஒரு புத்தகத்தில் உபாத்யாயா மரணம் விசாரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுப்பிரமணியம் சாமி அப்போது வாஜ்பாயாய் எதிர்ப்பாளர். சும்மா இருப்பாரா. விசாரணைக்குகுரல்கொடுத்தார் . தேசாய் அரசு விசாரணைக்கு உத்திரவிட்டது .

"யாருடைய தலையிடு  என்று தெரியவில்லை விசாரணை நடைபெறவில்லை" என்று பால்ராஜ் மோதக குறிப்பிடுகிறார்.


இப்போதுதன்னந்தனியாக மோடி ஆள்கிறார்.. சிபிஐ, ,வருமான வரித்துறை, என்று எல்லாமே இவர்கள் கையில் இருக்கிறது.இவர்களின் தலைவர் தீன் தயாள் உபாத்யாவின் மரணம்  விபத்தா ?கொலையா? என்பதை கண்டுபிடிக்கலாமே ?


மாட்டார்கள் !


ஏன் ?


மறை ந்த பால் ராஜ் மோதக வரவா போகிறார் !!!







அஜய் பவனுக்கு "தீ " வைத்து ,

எம் .ஆர்.வி அவர்களை ,


கொல்ல முயன்றவர்களும்  இவர்கள் தான் ...!!!




இந்திய -சீன எல்லை பிரச் சினை  உச் சத்தில்  இருந் நேரம். கம்யூனிஸ்டுகளை கருவறுக்க வலதுசாரிகள் தயாராக இருந்தார்கள். நேருவின் அரசு கம்யூனிஸ்டுகளை நரவேட்டை ஆடிக்கொண்டு  இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கடசிக்குள்  கருத்து மோதல் பகிரங்கமாக வெடித்திருந்தது.

ஜன சங்கம் நேருவுக்கு ஆதரவான நிலையை எடுத்தது. "ராஜாவை விட ராஜ  விசுவாசியாக " படம் காட்டியது .


அவர்கள் குறி கம்யூனிஸ்டுகளை தாக்குவது மட்டுமே.


தங்களின் காலாட்படையான ஆர்.எஸ்.கும்பலை அனுப்பினார்கள். அடிதடி,கொலை,கொள்ளை ,தீவைப்பு ஆகியவற்றில்நிபுணர்களான ரவுடி  குமபலை சேர்த்த னர் !


ஒன்றாயிருந்த கடசியின் தலைமையகம் "அஜய் பவனில் " இருந்தது .இந்த குமப்பல் அங்கே சென்றது . தயாராக சாக்குகளை கொண்டு சென்றிருந்தார்கள். சாக்குகளை பெட்ரோலில் நனைத்து  கட்டிடத்திற்குள் வீ சி எறிந்தார்கள் .  "தீ "   வைத்தார்கள். 


தமிழத்திலிருந்து சென்றிருந்த அன்றய செயலாளர் எம்.ஆர்.வெங்கடராமன் அவர்கள் முதல் தளத்தில் ஓய்வாக இருந்தார்கள்.

புகையும் நெருப்பும் மூசசை  அடைக்க அவர் எழுந்தார் . தீரமிக்க கட்ச்சி தோழர்கள் ஓடிவந்தனர். நெருப்பையும் புகை முட்டத்தையும் துசச மென மதித்து  தோழரை காப்பாற்றினார்கள். 

இது 60-62 ல்நடந்தது.


1986ம் ஆண்டு தன 80 வயதில் தான் எம்.ஆர்..வி அவர்கள் மறைந்தார்கள்.!



Tuesday, June 06, 2017




"மதிப்புரை "  




"பொன்வீதி "

ஆசிரியர் : மோகன் ஜி 

அக்ஷரா பிரசுரம்,
g 1702,,அபர்ணாசரோவர்,
நல்ல கண்டலா ,
ஹைதிராபாத்.-500107
விலை : re  125/-



எழுத்தாளர்,கவிஞர் ,கட்டுரையாளர்,பேச்ச்சாளர் , வங்கி நிர்வாகி என்று பன்முகம் கொட்டவர்தான் மோகன் குருமூர்த்தி என்ற மோகன் ஜி !

என் அனுபவத்தில்மிகவும் வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கும் எழுத்து  கலைஞர் .

"சிறுகதை எழுத்தாளன் எழுதாத வற்றிக்குள் கதையை படிப்பவன் வாசகன் என்கிறார்  மோகன்ஜி தன முன்நுரையீல் . இந்த தொகுப்பு அதற்கான உதாரணம்.இருவது கதைக்கொண்ட இந்த நூலில் முதற்கதை "பொன்வீதி  " உதாரணம்.

"பதினைந்து வயது ஜானு காத்திருக்கிறாள்.சிவா வந்து விடுவான் . சேலத்தில் இருக்கும் அத்தை வீட்டுக்கு வந்திருக்கிறாள்.அவன் வரும்போது பளிச்   சென்று இருக்க வேண்டும். பாவாடை தாவணியை தோய்த்து உலர்த்தி இருக்கிறாள்.

நாலு வீட்டுக்கு இட்டலி தோசை மாவு கிரைண்டரில் அரைத்து கொடுக்கும் கஷ்ட ஜீவிதான் அத்தை. கோடை  விடுமுறையில் வந்து ஒத்தாசையாக இருப்பாள்.அப்பாவும் அம்மாவும் போடும் சண்டையிலிருந்தும் பேசிசிலிருந்தும்தப்ப  அத்தைவிட்டுக்கு வந்து விடுவாள்..

சிவா வந்தான். ஏன் அக்காவிடம் என்னை பற்றி விழுந்து விழுந்து விசாரித்தாய்?ஏன் என் ஸ்க்கூல்  அட்ரசுக்கு கடிதம் எழுதினாய்    என்று சரமாரியாக கேட்கிறான் "


விடுமுறை கழி ந்துஜானு அம்மா வீட்டுக்கு போய்விட்டாள்.சிவாவின் அக்கா வீட்டில் கிரைண்டர் வாங்கி விட்டார்கள். மாவு அரைக்க போகவேண்டாம் .ஜானுவை அதிகமாக கோபித்து கொண்டோமோ ! . சிவா நினைக்கிறான் "


ஜானு சிவாவை விரும்பினாளா  ? சிவா ஜானுவை காதலிக்கிறானா ? மோகன்ஜி இதுபற்றி ஒருவார்த்தைஎழுதவில்லை ..


ஆனால் வாசகன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறான். கதை மாந்தரின் உணர்வுகளை வாசகன் மனத்தில் "மடைமாற்றி "விடுவது !


மோகன் ஜியின் கைவண்ணம் இதுதான்.

"பச்ச மொழகா "  விளையாட்டு,, கூளம்  ,புல்புல் என்று கதைகளை அடுக்கிக் கொண்டே  போகலாம்.    


மிகவும் வித்தியாசமான எழுத்துக்கு சொந்தக்காரர். மோகன் ஜி !


வாழ்த்துக்கள்  தோழரே !!!



Monday, June 05, 2017




மயிலை பற்றியும் 


யானையை பற்றியும் ...!!!



ராஜஸ்தானின் உயர்நிதிமன்ற நீதிபதி ஒய்வு பெரும் முன்னர் மயில் பற்றி சொன்னார் . அவருடைய அறிவியல் திறமையை நடுமுழுவதும் வியப்போடு பார்த்தது.


மயிலைப்பற்றி நமது வரலாற்றாளர்கள் நிறைய எழுதி வைத்திருக்கிறார்கள். கே.சி. சவுத்திரி என்பவர் "பண்டையகால இந்தியா " மத்தியகால இந்தியா ", நவீன இந்தியா "என்று வரலாற்றினை எழுதி வைத்துள்ளார் .


இந்தியாவில் குழுக்களாக மனிதன் வாழ்ந்த  காலம் உண்டு.  ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு அடையாளம் இருந்ததும். இதனை totem என்று ஆங்கிலத்தில் கூறினார்கள்.


 குரங்கு கொடியோன்.அரவக்கொடியோன்,சேவற்கொடியோன் என்று இருந்ததும் உண்டு இது பற்றி வரலாற்றில் குறிப்புகள்   உள்ளன.

மயிலை தங்கள் அடையாளமாக கொண்ட குழுக்கள் இருந்தன. அவர்களை மயூரிகள் என்று அழைத்துள்ளனர் . பின்னாளில் இவர்கள் தான்நாகர்குழுவைஅடக்கிமௌரியசாம்ராஜ்யத்தைஉருவாக்கினவர்கள். 

மௌரியர்களில் அசோகன் புகழ் பெற்றவன்.தன்னுடைய நூலில் கே.சி சவுத்திரி அசோகனைப்பற்றி எழுத்தியுள்ளார் ."இளம் வயதில் அசோகன் முராடனாக இருந்திருக்கிறான். எதற்கெடுத்தாலும் வெட்டு குத்து என்று ஈவு இரக்கமின்றி சகமனிதர்களை துன்புறுத்தி இருக்கிறான். மிருக வேட்டை அவனு \டைய விருப்ப விளையாட்டு  . குறிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு "மயில் " மாமிசம் சாப்பிட வேண்டும் . மது,மாது அவனுடைய போழுது  போக்கு." என்கிறார் சவுத்திரி.

இந்தியா சுதந்திர மடைவதற்கு  சில மாதங்களுக்கு முன்னால் இந்திய முதலாளிகள் பிர்லா  மாளிகையில் சந்தித்தார்கள். அப்போது நவ இந்தியாவின் ஒரே தொழிற்சங்கம் AITUC . பலம் பொருந்திய இந்த சங்கத்தை முதலாளிமார் ஏற்க மனமில்லாமல் தவித்தார்கள். புதிதாக INTUC என்ற சங்கத்தை ஆரம்பிக்க விரும்பினார்கள். 


இதனை காந்தி அடிகளைக்கொண்டு ஆரம்பிக்க முடிவு செய்தார்கள். தொழிலாளிகளை பிரிப்பது அடிகள்  எதிரித்தார்.  காந்தியின் சீடர்  குல்ஜாரிலால் நந்தா. அவர் புதிய சங்கம் ஆரம்பிக்க வேண்டியதின்  அவசியத்தை காந்தி க்கு எடுத்துச்சொன்னார்.

"அசோகன் சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அந்த சாம்ராஜ்யத்தை ஆயுதங்களோடு அவற்றின் உதவியால் உருவாக்கினான். மக்களிடம் அந்த ஆயுதங்கள் இருந்தால் அசோகனை எதிர்க்கவும் அது பயன்படும். அந்த மக்களிடமிருந்து ஆயுதங்களை பிடுங்க வேண்டும். அவர்களுக்கு அஹிம்ஸையை போதிக்க  வேண்டும். சாம்ராஜ்யத்தின் நன்மை கருதி அசோகன் பௌத்தனானான். ஆரம்பத்தில் அசோகன் எதிர்த்தாலும் அரசு நிர்ப்பந்தத்தின் காரணமாக அஹிம்சையை ஏற்றுக்கொண்டான்." என்று காந்தி அடிகளுக்கு சொல்லப்பட்டது.

அசோகன் விரும்பி பௌத்தனாக வில்லை. 


INTUC உருவானது.


ராஜஸ்தான் நீதிபதி சொன்னதற்கு இத்தனை எதிர்ப்பு வந்தது . சரி !


அகிலஉலக விஞனி கள்  கலந்து  கொண்ட மாநாடு  முமபை  யில் நடந்தது. 


அந்த மாநாட்டில் நமது அறிவியல் வித்தகர் ,பாரதப்பிரதமர் ,நரேந்திர மோடி  " விநாயகருக்கு யானைமுகம் என்பதை சுட்டுக்காட்டி அந்த காலத்திலேயே   இந்தியாவில் plastic surgery இருந்தாய் நிரூபித்தார் "

யதா ராஜா !  தாதா  பிரஜா !!!!