Friday, October 30, 2015

கலைஞர்கள் நம் பின்னால் ---2








"கலைஞர்கள் நம் பின்னால் "என்று ஒரு நிலைத்தகவல் எழுதி இருந்தேன். அதனை ஆந்திர தோழர்கள் பார்த்து தொலை பெசிமூலம் பாராட்டினார்கள். மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாளிதழான  "பிரஜாசக்தி " திருப்பதியிலிருந்து ஒரு பதிப்பினை வெளியிடுகிறது. அந்த பதிப்பின் நிர்வாகியான தோழர் வி.சந்திர சேகர் இந்த செய்தியை படித்து விட்டு எழுதி இருந்த தகவலை இங்கே தருகிறேன்:


"நீங்கள் திருப்பதியில் செயல்படும் ஜனபாத கலைஞர்கள் சங்கத்தின் வளர்ச்சி,செயல் திட்டம்,பிரச்சினகள பற்றி விரிவாக எழுதீருந்தீர்கள்.சமிபத்தில் 38000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கம் திருப்பதியிலிருந்து திருமலை வரை ஒரு பாத யாத்திரையை நடத்தி,தங்கள் கோரிக்கைகளை எடுத்து உரைக்க சென்றார்கள்.( தேவஸ்தான )அதிகாரிகள்முதலில் அனுமதிமறுத்தார்கள். சங்க உறுப்பினர்கள் "மலையப்ப ஸ்வாமியே !- கோவிந்தா ! கொவிந்தா !, ஏழுமலையானே ! -கொவிந்தா! கோவிந்தா !என்று குரலெழுப்பிய போது அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை . காட்டு வழியிலும்,கொவிலுக்கும் செல்ல அனுமதித்தார்கள். அதிகாரிகள், எங்கள் உறுப்பினர்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்ய வேண்டியதாயிற்று. காட்டுப்ப்பதையில் உள்ள சொதனச்சாவடியில் வன இலாகா கணக்கின் படி இது வரை இல்லாத அளவுக்கு கூட்டம் வந்ததாக பதிவாகியுள்ளது."


("தலையில்  மொட்டை, நேற்றியில் திறுமண் , வாயில் இறைவனின் நாமம் - ஆகியவற்றொடு ஒன்றுபட்டு நின்றதால் கிடைத்த வெற்றி இது." )

0 comments: