Friday, January 02, 2015

5000 ஆண்டுகளுக்கு 

முன்னாலயே ........!!!


படிச்சவன் ,படிக்காதவன்னு வித்தியாசம் இல்லாதவங்க "இந்துத்வா" காரங்க ! எதப்பத்தி பேசினாலும் அந்தக்காலதிலே ,5000 ஆண்டுக்கு முன்னாலயே நு அரம்பிச்சுடுவாணுவ ! 

சுஷ்மா ஸ்ரராஜ் -மந்திரி,வெளிநாட்டு விவகார மந்திரி -படிச்சவங்க -வக்கீல் -அவங்க ஒரு விழாவுக்கு போயிருக்காங்க !

கீதை உருவான 5151ம் ஆண்டுவிழா !

இவங்களுக்கு எதை எடுத்தாலும் 5000 தான் ! 

வேதம்  5000 ஆண்டு ! ஆயுர் வேதம் 5000 ஆண்டு ! யோகா ,கணிதம்,வானியல், எல்லாம் 5000 ஆண்டுக்கு முன்னால யே இங்க இருந்தது ! அட !கலைகள்  அதுவும் 5000 ஆண்டுங்கான் ! மனித இயல் வல்லுனர்கள் மனிதன் பேச ஆரம்பிச்சே 10,000 ஆண்டுதான் எனும்போது இவனுக என்கூர்ல இலக்கணமே எழுதி வச்சுட்டான் ஞான் !!  

"ஹரப்பா நாகரிகம் " அங்க நடத்த அகழ்  ஆராய்ச்சிக்காரன் சொல்லுதான் ! கிடைச்ச ஓடு, எலும்பு,மண்பாண்டம் நு பாத்து "எல்லாம் சுமார் 2500 ஆண்டு இருக்கலாம்" ஞான் ! 

அதாவது இன்னைக்கி கணக்குல கிறிஸ்து பிறக்க  500 ஆண்டு முன்னால இருக்கலாம் !

அண்ணே ! கொஞ்சம் பயமாத்தான்  இருக்கு !உலகம்பூராவும்உள்ள  விஞ்ஞானிகள் வந்து மாநாடு நடத்தப் போறாங்க ! நம்ம பிரதமர் தெள்ளுமணி கலந்துக்கறாரு ! பம்பாய்ல இன்னிக்கு நடக்கு ! 

உங்களுக்கு எப்படியோ !

எனக்கு பயம்ம் மா இருக்கு !!! 








0 comments: