Monday, November 14, 2016






"அதனை அவன் கண் விடல் "








அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தோலைக்காடசி பே ட்டியில் " 1000 ரூ 500 ரூ  பற்றி அமைச்சரவையில்  கூ றிவிட்டுதான்  பிரதமர் அறிவித்தார் " என்று கூறியதாக முகநூலில் தகவல்வந்துள்ளது.


இதனை படித்த எனக்கு அறுவது ஆண்டுகளுக்குமுன் உலகமே வியந்து போற்றிய இந்திய அரசின் அறிவிப்பு ஒன்று நினைவு தட்டியது.

இன்சூரன்ஸ் துறையில் 245 ஐந்து தனியார் கம்பெனிகள் அப்போது இருந்தன..இந்த பணத்தை முதலாளிகள் கபளீகரம் செய்து வந்தனர்.இதனை தடுக்க பெரோஸ் காந்தி அவர்கள்முழு முசசி ல் செயல்பட்டார்கள். ராமகிருஷ்ண டால்மியா கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்.. 

அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் சி.டிதேஷ்முக் என்பவர்.இன்சூரன்ஸ் துறையை அரசுடமையாக்க முடிவு செய்தார்.வெளியில் தெரிந்தால் முதலாளிமார் உஷாராகி விடுவார்கள். கம்பெனி பணத்தை தங்கள்சொந்த வாங்கிக்கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்    அதனால் ரகசியமாக செயல்பட்டார். அமைசசரவையில் இதற்கான யோசனைகளை வைக்காமல் பிரதமர் நேருவிடம் மட்டும் தேதிகுறிப்பிடாமல் தகவல் கொடுத்தார் இது பற்றி வானொலியில் பேச நேரம் கேட்கும் பொது கூட என்ன அறிவிப்பு என்பதை சொல்லவில்லை. 

நாடு புராவிலும் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்களை கைப்பற்ற அதிகாரிகளை அனுப்பினார்> அவர்களுக்கு தான் எதற்காக செல்கிறோமென்பதைக்கூட சொல்லவில்லை.அவர்களிடம் சீல்வைக்கப்பட்ட  கடிதங்கள் கொடுக்கப்பட்டன.  கால 10 மணிக்கு அதனை பிரித்து பார்த்து அதில் சொல்லி இருக்கும் உத்திரவுகளை நிறை வேற்றவேண்டும் என்று அவர்களுக்கு கட்டளை விடப்பட்டிருந்தது   

1956ம் ஆண்டு ஜனவரி மாதம் 19மத்தேதி இரவு 8.30 மணிக்கு நிதி அமைசர் தேஷ்முக் வானொலியில் இன்சூரன்ஸ் அரசுடமை ஆக்கப்பட்டது என்று அறிவித்தார்.

முதலாளி மார்கள் தங்கள் கைத்தடிகள்மூலம் தகவல் வரும் என்று தொலைபேசிக்காக காத்திருந்தார்கள்.20ம் தேதி காலை அவர்கள் அலுவலகம் இந்தியா முழுவதும் திறக்கப்படும் பொது ஏற்கனவே அனுப்பப்பட்ட அதிகாரிகள் சில் வைத்த கவர்களோடு அலுவலக வாசலில் காத்திருந்தார்கள். அலுவலக கணக்குப்புத்தகத்தை வாங்கி அதில்குருக்கே கையெழுத்து  போட்டுவிட்டு சென்று விட்டார்கள். அன்றைய வர்த்தகம் கூட  தங்கு தடை இன்றி நடந்தது.

உலகம் பூறாவும் தேஷ்முக் அவர்களை பாராட்டியது.அவருடைய செய்நேர்த்திக்காக ! .

வள்ளுவன்" இதனை   இவன் கண் விடல்" என்றான். !!

 அர்த்தம் பொதிந்த வார்த்தை !!!

 

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எப்பேர்ப்ட்ட செயல்
போற்றுதலுக்கு உரிய முன்னேற்பாடு ஐயா