Friday, January 08, 2016

பனாரஸ் இந்து பலகலை கழகம் 

"அன்றும் இன்றும் ......"




அந்த பேராசிரியர் ........!!!

இந்திய சுதந்திர வேள்வியில் மாணவர்கள் குதித்திருந்த நேரம் ! பனாரஸ் இந்து பலகலைகழகம்.இந்த மாணவர்களின் யாகசாலையாக    இருந்தது !

சைமன் கமிஷனுக்கு எதிராக கங்கை ஆற்றினுள் நீந்திச்  சென்று பி.ராமமூர்த்தி சகமாணவர்களொடு கறுப்புக் கோடி கட்டிய பல்கலையும் அது தான் !

அங்குதான் அவர் பெராசிரியராக    இருந்தார் !

பிரிட்டிஷ் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது ! பல்கலை வளாகத்தைச் சுற்றி வளைத்து மாணவர்களை பிடிக்க விரும்பியது !  துணை வேந்தராக இருந்தவர் தான் அந்த பேராசிரியர் ! பல்கலை வளாகத்திற்குள் போலீசார் வரக்கூடாது என்று கூறிவிட்டார் !

சுதந்திர வேட்கையில் திளைத்திருந்த மாணவர்களை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்க மாட்டென் என்று அறிவித்து விட்டார் !

அவரை மிறி போலிஸ் நுழைந்தால் ...?

மாணவர்கள் துணைவேந்தரை சந்தித்தார்கள் ! நிலைமையை அவரும் பரிசீலித்தார் ! 

"நீங்கள்வளாகத்தில் இருக்கும் வரை உங்களுக்கு நான் பாதுகாப்பு ! என்னையும் மீறி போலிஸ் நுழைந்தால் .... கவலைபடாதீர்கள் ! இரவோடு இரவாக  கிராமப்புறங்களுக்கு ஓடிவிடுங்கள் ! அந்த கிராமத்து மக்கள் உங்களை போலீசிடமிருந்து காப்பாற்றுவார்கள் !" என்றார் அந்த துணைவேந்தர் !

மறுநாள் போலீஸ் நுழந்த பொது அவர்கள் தேடிவந்த மாணவர்கள்   அங்கு இல்லை ! 

அந்த துணைவேந்தர் தான் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் !
 
இந்தியாவின் தூதுவராக மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்தித்த ஒரே இந்தியர் !!!



1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான பேராசிரியர்...
நல்ல பகிர்வு ஐயா...