Monday, January 19, 2015

சாருநிவேதிதாவின் 

கொழுப்பு .........!!!


இவன் கூட்டத்துக்கு போகாம இருக்கணும்ணே  ! அதிர்ந்து பெசமாட்டிக ! இவம்லா ஒரு ஆளு ! அண்ணே  ! பாலு அண்ணே  ! இவன் போட்ட நாடகம் பத்தி ஐஞ்சு வருஷம் முன்னால எழுதுனதை படிங்கண்ணே :



 
HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Saturday, December 25, 2010

சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"
சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"


சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரின் படைபுகள் எதையும் நான் படித்ததில்லை.நண்பர்கள், இலக்கிய அன்பர்கள் மூலமாக அவரைப்பற்றி தெரிந்துகொண்டேன் எல்லோருமே எதிர்மறையான கருத்துக்களையே சொன்னார்கள் சமீப காலங்களில் அவருடைய கட்டுரைகளைப் படித்து வ.ருகிறேன.. வெறுப்பை உமிழ்வார். "விஜய் டி.வி" யில் எனக்கு பணம் கொடுக்காமல் விட்டார்கள் என்று கூறியிருந்தார். அதன் பிறகு "நீயா?நானா? நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப்பார்த்தேன்.

"மனம் கொத்திப் பறவை" என்று ஒரு தொடர் விகடனில் எழுதி வருகிறார். அதில் சில வாரம் முன்பு மதுரையில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் மதுரையில் நாடகம் போட்டபொது சிலா தாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.என்ன நாடகம்? ஏன் தாக்கினார்கள்?யார் யார் தாக்கினார்கள்.?

நாடகவியல் (Dramaatics) படித்தவன் என்ற முறையில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். நவீன நாடக ஆசிரியர்களில் அமெரிக்க நாடக ஆசிரியர் டேன்னசி வில்லியம்ஸ் எனக்குப்பிடித்தவர்களில் ஒருவர்.அவருடைய நாடகமான Cat on a Hot tin Roof அமெரிக்காவின் பிராட்வேயில் சக்கைபோடு போட்ட நாடகம். பின்னர் திரைப்படமாக வந்தது.எலிசபத் டெய்லரும்,மாண்ட்கோமரி கிளிஃப்ட் ம் நடித்தது. மிகசிறந்த கால்பந்தாட வீரன். அவனுக்கு "ஓரினச்சேர்க்கை" பழக்கம் உண்டு.அவன் திருமனமாகி தாம்பத்திய வாழ்வில் ஈடுபட இந்தப்பழக்கத்திலிருந்து விடுபட அவன் படும் பாடுகள் தான் கதை. இந்தியாவிலும் பரவலாக வவேற்கப்பட்ட படம்.

மதுரையில் மகாத்மா மாண்டிசெரி பள்ளி யிருக்கிறது.3000 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளி. அதன் வளாகத்தில் தான் சாரு நிவேதிதா "இரண்டாம் ஆட்டம்" என்று நாடகம் போட்டார்.நாடகத்தின் கரு "ஓரினச்சேர்க்கை." அந்தக் கருவுக்கு வெஞ்சனமாக "சுய இன்பம்" வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாதது என்ன இருக்கும் என்று பார்க்க விரும்பினேன். வேறுபணியின் கரணமாக முடியவில்லை

போன இளஞ்ர்கள் வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாத்தைப் பார்த்தார்கள்." ஓரினச்சேர்க்கை "யும்,சுய இன்பமும்" காட்சிபடுத்தப்பட்டிருந்தது.மேடை யேறி நாடகத்தை நிறுத்தச் சொன்னார்கள். தகராறு நடந்தது. அப்போது தடுத்தவர்கள், இப்போது மதுரைபல்கலையில் பெராசிரியராக இருக்கும் டாக்டர்ரவிகுமார் என்ற ஸ்ரீரசா,தீயாணைப்பு அதிகாரியக இருக்கும் ஆருமுகம்.தோழர் ராகவன், ஆசிர்யர் ஷாஜகான் ஆகியோர்.நாடகத்தை போடவேண்டும், அது மனித உரிமை என்று சாரு நிவேதிதாவை ஆதரித்து வந்தவர்கள் டாகர் கே.ஏ. குணசெகரன்,பொதியவெற்பன் ஆகியோர்.

சாரு நிவேதிதா பாதி உண்மையைச் சொல்லும் பழக்கமுள்ளவர் என்று தான் படுகிறது.
    





4 comments:

'பரிவை' சே.குமார் said...

சாரு குறித்து நல்ல கருத்துக்களே இல்லை... பிரபலம் என்றை ஒன்றை வைத்துக் கொண்டு வாய்சவடால் செய்கிறார்.

ப.கந்தசாமி said...

தாய்லாந்தில்தான் லைவ் ஷோ நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயுமா? அதுவும் மதுரையிலா? இவனுக்கும் கூஜா தூக்குபவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை?

கரந்தை ஜெயக்குமார் said...

இதுபோன்ற நாடகங்கள் இளம் மனதினரின் மனதினை அலைகழிக்கும் வல்லமை கொண்டவை
இதுபோன்ற நாடகங்ளகள் தடைசெய்யப்படத்தான் வேண்டும் ஐயா

V Mawley said...

Definitely there are many ,with sickly minds..they masquerade as authors..