Monday, March 28, 2016

பி.ஆர். என்ற அந்த

தீர்க்க தரிசி......!!! 


1967ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசின் கை பலவீனமாக ஆரம்பித்தது.இதனை மாற்றி அமைக்க காங்கிரசுக்குள் உட்கட்சி போராட்டம் ஆரம்பமாகியது.

1969ம் ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தலில் நீலம் சஞ்சீவி ரெட்டியை காங்கிரஸ் நிறுத்தியது. இதன் பின்னால்  உள்ள சதியை உணர்ந்த இந்திராகாந்தி அம்மையார் சுயேட்சையாக வி.வி கிரி அவர்களை நிறுத்தி மனசாட்சிப்படி வாக்களிக்க கேட்டுக் கொண்டார் .

வி.வி கிரி வெற்றிபெற்றார்.

வங்கிகள் தேசீய மயமாகாக்ப்பட்டதும் இப்போதுதான். காங்கிரஸ் கட்சி இண்டிகேட்,சிண்டிகேட் ஆனதும் இப்போது தான்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ராமமுர்த்தி தமிழகம் வந்திருந்தார்.பத்திரிகையாளர்கள் அவரை வளைத்து வளைத்து கேள்விகளால் துளைத்து விட்டனர். 

" வங்கிகளை தேசஉ டமையாக்கியது நியாயமா ?" 

"டாடாவுக்கு பாங்க ஆப் இந்தியாவும் சென்றல் வங்கியும் உள்ளது.பில்லாவுக்கு இந்தோகமர்சியல்வங்கி, உள்ளது.நாம் ஊர் செட்டியாருக்குஇந்தியன் வங்கியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுமுள்ளது. இவற்றில் செமிக்கும்மக்கள்பனத்தை  இந்த பெரு முதலாளிகள் சூரையாடுகிறார்கள்.அதன் மக்கள்நல திட்டங்களுக்கு ,மருத்துவம்,கல்வி,போக்குவரத்து ஆகியவற்றிற்கு பயன்படுத்த இது வழிவகுக்கும் " என்றார். 

"அப்படியானால் ல்நீங்கள் இந்திராகாந்தி அம்மையாரை இது விஷயத்தில் ஆதரிக்கிறீர்களா ?"

"ஆம் !ஆதரிக்கிறோம் !"

"சோவியத் யூனியனைப் போல இந்தியாவும் ..."

இடைமறித்த பீ ஆர் " அவசரப்படாதீர்கள்  . nationalaisation for whom , by whom and for what என்ற கேள்விக்கான பதிலையும் அது சார்ந்திருக்கிறது."  என்றார் அந்த தீர்க்கதரிசி.  



( சரஸ்வதிபிராமண   வகுப்பில் பிறந்த மல்லையாவிற்கு அப்போது 14 வயதுதான் )

0 comments: