Saturday, May 13, 2017






"இந்தி " திணிப்பும் ,

எதிர்ப்பும் ......!!!






30 ஆண்டுகளில் இந்தி எதிர்ப்பு நடந்தது. அதன்பிறகு 50ம் ஆண்டுகளிலும் நடந்தது. 1965ம் ஆண்டுகளில் நடந்த போராட்டம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை அடைந்தது.

தி .லி  ஜங்ஷனில் மதுரை திரவியம் தாயுமானவர்  இந்து கல்லூரி செயல்பட்டு வந்தது. அதில்தான் நான் 1st UC ,11nd Uc  1952-54 ம் ஆண்டுகளில் படித்தேன். 


கடைய நல்லூரிலிருந்து வந்த சத்திய மூர்த்தி, மற்றும் ஷாகுல் ஹமீது போன்றவர்கள்  ஹாஸ்டல் மாணவர்கள். அப்போது 4th UC   A .L . சுப்பிரமணியம் படித்துக்கொண்டிருந்தார்என்று நினைவு. பின்னாளில் ஷாகுல்,ALS  ம் எம்.எல்.ஏ ஆனார்கள். எல்லாருமே இயக்கத்தை சேர்ந்தவர்கள். 

இயக்கம் என்றால்  திராவிட விடுதலை இயக்கம் . Dravidian Liberation front . இவர்களோடு சேர்ந்து இயக்கவேலைகளை செய்யவேன். 

திராவிட நாடு ஏன் பிரியவேண்டும், அதன் பொருளாதார ,அரசியல் கோட்டபாடுகள் ஆகியவற்றை மாணவர்களிடையே பிரசசாரஞ்  செய்வது பணி அப்போது தான் இந்தி எதிர்ப்பு இரண்டாவது இயக்கம் வந்தது.

ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் பொது  புகுந்து மாணவர்களிடையே பிரசசாரஞ்  செய்வது வழக்கம்.


"படியும் பண்ணிசைக்கும் பசையப்பன் கல்லூரியில் வேலை நிறுத்தம்.!இடிந்த சுவரும் இன்கவி பாடும் இந்து கல்லூரியில் வேண்டாமா ? வாருங்கள் தோழர்களே" என்று கோஷமிடுவோம்.


இப்படி எங்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பல நண்பர்கள் பெயர் மறந்து விட்டது


கெமிஸ்ட்ரி பேராசிரியர் N .பாலசுப்பிர மானியம் .அவர் வகுப்பிற்குள் சென்று மாணவர்களை அழைக்கும்பொறுப்பு எனக்கு வந்தது . உள்ளே சென்று கோஷம் போட்டேன். 


அப்போதெல்லாம் 11nd  UC  தான் பலகலைக்கழக தேர்வு  நடக்கும். எல்லாமானவர்களும் தேர்வு எழுத முடியாது.செலக்ஷன் சிஸ்டம் என்று உண்டு. பல்கலை  தேர்வு எழுத பேராசிரியர் செலக்ட பண்ண வேண்டும். என்னை பல்கலைக்கழக தேர்வு எழுத முடியாமல் தடை செய்து விட்டார்கள்.

அந்த ஆண்டு நான் செலக்ட் ஆகவில்லை. பேராசிரியர்   .  N பாலசுப்பிரமணியம் பழி வாங்கிவிட்டார்.



என்  கல்லூரி வாழ்க்கை  அதோடு முடிந்தது !!! 


0 comments: