Tuesday, June 07, 2016






"மெட்ரோ ரயில் "

"பாரிஸ்" 

நகரத்திலும் ஓடுகிறது.....!!!




சென்னை நகரத்தில் மெட்ரோ ரயிலை விரிவு படுத்த  மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது . சுமார் சுமார் 3000 கோடி ரூபாய்     அதற்காக ஒதுக்கியுள்ளது.  அரசு இதனை சாதனையாக குறிப்பிட்டுள்ளது.

தி.மு. க தலைவர் துடித்து எழுந்து  2008ம் ஆண்டு  ஜப்பானில் மெட்ரோ வுக்கான ஒப்பந்தம்  கைஎழுத்தானதை சுட்டிக்காட்டி   தி.மு. சாதனை என்று ஆவணங்களை  எடுத்து வீசியுள்ளார். மெட்ரோ வை சீர்குலைக்க ஜெயலலிதா "மோனோ "  ரயில் கொண்டுவர  முயன்றதையும்   பிட்டூ வைத்துள்ளார்.  மீண்டும் தி.மு.க -அதி.மு.க லாவணி ஆரம்பமாகியுள்ளது.

(நிலைமையை  பார்த்தால்  வரன்ஹேஸ்டிங்கஸ் காலத்திலிருந்து இன்றுவரை ஜார்ஜ் கோட்டையிலுள்ள ஆவணங்களின் ஜெராக்ஸ் காப்பி   .மு.க அவர்களிடம் இருக்கும்  என்று தோன்று கிறது)

சென்னை நகரத்தில் உள்ளவர்த்தக நிருவனங்கள், தொழிற்சாலைகள் ,அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் தங்கள் வேலைக்கு    வர இது பேருதவியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை .

 50 களில்   முதல் ஐந்தாண்டு  திட்டம் ஆரம்பமான போது சில புரிதல் கள்  உருவாகின.     முத்தரப்பு மாநாடுகள் முலம் ( அரசு,தொழிற்சங்கள் ,முதலாளிகள் அமைப்பு ) அரசு மாதிரி முதலாளியாக  செயல்படவேண்டும். தொழிலாலர்களீன் தங்குமிடம், அவர்கள் வேலைத்தளத்திற்கு செல்வது  முதாலளிகளீன் பொறுப்பு என்று உருவானது.ரயில் பெட்டி  தொழிற்சாலையின்  வாகனங்கள் வாகனங்கள் திருவல்லிக் கேணியிலும் ,தி.நகரிலும் உருண்டோடுவதை நாம் பார்த்திருக்கிறோம் . தனியார் தொழிற்சாலைகளின் வாகனங்கள் தொழிலாளர்களையும் , ஏற்றிச் செல்வதை கண்டிருக்கிறோம்.இன்று அப்படிப் பார்க்க முடியவில்லை.

அரசு    பேருந்துகள் மின்சாரயில்கள் ,மெட்ரோ  அவற்றை செய்கின்றன 

பாரிஸ் நகரத்தில் மெட்ரோ 1900 ஆன்டு ஆரம்பிக்கப்பட்டது.  விழா எதுவும் நடத்தப்படவில்லை ..  பாரீஸ் நகராட்சிதான் நிர்வாகம்.   நகரத்தின் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , அந்த  சிலவின ஏற்றுக்கொண்டு அதற்கான வரியை நகராட்சிக்கு தருகின்றன .

இந்தியாவில் அப்படிப்பட்ட ஏற்பாடுகள் இல்லை . ஏற்பட்டால் மக்களின் கட்டணம் குறையலாம்.

நான் -நீ  என்று லாவணி பாடுபவர்கள் இந்தபக்கம்  திரும்பினால் நல்லதுதானே !!! 

0 comments: