Saturday, October 17, 2015

"சு.வே . மீது கொலை வழக்கு "

பத்து ஆண்டுகள் அலைந்தார் ......!!!


திருப்பரம் குன்றத்தில் கார்த்திகை  தீபம் ஏற்றுவது வழக்கம்.அதில் இந்துமுன்னணியினர் சண்டி த்தனம் செய்வது வழக்கம். அவர்களுடைய நோக்கம் தீபம் அல்ல. மலையின் மேல் இறக்கும் "சிக்கந்தர் தர்க்கா " வினை அகற்ற வேண்டும். 

இதனை தடுத்து நிறுத்தியவர் சு.வேங்கடேசன். எழுத்தாளர்களையும்  கலைஞர்களையும் இணைத்து இந்த போராட்டத்தினை நடத்தினார்.
கோபங்கொண்ட எதிரிகள் வெங்கடேசனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். 

அவரை பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிலை .பல தோழர்கள்  பொறுப்பேற்க முன் வந்தனர். மதுரை எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பில் என் வீட்டி தங்க நான் யோசனை கூறினேன்.  வேறு இடத்தில் பத்து பதினைந்து நாட்கள்வரை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.ஆனா இந்து முன்னணியினர் விடவில்லை. தங்களை  தாக்கி  கொலை செய்யமுயன்றதாக வழக்கு தொடுத்தானர்.பத்து பேரை கொலை செய்ய முயன்றதாக வழக்கு .

பத்து ஆண்டுகள் சு.வெங்கடேசன்  கோர்ட்டுக்கும்,போலீஸ் நிலையத்திற்கும் நடந்தார்.      

தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கம் தண்ணிர் மட்டும் விட்டு வளர்க்கப்படவில்லை தோழர்களே !!!

0 comments: