Thursday, March 24, 2016

"தி.மு.க ; அதிமுக" தொலைய வேண்டும் ....!!

தொழில் முனைவர்கள்  விருப்பம் !



அவர் சாத்தூரில் இருக்கிறார். நண்பரும் கூட . ரோடு போடுவதிலிருந்து , அரசுக்கு வாடகைக்கார் சப்ளை  செய்வது வரை அவர்தான். தென் மாவட்டங்களில் கொடிகட்டி பறந்தார் . 

அடிக்கடி பேசிக்கொள்வோம். 

"அரசியல் நிலைமை எப்படி இருக்கு ?" 

"அண்ணே ! ஏதாவது பிரளயம் வந்து இவம்களை கொண்டு போயிடாதன்னு இருக்குன்னே ! '

"ஏன் ? இவ்வளவு சலிப்பு ? "

"தொழில் பண்ணமுடியல அண்ணெ . நாங்க லாபத்துக்கு தான் வேல பாக்குறோம் 1  காண்ட்ராக் நா கமிஷன்  உண்டு . அது தெரிஞ்சுதான் வாரம்.ரோடு போட 10 லட்சம் நா நாங்க ஒரு 5000 அல்லது 10000 தனியா வச்சுடுவம். "

"இப்பம் 4லட்சம் வையிங்கான்  அண்ணெ ! அப்பம் ரோ"டு மயிரா நிக்கும் "போஸ்டல் , கஸ்டம்ஸ், பாங்கு நு சிவில் ஒர்க் எடுப்போம் ! குறிப்பா ஆந்திரா,கர்நாடகா  மாநிலங்கள்ல ! "

"தமிழ்நாட்டு கான்றாக்டர்னா டெண்டர்லயெ வேண்டாம் நு சொல்லுதான். கேட்டா வேல ஸ்டாண்டர்டு மோசம் நுபெராயிடுச்சு. "  

"ஆட்சி மாறினா சரிதானவே "

"மாறினா ! ஆரம்பிச்சு வச்சதே அவங்கதானவே ! வீராணம் காண்ட்ராக்டு மறந்துருவமா? சத்யநாராயணா சாகத்தான செஞ்சாரு !"

"என்னதான் செய்யணும்கெரு "

"போதும் ணெ ! இவங்க ரெண்டு பெரும் கிழிச்சது ! மாறனும் னே ! அதுதான் அண்ணெ நாங்க தொழில் பண்றவங்க நினைக்கிறோம் "


மாற்றுவோமா ! 

 மாற்றமுடியுமா ?

0 comments: