Wednesday, March 22, 2017










"மாயா வாத"மும்


"சர்ப்ப -கந்த தோஷ"மும் ...!!! 






"நான் இருக்கிறேன் என்று நீ நினைக்கிறாய் "" ஆகையால் நான் இருக்கிறேன். "உண்மையில் நான் இல்லை." "நீ நினைப்பது ஒருமாயை  "என்று மாயா வாதிகள் வாதிடுவார்கள்.

இந்திய தத்துவ ஞானிகள்  இதனைப் பற்றி நிரம்ப பேசி இருக்கிறார்கள். எழுதி இருக்கிறார்கள் வாதிட்டு உள்ளார்கள். இதில் ஆதிசங்கரரின்  பங்கும் உண்டு. 

பௌராணிகர்கள் இதனை விளக்குவார்கள் . காலையில் தொடுத்த பூ மாலை யில் உதிர்ந்து வெறும் வாழை நாராகி விடுகிறது. அதனை குப்பையில் எரிந்து விடுகிறோம். அரைகுறை வெளிசத்தில் அதனை பார்த்தவர் அது காற்றில் அசைவதை கண்டு "பாம்பு " என்று அலறுகிறார். விளக்கு வெளிசத்தில் பார்க்கும் பொது அதுபாம்பு இல்லை  வாழை  நார்  என்று தெளிவடைகிறோம். பாம்பு என்று  "நினைத்த"து "மாயை ". உண்மையில் இருந்தது வாழை  நார் .

வூட்டுப்படி ஓரத்தில் , பொந்துகளில் பாம்பு இருக்கலாம். நாம் அது வாழை நார்  என்று "நினைத்து" தூக்கி எரிய "நினைத்தா"ல்  அது சிறி பாய்ந்து ஓடிஒளிந்து கொள்ளும். இங்கு நாம் நினைத்த வாழை நார் "மாயை" 

இப்படி உலகமே மாயை என்று மாயாவாதத்தினர் சொல்வார்கள்.

இதனை மறுதலிக்க வேண்டியது பொருள்முதல் வாதிகள் கடமை.


சமூகவிஞ்ணியும், அரசியல் வாதியுமான பி.ராமமூர்த்தி அவர்கள், லக்னோ ,கான்பூர் ஹைதிராபாதி நகரங்களில் தூய்மையான உருது மொழியில் பேசுவார் .     டெல்லியில் இந்தியில் பேசுவார்>மக்களவையில் ஆங்கிலத்தில் உரையாற்றுவார் .பேசவாடாவில் தெலுங்கில் பேசுவார்தமிழகத்தில்  தமிழில் பேசுவார். 

இவைதவிர சம்ஸ்கிருதமும் தெரிந்தவர்அவர். 


" மாயாவாதிகள் சர்ப்ப (பாம்பு) கந்த (குப்பை )தோஷத்தை பற்றி பேசுவார்கள். வாழி நாரை பார்த்து பாம்பு என்று கூறுவது  உண்டு .வாழை நாரை  மட்டும் பார்த்து பாம்பையே  பார்த்திராதவன் பாம்பு என்று கூறமாட்டான்.பாமபை மட்டும்  பார்த்து வாழிநாரை பார்த்திராதவன் குப்பை என்று சொல்லமாட்டான்."

"அவன் வாழை  நாரை பார்த்தது உண்மை. பாம்பை பார்த்ததும் உண்மை . இரண்டும் இருந்ததும் அதனை அவன் எப்போதோ பார்த்ததும் உண்மை .அவை மாயை அல்ல ". என்று பி ராமமூர்த்தி அவர்கள் விளக்குவார்கள்.

ஐயா ! மீண்டும் பிறப்பெடுத்து வாரும். எங்களுக்கு கற்று கொடுக்க !!!


0 comments: