Tuesday, February 14, 2017





எனக்கு அந்த கிருத்துவரை ,

நிரம்ப பிடிக்கும் .....!!!



அவர் தீவிரமான கிருத்துவர் .காலையில் ஜபம் செய்யாமல் இருந்ததில்லை. பைபிளின் பலப்பகுதிகளை  அப்படியே சொல்லும் ஆற்றல்  படைத்தவர்.

ஒவ்வொரு ஞாயிறு ம் கோவிலுக்கு சென்று ஜபம் .  ஞாயிறு என்றில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்வார்.

அவரை பார்க்கத்தான் தமிழ் நாட்டை  சேர்ந்த அந்த  அழுகிப்போன பாதிரியார்   காத்திருந்தார். ஞாயிறு வழிபாடு முடிந்ததும் கிருத்துவர் ஜபம் செய்ய ஆரம்பித்தார்.

தமிழ் நாட்டு பாதிரியார் காத்திருந்தார்.ஜபம் முடிந்ததும் அந்த கிருத்துவரோடு பேசவிரும்பியதாக கூறினார்.

ஜபம் முடிந்ததும் அவர் கிளம்பினார். உள்ளூர் நண்பர் தமிழ் நாட்டு பாதிரியார் உங்களை பார்த்து பேச விரும்புகிறார் என்று அவரை தனி அறைக்கு அழைத்தார்.

"நான் அவரை பார்க்க விரும்பவில்லை."

"ஏன் ?"

"என் இடதுகையில் இருக்கும் பைபிளையும், வலது கையிலிருக்கும் ஜெபமாலையையு,ம் அவர் முகத்தில் எரிந்து விட்டு நான் கிருத்துவன் இல்லை என்றுகத்திவிடுவேன்அவரைவிரைவில்வெளியேற்றிவிடுங்கள் " என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

அந்த கிருத்துவர் பெயர் தான் ஜாண் மைக்கேல்குன்ஹா !!

எனக்கு அவரை நிரம்ப பிடிக்கும் !!!

0 comments: