Sunday, March 27, 2016

தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் ,

விடுதலை சிறுத்தைகளும் ,

இட்டு நிரப்புவார்கள் .....!!!




இரண்டு நாட்களுக்குமுன்பு மதுரையில் உள்ளமூத்த பத்திரிகையாளறோடு தொடர்புகொண்டேன்.

ஜோதி பாசுவிளிருந்து ,மதுரை நெடுமாறன் வரை  நேர்காணல் கண்டவர். விஜயகாந்தின்தலைமையில்உள்ள தே .மு.தி.கஅணியும் ,மக்கள் நல  கூட்டணியும் தொகுதி உடன்பாடு கோண்டுள்ளது பற்றி  கேட்டேன். 

"நல்ல ஏற்பாடு தான் " 

"விளைவு எப்படி இருக்கும் ?"

"அண்ணா திமுக தவிர அம்புட்டு பேரும் அலறுதாங்க "திமுக கலகலத்து போயிருக்கு "அநியாயத்துக்கு அதிமுகவை வசை  பாடுறாங்க ! அதுவே அவங்களுக்கு எதிரா போகுது"

"அம்மா வுக்கு தண்டணை கொடுத்தபோது முன்று மாணவிகளை எரித்தர்களே ன்று குற்றம் சுமத்தினால் மதுரை தினகரன் ஆபிசுல முன்று பேர உயிரோடு எரிச்சயெ  நு இசை பாட்டுபாடுதான் ."

"குமாரசாமி தற்கொலை நா , தா.கிருஷ்ணன் படுகொலை ங்கான் . மாணவர்கள் மீது போலிஸ் தாக்குதல் நா டாக்டர் பட்டம்வாங்க அண்ணாமலைக்கு போகும்போது மாண வன அடிச்சு கொன்னு குளத்துல வீசினவன் தான நீ ! அவன் அப்பனுக்கு பணம் கொடுத்து இது என் மவனே இல்லனு சொல்ல வச்சவன் தானே நீ '

"லாவணிதன் நடக்குது."

"தி.மு.க கை இறங்கித்தான் இருக்கு "

"அவங்க பிரச்சாரம் நகர்புறங்கள்ளஎடுக்கர அளவுக்கு கிராமங்கள்ள எடுபடல. அப்பாவி ஜனங்களுக்கு அம்மா மேல அவ்வளவு இறுக்கம்.

"என் அப்படி ? "

" குழந்தைகுட்டி,குடும்பம் நு எதுவும் இல்லாதவங்க. திரை உலகில் சம்பாதித்ததே அவங்களுக்கு போதும் . அவங்க லஞ்சம் வாங்கினானு சொல்றதையே அவங்க  நமபதயாராயில்ல ".

" அவங்கள சுத்தி இருக்கவங்க வாங்கினா அவங்களா பொறுப்பு . ஒ.பி,எஸ் ,நத்தம் நு 30000கோடி புடுங்கிட்டாங்க " இதுக்கும்மேலஎன்ன செய்ய " 

"தி.மு.கவால்இதுக்குபதில் சொல்லமுடியவில்லை.தயாநிதி,கலாநிதி,கனிமொழி யை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லும்குற்றச்சாட்டு எடுபடாமல் போகிறது."

"அ தி.மு.கவின் செல்வாக்கு கிராமப்புறங்களில் கணிசமாக உள்ளது.இதனை அடிக்க  பா.ம.க,காங்கிரஸ் ஆகியவற்றால்முடியாது." 

."அ .தி.மு.க வந்து விடுமா ?" 

"வாய்ப்பு அதிகம் "

"என்னண்ணெ "

"வாய்ப்பு தானே "

"கிராமப்புறங்களில் கடுமையாக வேலை  செய்தால் ""

'மக்கள் நல கூட்டணியால் முடியுமா ?" 

முடிய வேண்டும் ! தீண்டாமை ஒழிப்பு முண்ணணி இதில் கணிசமாக பணீயாற்ற் முடியும்> அவ்ர்கள் கிராமப்புற தலித்துகளின் பாடுகளை முன்னேடுத் து போராடங்கள நடத்துகிறார்கள். நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.இது அந்த அப்பாவி மக்களிடையே ஒரு உந்து சக்தியாகமாரி வருகிறது." 

" தவிர படித்த தலித் இளைஞர்களை வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளில் வெற்றிபெற வகுப்புகளை நடத்துகிறார்கள். இதில் தலித் அல்லாதவர்களின் பங்கு மிகச்சிறப்பாக  உள்ளது.சாதி வெறியர்கள் இது கண்டு அரண்டு நிற்கிறார்கள்."

"எந்த கிரமமாக இருந்தாலும் தலித்துகளில்லாமலில்லை. அங்கு விடுதலை சிறுத்தகளுமில்லாமல் இல்லை ." தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்,விடுதல சிறுத்தைகளும் முண்டாசு கட்டிக்கொள்ளும் தருணம் இது .அவர்கள் இட்டு நிரப்புவார்கள் "

"நிலைமைதான் என்ன அண்ணே ?"

விஜகாந்தும்ம் மக்கள்  நல கூட்டணீயும் தி .மு.கவை  மூன்றாவது இடத்துக்கு தள்ளி விட்டது..


முதலும் இரண்டாவதும் அ தி .மு.க வா  விஜகாந்த் ம ந கூ வா இரண்டிற்குள் எது  என்பது இன்னும் சிலவாரங்களில் தெரிந்து விடும்.







0 comments: