Wednesday, April 06, 2016

பயந்துபோன கருணா நிதி 

"இந்தி"யில் பேசினார் ...!!!





2012ம் ஆண்டு விழுப்புரத்தில்னடந்தநிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த கருணாநிதிக்கு ,பார்வதி,பரமேஸ்வரன், முருகன் என்று இந்து கடவுளர்கள் வேடமிட்டவர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதனை இந்து மகாசபை எதிர்த்து வழக்குப் போட்டனர்.

சேதுசமுத்திரம் திட்டம் பற்றி பேசும் போது கருணாநிதி அவர்கள் " ஒருலட்சத்து எழுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் இருந்தாரா ? செதுபாலத்தை கட்டினாரா ? அவர் எந்த பொறியியர்கல்லூரியில் படித்தார் ?"என்று  பேசினார். பா.ஜ.க பிரமுகர் ரவி சங்கர் பிரசாத் இதனை கண்டித்தார். 

"இன்று வால்மீகியும் இல்லை .ராமனும் இல்லை . வால்மீகி எழுதி உள்ளதை தான் நான் சொன்னேன் . ராமன் குடிகாரன் என்று வால்மீகி எழதி உள்ளார் அதனைக் கூட நான் குறிப்பிடவில்ல " என்றும் கருணாநிதி விளக்கினார்.

இருந்தாலும் கூட்டணியில் அவரோடு இருந்த கட்சிகளா ன காங்கிரஸ் போன்றவைகளே முகம் சுளித்தன.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வற்புறுத்தி தமிழகம் முழுவதும் "பந்த் " நடத்த அறிவித்தார்.

இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. "பந்த்" நடத்தாமல் உண்ணாவிரதம் என்று அறிவித்தார். அன்று நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசினார்.

"எனக்கு ராமன் விரோதி அல்ல . ராவணன் தான் விரோதி " என்று அவர் பேசிய போது பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அது மட்டுமல்ல.

"இந்துஸ்தான் ஹை  தேஷ் ஹமாரா ! 

ஜான்சே அப்னே ஹம்கோ ப்யாரா!

இந்து முஸ்லீம்சீக் இசாயி !

சபி ஹமாரா பாயிபாயி !

 பாயிஹோகா பாயி ஹமாரா!

 ஐஸா ஹோகா தேஷ் ஹமாரா!! " 

என்று இந்தியிலும் பேசினார் . 

ஏன் இந்தியில்பேசினார் என்பதற்கு எந்த விளக்கமும் இதுவரை இல்லை 

" இந்தியன் எக்ஸ்பிரஸ் ". -2007 ஆண்டு ஆவணக்காப்பகத்தில் கருணாநிதி அவர்களின் குரலில் பதிவு செய்யப்பட்டதை  கேட்கலாம். 

(to come out of  s c ban karuna nithi made a fast change and he spoke in Hindi 2-10- 2007 Indian express )




 

0 comments: