Monday, March 09, 2015

"நன்றி 

ராஜு முருகன் அவர்களே !!!"





................"கடவுளே மூட நம்பிக்கைதானே  குட்டா "எனச்சிரித்த தோழர் ஹரிசுதனை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் !

வேளாண் வளர்ச்சிக்காகவும் ,இயற்கை வளங்களின் சுரண்டலுக்கு எதிராகவும் நடக்கும் அத்தனை போராட்டங்களிலும் தன்னை இணைத்துகொள்பவர் ஹரிசுதன் ! ஓடிஸா மலைக்கிராமங்களை வேதாந்தா நிறுவனம் ஆக்கிரமித்த பிரச்சினையிலிருந்து ,"காவிரி" டெல்டாவை விழுங்கும் மீத்தேன் திட்டம் வரை இந்தியாமுழுவதும் பாயணப்பட்டு போராட்டங்களில் பயணிப்பவர் ! ஆறுமாதங்களுக்கு மேலாக சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் ,மே.வங்க காடுகளில் அலைந்து அந்த மக்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்நிலையை ஆவணப்படுத்தியவர் ! 

" மார்க்சையும்,மசனா புஃ க்கொவையும் படிச்சு கிழிச்சுவளர்ந்தோமெ குட்டா !அதான் மிஸ்டேக் ! மத்த ஆளுகளை மாதிரி வேடிக்கை பாத்துட்டு வீட்லபோயி மா ட்சு பாக்க முடியல ! தூக்கம் பிடிக்கல ! ஊர்  ஊராபொயி தொ ண்டைகிழிய கத்துறோம்.  கொடிபிடிக்கிறொம் ! இதோ பாருங்க லெப்ட் ஷோல்டர்ல !இதே ஊர்லதான் ! தாலுகா ஆபீஸ் முன்னாடி பைக்ல வந்தவனை இழுத்துபோட்டு வெட்டினாங்க ! ஒரு அரசியல் கட்சி ஆளுங்க ! நாலஞ்சு வெட்டு! வெறி பிடுச்சவன் மாதிரி ஒடி தப்பிச்சென் ! ஒரு வெட்டு கழுத்துல விழுந்தாலும் அவுட் !நம்மால  இன்னும் சிலகாரியங்கள் நடக்கணும் இந்த உலகத்துக்கு !அதனால பொழைச்சிரூ க்கேன் !"என சிரித்தவரைபார்க்க ஆச்சரியமாக இருந்தது !

"..இதுல ரொம்ப பெரிய துக்கம் என்னன்னா குட்டா "... நாம யாருக்காக பொறாடரமொ...அவங்க நம்மை காமேடியனா பாத்துட்டு கடந்து போறதுதான் ! இந்த சனம் இப்படிதான் ! தீயது பின்னாடி தான் போகும் ! அபத்தங்களை ஒண்டாடும் ! கெட்டவனை ஜெயிக்க வைக்கும்! அதுக்காக நாமளும் வேஷம் கட்டிக்கிட்டு பவருக்கும்,சோக்குக்கும் அடிமையாக முடியுமா ? அதுக்கு பீயை தின்னு பொழைக்கலாம் ! இந்த பஜார் பக்கம்  ஒரு ஹோம் பிடிச்சு   பிராத்தல் பண்ணலாம் ! டிறக்ஸ் வித்து ,போர்ஜரி .கரப்ஷன் பண்ணி காசு சம்பாதிக்கலாம் ! அதுக்க நாம வந்தோம் குட்டா ? வாள சுழட்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான் ! போராடிக்கிட்டெ சாக வேண்டியதுதான் ! நம்ம சே மாதிரி உங்க பிரபாகரன் மாதிரி கண்ணை தொறந்து வச்சுகிட்டேசாவோம் ! பெரியார் மாதிரி மூத்திரபைய சுமந்து கிட்டெ வில்லன்களை அடிச்சு நொறுக்குவோம் !ஏ கே ஜி இருந்தார்ல ! தோத்தா என்ன ? ராஜதந்திரம்னு மக்கள் அரசியலை அடகுவைக்காம செங்கொடியை போத்திக்கிட்டு செத்து போவோமே  ! புதிய அரசியல் அதிகாரத்துக்கான அரசியலை முன்னெடுக்கணும் ! அன்னைக்கு எங்க கட்சி ஆபிச்லையே ஒருத்தன் " அட்ஜஸ்ட் " பண்ணிக்கிட்டு போவணூங்கறான் ! காலம் மாறிப் போச்சுங்கறான் ! அறத்துக்கு அட்ஜஸ்ட மென்டே கிடையாதுடா முட்டாள் !" சட்டென மௌனமாகி தீவிர யோசனையில் ஆழ்ந்து திரும்புகிறார் !

"முடியல குட்டா !...சுயநலமான தனிமனித வளர்ச்சி !பெரூ முதலாளிகள் வளர்ச்சி , அதிகாரக்குவியல் எல்லாம் நம் நாட்டையும்,இயற்கை வளங்களையும் தின்னிட்டு இருக்கு ! இப்படியே கோ டு போட்ட மாதிரி இந்தா முழுக்க போனேன் !இங்க காச்ர்கோட்ல எண்டோ சல்ப்ஹான் தெரியும்ல !..இப்பவும் தலை வீங்கி குச்சி குச்சியா புள்ளைங்க அலையதுங்க ! உபி மெஹந்திகஞ்சுல எட்டு கிராமத்தை மொத்தமா உறிஞ்சு எடுத்துட்டு போயிட்டான் கூலடிரிங்க்க் கம்பெனிகாரன் !போராட்டம் ,பேரணி நு அங்கயே கெடந்தோம் !மொத்ததையும்  உறிஞ்சு  ட்ரை ஆக்கிட்டு அப்புறம் தான் விட்டுட்டு  போனாங்க ! இங்க கேரளா பலாச்சிமடேலெர்ந்து திருச்சி சூருயூர்வரை அது தான் நடக்குது ! சோன்பத்ரால தெர்மல் பிளாண்ட் பொட்டு என்ன பண்ணுனாங்க ! இப்பவும் அங்க பொறக்கிற பிள்ளைங்க  கைகால் வளைஞ்சு தான் பொறக்குது ! வாத நோய், மெண்டல் டிஸார்டர் , பல்லு பூரா கறை ன்னு மனுஷங்க அவ்வளவு கொடுமையா அலையுறாங்க ! ஓடிஸா ஜெகத்சிங்பூர்ல கொரியாக்காரன் இரும்பு உருக்கு ஆலை  வைக்கிறேன்னு  இருபத்தி ஆயிரம் மக்களை வெளியெத்தினான் ! அதிகாரத்துல இருக்கிற எவன் கேட்டான் ! எங்க பொய் நிண்ணூச்சுங்க அந்த சனம் ? பொய் பாத்தா வயிறு எரியுது ! இந்த காயல் பட்டணத்துல கெமிகல் கம்பெனி வச்சு ஊர் மொத்தமும்  சுவாசப்பிரச்சினை வந்திருக்கு ! இப்பவும் பொராடிக்கிட்டுதான் இருக்கோம் ! என்ன தேசமடா இது ?இந்த ஊர்ல ஒரு அரசியல்வாதி, ஒர்பணக்காரன்,ஒரு தோழில் அதிபர் பாதிக்கப் பட்டிருக்கானா ? ஏழைங்க மட்டும் என்ன எலிங்களா ?விடக்கூடாது குட்டா ! அடிச்சு இவங்களை காலி பண்ணனும் ! ......."

(ஜிப்ஸி தொடர் (10) - ராஜு முருகன் விகடன் )



2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

///இதுல ரொம்ப பெரிய துக்கம் என்னன்னா குட்டா "... நாம யாருக்காக பொறாடரமொ...அவங்க நம்மை காமேடியனா பாத்துட்டு கடந்து போறதுதான் ! இந்த சனம் இப்படிதான் ! தீயது பின்னாடி தான் போகும் ! அபத்தங்களை ஒண்டாடும் ! கெட்டவனை ஜெயிக்க வைக்கும்!//
இன்றைய வாழ்வியல் யதார்த்தம் ஐயா