Sunday, August 02, 2015

தமிழின் சிறப்பு 

"ழ" கரம் ......!!!




தமிழ் மொழியின்  "ழ" கரம் ஒடிஷா மொழியிலும், மராட்டிய மொழியிலுமிருப்பதாக திருமதி ஹன்ஸா காஷ்யப் தன் முகநூலில் குறி ப்பிட்டிருந்தார்.


ஒடிஷா மொழியில் இருக்கிறதா என்பது தெரியவில்லை>மராட்டிய மொழியில்( நவீன வரவூ ) இருக்கிறது.

மலையாளத்திலும் உள்ளது. புழல் என்ற வார்த்தை அந்த மொழியில் உள்ளதாகத் தெரிகிறது. "ஆலப்புழா " என்பதை உச்சரிக்கவும்,எழுதவும் மலையாளத்தில் முடியும்.


இந்த சிறப்பு "ழ"கரம் தமிழுக்கு மட்டும் என்பதாக சொல்ல முடியவில்லை. ஐரொப்பிய மொழிகளீலும் உள்ளது. பிரெஞ்சு மொழியில் "ழ"கரம் உண்டு. ஐரோப்பியர்கள்  இந்தியாவை ஆண்டபொது தமிழகத்தின் சிலபகுதிகளை ப்ரான்சு நாட்டினர் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள்  வசம் சோழ நட்டின் பகுதிகள் இருந்துள்ளது. அதனை தங்கள்  ஆவணங்களில்பிரன்சுமொழியில்CHORAMANDALஎன்றுகுறி ப்பிட்டுள்ளார்கள் . "ழ"என்ற தமிழ்  எழுத்தை  "RA " பிரெஞ்சு வரிவடிவத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.


பிரிட்டிஷ் காரர்கள் இதன" கோரமண்டல்" என்று வாசிக்க தென் இந்திய ரயில்வே (S I R ) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில்தொடரை விட்டது.


வடமாநிலங்களில் உள்ள தமிழ்  அமைப்புகள் தமிழ் வகுப்புகளை  நடத்து கின்றன. இந்திமராட்டி,வங்காளி மாணவரகள் அகில இந்திய பதவிகளூக்காக தேர்வுகளில் விருப்பபாடமாக இதன  கற்கின்றனர். டெல்லி,கல்கத்தா ,மும்பை போன்ற நகரங்களில் இவை நடை பெறுகின்றன .உச்சரிப்பில் தான் இந்த மாணவர்கள்  சிரமப்படுகிறார்கள் .


உதாரனமாக "கங்கை " என்பதை நாம் " Gangai " என்று உச்சரிக்கிறோம். அதேசமயம் "கடவுள் " எனபதை"khadavull" என்று  உச்சரிக்கிறொம். எழுத்து என்று வரும் போது இரண்டுக்குமே "க ' என்ற எழுத்தையே உபயோகிக்கிறோம் . எங்கு "Ga "எங்கு"Kha "  என்பதில் இந்த மாணவர்கள் திணரூகிறார்கள் . 

தமிழில் "க" என்ற உச்சரிப்பு மட்டுமே ண்டு."Gha " உச்சரிப்புகிடையாதுஎன்று  தமிழ் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

"கங்கை  "என்று மட்டுமே உச்சரிக்க வேண்டும். "Gangai "என்று உச்சரித்தால் மொழியின் தூய்மை  கெட்டுவிடும் என்கிறார்கள் . 

இதனை இன்னும் தீவிரமாக அறிவியல் துணை கொண்டு ஆராய வேண்டும்.

தமிழ் மொழி தொனமையான மொழி எனும்போது  பெருமைதான் . கல்தோன்றா மூத்தகுடி பெசிய மொழி எனும் பொது சிலிர்க்கத்தான் செய்கிறது ! 

  கல் தோன்றவில்லை என்றால் மனிதன் தோன்றி இருக்க முடியுமா? மனிதன் தோன்றாமல் மொழி தோன்றியிருக்க முடியுமா?


அறிவியல் கேள்விகள் பயமுறுத்துகின்றன. 


மொழியியல் வல்லுனர்கள் இவை மடத்தனமானவை என்று சொல்கிறார்கள் .


மடமையை கொளுத்துவோம் ...!!!













0 comments: