Friday, August 19, 2016



மது விலக்கு -


பாவம் "முத்துக்குமார் "





அற்புதமான கவிஞன் ! எழுத்தாளன் ! சமூகப்பிரக்ஞை  உள்ள இளைஞன் !

அவனுடைய மரணத்தை இந்த மதுவிலக்கு ஆதரவாளர்கள் இவ்வளவு தூரம் கொசசை   படுத்தி இருக்க வேண்டாம் .

நுழைவதற்கு முன்பே இந்த துறையில் முதலில்  வேண்டியது இந்த பழக்கம்  தான். இது எல்லாருக்கும் தெரியும். 

என் போன்றவர்கள் பாக்கியசாலிகள்.நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போதே மது விலக்கு  அமலாகிவிட்டது. முதன் முதலாக மது விற்பனை கடையி னை   என் இருபத்திஇரண்டாம் வயதில் ஹைதிராபாத்தில் தான் பார்த்தேன். நானொன்றும் மதுவை தொட்டதே  இல்லை என்று சொல்ல வில்லை . and I am not a habitual drunkard .

குடிப்பதை பெருமையாக எழுதுவதும்  அதனை சிலாகித்து புகழுவதும் நின்றாலே பாதி பிரசினைமுடிந்து விடும்.

சாரு நிவேதிதாவும்,மனுஷ்யபுத்திரனும்குடித்துகும்மாளமிட்டதை  பத்திரிகைகள் பிரசுரிப்பதை நிறுத்தினாலே போதும். பிரச்சினை  தீர்ந்துவிடும் .

எதோ தமிழகத்தில் தான் குடித்து கொண்டாடுகிறார்கள் என்பது உண்மையல்ல. காந்தி அடிகள் பிறந்த குஜராத்திலும் உண்டு.

சந்திகரில்  நடந்த அகில இந்திய மாநாடு ஒன்றுக்கு பார்க்க சென்றிருந்தேன். மார்சு 31 லிருந்து நான்கு நாட்கள் நடந்தது. 5* வெப்பம்.குளிர் தாங்கமுடியவில்லை. பொது மாநாடு 11மணிக்கு வெளி அரங்கில் நடந்தது. மாலை 3 மணிக்கு முடித்து அனுப்பி விட்டார்கள். வந்திருந்த பார்வை யாளர்கள் பாக்கெட்டில் 1/4 பாட்டில்கள் இருந்தன.

தெலுங்கானா எழுசசியின்  பொது  போராளிகள் மலேரியாவினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காட்டுப்பகுதியில் இருப்பதால்.அவர்களிடம் "குடும்பா " என்ற நமது "கள் " மது எப்போதும் இருக்கும்.அதுதான் அதற்கான மருந்து . (telungaana struggle -by p .sundarayya ) 

- 40* குளிரில் வசித்திருக்கிறீர்களா ? மாசுகோவில் இது சர்வ சாதாரணம்.உயிர் காப்பதற்காகவாவது குடிக்கவேண்டியது உண்டு.

முதலமைசர்கள் எத்தனை  பேர் குடிக்கிறார்கள். அடையார் கடற்கரையில் போலீஸ் காவலோடு அமைசசரவை கூட்டம் நடக்குமே ! அப்போது குடிக்காமலா இருந்தார்கள்.

அந்த பிரபல நடிகர் அமெரிக்காவிலிருந்து வரும்போது black horse பாட்டிலை திறந்து குடித்துக் கொண்டேவந்தார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் எழுதியதை  பார்த்தவர்கள் தானே நாம்.

மதுவின் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் !

மது பழக்கமாகிவிடக்கூடாது !!

எல்லாம் சரிதான் !!!

தமிழகத்தின் பிரசினை அதுமட்டும் தானா ???















     













1 comments:

vijay said...

//சாரு நிவேதிதாவும்,மனுஷ்யபுத்திரனும்குடித்துகும்மாளமிட்டதை பத்திரிகைகள் பிரசுரிப்பதை நிறுத்தினாலே போதும். பிரச்சினை தீர்ந்துவிடும் //.சத்திய வாக்கு