Sunday, October 25, 2015

தீண்டாமையை  எதிர்த்த முதல் போராளி 

ஏசு பிரான் அவர்களே ..............!!!





 மிகவும் கொடுரமான முறையில் தீண்டாமையை அமல் படுத்தியவர்கள் யூதர்கள்.. சுமேரியர்கள் என்ற அந்த பகுதி மக்களை அவர்கள் ஒதுக்கி,ஒடுக்கி வைத்திருந்த வரலாறு படிக்க படிக்க நெஞ்சம் பதறும்.

சுமேரியர்கள் கண்ணால் பார்த்தாலே "தீட்டு" என்றார்கள். அதனால் அவர்கள் மலைக்குகைகளிலும் , பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளங்களிலும் வசிக்க வேண்டும் என்று உத்திடவிட்டனர். பொது வெளியில் அவர்கள் வரக்கூடாது . அப்படியே வந்தாலும் துணியால் அவர்கள் பார்வை படாமல் மறைத்துக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரமான உரிமை எதுவும் கிடையாது. நோய்,பிணி எதுவானாலும் மருத்துவம் அவர்களுக்கு கிடையாது..

யூதர்களின் கொவில்புசாரிகள் சொன்னது தான் சட்டம்..ஏழை எளிய மக்களிடம் இறைவன் பெயரை  சொல்லி அநியாய வரியினை வசூலிப்பார்கள்.

இந்த கொடுமைகளைக் கண்டு வெகுண்டு எழுந்தவர் ஏசுபிரான்..கூன்,குருடு,நொண்டி,மற்றும் முடியாத வயோதிகர்களை பாதுகாப்பது முக்கியம் என்றார் அவர் நோயிலும் பிணியிலும் செத்துக்கொண்டிருந்த மனிதர்களுக்கு செவகம் செய்வது தான் இறை வழிபாடு என்றார்.

இதனை பிரச்சாரம் சேய்து வந்தார்.ஏழைமக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டனர்.
பூசாரிகள் சொல்வதை விட ஏசு சொல்வதையே   மக்கள்  கேட்க ஆரம்பித்தனர்.

பூசாரிகள் அநியாயமாக வரி கேட்பதை ஏசு பிரான் எதிர்த்தார்.
"அரசனுக்குகொடுக்கவேண்டியதை அரசனுக்கு கொடு . ராயனுக்கு கொடுக்கவேண்டியதைராயனுக்கு கொடு " என்று உபதேசித்தார்.

ஊர்  ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார். 

போகும் வழியில் மிகவும் தாகமாக இருந்தது. எதிரே தண்ணிர் குடத்துடன் வந்த சுமேரியப் பெண்ணிடம் குடிநீர் கேட்டார். அவள் பயந்து "நீ யூதன்.என்கையால்  நீர் அருந்தினால் என்னை கொன்றுவிடுவார்கள் "என்றார்.
"உன்னை நான் காப்பாற்றுகிறேன் " என்ற ஏசுபிரான் அவள் கொடுத்த  நீரை  பருகினார்.   இந்த செய்தியை கேட்ட புசாரிகள் கோபம் அதிகரித்தது.

அவர் தன பிரச்சாரத்தையும் ,பயணத்தையும் தொடர்ந்தார்.

சுமேரியர்களின் குடியிருப்புவழி  யாக செல்லநேர்ந்தது. சுமேரியப்பேண் ஒருவர் நோய்வாய்பட்ட தன பத்து வயது மகளோடு காத்திருந்தாள் " ஏசு பிரானே ! என் மகளுக்கு கடுமையான காய்ச்சல். நான் உங்களிடம் மருந்துகொடுக்கும்படி யாசிக்கிறேன்..இதற்காக என்னை கொன்றுவிடுவார்கள். மருந்துகொடுங்கள். நான் சாகிறேன் என்மகளுக்காக . அவள் பிழைத்து எழட்டும் " என்று கதறினாள் .".

அவள்குடிசையில்தங்கி அவள்மகளுக்குமருந்திட்டு குணப்படித்தினார் ஏசு பிரான்.

சிஷ்யர்கள் தடுத்துப் பார்த்தனர்" அவள் சுமேரியப்   பெண். தீண்டத்தகாதவள் " என்றனர் .

"இந்த பூமியில்  பிறந்த உயிர்கள் அனைத்தும் சமம். அதில் மேலோர்,கீழோர்  ,தீண்டத்தகோதோர் என்று இல்லை ' என்றார் ஏசுபிரான்.

ஏசு பிரானை சிலுவையில் அறைந்தத்ற்கான காரணங்களில் ஒன்று அவர் தீண்டாமையை    ஒழித்ததும்தான்


(பி.கு . நல்ல காலம். அப்போது தமிழக பகுத்தறிவாளர்கள் யாரும் ஏசுபிரான் அருகில் இல்லை. இருந்திருந்தால்," பார்ப்பனீயம்,மனுநீதி" என்று  கூறி  ஏசுவையே  குழப்பி தீண்டாமையை நீடிக்கச் செய்திருப்பார்கள் .முற்போக்காளர்கள் என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்..) 
 



2 comments:

மோகன்ஜி said...

இந்த விவரங்கள் எனக்கு ஐந்தாறு வயதிருக்கும்போது என் தகப்பனாரால் சொல்லப்பட்டது. மீண்டும் என் தந்தையின் மென்குரல் கேட்கிறது சார்!

சரவணன் said...

சுமேரிய அல்ல... சமேரிய என்று எழுத வேண்டும். ஆங்கிலத்தில் Samaritans. சுமேரியன் என்பது Sumerian என்பதைக் குறிக்கும்--இது வேறு.