Friday, November 11, 2016







"மனம் ஒரு குரங்கு "






"மனம் ஒரு குரங்கு " என்று ஒரு நாடகம் நடந்தது. "சோ " ராமசாமி அவர்கள் எழுதியது . பின்னர் அது திரைப்படமாகவும்வந்த நினைவு.

சமீபத்தில் தொலைக்காட்ச்சியில் ஒருவயதான அம்மையார் கண்ணீரோடு நின்றார். கையில் 500/- ரூ நாட்டுகளோடு ."எனக்கு மட்டும் முடியுமானால் அந்த தொலைக்காட்ச்சி பெட்டிக்குள் புகுந்து அந்த அம்மை யாருக்கு உதவிஇருப்பேன்.மனம் அவ்வளவு சங்கடப்பட்டது ". என்று ஒரு பதிவர் நிலைத்தகவல் எழுதி இருந்தார்.

பல சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளை படிக்கும் பொது மனம் பதறத்தான் செய்கிறது .எல்லோருக்குமே இப்படித்தான் இருக்குமா? இந்த கேள்விக்கு  பதில் கிடைக்காது. 

நமது படிப்பு,பட்டறிவு,பண்பாடு, வளர்ந்த விதம் ,சூழல் , என்று பல விஷயங்களை பொறுத்து நம் மனம் செயல்படுகிறது.

நம்முடைய இரக்க உணர்சசி, அன்பு ,பாசம் , கோபம் , எல்லாமாக சேர்ந்து நமக்குள் ஏற்படுத்தும் நிலை அது. 

அப்படியானால்மனம் என்பது நம் உணர்வா ? நம் அறிவா ? நம் அனுபவமா ?   நம் மூளையா ?  அது நம்முள் இருக்கும் ஓரு அங்கமா? 

இந்த கேள்விகளுக்கு பௌராணிகர்கள் சொல்லும் பதில் ஒருபக்கம் . அந்த "தலைப்பா " கட்டு சாமியார் சத்குரு விளக்கமளிப்பது ஒருபுறம்.

அறிவியல் ரீதியாக இதனை அணுகுவது ஒரு வகை.

" மனம் " பற்றி மனநல மருத்துவர் ஒருவர் சொன்னது சரியாகவே இருக்கும்.

"Mind is nothing but some chemical reaction in the brain " 

என்கிறார் டாக்டர் .

சரி தானே   !!!

0 comments: