Wednesday, December 30, 2015

திசைகள் எட்டுக்கும் 

கொண்டு செல்வீர்.....!!!





90ம் ஆண்டுகளாக இருக்கலாம். "லோக் லேகக்  சங் " என்ற மக்கள் எழுத்தாளர் சங்கம் அகில இந்திய மாநாட்டை கல்கத்தாவின் சால்ட்  லேக் சிட்டி  அரங்கில் நடத்தியது.
மதிப்பிற்குரிய  மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களும் நானும்  கலந்து கொண்டோம் .

சங்க இலக்கியத்திலிருந்து தமிழ் நவீன இலக்கியம் வரை ஒரு அருமையான சொற்பொழிவை  மேலாண்மை நிகழ்த்தினார்அவரது பேச்சின் சுருக்கத்தை இந்தி மொழியில் எழுதி நான் வாசித்தேன்.என் உச்சரிப்பு சரியாக இல்லையோ என்னவோ 1இந்து உருது எழுத்தாளர் சங்க தலைவர்  சஞசல் சௌஹான் வாசிக்க ஆரம்பித்தார்.

என் பங்கிற்கு நான் ஆங்கிலத்தில்பேசினேன். நமது கலை இரவுகள் பாற்றி விளக்கினேன். கவிஞர்  கந்தர்வன் கவிதை வரிகளை சுட்டிகாட்டினேன் .

"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ,
ஞாயற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை"

என்ற வரி களைச்சுட்டிய பொது கரகோஷம் விண்ணை எட்டியது. பஞ்சாபி ,வங்க,இந்தி கவிஞர்கள் அவரவர் வரிவடிவத்தில் தமிழ் உச்சரிப்பை கேட்டு எழுதிகொண்டார்கள் .நாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து உச்சரிப்பை சரிபார்த்துக் கொண்டார்கள்.   

மராட்டிய, வங்க, பஞ்சாபி எழுத்தாளர்களோடு பேசி மகிழ்ந்தேன். " 

"சரத்த்சந்திரரும்,தகூரும்,பிரேம்சந்தும் ,காண் டெகரும்,தகழியும், வேமன்னாவும், மாஸ்தியும் எங்கள்கிராமத்து இலக்கிய வாதிகளுக்கு தெரியும்.எங்கள் கலைமகள்,கல்கி,விகடன் போன்ற பத்திரிகைகள் 50 களிலேயே அவற்றை தொடராக பிரசரித்துள்ளன.உங்களுக்குபாரதியை தெரிந்திருக்கலாம் .புதுமைபித்தனை தெரியுமா? அழகர் சாமியைதேரியுமா ? சின்னப்பா பாரதியதேரியுமா? என்று கேட்டேன்.  அவை இந்தியில்,வங்காளத்தில் வந்துள்ளதா ? என்று கேட்டார்கள்.. ஆம் என்று பொய் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது"

என்னுடைய சிறுகதைகள் இந்தியில் வந்துள்ளன.வங்காளம்,தெலுங்கு,மராத்தி.ஏன் சம்ஸ்கிருதம் பிரெஞ்சு ,ஆங்கிலத்தில் வந்துள்ளன. 

எந்த பின்புலமும் இல்லாத என்னால் இதனை செய்யமுடியுமென்றால் .....!

சிறுகதகளை  பொருத்தவரை தமிழ் சிறுகதைகள் உலக தரத்தை எட்டியுள்ளன. சந்தேகமில்லை.

இவை பற்றி இந்திய மொழி இலக்கியவாதிகளுக்கே சரியான பாரவை  இல்லை. 

நமது மொழிபெயர்ப்பாளர்களின் திறமைககும் பஞசமில்லை.

பாரதி புத்தகாலயம், கிழக்கு பதிப்பகம் ஆகியவை முன்கை எடுத்து செயல்படவேண்டிய நேரமிது.

சுப்பாராவ், குமரேசன் போன்றவர்கள் ஆங்கிலத்திற்கு தமிழ் எழுத்தாளர்களை கொண்டு செல்ல வேண்டும்.

மொழிபெயர்ப்பு என்பது ஒருவழிப்பாதை அல்ல.

நவீன தமிழுக்கான அங்கீகாரம் மொழிபெயர்ப்போடு பின்னிப்பிணந்துள்ளது .

கொண்டு செல்வோம் !!!



 

Tuesday, December 29, 2015

தேவி பிரசாத் ராய் சவுத்திரி 


என்ற 


சிற்பி .......!!!




1923 ஆண்டு .கடுமையான கோடை வெய்யில். சென்னை திருவல்லிக்கேணி அருகில் அந்த கடற்கரையில் அந்த கூட்டம் நடந்தது அது மீ மாதம் முதல் தேதி..தொழிலாளிகளின் உரிமையையும், அவர்களின் நியாயத்தையும் உறுதிப்படுத்த சிங்காரவேலர் நடத்திய மே தினக்கூட்டம் தான் அது  இந்திய மண்ணில் முதன் முதலாக மே தினக்கூட்டம் நடந்தது.

அதற்கு 36 ஆண்டுகள் கழித்து அதன் நினை வாக  அதே இடத்தில் truamph of labour என்ற (உழைப்பின் வேற்றி ) சிற்பம் நிறுவப்பட்டது> முதல்வர் காமராஜர் 1959 ஆண்டு அதனை நிறுவினார்.

உலகம் போற்றும் அந்த சிற்பத்தை உருவாக்கியவர் தேவி பிரசாத் ராய் சவுத்திரி என்ற வாங்காளியாவார்   மதராஸ் கலைப் பள்ளியின் முதல்வராக 29 ஆண்டுகள் பணியாற்றிய உலகம் போற்றும் சிற்பி அவர்.

நான்கு தொழிலாளர்கள் பெரும் பாறை ஒன்றை மிகவும் கஷ்டப்பட்டு வெற்றிகரமாக பெயர்த்தெடுக்கும் சிற்பம் அது.

அதன் முதல் மற்றும் முன்றாவது உரு வத்திற்கு மாதிரியாக தன மாணவன் ராமுவை நிற்கவைத்தார் ராய்.

இரண்டாவது நான்காவது சிற்பத்திற்குதன் கல்லூரியில் காவலாளியாக இருந்தவரை மாடலாக்கினார்

அந்த உழைபபாளிகளின்  நாடி நரம்புகளையும், அவர்களின் உணர்வுகளையும் 
மிகநுட்பமாக சித்தரிக்கும் அற்புதம் அந்த சிலைகள்.

1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு  போராட்டத்தின் போது  பிஹார் மாநிலம் பாட்னா நகரில் துப்பாக்கி சூடு  நடந்தது..அதில் ஏழு பேர் துப்பாக்கி சூட்டில் இறந்தனர் அந்த  காட்சியை  ஏழு உருவங்களும் மடிந்து  விழும் காட்சியை சிற்பமாக்கி பாட்னா நகரில் வைத்தார் சிற்பி ராய்.

தண்டி யாத்திரைக்கு சென்று உப்பு சத்தியாக்கிரகம் நடத்தினார் காந்தி அடிகள்.
பொலிசாரின் அடியை ஆணும் பெண்ணும்  ஒருகையால் தடுத்துக்கொண்டு மறுகையால் உப்பினை எடுப்பதை சிற்பமாக்கினர் ராய் சவுத்திரி. 

இன்றும் அது குடியரசுதலைவர் மாளிகை முன் இருக்கிறது.

ராய் சவுத்திரி சிறந்த வண்ண  ஓவியரும்கூடா. ராசலிலைகளை  ஓவியங்களாக தீட்டியுள்ளார். 



தமிழகத்தின் மிகச்சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன் அவர்கள்.

ஏகப்பட்ட தடைகளை மீறி அவர் சிற்பக்கலையை கற்றுக் கொண்டவர் இன்றும் வெளிநாடுகளீல் அவர் படைத்த சிற்பங்கள் கோவில்களில் வழிபடப்பட்டு வருகின்றான

அவர் கடவுள்னம்பிக்கை இல்லாத நாத்திகர்.

ராய் சவுத்திரி போன்று நீங்களும் படைக்க வேண்டும் என்று என் போன்றவர்கள் 
ஆசைப்படுகிறோம்.

உங்களால்  முடியும்    தோழரே !!!

Monday, December 28, 2015

ஜோதி பாசு 

பதவி ஏற்றபோது ,

13 லட்சம் பேர் கூடினர்....!


1972ம் ஆண்டு . மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில  இந்திய மாநாடு நடந்தது. 
எனக்கு கடைசிநாள் பேரணியில் தான் கலந்து கொள்ள முடிந்தது. மேற்கு வங்கத்திலிருந்து "பயோனிர் " பத்திரிகையின் நிருபர் வந்திருந்தார். அவர் கட்சி உறுப்பினரும்  ஆவர்..
தைக்கால்தெரு தாண்டி கிழ்பாலம் இறக்கத்தில் ஊ ர்வலத்தில்கலந்து கொண்டோம் , மனம் மகிழா வாய் நிறைய கோஷம் போட்டேன். புன்னகை யோடு அந்த வங்காளியும் மழலை தமிழில் கோஷம் போட்டார்.கிழ்பாலத்தில் பாதிதுரம் சென்றிருப்போம். "காம்ரேட் ! ரன் அப் ! கமான் ! "என்று ஓடினார்>நானும்  ஓடினேன்.. மீனாட்சி கல்லுரி தாண்டி மேம்பாலத்தில் நின்று கொண்டு ஊர்வலத்தை படம்பிடித்தார்.  செங்கொடி அசைந்தாட ஊர்வலக் கட்சி ரம்யமாக இருந்தது.

நான் இரண்டு லட்சம் பேர் இருக்கும் என்று கணித்தேன்.மறு நாள் இந்தியன் எக்பிரசில் "mamooth gathering " என்று போட்டிருந்தார்கள்..

மேற்கு வாங்க நண்பரிடம் நான் சொன்ன பொது  வாய் கோண சிரித்தார். நீங்கள்  எவ்வள்வு என்று செய்தி அனுப்பினீர்கள் ?

"25000 என்று அனுப்பினேன். "என்றார்

"நீங்கள் செய்தது அநியாயம்" . என்றேன்.

"தமிழ்நாட்டு காரர்கள் எதிலும் உணர்ச்சி வசப்படுபவர்கள்."
"எப்படி?"

"இதைவிட ப்ரும்மான்டமான் பெரணிகளை பார்த்தவன் நான் "நாங்கள்  பேரணியின் புகைப்படத்தை வைத்து அளவிடுவோம்.கூட்டத்தின் அடர்த்தி, அதில் உள்ள வெற்றிடம், படத்தில் 10x 10 சதுரத்தில்  எத்துணை பேர் நிற்கிறார்கள்  மைதானம் எவ்வள்வு பெரியது என்பதை கணக்கிடுவோம். அது  கிட்டத்தட்ட சரியாக இருக்கும்".என்றார்.. 

"அண்ணல் காந்தியடிகள் இறந்த போது அஞ்சலி செலுத்த வந்த மக்கள் 8லட்சம்பேர்,
குருசேவும் புல்கானினும் இந்தியா வந்த போது மேற்கு வாங்க மக்கள் அளித்த வரவேற்பில் கலந்து கொண்டவர்கள் 11லட்சம் பேர் .

ஜோதிபாசு இடதுமுன்னணியில் முதலமைசராக பதவி ஏற்றபோது வந்த மக்கள் 13 லட்சம் பேர்.

இப்போது டெசம்பர் 2015 பேரணிக்கு வந்தவர்கள் கட்சியின் எதிர்பார்ப்பு 10 லட்சத்தையும் தாண்டிவிட்டது..(மம்தா போலிசு 2லட்சம் என்று கூறியுள்ளது)

தமிழகத்தில் அண்ணா  மறைந்த பொது கூடியவர்கள் 6லட்சம்.. 

அழகர் ஆத்தில் இறங்கும் போது வரும் கூட்டம் சில ஆயிரங்கள் தான் .தமிழ் பத்திரிகைகள் லட்சக்கணக்கில் என்று எழுதினாலும்..

Sunday, December 27, 2015

தோட்டக்காரா , தோட்டக்காரா ,

அதோ வருகிறார்களே , அவர்கள் 

காலடியில் என்னை போடு !!!



சதந்திர போராட்ட காலத்தில மாகன் லால் சதுர்வேதி என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை :

நந்த வனத்தில் மலர்ந்த பூக்கள் சொன்னதாக கவிஞர் கூறுகிறார்:


தோட்டக்காரா! தோட்டக்காரா ! 
தினமும் காலையில் என்னை பறிக்கிறாய் !
மாலையாக தொடுக்கிறாய் !
ஈஸ்வரன் கழுத்தில்போடுகிறாய்  !
எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை !

சுதந்திர போராட்ட வீரர்கள் வருவார்கள் !
கரடு முரடான பாதை கல்லும் முள்ளும் குத்துமே !
அதோவருகிறார்களெ !
அவர்கள் காலடியில் போடு !
அவர்கள் பாதங்கள் நோகாமல் பார்த்துக் கொள்வேன் !
அதுதான் எனக்கு மகிழ்ச்சி !!!


நேற்று காலை பத்து மணியிலிருந்து  ஆனந்த் பஜார் பத்திரிகை தொலைக்காட்சிமுன் அமர்ந்து விட்டேன்..
அவர்கள்  கொஞ்சம் கொஞ்சமாக அந்த மை தானத்துக்குள் வந்து  கொண்டிருந்தாரகள்.உழைப்பாளிகள், விவசாயிகள் , ஆசிரியர்கள்,அரசு உழியர்கள் ,சிப்பந்திகள், ஆயிரம் ஆயிரமாக ,இல்லை பத்தாயிரம்பத்தாயிரமாக,இல்லை லட்சம்லட்சமாக அவர்கள் தலைமை மார்க்சிஸ்டகட்டி கேட்டுக்கொண்டதற்காக  .வருகிறார்கள்.

பிமன் தாதா என்ற அந்த சிங்கம் மேடையில் ஏரி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கிறது.

புத்ததேவ் அவர்கள் தலைமையில் பேரணி கூட்டம் துவங்குகிறது . பிமன், பிருந்தா, மாணிக் சர்க்கார்,முகம்மது சலீம், மாநில செயலாளர் டாக்டர் சுர்யகாந்த மிஸ்ரா கொடியேரிபாலகிருஷ்னண் ,  என்று பேசுகிறார்கள்

இறுதியில் சித்தாராம் எச்சூரி பேசுகிறார்.

"வங்கம்  இன்று நினைப்பதை இந்தியா நாளை  நினைக்கும் .   
மம்தாவை பதவியிலிருந்து இறக்குவோம்" வங்கத்தை காப்போம் !
மோடியை இறக்குவோம் .இந்தியாவை காப்போம் "

என்று கர்ஜிக்கிறார்.
 பத்துலட்சம் பேர் விண்ணைமுட்ட ஓரே குரலில் 
குரலெழுப்புகிறார்கள்.!!!

கண்கள்கசிய ,நெஞ்சம் விம்ம 
பார்த்தேனே!!!

Friday, December 25, 2015

இடதுசாரிகள் தனியாக 

நின்றால் .......!!!



மதுரை கீழ  மாசி விதியில் நிறைய கிட்டங்கிகள் உண்டு. பலசரக்கு சாமான்களை மொத்தமாக வாங்கி அவ்வப்போது தேவையான சரக்கை கடைகளுக்கு கொண்டுவந்து விற்பார்கள்.இந்த கிட்டங்கிகளில் "பெருச்சாளி " தொந்திரவு அதிக மாக இருக்கும். வாரத்திற்கு ஒரு நாள்  அடித்து விரட்ட கடை சிப்பந்திகள் கூடு \வார்கள்..
கிட்டங்கியின் சகல வழி களையும் அடைத்து விடுவார்கள். சுவரில் மட்டும்  கீழ்பகுதியில்  உள்ள துவாரத்தை விட்டு வைப்பார்கள். சுவரின் வெளிப்பகுதியில் தடி யோடு சிலர் காத்திருப்பார்கள். கிட்டங்கியின் உள்ளெ உள்ளவர்கள் மூல முடுக்கில் ஒளிந்திருக்கும் பெருச்சாளிகளை  விரட்டுவார்கள்.,சுவற்றின் துவாரம் வழியாக ஒவ்வொரு பெரு ச்சாளியாக வரும்போது அதனை துவம்சம் செய்து விடுவார்கள்.

மார்க்சிஸ்டு கட்சியின் மறைந்த தலைவர்  எ.பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறுவார்கள். "நாம் எப்பொதுமே தனியாக இருக்கக் கூடாது; எதிரி அதைத்தான் விரும்புவான். நாம் மக்களொடு இருக்க வேண்டும். அது நமக்கு பாதுகாப்பும் கூடா "என்பார்.

இந்தியாவில் இது வரை எந்த ஒருகட்சியும் தனந்தனியாக ஆட்சியை  பிடித்தில்லை . காங்கிரஸ்,பா ஜ.க உட்பட .மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரீ..

1952ம் ஆண்டு தேர்தலில் பின்புறமாக வந்த ராஜாஜியின் தலைமையில் மாணிகவேலர் உட்பட சேர்ந்து தான் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. அப்போது பெரும்பான்மையாக கம்யூனிஸ்டுகள் தலைமையில்கூட்டணி வெற்றிபெற்றிருந்தது.காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை 

1967லதிமுக கூட்டணியால் தான் வெற்றி பெற்றது.
அண்ண திமுக முதல் தேர்தலை திண்டுக்கல்லில் சந்தித்தது. மார்க்சிஸ்ட்கட்சி ஆதரவில் தான் வென்றது .

இது வரலாறு.'

இதுவரை எந்த கட்சியும் தனி பெரும்பான்மை பெறவில்லையா?

பெற்றது உண்டு!
மேற்கு  வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றது ஆனால் கூட்டணி கட்சிகளையும் அணைத்துக்கொண்டு அமைசரவையில் அவர்களையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைத்தது.

திரிபுராவிலும் இதே போல் ஆட்சியைப்பிடித்து அமைச்சரவையையும் அமைத்தது.

அரசியலில் நேர்மை , சகிப்பு உணர்வு, மக்கள் நலம் ஆகியவை மார்க்சிஸ்டு கட்சி க்கு மட்டும் அதிகமாகவே இருக்கிறது.

கூட்டணி என்பது தந்திரம் மட்டுமல்ல.
அது ஒரு அரசியல் நெறி !!!


Thursday, December 24, 2015

1983 உலக கோப்பையை கொண்டுவந்தவர்களில் 

ஒருவர் 

கீர்த்தி ஆசாத்...!!!





1983ம் ஆண்டு இந்திய உலகக்கோப்பையை கைப்பற்றியது. அந்த வீரர்கள் குழுவில் இடம் பெற்றவர் கீர்த்தி ஆசாத்.

உலகக் கோப்பைக்கான அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா -இங்கிலாந்தை வென்றது. அந்த போட்டியில் ஆசாத் இன் ஆட்டம் வெகுவாக புகழப்பட்டது. 
குறிப்பாக முரட்டு ஆட்டக்காரரான "போதம் " இவருடைய பந்து வீச்சில் வீழந்தார். அதன் காரணமாக இந்தியா இறுதி ஆட்டத்திற்கு நுழைய முடிந்தது.

ஆசாத் தின் தந்தை பகவத் ஜா ஆசாத்.
பழம் பெரும்காங்கிரஸ் காரர்".வெள்ளையனே வெளியேரு" போராட்டத்தில் கலந்து கொண்டவர்போராட்டக்காரர்களை எதிர்த்து  போலிஸ் துப்பாக்கியால் சுட்டது  ஆசத்தின் காலகளில்குண்டூ பாய்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக பீஹாரில் ஓராண்டு இருந்தார். உட்கட்சி பூசலினால் பதவி விலகினார்.

காங்கிரசின் அழிச்சாட்டியம் தாங்காமல் பின்னாளில் பா.ஜ.கவில் சேர்ந்தார்.அவரால் அவர்களோடு இணந்து பணிசெய்யமுடியவில்லை  உடல் நலமும் இடம் கொடுக்கவில்லை.செயல்படாமலிருந்தார்.

கீர்த்தி ஆசாத் வெளிபடையாக பேசும் குணம் கொண்டவர்.  டெல்லி கிரிகெட் கிளப்பில் இருந்தார். விளையாட்டு வீரர்களை பொறுக்கும்குழுவில் பணியாற்றினார்.

பொறுக்குக்  குழுவில் நடக்கும் பாரபட்சமான தேர்வை எதிர்த்தார்.

விளையாட்டு மைதானத்தை நவீனப்படுத்த 29 கோடி அனுமதித்தார்கள்.அப்போது ஜெட்லி தலைவராக இருந்தார்.

எந்தவிதமான டெண்டர் இல்லாமல் சகட்டுமேனிக்கு காண்ட்ராக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இப்பொது 130 கோடி செலவில் நிற்கிறது. ஊழல் செய்தவர் களை  தலைவர் பாதுகாத்தார் என்பது குற்றச்சாட்டு.

ஊழலை ஒழிக்க வந்த பா.ஜ.க ஊழல் குற்றச்சாட்டு சொன்ன கீர்த்தி ஆசாத் அவர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளது..

அமிர்த சரஸில் நின்று தோற்றுப்போன ஜெட்லியை அமைசராக்கியதும்,அதுவும் நிதிமைசராக்கியதும் கட்சியின் மூத்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அருண்  ஜேட்லியின் நிலைமை சரி  இல்லை என்றுதான் தோன்றுகிறது .













Tuesday, December 22, 2015

அரிசியல் நேர்மையும் ,

நிர்வாக நேர்மையும் .....!!!




ஐ.எ.எஸ்  அதிகாரி சகாயத்தின் நேர்மை இன்று பரவலாக பேசப்படுகிறது. அவரே கூச்சப்படும் அளவுக்கு பாராட்டுகளையும் பார்க்க முடிகிறது.


இப்படி நேர்மையான அதிகாரிகளுக்கு அரசியலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கும் தலைவர்கள் வாய்த்தால்நாட்டின் தலைவிதியே மாறிவிடும் என்பதில் அய்யமில்ல.

கிட்டத்தட்ட 60 வது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. 

அப்போது சி.டி  தேஷ்முக நிதியமைச்சர். தனியாரின் வேட்டைக்காடாக இருந்த இன்சுரன்ஸ் துறை கணக்கில் கொள்ளப்பட்டது. 

மிக்கவும் ரகசியமாக திட்டம் தீட்டப்பட்டது. பிரதமர் நேரு வுக்குமட்டும் தெரியப்படுத்தப்பட்டது.அவருக்கும் தேதி,மற்ற விபரங்கள் சொல்லப்படவில்லை. பாட்டீல்,ராஜகோபாலன் என்ற இரண்டு அதிகாரிகளுக்கு தான் முழு விபரமும் தெரியும். இந்திய பூராவிலும் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்களில் அரசுஅதிகாரிகள ரகசியமாகநிருத்தி இன்சூரன்ஸ் துறை நாட்டுடமையாக்கப்பட்டது.

இதைக்கண்டு உலகமே வியந்தது.

அரசியலிலும், நிர்வாகத்திலும் உள்ள நெர்மையாளர்களால் இது நடத்தப்பட்டது.

இன்று எதோ அரசியலில் நேர்மை அழிந்து விட்டது போல  ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடக்கிறது.

தனது எம்.பி பதவியில் வரும் சம்பளம் அலவன்சு அத்துனையையும் கட்சி க்குகொடுத்துவிட்டு,கட்சி கொடுக்கு 5500 ரூ பாயில் வாழ்ந்து வரூம் து.ராஜா போன்றவர்கள் இவர்கள் கண்ணில்படமாட்டார்கள்.

இரண்டுமுறை எம்,பியாக இருந்து சொந்தமாக ஒருவீடுகூட இல்லாத மறைந்த.,பி.மோகன் இவர்களுக்கு தெரியாது.

கல்லூரியில் என் பேத்திக்கு இடம் வாங்கித்தரவா நான் எம்.பி ஆனேன் என்று 
அறிவித்த நல்ல சிவன் -

இரண்டு முறை எம்.எல்.எ வாக இருந்தும் இன்றும் டீ கடையில் டீ குடித்துவிட்டு காலாற நடந்து வரும் நன்மாறன்,-

கழுத்தில்  ஐந்துகிராமில் ஒரு செயினைப் போட்டுக்கொண்டு வளைய வரும் எம்.எல்.எ  பாலபாரதி-

இவர்களெல்லாம்  அரசியல் நேர்மையில் சேர்த்தி இல்லை . ஏனென்றால் இவர்கள் இடது சாரிகள்.

சகாயம் அவர்களின் நிர்வாக நேர்மைக்கு தலைவணங்குகிறேன்.

ஊடகங்கள் என்னதான் புளுகினாலும்,மறைத்தாலும் அரசியலில் நேர்மையை கட்டிக்காக்க 

கம்யுனிஸ்டுகள் இருந்து கொண்டிருப்பார்கள்..

இது சத்தியம் !!!

Saturday, December 19, 2015

"இந்தியாவின் கேடுகளில் ஒன்று 

சுப்பிரமணியம் சாமி ---"

---ராம் ஜெத்மலானி 



"இந்தியாவிற்கு எத்தனயோ துரதிர்ஷடம் வந்துள்ளது> அதில் முக்கியமானது சுப்பிரமணியம் சாமி " என்று ராம் ஜெத்மலானி குறிப்பிட்டுள்ளார்.(20-4-98-indianEx )



சாமி யார் காலிலும் விழுவார் .
அவர் காலில் விழாத நபர்கள் அரசியலில் இல்லை.அதேபோல் காலை  வாராத நபர்களும் இல்லை .என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"அப்போது R .வெங்கடராமன் குடியரசுத் தலைவராக இருந்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகளை  அவர்தான் நியமிக்க வேண்டும் .அவருடைய பார்வைக்கு பலபெயுர்கள் வந்திருந்தான்.அதில் ரேச்சொனா சுப்பிரமணியம் சாமி பெயரும் இருந்தது. அவர் வக்கீலாக 10வருடம் 8மாதம் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.வருட வருமானம் 200000 என்றி இருந்தது.

உயர் நிதி மன்ற நிதிபதி  ஆக வேண்டுமானால் குறைந்தது 10 ஆண்டுகளாவது வக்கீல் பணிசெய்திருக்க வேண்டும். இவர் 10 ஆண்டுகால முடித்து எட்டு மாதம் தான் ஆகிறது.இவரை விட சீனியர்கள் இருக்கிறார்கள்.அதனால் அந்த சிபாரிசை திருப்பி பிரதமருக்கு வெங்கடராமன் அனுப்பி  விட்டார்\.

சுப்பிர மணியம் சாமி வெங்கடராமனின்மகள் மிது வழக்கு தொடர்ந்தார். தந்தை பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து அதற்காக வசூல் செய்கிறார் என்பது வழக்கு.

வாஜ்பாயின் அரசை கவிழக்க சோனியா  காந்தியை லக்ஷ்மி மாதா என்று புகழ்ந்தவர் தான் இந்த சாமி.இப்போது" தாடகை","விஷக்கன்னி" என்று வர்ணிக்கிறார்.

வாஜ்பாயை நாக்கில் நரம்பில்லாமல் ஏசியவர்தான் . முரார்ஜியிடம், வாஜ்பாய் ஒழுக்கமிலாதவர் என்று சொன்னவர்.

குமுதம் பத்திரிகையில் சாமி தொடர்  கட்டுரை எழுதிவந்தார்.அதில் 

"சின தூதரகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் நடந்தது> அதில் வாஜ்பாய் கலந்து கொண்டார்> குடித்து கும்மாள மிட்டார்  நிற்க உட்கார முடியாமல் தவித்தார் நானும் போயிருந்த்தால்    எனக்கு மிகவும் சங்கடமாகப் போயிற்று. நான் இதனை பிரதமர் மொரார்ஜி தேசாயிடம்கூறினேன் உடனடியாக அவர் வஜ்பாயியை  அழைத்து என் முன்னாலெயெ அவர கண்டித்தார் வா ஜ்பாய் வாய் மூடி நின்றார்.என்று எழுதி இருந்தார்>

சோனியா,ஜெயலலிதா,மாயாவதி,ஆகியோரை இந்தியாவின் முப்பெருந்தேவியர் "லட்சுமி,சரஸ்வதி ,துர்க்கை என்று வர்ணித்தவர் தான் இந்த சாமீ...

வாஜ்பாய் அரசை கலைக்க ஜெயலலிதா, சோனியா ,சாமிகலந்துகொண்ட 
 "தேநீர் விருந்து " புகழ் பெற்ற ஒன்றாகும் .

சோனியாவை குஷிப்படுத்த போபர்ஸ் ஊழலை தடம் புரளச் செய்தவரும் சாமிதான்..




Friday, December 18, 2015

பத்திரகை நிருபர்களும் ,

கொடுக்கப்படும் "கவர்களும் "......!!!




இலங்கையில் முக்கியமான தமிழ் பத்திரிகைகளில் ஒன்று "வீர கேசரி ". இந்தியா சுதந்திர மடைவதற்குமுன்பு நெல்லை,மதுரை ராமநாதபுரம் மக்கள் இலங்கையோடு கொண்டான் கொடுத்தான் உறவோடு வாழ்ந்த காலம் அது.
நெல்லயை சேர்ந்த" நெல்லையா " என்பவர் விர கேசரி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அங்கிருந்த லெனின்பிரஸ்  அவருடைய படைப்புகளை வெளியிட்டு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்..அவர் எனக்கு "பெரியப்பா" முறை வேணும்.
"இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகையில் chiefreportor ஆக இருந்தவர் P .V .ராமசந்திரன்.. காமராஜ்,ராஜாஜி, சி.சுப்பிரமணியம் ஆகியோரின் மரியாதைக்குரிய நிருபர். அவர் என் தாயாரில்தாய்மாமன் மகன்.

எங்கள்  குடும்பத்திற்கும் பத்திரிகைத் துறைக்கும் நெருக்கம் அதிகம்.

அந்தக் காலத்தில் G .K .ரெட்டி என்று ஒரு  நிருபர் இருந்தார். "இந்து"பத்திரிகையின் டெல்லி chief ஆக இருந்தார்> நேரு,இந்திரா அம்மையார் காலம்.ரெட்டி ஒரு செய்தி கட்டுரை எழுதினார் என்றால் அது பற்றி பெரிய விவாதமே நடக்கும் சரியாக ஒரு மாதம் கழித்து அரசு கொள்கை  ரீதியாக அதன் மேல் ஒரு முடிவை எடுக்கும்.

G .K ரெட்டியின் மூத்த சகோதரர் CGK ரெட்டி .இவரும் இந்துவில் எழுதியவர் தான். சுதந்திட போராட்டத்தின் பொது நேதாஜியோடு இருந்தார்> வடகிழக்கில் நேதாஜிபடையோடு வரும் பொது பம்பாய் போன்ற பகுதிகளில் ஆள் சேர்க்க ரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். துரோகி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டுகைதானார்.அவசரநிலைக்காலத்தில்கைதுசெய்யப்பட்ட நிருபர்களில் அவரும் ஒருவர்.

அப்படிப்பட்ட நிருபர்கள் இப்போதுமிருக்கத்தான் செய்கிறார்கள். 

ஜனதா கட்சி என்று இருந்தது.பின்னர் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது .
ஜனதா கட்சி என்ற பெயரைமட்டும் வைத்துக்கொண்டு one man army ஆக செயல்பட்டு வந்தார் சு.சாமி.15 நாளைக்கு ஒருதரம் அவர்பற்றிய செய்திகள் பத்திரிகையில் வரும்.அவர் எப்பது தமிழ்நாடு வந்தார் என்பது எவருக்கும் தெரியாது. அவருடைய செய்திகள போட நிருபர்கள் ,பத்திரிக்கைகள் இருந்தனர் மதுரையி ஒரு தேசிய தலைவர் இருந்தார்.மெலமாசிவீதி ஆரிய பவனில்  மாதம் ஒரு நிருபர் கூட்டம்னடத்துவார். படங்கள் செய்திக்குறிப்பு.அறிக்கை எல்லவற்றையும் ஒரு கவ்ரில்போட்டுகொடுப்பார்> அதில் நிருபரின் தரத்திற்கு ஏற்ப நோட்டுகள் இருக்கும்.

மதுரையில் RMS போகும் சாலையில் நிருபர்கள் சந்திக்குமிடமுண்டுஅங்கு 
இருந்து தான் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு செல்வார்கள். அதில் மதுரை மெயில்,குமரி பூ என்ற பத்திரிகைகளின் நிருபர்களும் இருப்பார். இந்த போலிகள் இருப்பது நிஜ நிருபர்களுக்கும் தெரியும். 

என்னுடைய நண்பர் மகன் - sslc ல் மூன்று தரம் பெயில்.. ஒரு நாள் அவனை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பார்த்தேன். "மக்கள் ஒலி " என்ற பத்திரிகயில்செய்தி செகரிப்பவனாக இருக்கிறேன் என்றான். சம்பளம் எவ்வளவுடா ? என்று கேட்டேன். ஒருநாளைக்கு 10 ரூ என்றான்.எப்படிடா சமாளிக்கரே என்றேன். "கவர " வச்சுக்கிடுவேன் என்றான் . 

தூக்கி போட்டு தலவரானவர்கள் பிரஸ் கவ்ரேஜுக்காக  கவரில் பணம் கொடுப்பார்கள்..

கவரோடு party யும் உண்டு.அது Hot or cold  என்பது நிருபரின் சாய்ஸ்..

கவர் எல்லாருக்கும் கொடுக்கமாட்டார்கள். இந்து,இந்தியன் எக்ஸ் \பிரஸ், தீக்கதிர், தினமலர் போன்ற  பத்திரிக்கை நிருபர்கள் வாங்க மாட்டார்கள்.

இளைய ராஜாவிடம் கேட்ட நிருபர் ஒரு ஆர்வத்தில் scoop பண்ணலாம் என்று நினைத்து வஞசகமில்லாமல் கெட்டிருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.

இளைய ராஜாவும் இப்போ போய் இத கேக்கறியே என்பதாகத்தான் நினைத்திருக்கிறார் ..

ஊதி பெரிதாக்கி விட்டர்கள் மற்றவர்கள்.







Thursday, December 17, 2015

நல்லவன் வாரான் !

சொம்பதூக்கி உள்ள வை !!!




இந்தியா பூராவும் விசாரிக்க சி.பி.ஐ இருக்கு. அது உள்துறை அமைச்சகத்தோட சேர்ந்தது. அதன் அமைச்சர் ராஜ் நாத் சிங். அவருக்குமன்டைக்கு வெளில மட்டும் இல்லாம உள்ளயும்  ஓண்ணும்கிடையாது . 
உடல்நலம்  இல்லாம் இருக்கற பெரிய மனுசங்களை பாக்குது. அவங்களுக்கான விருதுகளை கொண்டு போய் கொடுக்குது நு முக்கியமான அரசுப்பணிகளை    செய்வாரு.
சி.பி ஐ விஷயமா பிரதமர் தலையிடலாம்.அவரு ஒட்டுமொத்த பொறுப்பாளர்.
ஆனா இந்த ஜெயிட்லீ க்கு என்ன வந்துது ? முந்திரி கோட்டை மாதிரி நுழையுதாரூ.

மாநில அரசின் தலைமை செய்லகத்துக்குள்ள போயி முதலமைச்சரோட அலுவலகத்துல சோதனை செஞ்சிருக்காங்க.சி.பிஐ.காரங்க .

அவங்களுக்குதான் எதை  எங்க ஓளி \ச்சு வச்சிருப்பானுங்க கறது தெரியும்.
எத தேடிப்போனாங்க ? எதைகொண்டுவந்தாங்க?

பிரச்சினை வேற அண்ணன் மார்களே !

கொள்ள வருசமா ஜெயிட்லி டெல்லிகிரிகட் கிளப்புல தலைவரா  இருக்காரு.
வீரந்திர சேவக் நு ஒரு பையன் . இந்திய குழுவுலநல்ல விளையாடின பையன்.
நான் ஆட்டைக்குவல்ல நு சொல்லிட்டான். போகும் போது டெல்லி கிரிகெட் அநியாயத்துக்கு பாரபட்சம்மா நடக்குது நு சொல்லிப்புட்டாரு .

அத விடுங்க.
கீர்த்தி ஆசாத் நு ஒரு வீரர்.நல்ல ஆட்டக்காரன். பிஜேபி ல சேர்ந்து எம்.பி யா இருக்காரு.அவரு முழ நீளத்துக்கு கடிதம் எழுதி இருக்காரு. யாருக்கு நம்ம நிதி அமைசர் ஜெயிட்லி க்கு..
டெல்லிகிரிகெட்கிளப்புல ஊழல் . கிரிகெட் மைதானத்தை சிராக்க 29கோடி அனுமதிச்சாங்க>இப்பம் அது 130 கோடில நிக்கிது. கான்றக்ட் கொடுத்ததுல முறைகேடு.முரைகேட்ல  ஈடுபட்டவங்கள  நீரு பாதுகாக்கறீரு. நீரு  என்ன பாதுகாத்தாலும் உண்மைவெளிவரத்தான் போகுது நு கடிதம் எழுதி இருக்காரு.ஜெயிட்லி சம்மந்தமான ஆவணங்களை டெல்லி முதல்வர் கேசரி வால்  பத்திர மா வச்சிருக்கராம்.

அது டெலி முதலமைச்சர் அலுவலகத்துல இருந்தா அமுக்கி புடலாம் நு நினைச்சு சோதன போட்டுருக்காங்க நு ஆம் ஆத்மி கட்சி சொல்லுது.

தெக்க திருநெல்வேலிகாரன் நான் ! எனக்கு என்ன தெரியும் !

சி.பி ஐ க்காக ராஜ்நாத் சிங் பேசல. பிரதமர் பேசல!

தேர்தல்ல தோத்து புட்டு, சுவர் ஏறி குதிச்சு மந்திரி ஆன இவரு ஏன் குதிகாறு நு சம்சயமா இருக்கு !. 





Friday, December 11, 2015

துப்புரவுப்பணி 

துயர் துடைக்கும் பணியாகும் ...!!!





பாதிக்கப்பட்டசென்னை  மக்களுக்கு நிவாரணம் முழுமையாக கொடுக்கப்படவில்லை . மழை பகுதிகளில்  குறைந்து விட்டது. இப்போது அவர்கள் இருப்பிடம்,தெருக்கள் ,ஆகிய பகுதிகளில்தேங்கிய நீர வெளியேற்றுவதும் சுத்தப்படுத்துவதும்மிகவுமமுக்கியமான பணியாகமாறியுள்ளது.

சென்னியில் 20000 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவ்ர்களால் மட்டும் இந்த பிரும்மாண்ட மான பணியைச் செய்யமுடியாது.ஆகவே கோவை,திருச்சி,மதுரை  ஆகிய நகரங்களில் இருந்து துப்புரவு தஒழிலளர்களை வரவழைத்துள்ளாஎகள். 

சென்னையின் சில பகுதிகளில் வாலிபர் சங்கம்.மாணவர் சங்கம்.மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் இந்த பணியில்  ஈடுபட்டு வருகிறார்கள்.மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநிலசெயலாளர் ஜி . ராமகிருஷ்ணன் இந்த பணியிலீடுபட்டிருக்கிறார்.

துப்புறவுப்பனியை ஒருகுறிப்பிட்ட சாதிமட்டும் தான் செய்யவேண்டுமா? என்று அருந்ததியர் சங்க தலைவர் கேட்டிருக்கிறார்.

குழந்தை கழித்து விட்டால் அய்யர்,அய்யங்கார், பிள்ளை, முதலி என்று எல்லாருமே துப்புரவுத்தோழிலாளியாக மாறத்தான் வேண்டும். 

மாவீரன் பகத் சிங் தூக்கிலிடப்பட்டான். உங்கள்கடைசி ஆசை என்ன என்று கேட்டிருக்கிறார்கள்." எங்கள் சிறையில்துப்புரவுப்பணி செய்த அந்த அம்மையார் என் தாயாகத்தெரிகிறார . அவர் கையால்  இரண்டு ரொட்டி திங்க வேண்டும் " என்று கூறி  ரொட்டி சாப்பிட்டுவிட்டு தூக்கு மரம் நோக்க நடந்துள்ளார் .

இந்த சமயத்தில் நரேந்திர மோடி சொன்னது நினவு தட்டுகிறது .

சமீபத்தில் "கர்ம யோகி " என்ற புத்தகம் ஒன்று பார்க்கக் கிடைத்தது ! குஜராத்தி மொழியில் வெளிவந்துள்ளது ! முன் அட்டையிலும்,பின் அட்டையிலும் "பளபள " வென்று வண்ணத்தில் நரேந்திர மோடியின் படம் போடப்பட்டிருந்தது !

அதில் துப்புரவு தொழிலாளி பற்றி "தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டும் துப்புரவுத்தொழிலை செய்கிறார்கள் என்று நான் நம்பவில்லை ! வாழ்வாதாரத்திற்காக என்றிருந்தால் தலைமுறை தலைமுறையாக இதனை செய்து வந்திருக்க மாட்டார்கள் ! ஒரு குறிப்பிட்ட கலத்திற்கு பிறகு திடிரென்று அறவிளி வந்து நாம் செய்யும் தொழில் ஒட்டுமொத்த சமூகத்தின், கடவுளின் மகிழ்ச்சிக்கானது ,அதனால் கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொழிலை பல நூற்றாண்டுகளாக ஒரு ஆண்மீகப்பணியக செய்து வருகிறார்கள் ! அதனால் தான் தலைமுறை தாண்டியும் அவர்கள்மட்டுமே செய்யும் தொழிலாக நிடிக்கின்றது "

 என்று குறிப்பிடப்பட்டுள்ளது !

மனித கழிவை மனிதன் அள்ளுவது ஆன்மிகச் செயல் !

கடவுளை மகிழ்ச்சி யுறச் செய்வது !!

My  dear youths of India
Watch This point ...!!!

Wednesday, December 09, 2015

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ,

"சாந்தா" என்ற அக்கா உண்டு !!!.



தசரதனுக்கும் கோசலைக்கும் முதலில் பிறந்தது  ஒரு பெண் குழந்தை ."சாந்தா " என்று பெயரிட்டு   கோசலை  வளர்த்து வந்தாள். தசரதனுக்கு அதன் பிறகு குழந்தை பிறக்க வில்லை.அதனால் அவன் குழந்த சாந்தாவை வெறுத்தான்.இதனால் கோசலை  தசரதனை ஒதுக்க ஆரம்பித்தாள்.

ஆண் வாரிசுக்காக தசரதன் சுமித்திரை ,கைகேயி ஆகிய ஒரு பெண்களை மணந்தான்.எதுவும் பலிக்க வில்லை . வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டான்.
விபாந்தகன் என்ற முனிவருக்கும் ஊர்வசிக்கும்பிறந்த குழந்தை ரிஷ்யசிருங்கர் என்று வளர்வதாகவும்கூறினார் விபந்தகன் தன்மகனுக்குபெண்வாசனையெ காட்டாமல்வளர்த்து வரவதாகவும் அவன் வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் தசரதனுக்கு ஆண்வாரிசு பிறக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்.

தஸ்ரதநின்மகள்  "சாந்தா" அழகான அரசிளம் குமரியாக நிற்கிறாள். தன் தந்தையின் ஆசை நிறைவேற ரிஷ்ய சிருங்கரை மயக்கி,மணந்து புத்திர காமேஷ்டி யாகத்தை செய்விக்க  உதவுகிறாள்..

கோசலைக்கு ராமனும்,கைகேயிக்கு பரதனும், சுமத்திரைக்குலட்சுமணன்,சத்துருக்கனன்  என்று இரண்டு  குழந்தைகளும்பிறக்கிறார்கள்.

என்னகாரணமோ ? தசரதன் தன மகன்களிடம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு என்பதை கூறாமல் விட்டு விட்டான்.

இது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்காதீர்கள்.!

"ராமாயணத்தில்  புதிய உறவுகள் " என்று ஒரு தொலைக்கட்சி தொடர் வரப்போகிறது.


மோகன் பகவத், நரேந்திர மோடி, எல்லாரும் பார்க்கத்தான் போகிறார்கள்.

நம்ம ஊர் வீரத்துறவி நேரடியாக பார்க்க மாட்டார்.

ஒளிந்து இருந்து பார்ப்பார் !!!

Monday, December 07, 2015

நாடக ஆசான் தோழர் ராமாநுஜம் 

மறைந்தார் .......!!!



1978-79ம் ஆண்டு மதுரையில் மாநிலம் தழுவிய நாடக பயிற்சி முகாம் நடந்தது. "நாடகமல்லாதவற்றை நாடகம் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் " என்று வெங்கட் சுவாமிநாதன் கூறுவார்..

"அது என்னய்யா நவீன நாடகம் .நம்ம ஆளுகளூக்கும்  தெளிவு படுத்தணூமே " என்றார் கேமுத்தையா அவர்கள்.. "யாராவது இருக்காங்களா ?"
"காந்தி கிராமத்துல ராமானுஜம் இருக்கார் ? " நான்.
"யாரு? வக்கீல் தோழர் வானமாமலை மருமகன் ம்பாங்களே அந்த பையனா ?
ஆமாம் தோழர் ?
"கூப்பிடுங்க ! என்ன தான் நு தெரிஞசுகிடுவோம் " கே.எம் அவர்கள் முடித்தார்.

ராமானுஜம் அவர்களும்,எஸ்.பி ஸ்ரீநிவாசன் அவர்களும் பயிற்சி அளிக்க வந்தனர்.

composition ,theatre ,,presinium, Stanislavski , moscow thetre , form ,symbolic  theatre real theatre   போன்றவார்தைகள்அப்பொழுதுதான்நமதுஉறுப்பினர்களகேள்விப்பட்டார்கள்.

பட்டறைக்கு வந்த ராமானுஜம் பின்பு ஒருநாள் என்னிடம் கூறினார் " "காஸ் யபன் ! ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்களை உருவாக்கி ,நாடகத்தை ஒரு இயக்கமாக கொண்டு செல்கிறீரகள் . அதில் எனக்கும் பங்கு உண்டு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
நாடகத்துறையில் எழுத்தாளர் சங்கத்தின் ஆளுமையை விகசிக்கச்செய்தவர்களில் ராமானுஜம் அவர்களின் பங்கு மகத்தானது.

எராளமான நாடகங்களை உருவாக்கி இருந்தாலும் அவர் இயக்கிய "புறஞ்சேரி " நாடகம் மிகவும் முக்கியமானது.
சிலப்பதிகாரத்தின் ஒரு சிறுபகுதியை கோவலனும்-கண்ணகியும் மதுரை வரும் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு உருவாக்கினார். வைகை யின் வடகரையில் உள்ள சேரியில் வந்து தாங்கும் காட்சி மட்டுமே நாடகம். "சேரிப் புறம்"  என்பதை மாற்றி "புறஞ்செரி"  என்றி தலைப்பு வைத்தார்.

இந்த நாடகத்தில், டாக்ட ர் மு.ராமசாமி, ஜெயந்தன், காஸ்யபன், டாக்டர் குருவம்மாள் ஆகியொர் நடிக்க எர்ணாகுளத்தில் அகில இந்திய நாடக விழாவில் மேடை ஏறியது.

அவசர நிலைக்காலத்தில் உருவாகிய இந்த நடகத்தில்நிகழ்காலத்தை சுட்டிக்காட்டினார் ராமானுஜம்.

பொதுவாக நாடகம் முடிந்ததும் கட்டியங்காரன் மங்கள வாழ்த்துப் பாடி அரங்கத்தின் திரையை மூடுவான்.
"அவசர நிலையால் அல்லொளகப்பட்டுக்கூண்டிருக்கும் இப்போது  என்னால் மங்கள வாழ்த்து பாடமுடியாது. திரையும் மூடாது என்று நிலைமை மாறுகிறதோ அன்று திரையை மூடுகிறேன்"  என்று கட்டியன்காரனாக நடித்த ஜெயந்தன் அறிவிக்க நாடகம் முடியும்.

தோழர் ராமானுஜம் காந்தி  கிரமத்தை  சுற்றி இருக்கும்முற்போக்கு செய்ல்பாட்டாளர்களோடு மிகுந்த ஈடுபாடோடு இருந்தார்.

மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளராக இருந்த தோழர் ராமலிங்கம் அவர்களோடு மிகவும் நெருக்கமாக பணியாற்றியவர்.

தமிழ் நாடகத் துறை ராமானுஜம் அவர்களூக்கு கடமைபட்டிருக்கிறது.

அவருக்கு அஞ்சலி !!!







   

Sunday, December 06, 2015

பார்த்த சாரதி கோவிலும் ,

வேங்கடகிருஷ்ணனும் .....!!!


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கொவிளின்முலவரின் திருநாமம் வேங்கட கிருஷ்ணன் ஆகும்.
பார்த்தனை சேவிக்காமல் நீர்  அருந்தமாட்டார் அந்த பெரியவர். மாடவிதியில் குடிருக்கிறார் .
அங்கிருந்து வெளியாகும் கீதாசாரியன் என்ற தத்தவார்த்த பத்திரிகையின் ஆசிரியரும் அவரே..
வைணவ தத்துவத்தில முனைவர் பட்டம் பெற்றவர.
சென்னைபலகளைக்கசகத்தில் வைணவ துறை தலைவராக பணியாற்றி வருகிறார்..  சென்ற ஆண்டு தோழர் நடராஜன் உதவியோடு அவரை அவர் வீட்டில் நானும் முத்துமீனாட்சியும் சந்தித்தோம்.

மதுரையில்னடந்த முற்போக்காளர்களின் கருத்தரங்கில்கலந்து கொண்டார்.

கம்பிரமான ஆகிருதி. நெற்றியில் முகம் மறைக்க திருமண். மேடையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரை பார்வையாளர்கள் அதிசயமாக பார்த்தார்கள்..இந்த கூட்டத்தில் இவர் எதற்கு ?என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றிய கருத்தரங்கு அது.
அவரை பேச அழைத்தார்கள்.

" உங்களுக்கு ஆச்சரியமாகவும்  அதிசயமாக்கவுமிருக்கும்-மேடையில் 
  என்னை பார்ததும் . நான் சொல்ல வேண்டியதை இங்கு  சொல்லாமல் வேறேங்கும் சொல்லிபயனில்லை "

என்று சொல்லிதன்பேச்சை ஆரம்பித்தார்.

டாக்டர்.வேங்கட கிருஷ்ணானின் முதாதையர். ராமபக்தர்கள்.தீவிரமானவைணவர்கள். அவருடைய பாட்டி ஒரு கனவு கண்டிருக்கிறார்.  ஸ்ரீ ராமர் வந்து எனக்கு கோவில் கட்டு என்று கூறி இருக்கிறார். பாட்டி இதனை தன்மகன்களிடம் சொல்லிருக்கிறார்.அவருடையமகன்கள் "ஆகட்டும் பணம் சேர்ப்போம்.பின்னர் கொவில்காட்டுவோம் என்றுகூறி இருக்கிறார்கள். இது நடந்தது சுதந்திரத்திகுமுன்பு. ஓரளவுபணம் சேரந்ததும்  முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ஸ்ரீ ராமரின் உத்திரவு அயோத்தியில் கட்டவேண்டும் என்பதாகும். சரயு நதி தீரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி இருக்கிறார். மகன்கள் மிகுந்த சிரமப்பட்டு,மாட்டுவண்டி ரயில்  என்று பயணம் செய்து அயோத்தியை அடைந்துள்ளனர்.அவர்களுக்கு அதிர்ச்சி.

நதிக்கரையில் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் குடி யிருக்கிற்றார்கள். செய்வதறியாது திகைத்த அவர்களை ஒரு முஸ்லீம்பெரியவர் விசாரித்திருக்கிறார். . இவர்கள் தாங்கள் வந்த விஷயத்தை கூறி உள்ளனர்.
குடியிருப்பில் உள்ள முஸ்லிம்களை அழைத்துகூட்டம்போட்டிருக்கிறார்.பெரியவர். அவ்ர்கள் அங்கு ராமர் கோவில் கட்ட இடம் கொடுக்க சம்மதித்து,அதற்கானபட்டாவை தரவும் தயாராக இருந்தார்கள். 

கோவில் கட்டப்பட்டது அதற்கான பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்.
மாற்றாக பெருமாளின்கருட சேவையின் பொது வீதிவலம் வர தாங்கள் தான்  தூக்கி வர அனுமதி கேட்டிருக்கிறார்கள்..

பல வருடங்களாக கருட சேவை நடக்கிறது. 
"என் மூததையர்கலின் விருப்பப்படி நானும்  ஒவ்வொரு ஆண்டும் அயோத்தி சென்று சேவை செய்துவருகிறேன்." என்று டாகடர் வெங்கிட கிருஷ்ணன்  கூறி முடித்தார்.


அயோத்தியில் ராமர் கோவில் கட்டியாகி விட்டது முஸ்லிம்களின் உதவியோடு.

அதைக்கட்டியவன் 
தமிழன் !!! 








.

Wednesday, December 02, 2015

"தியாக பூமி " திரைப்படமும் ,

சென்னை மழை  வெள்ளமும் !!!





"ஆனந்தவிகடன்" பத்திரிகையில்  அப்போது கல்கி கிருஷ்ணமூர்த்தி பணியாற்றிக்கொண்டிருந்தார் .சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றவர் அவர். பத்திரகையின் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் தீவிரமான காங்கிரஸ்காரர். 

"கல்கி " விகடன் பத்திகையில்" தியாகபூமி " என்ற தொடர்கதையை எழுதினார். சம்பு சாஸ்திரி  என்ற அய்யர் கோவில் புசாரி. ஊருக்குள் வந்த மழை வெள்ளமாக தாழ்ந்த பகுதியை நிரப்பி விடுகிறது.அங்கு வசிக்கும்தலித் மக்கள் தங்க  வழியில்லாமல் தவிக்கும் பொது, சம்புசாஸ்திரி கோவில் கதவை திறந்து அவர்களை தங்க  வைக்கிறார். சனாதனிகள் இதனைக்கண்டு வெகுண்டு சாஸ்திரிகளை சாதியிலிருந்து விலக்கி  வைக்கிறார்கள். 

சாஸ்திரியின் மகளுக்கு திருமணமாகிறது.  அவள் கணவன் அவளை  உதாசினப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றுகிறான. கணவனைப்பிரிந்த அவள் பின்னாளில் செல்வச் செழிபோடு திரும்புகிறாள் .அவளை ஏற்க வந்த கணவனை நிராகரித்து சமூகபணியில் ஈடுபடுகிறாள். 

இந்த கதையைவாசன்திரைப்படமாகதயாரித்தார் .  கே.சுப்பிரமணியம் 
இயக்கினார்
பாபநாசம் சிவன் சாஸ்திரிகளாக நடித்தார் . சாஸ்திரியின் மகளாக எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். அவர் கணவராக கே.ஜே.மகாதேவந நடித்தார்.

சாஸ்திரியின் பாத்திரத்தை அண்ணல்காந்தியடிகள் மாதிரி இயக்குனர் சுப்பிரமணியம்  உருவாக்கி இருந்தார்  .

சில காட்சிகளில் காந்தியடிகள் நூல் நூற்கும்காட்சிகளையும்  
இணைத்திருந்தார்

1939ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடை செய்தனர். 

இந்த படத்தின் ஒரே ஒரு பிரதி பூனே யில் உள்ள திரைப்பட ஆவண காப்பகத்திலுள்ளது..

-----------------------------------------------------------------------------------------------------------------------

திருவல்லிக்கேணியில் உள்ள மசூதியில் யாரும் தங்கி ,உணவருந்த ஏற்பாடு செய்த்ள்ளார்கள். 
அங்குள்ள சமண  கோவிலில் தங்க உணவருந்த ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சர்ச் சிலும் தங்க வழி வகுத்துள்ளார்கள்.-

--------------------------------------------------------------------------------------------------------------------------

"ஸ்ரீ ரங்கா நாதனை 
பீரங்கிவைத்து தகர்ப்பதும் 
என்னாளோ "
என்று பாடிய பாரதிதாசன் நினைவில் வந்து தொலைக்கிறார்.


ஒண்ணூம் செய்ய முடியாது அண்ணன் மார்களே !!!



Monday, November 30, 2015

அப்போது கருணாநிதி அவர்கள் 

தி.மு.க வில் இல்லை !!!.

நீதிக் கட்சியின் நடைமுறை பிடிக்காததால் பெரியார் அவர்கள்  திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார்கள். 

திராவிடர் கழகத்தின் முக்கிய தலவர்கள் பெரியாரின் நடைமுறையோடு முரண் பட்ட போது அவர்களுக்கு சி.என்.அண்ணாத்துரை அவர்கள் தலைமை தாங்கினார். பெரியார் தன்னைவிட மிகவும் வயது குறை ந்த பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய சொத்துக்கும்,கட்சிக்கும் வாரிசாக அந்த பெண்ணையே நியமித்தார் .அது வரை கட்சிக்குள் .இ.வி.கே சம்பத் அவர்கள் தான் பெரியாருடைய வாரிசாக வருவார் என்ற கருத்து மேலோங்கி நின்றது


கட்சியின்  மூத்த தலவர்கள் இது பற்றி  ஆலோசித்தார்கள்..


1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம்தேதிராயபுரத்தில் இருக்கும் ராபின்சன் பூங்காவில்புதிய கட்சியை ஆரம்பித்தார்கள்.


அண்ணாதுரை தவிர அப்போது தி.கவிலிருந்து வெளியே வந்தவர்கள் ஐந்து பேர்..

1.இரா .நெடுஞ்செழியன் 

2.இ.வி.கே. சம்பத் 

3 மதியழகன் 

4 அன்பழகன் 

5 என்.வி.நடராசன் .



குடந்தையை சேர்ந்த நீலமேகம் என்பவர் கட்சிக்கு "திராவிட முன்னேற்ற கழகம் "என்ற பெயரை சூட்டினார்.


திருவாரூரைச்  சேர்ந்த இளைஞர் மு.கருணாநிதி என்பவர் திராவிடர் கழகம் நடத்தி வந்த பத்திரிக்கை அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.



Saturday, November 28, 2015


தி.மு.க - அ .தி.மு.க  லாவணி ...!


தமிழ் செம்மொழியானது யாரால் ?  தொல்காப்பியரிலிருந்து, வள்ளுவரிலிருந்து ,கமபனிலிருந்து ,பாரதி ,புதுமப்பித்தனிலிருந்து  இதனச் சாதித்தவர்கள் ஏராளம் ! சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமார் கலைஞரும் பொறுப்பு ! இதற்காக கிராமம் கிராமமாக ,சிற்றூர் ,பேரூர்,நகரம் ,மாநகரம் ,நகராட்சி மாநகராட்சி என்று கருத்தரங்கள் நடத்தி,மாநாடு நடத்தி மக்களிடையே சொல்லி அவர்களின் ஆதரவைதிரட்டிய த.மு.எ.சவும் பொறுப்பு ! இறுதியாக டெல்லி சென்று ஜநதார் மந்தர் ரிலிருந்து ஊர்வலமாகச் சென்று பிரத்மரிடம்  மனுகொடுத்து வேண்டிய ,தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்கலைஞர்கள் பொறுப்பு !  

இது பற்றி கண்டு கொள்ளாத தி .மு.க வும் அதிமுகவும் இப்போது "நாந்தான்  நாந்தான்" என்று லாவணி பாடுவது வேடிக்கை !


தமிழகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும்,கலைஞர்களும் த.மு.எ.ச வின் தலைமையில் டெல்லி சென்றார்கள் !


அவர்களை வரவேற்று,தங்கும்வசதி,உணவு ஏற்பாடு,மற்றவற்றைசெவ்வனே  செய்துகொடுத்தவர்  மதரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் பி.மோகன் அவர்கள் !


பிரதமர்,மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்து உதவியவர் "வைகோ "அவர்கள் !


பா.ம.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர்வலத்தில்கலந்து கொள்ள  மறுத்து விட்டார்கள் ! மனுவில் கையெழுத்து போட்டார்கள் !


அண்ணா தி.மு.க உறுப்பினர் மலைச்சாமி   வருகிறேன் என்றார்! ஊர்வலம் புறப்படும் வரை காத்திருந்தோம் ! முந்திய இரவு அவசர அழைப்பின் பேரில் சென்னை சென்றுவிட்டதாக கூறினார்கள் ! 


தி .மு.க கலந்து கொள்ள மறுத்து விட்டது!


காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் வந்தார் ! பிரதமரிடம் மனு கொடுக்கும்பொதும்கூட இருந்தார் !


பிதம்ரிடம் எங்களை  வைகோவும்,மோகனும் அழத்துச் சென்றார்கள் !


த.மு.எ.ச தலைவர்அருணன் அவர்கள்  மனுவை முழுவதுமாக படித்து பிரதமர் "வாஜ்பாயிடம் "கொடுத்தார் ! " we are working on it " என்று பிரதமர் பதிலளித்தார் !


பதவியை விட்டு விலகும் வரை எதுவும் செய்யவில்லை !


அடுத்து ஐக்கிய முற்போக்கு அரசு ,இடதுசாரிகளின் ஆதரவோடு வந்தது !


தமிழ் செம்மொழி என்று அறிவித்தது !


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும் 




கலை இலக்கிய விருதுகளும்........!!!








நாற்பதாம் ஆண்டில் காலடி வைக்கும் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் வழக்கம் போல் சென்ற ஆண்டிற்க்கான விருதுகளை அறிவித்திருக்கிறது . 




வெளி மானிலங்களில் உள்ள எழுத்தாளர் அமைப்புகள் தொடர்ந்து ஆண்டுதோரும் எப்படி நீங்கள் இப்படி லடசக்கணக்கான பெருமானமுள்ள விருதுகளை அளிக்கீறீர்கள் என்று கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள் .




அகில இந்திய உருது,இந்தி எழுத்தாளர் சங்கம் சில ஆண்டுகளூக்கு முன்பு கலகத்தாவில் மாநாட்டினை நடத்தியது. மதிப்பிற்குரிய எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியும் நானும் கலந்து கொண்டோம். கேரளா,கர்நாடகா,ஆந்திரா,மராட்டிய,மபி.உ.பி,பஞ்சாப்  மாநில எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் .  அவர்கள் நாம் நடத்தும் கலை இரவு பற்றி கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். மாலை 6 மணியிலிருந்து விடிய விடிய பார்வையாளர்களை கட்டிப்போட்டு எப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டார்கள். 




எங்கள் பிரகதீஸ்வரனையும்.கரிசல் குயிலையும் ,உரை வீச்சாளர்களயும்,சிறு.குறு நாடக கலைஞர்களையும் பற்றி விவரித்தேன்..




மனிதாபிமானத்திலிருந்து, புரட்சிவரை கொண்ட சங்கத்தின் பத்து அம்சத்தைச் சொன்னேன்.




எல்லாவற்றுக்கும் மேலாக "கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே " என்ற சங்கத்தின் கோட்பாட்டயும் குறிப்பிட்டேன்.


நான் தங்கி இருந்த அறைக்கு வந்த பல எழுத்தாளர்களொடு  பேச வாய்ப்பு கிடைத்தது.


"தமிழ் வாசகர்களுக்கு 50ம் ஆண்டுகளிலேயே விச காண்டெகர் அறிமுகம் "என்று சொன்ன பொது மரட்டிய எழுத்தாளர் என் கையைக்குலுக்கினார். "தாகூரும் சரத் சந்திரரும் எங்கள் கிராமங்களில் தொடர்கதையாக வாரப்பத்திரிகைகளில் படிக்கப்பட்டவர்கள். பிரெம் சந்தும், வியொகி ஹரியும் எங்களுக்குத் தெரிந்தவர்கள். தகழியும்,பாஸ்கரும்,வேமண்ணாவும் , மாஸ்தியும் நாங்கள் அறிவோம் .


நணப்ர்களே உங்களுக்கு பாரதிய கொஞ்சம் தேரியும்.புதுமைப் பித்தனை தெரியுமா? அழகிரி சாமியை தெரியுமா? சின்னப்ப பாரதியை தெரியுமா ? "


என்று கேட்டு அவர்களை அசத்தினேன் !




தமிழின் சிறந்த படைப்புகளெல்லாம் மற்ற இந்தியமொழிகளில் வந்துள்ளதா ?என்று


 ஆர்வமாககெட்டார்கள் !




"ஆம் ! "என்று பொய் சொல்ல  எனக்கு தயக்கமாக  இருந்தது. 

Friday, November 27, 2015


"மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி !"


"வாழ்க ! வாழ்க !" என்று ஒலித்தது !!!


90 ம் ஆண்டுகளின் ஆரம்பம் ! செங்கலைக் காட்டி இந்துத்வா காரர்கள் கலகம் செய்து கொண்டிருந்த காலம் ! இவர்களை சந்திப்பது எப்படி ? என்று இடதுசாரி கலைஞர்கள் ஆலோசித்தபடி இருந்தனர் !


இந்தியா பூரவிலும் கலைஞர்களை வரவழைத்து அவர்களூக்கு  போதனை செய்ய முடிவு செய்யப்பட்டது !


தமிழ் நாட்டிலிருந்து அருணன் தலமையில், குமபகோணத்தைஸ் செர்ந்த ஜீவகுமார்,பிரளயன்,மதுரை டாக்டர் செல்வராஜ் ஆகியொரொடு நானும் சென்றிருந்தேன் ! 


மத்திய குழுவின் மெற்பார்வையில் பயிற்சி நடந்தது ! முழுக்க முழுக்க அதனை நடத்தியவர் சீத்தாரம் எச்சூரி அவர்கள் ! மேடைகளில் அவரை பார்த்திர்ந்தாலும் மிக அருகில் அவருடைய பெச்சைக்கேட்டது அப்போது தான் ! 


இந்த முகாமில் அரூணன் அவர்கள் தமிழக நிலமையை விவரித்து நமது கலைப்பணி எப்படீருக்கிறது என்பது பற்றி விவரித்தார்கள் ! நானும் என்முறை வந்த பொது நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி பேசினேன் !


செக்கச்சிவந்த மேனி ! சுருண்ட முடி ! கூரிய மூக்கு ! அகன்ற வாய் ! குழிவிழுந்த மோவாய் ! கருப்பு சட்டை,கால்சராயில் காம்பீரமாக அவர் பெச ஆரம்பித்தார் ! ஆற்றொட்டம் போன்ற ஆங்கில உறை ! பண்டைய இலக்கியங்களிலிருந்தும் ,கலை வெளிப்பாடுகளீலிருந்து மேற்கோள் காட்டிய பேச்சு ! நவீன நாடகங்கள், சமகால இலக்கியங்கள் , நவீனத்துவம் .பின் நவீனத்துவம் என்று பெருமழையாய் கொட்டினார் ! 


தமிழ் நாட்டிலிருந்து வாந்திருந்த எங்களைப்பர்த்து "நீங்கள் "சோ" ராமசாமியின் சம்பவாமி யுகே யுகே" என்ற நாடகத்தைப் பார்த்திருகிறீகளா ? என்று கேட்டர் ! நான் கையைத்துக்கீனென் ! புராணங்களையும்,இதிகாசங்களையும் அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் ?நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது! அவை நமக்கும் சொந்தமானது தானே ? '" பிரமிப்பில் நாங்கள் ஆழ்ந்து கொண்டிருந்தோம் ! 


இந்தியாவின் முக்கிய கலை ஆளுமைகள் அமர்ந்திருந்தனர் ! என் நினைவு சரியென்றால் ஹபீப் தன்வீர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் ! இயக்குமர் ஏம்.எஸ். சத்யூ வும் இருந்த ஞாபகம் !


நாங்கள் தமிழ்நாடு திரும்பினோம் ! 


த.மு.ஏ.சவின் மாநில மாநாடு நடக்க விருந்தது ! அதனை கோவையில் நடத்த முடிவாகி இருந்தது!


சங்கத்தின் மைய உறுப்பினர்கள்  மாநாடு நிகழ்ச்சி நிரல் பற்றி விவாதித்து முடிவு செய்தொம் !


மாநாட்டிற்கு சிவத்தம்ம்பி, ஜெயகாந்தன் ,ஆகியொரைக் கூப்பிட முடிவானது ! நான் என்பங்கிற்கு சீத்தாராம் எச்சுரி அவர்களி கூப்பிட வெண்டும் என்று ஆலொசானை கூறினேன் !


 


அவர் வந்தால் போகவர விமானச்செலவு ஆகுமே என்ற கவலை வந்தது ! கோவை மாவட்ட செய்லாள்ராக இருந்த வக்கீல் ஆனந்தன் அது எங்கபாடு ! கூப்பீடுங்கள்" என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார் 1 


த.மு ஏ சவின் வரலாற்றில் கோவை மாநாடு தன் முத்திரையப்பதித்த ஓன்றாக மாறியது ! 


சீத்தாராம் அவர்களை விமான நிலையத்திலிருந்தூ அழைத்து வந்து  ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு எனக்கு வந்தது ! என்னோடு கானரா வங்கி தோழர் மாதேஸ்வரன் இருந்தார் ! இது தவிர 


 ஏஸ் ஏ.பி, கருணாகரன்,மாணீக்கம் ஆகியோறோடு வீமான நிலயம் சென்றொம்! அவருக்கு சால்வை இட்டு வரவேற்கும் வாய்ப்பினை சங்கம்  எனக்கு அளித்து !


கிரிம் கலர் பாண்ட்டும்,வெள்ளைசட்டையும் அணிந்திருந்தார் !  குளித்து வந்தார் ! மாலை பெசுவதற்கான குறிப்புகளை தயார் செய்தார் ! உணவருத்திணொம் ! சிறு தூக்கம் ! தூங்கும் போஹும் அதே பாண்ட் அதே சட்டை ! 


"ஏன் தோழர் ? ரிலாக்ஸ்டா கைலி உடுத்திக்குங்களேன்?" 


"you are too inqusitive ! comrade ? "


"how ?" 


"a r r e baabaa ! i forgot to bring my dress ! ikept my dress on the table ! my inner garments are there ! but paant and sahirt i forgot ! "


தோழர் மாதேஸ்வரன் தான் அந்த யொசனையை சொன்னர்! அருமையான மயில் கண் ஜரிகை செலம் குண்டஞ்சு வேட்டியை பொட்டு அண்ணணை  மாப்பிளை மாதிரி மேடைல ஏத்திடுவோம் என்ற்றர் ! தயங்கிய சீத்தாராம் எச்சூரி அவர்களை எல்லருமாகச்சேர்ந்து அமுக்கி விட்டொம் !


மாலை மெடையில் ஏறினார் !  செக்கச்சிவந்த மெனி ! சுருண்ட முடி ! கூறியமூக்கூ ! அகன்ற வாய் ! குழிவிழுந்த மோவாய் ! ஜரிகை வேட்டி  ! மாப்பிள்ளை போல   மேடையில் ஏறினார் ! 


"சீத்தாராம் எச்சூரி !  வாழ்க !வாழ்க !!"


என்ற கோஷம் வீண்ணைப் பீளந்தது


"மார்க்சிஸ்ட் கட்சி வாழ்க !வாழ்க!


என்று என் காதில் ஒலித்தது!!!




Thursday, November 26, 2015

"நாங்கள் 

இஸ்லாம் ஆனவர்கள் "





2000 வது ஆண்டு பிறந்தவுடன் "மில்லியணம் " என்று கொண்டாடினார்கள். நிருபர்  ஒருவர் நோபிள் விருது பெற்ற அமார்த்திய சென்னிடம் முதல் ஆயிரமாவது ஆண்டில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன ? என்று கேட்டிருக்கிறார்.

"இந்தியாவிற்கு இஸ்லாம் அறிமுகமானது தான் "என்றார் அவர்

அரேபிய மணல் வெளிகளில் அதற்கு முன்பும் மக்கள் வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு என்று ஒரு சமூக அமைப்பை வைத்திருந்தார்கள். உலக நாடுகள் பலவற்றோடு தொடர்பு கொண்டார்கள். பண்ட ,பண்பாட்டு பரிமாற்றங்கள் நடத்தினார்கள் .தமிழகத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரைகளில் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை அப்போதைய அரசர்களின் அனுமதியோடு "கிட்டங்கிகளை" அமைத்து வர்த்தகம் புரிந்தார்கள். வர்த்தகர்கள் முறைவைத்து தங்கள் நாடு சென்று வருவார்கள். அவர்களில் சிலர் இங்கேயே தங்கி பண்டங்களை பாதுகாப்பார்கள்.

நுற்றாண்டுகளாக இவை நடை பெற்றன . கிட்டங்கிகள் இருந்த இடங்கள் குடி இருப்புகளாகி அவர்கள்   இந்தமண்ணொடு கலந்து வாழ்ந்தார்கள்.ராமநாத புறத்தில் இருக்கும் "கீழக்கறை " உதாரணம்

அப்போது தான் அரேபிய நாட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. "நபிகள்" நாயகம் அவதரித்து, இனக்குழுக்களிடையே ஒருமையை வளர்க்க புதிய மார்க்கமாக "இஸ்லாம் "  (அமைதி )என்ற பாதையை கொடுத்தார்கள்.மிகவும் இளமையான இந்த மார்க்கம் தன்னுள் பல முற்போக்கான கொள்கைகளை  கொண்டதாக இருந்தது.

அரேபியாவில் எற்பட்ட மாற்றம்  அரேபிய வியாபாரிகள் மூலம் இங்கும் பரவியது.

கிட்டங்கிகளீலும் குடி    இருப்புகளிலும் வாழ்ந்தவர்களும். தங்களையும் மாற்றிக் கொண்டார்கள்.

"கீழக்கறை"  யில் வாழும் முஸ்லீம்கள்   இன்றும் தங்களை "இஸ்லாமானவர்கள் " என்றுதான் அழைத்துக் கொள்கிறார்கள் .

அந்த கிழட்டு ஆச்சார்யாவும் ,இளைஞர் ராஜ்தாக்கரெயும்  இவர்களை பாகிஸ்தானுக்குபோகச்சொல்கிறார்களே ?

நியாயமா  ???





Monday, November 23, 2015

த.மு .எ .க.சங்கத்தின் முதல் மாநாடு !!!









Monday, July 07, 2014

நினைந்து 
        நினைந்து 
              நெஞ்சம் ......!!!

1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தமிழ்நாடு  முற்போக்கு       எழுத்தாளர் சங்கம் துவங்கியது ! வரும் 12ம் தேதி 39 ஆண்டுகள்   கழிந்து    40 ம்  ஆண்டுக்குள் புகுந்து கொள்ள விருக்கிறது !

மதுரையில் எழுத்தாளர் சங்க முதல் மாநாட்டை நடத்த சில எழுத்தாளர்கள் !  -அப்போது  அவசர நிலை அறிவிக்கப்படவில்லை  -  தமுக்கம் கலை அரங்கில் நடத்த முடிவாகியது ! ஆனால் ஜூன் மாதம் 25 ம் தேதி அவசர நில  பிரகடணம் வந்தது !

இந்தியா முழுவதும்   முடங்கியது !  எழுத்தாளர்  சங்கமோ கருத்தரங்கம் ,  சொற்பொழிவு ,கவியரங்கம் ,நாடகம் என்று சமூக பிரச்சினைகளை தோட்டு தன நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருந்தது !

நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மத்தான்  செய்கிறது !

முதல் மாநாட்டில் எப்பேற்பட்ட ஆளுமைகள்  பங்கெடுத்தார்கள் !

அந்த மாபெரும் தீரர் சங்கரய்யா முழுமையாக இருந்து நடத்திக் கொடுத்தார் !

இந்த எழுத்தாளர் படைக்கு தளபதியாக இருந்து தோழர் கே முத்தையா அவர்கள் வழிநடத்தினார் !

 பூனே நகரத்தில் பிறந்து புகழ்பெற்ற ப்ஃர்கூசன் கல்லூரியில் பயின்று தன வாழ்நாள் முழுவதையும் "ஒர்லி " மலைவாழ் மக்களுக்காக அர்ப்பணித்த கோதாவரீ அம்மையார்  துவக்கிவைத்தார்  !

மராட்டிய ம்மொழியின் மிகச்சிறந்த  எழுத்தாளரான அவர் " மனிதன் விழிதெழுந்தபோது " என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் !

கேரளத்தின் இலக்கிய விமரிசகர்  கோவிந்த பிள்ளை சிறப்புரை !

" பிரசண்ட விகடன்" ஆசிரியர் நாரண துரைகண்ணன்     , ' கண்ணன் " பத்திரிக்கை ஆசிரியர் ஆர்.வி ஆகியோர் வந்திருந்து வாழ்த்திப் பேசினர் ! 

வடக்கே சென்னையிலிருந்து ஜானகி   காந்தன்,தெற்கே நெல்லையிலிருந்து புலவர் கந்த சாமி ,மேற்கே போடியிலிர்ந்து  புத்தூரான் ,  கிழக்கே பரமக்குடியிலிருந்து கந்தர்வன் , ஜான்சன் என்ன்று தமிழகத்தின் நான்கு   திசைகளிலிமிருந்து  110   பேர் வந்திருந்தனர்  !

 மாநாடு     முடிவில் நாடகம் ! கே முத்தையா அவர்கள் எழுதிய "புதிய தலைமுறை " நாடகம்- மதுரை பீப்பிள்ச் தியேட்டர் குழுவினர் நடத்தினர் !

சாஸ்திரிகள் ஒருவர் புரோகிதராக வாழ்கிறார் ! அவர் மகன் பரந்தாமன் என்பவனுக்கு மந்திரங்ககளை கற்றுக் கொடுத்து அவனையும் புறோகிதனாக்குகிறார் !   பக்கத்து வீட்டில் வசிக்கும் வக்கீலின் விதவை  மகளொடு பரிச்சியம் ஏற்படுகிறது பரந்தாமனுக்கு   ! இருவரும் நகரம்  சென்று புதிய வாழ்வைத்தேடுகிறார்கள் !

கே.எம் ,அவர்கள் இந்த நாடகத்தில \காஞசி   மகான்    பெரியவர  போன்று சாஸ்திரிகளைச் சித்தரித்திருப்பார் ! மதுரை மில தொழிலாளி துறை ராஜ் நடித்தார் ! பர்ந்தாமனாக காஸ்யபன்  நடித்தார் ! அவரே நாடகத்தை இயக்கினார் !

நாடகத்திற்கு டிக்கட்டு ரூ 1 ,2 ,3, 5 என்று இருந்தது ! மிகவும் அதிகம் என்று பேச்சும் வந்தது ! நாடகம் மூலம் 2800 ரூ மிச்சம் ! அதனை தமுஎச பண்டில் கொடுத்துவிட்டார்கள் !

மாநாட்டிற்கு வரும் சார்பாளர்கள் ,பார்வையாளர்கள் கட்டணம் 5/- ரூ ! மாநாட்டில் பலர் பேசும்    பொது   அதிகம் என்று பேசினர் !            

முதல் மாநாட்டிற்கான  சிலவு 30,000 /-ரூ !

மாநாட்டிற்காக   பி,எம். குமார்,வீரபத்திரன்,கார்மேகம், பூச்சி  போன்ற மூத்த  தோழர்களீன் பணி  மறக்க முடியாதது !

( கடினமான விஷயங்களை தவிர்த்து எளிமையான விஷயங்களை எழுத மாட்டீர்களா ? என்று அன்பர் ஒருவர் கேட்டிருந்தார் )




"உறக்கமும் குறட்டையும் "




பொதுவாக நன் குறட்டை விடுவதில்லை. எங்கள் குடும்ப பாரம்பரியம் அப்படி. 
என் மாமனார் குடும்பத்தில் குறட்டை விடவில்லை என்றால் அவர்களை அந்த குடும்ப உறுப்பினராக ஏற்றுக்க்கொள்ள மாட்டார்கள்.

என் மாமனார் உட்பட மைத்துனர்கள்   மைத்துனிகள்  குறட்டை விடுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.

சமிபத்தில் என் மைத்துனி ஒருவர் வந்திருந்தார். மிகவும் விசேஷமாக குறட்டை விடுவார். ஆச்சரியமாக இருக்கும்.

எல்லாரும் தூங்க ஆரம்பித்த பிறகு குறட்டை விடுவார்கள். இவர் குறட்டையை ஆரம்பித்து விட்டு தூங்க ஆரம்பிப்பார். "இப்படி தூங்குகிறாரெ ,ரயில் டிக்கெட்டை எல்லாம் பத்திரப்படுத்தி இருக்கணுமே "என்று நினைத்தேன். 

என் mind voice கேட்டது போன்று குறட்டையை நிறுத்திவிட்டு " மாமா ! டிக்கெட்டை  கை பைல பத்திரமா வச்சிருக்கேன்"நு " சொல்லிட்டு குறட்டைய ஆரம்பித்தார்.

சார் ! என் மைத்துனர் குறட்டை கொஞ்சம் விசேஷமானது. நீங்கள் இங்கிலீஷ் படம் பாப்பிங்களா? அதுவும் warfilm ? அதுல பீரங்கிகுண்டு எரியற காட்சி பாத்திரிக்கீங்களா ? குண்டு பாயும் பொது மெலிதாக ஒரு "விசில் " சத்தம் கேட்கும் " அது மாதிரி குறட்டை விடுவார். குண்டு போய் எதிரிகட்டடத்தை தூளாக்கும் இல்லையா ? அப்பம் பூகம்பம் மாதிரி சத்தம்கேட்கும் ! என்மைத்துனரும் அதேமாதிரி அச்சு அசலா விடுவார் சார் !"

என் உயிரே போனாலும் அவரை ரயில்ல அனுப்ப மாட்டேன். 

என்ன செய்ய ? 
 ஒரு தரம் பாண்டியன்ல போகவேண்டிய தாயிட்டுது.ராத்திரி பூறாம் தூங்கவிடாம பேசிக்கிட்டு,சீட்டாடிகிட்டு சமாளிச்சேன். விருத்தாசலம் வந்ததும் எனக்கு கொஞ்சம் கிறங்கிடுச்சு.லேசா சாஞ்சுட்டேன்.

மைத்துனரும்தூங்கி இருக்காரு. விசில்சத்தம் வந்திருக்கு.நாந்தன் தூங்கிட்டெனே  ! 
 குண்டு போட்டுட்டாரு..
முன்றாவது கோச்சுல இருந்த TTE பதறிப்போயி செயின பிடிச்சு இழுக்க வண்டி நிக்க ,மறுநாள் என் போட்டொவோட என் மைத்துனர் சிரிசுக்கிட்டு  பெருமையா நிக்கிற படம் தமிழக பத்திரிகைகள்ல வந்திருந்தது சார்.!

என் மாமனார் வீட்டுக்கு போனா ஹால்ல தான்  எல்லாரும் படுப்பம்.பத்துபத்தரைமணீ ஆனா மிருகக்காட்சி சாலை மாதிரி சிங்கம் கர்ஜிக்கும்.புலி உறுமும்..நரி ஊளையிடும் .நாய் குறைக்கும் .

நான் எட்டு மணிக்கே படுக்கற மாதிரி பாவ்லா காட்டுவேன். 9 மணிக்கு நைசா எழுந்து ஏதாவது சினிமா கொட்டகைக்கு போயிடுவேன்.

இந்திபடம்தானே . நமக்கு ஒருமண்ணும்புரியாது. கண்ணை மூடிக்கிட்டு தூங்கிடுவேன் .

ஒருநாள் நான் கிளம்பறத பாத்து என் மாத்துனரும் வரேன்னரு. ஆன மட்டும் தவிர்க்க பாத்தேன்.முடியல. நல்ல ரிக்ளைன் நாற்காலி. நல்ல தூங்கிட்டென். 

மைத்துனர் குண்டு போட்டுட்டார். சினிமாக்காரன் சிலைடு  போட்டு F 21, f 22
 பார்வையாளர்கள் வெளியெ வரவும் நுபோட்டு எங்கள மரியாதையா அனுப்பிட்டான். ஆனா மறுநாள்  வடநாட்டு இங்கிலீஷ் பத்திரிகள்ள வந்திட்டு சார் !

நீங்க கேட்குது புரியுது சார். என் துணைவியார் குறட்டை விடுவாங்களான்னு கெக்கறீங்க  ?

கலயானமாகி 53 வருசம் ஆகுது. 
குடும்ப அமைதியை கெடுத்துடாதீங்க  சார்வாள் !!!





Friday, November 20, 2015

எங்களின் தொழிற்சங்க தந்தை 

" தோழர் நாராயணன் அவர்களுக்கு "

அஞ்சலி !!!




"நான் அப்போது ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சுதந்திரத்தீர்குமுன்பு.மூத்த உழியர்கள் ஜனவரிமுதல் தேதி அதிகாரிகளை பார்த்து வாழ்த்து சொல்வார்கள். வேறும்கையொடு அல்ல. ஆப்பிள் ,ஆரஞ்சு, அல்லது  இனி ப்புபொட்டலங்களொடுசெல்வார்கள்.

நான் புதியவன்.என்னையும் அழைத்து சென்றார்கள். எங்கள் கிளை அதிகாரி kRK .பட் என்பவர்.  எல்லரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். பரிசுபொரு ளைகொடுத்தார்கள். என் முறை வந்த பொது நானும் சென்றேன். நான் கையில் எதுவும்கொண்டுசெல்ல வில்லை.

கைகுலுக்கினேன். 

What Narayanan you are very Hot ? என்றார் அதிகாரி.

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

I am always hot sir !   என்று சொல்லி வைத்தேன் 

அவர் முகம் சிவந்து விட்டது.

i n That case I Will pour ice cold Water on your head !"என்றார் அதிகாரி.

அவர் என்னவோ மிகப்பெரியந கைச்சுவையை  சொல்லி விட்டது போன்று வந்திருந்தசகஊ ழி யர்கள் சிரித்தார்கள். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது.என்ன செய்ய ? நான் ஒரு சாதாரண டைப்பிஸ்ட் ! அவ்ர்கிளை மேலாளர்.

காலம் மாறியது..

1960ம் ஆண்டு. இன்சூரன்ஸ் துறை நாட்டுடமை யாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. மதுரை மண்டல அலுவலகத்தில் நான் பாணியாற்றி க்கொண்டிருந்தேன் ..
KRK பட்  இப்போது மண்ட மேலாளராஇருக்கிறார்ஹை திராபாத்திலிருந்து 
மதுரை மண்டலத்திற்கு மாற்றலாகி வந்தார் .

வந்தவர்தொழிற்  சங்க நடவடிக்கை களை பற்றி விசாரித்திருக்கிறார்.பழைய ஓரியண்டல்நாராயனன் தான் இப்போது மண்டல சங்க தலைவர் என்று கூறியிருக்கிறார்கள். கோட்டு சூட்டுபோட்டமனடலமேளாளரான krk பட்  சேம்பரை விட்டு எழுந்து நான் இருக்கும் அறைக்கு வந்தார். 
hallo ! naaraayaNan ! how are you ? என்று கைகுலுக்கினார்

நான் அன்றும் டைப்பிஸ்ட் தான்>இன்றும் டைப்பிஸ்ட் தான்.

ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு.
அன்று ஒரியண்டல்கம்பெநியில் தொழிர்சங்க அமைப்பு இல்லை. இன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழையர்சங்கம்  என்ற தீரமிக்க சங்கம் இருக்கிறது." அது தான் வித்தியாசம்."


(961ம் ஆண்டு நாராயணன்  அவர்கள்  மதுரையிலிருந்து திண்டுக்கல் மாற்றலாகி சென்றார்கள் . அப்போது ஊழியர்கள் கூட்டத்தில் பேசியது)

Wednesday, November 18, 2015

"மைதிலி சிவராமன் பற்றிய ஆவணப்படம் "



"சிதறிய காலம் "

"Fragments of past "






மைதிலி சிவராமன் அவர்கள் அமெரிக்காவில்பணியாற்றி ய காலம் அது. ஐக்கிய நாடுகள்சபையின் காலனி ஆதிக்க எதிர்ப்பு கமிட்டியின் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார் .

விடுதலைக்காக போராடியமக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. - அவருடைய வாழ்வைப் புரட்டிப் பொட்டது.அவர் நெஞசைக் கவர்ந்த தலைவர்களில் முக்கியம்மானவர்கள் மூவர் .
ஒருவர் மார்ட்டின் லூதர் கிங் .
இரண்டாமவர் சே குவேரா
மூன்றாமவர் பிஃடல் காஸ்ட்ரோ. 

காலனி ஆதிக்க எதிர்ப்பு ஊர்வலங்கள் , ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வார். இவற்றை படங்களாக ஆவணங்களாக படமாக்கி அவருக்கு அவருடைய அருமை மகள் கல்பனா காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒரு சின்னக்குழந்தை வாய்பிளக்க பார்ப்பதுபோல் மைதிலி அவர்கள் அதனைப் பார்த்து கைதட்டி மகிழ்கிறார்.
"இது  எல்லாம்  நான்தானா? அவர் எழுதிய கட்டுரைகளைப்பர்த்து இதை நான் தான் எழுதினேனா ? " அவர் சின்னக்குழந்தையாய் கேட்கும்போது நம் நெஞ்சம் விம்முகிறது.

"அம்மா உனக்கு ஓண்ணும் இல்லை அம்மா.உன்னுடையஞாபக சக்திகுறைந்து வருகிறது. அது   உன்குற்றம் அல்ல "
மகள் தாயை தேற்றுகிறாள்.  
"தோழர் ! தோழர் !" என்று என் இதயம்கதறுகிறது.

"எப்பேர்பட்ட ஆளுமை தாயே !!"

அமெரிக்க ஏகாதிபத்தியம் குயூபா வை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றிய காலம். "k" 
எழுத்தை உச்சரித்தாலே சுட்டு வீழ்த்த சி.ஐ எ  தயாராக இருந்தது..

அந்த தீரமிக்க பெண் அமெரிக்க அரசின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு சின்னஞ்சிறு விமானம் மூலம் ஒரு சிறு travel bag ஐ மட்டும் எடுத்துக்கொண்டு குயூபா  சென்றுவந்தார்.  

மதுரையில் மாதர் சங்க அமைப்புக் கூட்டத்திற்காக வந்திருந்தார் .மாவட்ட கட்சி அவரை தங்க வைக்க வேண்டிய பணியை என்னிடம் அளித்தது. என்விட்டில் இரண்டு நாள் தங்க  ஏற்பாடு.  மண்டையன் ஆசாரி சந்திலிருந்து செல்ல வேண்டும்.ஆட்டோ பார்த்தேன்.

"தோழர் எதற்கு ஆட்டோ?." ஸ்கூட்டரின் பின்னாலமர்ந்து ஒரு சின்ன travel bag ஓடு  வந்தார்.

"தோழர் ! நீங்க க்யூபா போயிருக்கெளாமே ?"

"அது ஒரு wonderfull experience. வண்டிய பாத்து ஓட்டுங்க ! அப்புறம் பேசலாம் !" என்றார்.
  
மறுநாள் காலை குளித்து உடைமாற்றிக்கொண்டிருந்தார்   "தோழர்! தோழர் ! என்று இறைந்து  கூப்பிட்டர்.
 "Com . the is the same bag I took to Cuba " I never miss it "  என்று கை கொட்டி சிரித்தார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பௌனார் ஆசிரமத்தில் விநோபவை சந்தித்திருக்கிறார்.

கீழ் வெண்மணி பற்றி அவர் எழுதிய காட்டுரை மிகவும் பிரபலமானது. "46 பேரை தீயிட்டு பொசுக்கிய கிராதகர்களை நீதி மன்றம் விடுதலை செய்தது. 
 "these gentlemen will  never kill " என்பது தீர்ப்பு .

"The gentlemen killers of kizhavenmani " என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதினார் மைதிலி அவர்கள்.

ஆவணப்படத்தில் இந்த காட்சி காண்பிக்கப்படுகிறது."நானா ! நானா ! எழுதினேன் " என்று அவர் கேட்கும் பொது " தாயே ! தாயே " என்று நெஞ்சம் அலறுகிறது.

மைதிலிஅவர்களின் மகள் கல்பனா " விடுதலை போரினில் வீழ்ந்த மலரே "  என்று பாட முடியாமல் துக்கம் அவர் தொண்டையை அடைக்கிறது.. சமாளித்துக்கொண்டு பாடுகிறார்.அவர் கண்கள்.குளமாக நாமும் கண்  கலங்குகிறோம்  .

கலை இலக்கிய அன்பர்கள், ஊழியர்கள் அத்துணை பெரும் போற்றீ  பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம் . 










Monday, November 16, 2015


நினைக்க நினைக்க 


இனிக்கும் செய்தி...!!!


தாழையுத்து என்ற சங்கர் நகர் அருகில் இருக்கும் கங்கை கொண்டானில் "கொலா" தொழிற்சாலையை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் ! அரசு உட்பட எவரும்கண்டுக்கல ! சிவகங்கைமாத்தூரில் கம்யுனிஸ்டுகள்  "கோலா" கம்பெனியை எதிர்த்து பொராடினார்கள் ! கண்டுக்கல ! ஜார்கண்டில் ஒரு ஆற்றையே 60 மைல் நீளத்திற்கு "கொலா" கம்பெனிக்கு விற்று விட்டர்கள் !கண்டுக்கல ! இந்த போரட்டங்களில் பங்கு கொண்ட மனிதனுக்கு இது பற்றிய செய்தி வந்தால் மனம் நிறைவையாவது தரும் ! அதே மன நிலைதான் "கத்தி" படத்தை பார்த்த கம்யுனிஸ்டுகளூக்கும் !


 ஒரு இலக்கிய படைப்போ,கலைப்படைப்போ ,புரட்சியை நடத்தி விடாது ! ஆனால் பிரும்மாண்டமாக நடக்க விருக்கும் அந்த புனிதப் போரின் முன்னணிப்படையாக அவை sappers and miners ஆக செயல்படும் ! அப்படிப்பட்ட advance guard ஆக செயல் பட கலை இலக்கிய வாதிகளை தூண்டும் செயல்தான் கம்யூணீஸ்டுகள் "கத்தி "பற்றி விமரிசிப்பது ! 


புரட்சி நடந்த பிறகும் கூட சோவியத்தில் நிலத்தில் இறங்க விவசாயிகள் பயப்பட்டர்கள் ! "குலக்குகள்" மீண்டும் வந்து விடுவார்களோ என்று பயந்தார்கள் ! அவர்களுக்கு புரட்சி என்றால் என்ன என்று தெரியாது ! அவர்களுக்கு  புரட்சி பற்றி கற்றுத்தர லெனின் அவர்கள்  கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அழைத்தார் ! அப்பொது உருவானது தான் "Battle ship...." , "October ...", Blue mountain" போனற படங்கள் ! இவை புரட்சி நடக்கும் போது காமிரவும் கையுமாக எடுக்கப்பட்டது அல்ல !


எங்கள்தலவர் "சுனில்மைத்ரா " அவர்கள்குறிப்பிடுவார்கள் !" சோவியத் புரட்சி பற்றி ஐம்பது அறுபது புத்தகங்களாவது வந்திருக்கும் ! நான் சுமார் முப்பது புத்தகங்களைத்தான் படித்துள்ளேன் மீதமுள்ளதை படிக்க முடியவில்லை " என்று குறிப்பிடுவார் !


புரட்சிப்படை வரும் பொது எதிரிகள் ஒளிந்திருந்து தாக்குவார்கள் ! எதிரிகளிடமிருந்து வீரர்களை பாதுகாக்க முண்ணனிபடை செல்லும் ! அது வீரர்கள்செல்ல விருக்கும் பாதையை செப்பனிடும் ! அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றும் ! ஒளிந்திருக்கும்  எதிரிகளின் முதல் தாக்குதலை சந்திக்கும் ! எதிரிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்களென்பதை பின்னல் வரும் வீரர்களுக்கு அடையாளம் காட்டும்!எதிரிகள் பகுதிக்குள் சென்று அந்த மக்களை நம் பக்கம் இழுக்க கலை இலக்கியத்தை பயன்படுத்தி கருத்து விதைகளைத் தூவும் !மிகுந்த   சேதத்தை சந்திக்கும் ! இந்த முண்ணணிபடை போரில் மிகவும் முக்கியமான பணியை தன்னலம்கருதாது செய்யும்! 


இதனை செய்யும் கலைஞர்கள் எழுத்தாளர்கள் தான் முற்போக்கு எழுத்தாளர்கள் ! புரட்சி கலைஞர்கள் ! 


தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் 2015ம் ஆண்டு நவம்பர்  29ம் தேதியில்  மதுரை  நகரத்தில்தங்கள் 40 ம் ஆண்டு விழாவை நடத்த  கூடப்போகிறார்கள் !


நினைக்க நினைக்க இனிக்கும் செய்தி !!!






Sunday, November 15, 2015

கெட்டவார்த்தை சொல்லி ஏசணும் போல இருக்கு அண்ணே !!! 





ஓம் .....ஸ்வாஹா !!!


அண்ணன்மார்களே இத படிச்சிட்டு கோபப்படாதிங்க !!!
சம்ஸ்கிருதத்தில மந்திரம் சொல்லுதான் ம்லா ! அத ஆரம்பிக்கும் போது "ஓம்"  நு சொல்லி அராம்பிக்கான். முடிக்கும் பொது "ஸ்வாஹா"  நு முடிக்கான் . 
என் தெரியுமா ?

உலகம் எப்படி இருக்கு நு தெரியுமா ? அடிதடி, வீரம் போன்ற குணம் உடையவர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் எது கொடுத்தாலும் திருத்தி அடியாம இன்னும் இன்னும் நு கேட்கிரவங்களாம்.(ரஜத் குணம் )

அடுத்து .இதுவே போதும்.  என்று கிடைத்ததை வைத்து திருப்தி அடைபவர்களாம். (சத்வ குணம்.)

அதற்கு அடுத்தவங்க இருட்டுல இருக்கிறவங்க.எதுவமே தெரியாத அப்பாவிங்க .( தமோ குணம்)

இந்த மூன்று குணத்தையும் சார்ந்து குறிக்கிற ஒற்றைச் சொல் தான் "ஓம் "
என்ற பிரணவ மாம்.
(எனக்கு தெரியுது அண்ணெ உங்களுக்குகோபம் வருது என்பது )



அப்பம் முடிக்கும்போது எதுக்கு" ஸ்வாஹா " நு கேட்டேன் .

ஒரு காலத்துல தேவ லோகத்துல தேவர்கள் எல்லாம் கஞசிக் கில்லாம சிங்கி அடிச்சிக்கிட்டு இருந்தாங்களாம். ஒடிப் போயி பிரும்மா கால விழுந்தாங்களாம். அவன் மூக்கப்பிடிசிக்கிட்டு தியானம் பண்ணினான். 
'ஏய் பசங்களா ! பூலோ கத்துல சோத்த மனிதர்கள் யாக குண்டத்துலபோடுதாங்க> அத பக்குவமாஎடுத்து உங்களுக்கு "பார்சல்" பண்ணி அனுப்புஅச்சொல்லுதேன்." அப்படின்னாராம்.

"அண்ணெ ! அது முடியாது "  அக்னி சொல்றான்.
"ஏண்டெய்? "
"ஏண்ணெ ! எனக்கென்ன பெண்டாட்டியா இருக்கா ? சமைக்க ? "
பிரும்மா திரும்ப தியானம் பண்ணினார்.
"அப்பம் பொம்பள சாமி வந்து என்ன வேணும் டேய் ? நு கேட்டிருக்கு.
"அக்னிக்கு பொண்டாடி இல்ல ? நீ வேணும் நா போயி....." 
"சரிப்பா " நு சொல்லி அந்தம்மா அவன் வீட்ல போய் வாழ ஆரம்பிச்சுடுச்சு.
"அந்தம்மா பேரு "ஸ்வாஹா" .எவன்லாம் ஸ்வாஹா" நு சொல்லி மந்திரத்தை முடிக்கானோ அவனுக்கு சோருகிடக்கும் நு பிரும்மா சட்டம் போட்டாரு..

இத மார்க் கண்டுபிடிச்ச facebook ல போட்டு உலகம்புரா அனுப்பீருக்கான் 
அண்ணெ ?

கேட்ட வார்த்தை சொல்லி ஏசணும் போல இருக்கு !
உங்களுக்கும் அப்படித்தான அண்ணெ ?

யார ஏசறது ???

Saturday, November 14, 2015

டாக்டர் ஜாண் செல்லதுரையும் 

நானும் .................!!!



செவ்வாய்கிழமைதான் (17.11.2015 ) தான் அவருக்கு 49 வயது ஆகிறது. நாகபுரியில் இந்திய அமைதி மையத்தின் இயக்குனராக இருந்தவர் தன பணியை மாற்றிக்கொண்டு தற்போது  ஒரு அறக்கட்டளையில் ஆராய்ச்சித்துறையில் ஜலகாவ் என்ற ஊரில் பணியாற்றுகிறார்.

நெல்லை மாவட்டம் சேரன் மாதேவியை சொந்த ஊராகக்கொண்டவர். தினம் பஸ்ஸில் சென்று ம.தி.தா இந்து கல்லூரியில் விலங்கியல்படித்துபட்டம் பெற்றவர். 

நண்பர்களோடு சேர்ந்து Friends  Commune என்ற பரிசோதனை வாழ்வை ஆரம்பித்தார். ஐந்தாறு நண்பர்களோடு அலங்காநல்லூரின் அருகில் உள்ள காட்டுப்புகுதியில் நிலம்வாங்கி வாழத்தோடங்கினார் .அந்தநிலத்தில் அங்கு வசிப்பவர்கள் எல்லாரும்குடும்பத்தோடு  உழைப்பார்கள். எல்லாரும் அதனை பங்கிட்டு வாழ்வார்கள். ஒரு புதிய சமூகத்தை உருவாக்க இந்த இளைஞர்கள் துடித்து எழுந்தனர்.

குஜராத் பல்கலைகழகத்தில் சுற்றுப்புற சூழல்பற்றி  ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார் . ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்த பொருள் "Conflict"  என்பதாகும். எந்த மோதலையும் சமாதானமாக தீர்க்க முடியும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவர் டாக்டர். ஜாண்.

நாகபுரியில் இருக்கும் வரை நாங்களிருவரும் விவாதிக்காத பொருள் இல்லை என்றெ சொல்லலாம்.   .

மூன்று வருடத்திற்கு ஒருமுறை பத்து வயதிலிருந்து பனிரெண்டு வயதுள்ள  தென்கொரிய சிறுவர் சிறுமியர் இருவரை இந்தியா அழைத்து வந்து 8.9.10 வகுப்பு வரை கல்வி புகட்டி அவர்களை மீண்டும் அவர்களை  ஊருக்கு அனுப்பி வைப்பார். அந்தநாட்டில் ஆங்கிலம் படிக்க வாய்ப்புகள் குறைவு என்பதால். எனக்கு தெரிந்து இது பத்து ஆன்டுகளூக்கும்மேலாக நடக்கிறது.

அவர் ஜலகாவ் சென்ற பிறகு தீபாவளி அன்று அவருடைய அருமை மகள் அனிதாவையும் அழைத்துக்கொண்டு  என்னை பார்க்க வந்தார்.

வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். வைணவம் பற்றி,பகத்சிங் ,கொடிகாத்த குமரன் பற்றி,  பற்றி என்று விவாதம் தொடர்ந்தது.

சேரன் மாதேவி ஊர்க்காரர் என்பதால், வா .வே.சு. அய்யரின் குருகுலம் பற்றியும் ,"சம்பந்தி போஜனம்" பற்றியும்கேட்டேன் ..

"ஐயா! குருகுலம் பற்றி பேசும் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நடந்ததையும் தெரிந்து கொள்வது நல்லது ஐயா ! அங்கு பிராமணர்களுக்கு தனி சாப்பாடு.! மேல்சாதி இந்துக்களுக்கு தனி பந்தி. இது சரியா ? இன்றய நோக்கில் இது பெரியதவறு என்பதில் ஐயமில்லை. 1910-1930 ம் ஆண்டுகளை நினைத்து பார்க்க வேண்டும் ஐயா ! அவர்கள் தத்தம் சொந்த பழக்க வழ்க்கங்களெப்படி இருந்த போதிலும் அதனை கணக்கிடாமல் இந்திய சுதந்திரம்,பிரிட்டிஷ் ஏகதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றிர்க்காக நின்றனர் வா.வே.சு அய்யரின் தேச பக்தியை  குறைத்து மதிப்பிட முடியுமா ?இளம் வயதுனருக்கு  துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்ததாக கூறுவார்கள்.,அவர் பிராமணர்களுக்கு தனிபந்தி வைத்தது இன்றையசமூகநீதிபார்வையில் தவறுதான். .அதனை மாற்ற வேண்டும் என்று பெரியார் அவர்கள்  அன்றே கோரியது அவரின் தீர்க்க மான பார்வையை சொல்கிறது.இதற்கு மேல் இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை "என்றார் .

மிகச்சிறந்த காந்தீய வாதியான  டாகடர் ஜாண் செல்லதுரை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!!!








Friday, November 06, 2015

சின்னையா காசி அவர்களின் .....3







சென்னையில் கொடம் பாக்கம் ,விருகம்பாக்கம்,வளசரபாக்கம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தெரிந்த விஷயம் தான்.

நண்பர் இசக்கி முத்து அவர்களை பார்க்க சென்றிருந்தேன். வங்கியில் முத்த அதிகாரி. தலித் குடும்பத்தை சேர்ந்த அவரும் நானு சமஸ்கிருதம் படித்தோம்.அது பற்றி ஒரு நாவலே எழுதலாம் .

எங்களுக்கு விருந்து அவர் விட்டில். அவருடைய துணைவியார் பவம் "மாங்கு-மாங்கு "   நு    வீட்டு வேலையில இருந்தார்.  
"ஏம்மா! உதவிக்கு  ஆள் இல்லையா ?" 
"இருக்காங்க தோழர் ! இன்னைக்கு வெளியூர்ல ஷுட்டிங் "

இந்தப் பகுதியில் பல வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. விட்டு வேலைக்கு உதவியாக வரும் பெண்கள் மிகவும் சுறு சுறுப்பாகவும், நறிவிசாகவும் இருப்பார்கள். .வேல அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஒரே ஒரு சிக்கல்.. என்று . லீவு எடுப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

அவர்கள் parttime  domestic helper and parttime actors (extra )..

இந்த பகுதியில் காய்கறி  விற்பவர்கள், சிறு வர்த்தக நிறுவனங்களில்  பணியாற்றுபவர்கள் பலர் இப்படி இரண்டு வண்டிகளில் பயணம் செய்து தான் குடும்பத்தை சுமக்கிறார்கள்,

நான் நடிக்கப் போனபடத்தின் ஷுட்டிங்  கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பகுதியில் நடந்தது. மொத்தம் முன்று ஷெட்டுயுல் .

எங்கள் யூனிட்டில் துணை நடிகைகள் முன்று பேர்  இருந்தனர்.  ஒய்வு நேரங்களில் கிட்டத்தட்ட இருபது பேர் நடிகர்கள், டெக்னீஷ்யன்கள் என்று அமர்ந்து பேசுவோம்..
உயிர் என்றால் என்ன? அறிவு என்றால் என்ன? கலை இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்,காலம் என்றால் என்ன ? வெளி என்றால் என்ன ? என்று ஒவ்வொரு நாளும் அவர்களிடையே பேசுவேன்.மார்க்ஸ்,ஏஞ்சல்ஸ் எழுதிய Art and litereture என்ற புத்தகத்தை பகல் நேரங்களில் படித்து வைத்துக் கொள்வேன் . எந்த சமயத்திலும் அவர்களுடைய பெயரை உச்சரிக்க மாட்டேன்.
இது என்பாலவர்களை ஈர்த்தது. பலர் என்னிடம் நெருக்கமாகவும், மனம்விட்டு பேசவும் ஆரம்பித்தார்கள

துணை நடிகைகள் தங்கள் கதை களை மனம் விட்டு பேசினார்கள். உலக வாழ்க்கையல் நாம் நடிகர்,நடிகைகள மிகவும் கேவலமாக  பேசுவதும், நடத்துவதும் எவ்வளவு பாவகரமான செயல் என்பதை புரியவைத்த அனுபவம் அது .

அந்த துணை  நடிகை கோயம்புத்தூரில் இருக்கிறார்.அவுடைய கணவர் கோவையில் ஜவுளி வியாபாரி, எற்கனவே திருமண ம் ஆனவர். இவர் இரண்டாவது .

"ஏன்மா ! சினிமா காரங்க இரண்டாம் தாரமாவே வாக்கப்படுரீங்க ? "
" புத்தி கெட்டு பகட்டு பேச்சை நம்பி  வீட்டைவிட்டு வந்துட்டோம். வந்தபிறகு இந்த சுழல் லேர்ந்து மீள முடியாம தவிக்கிறோம் சார். கல்யாணமா? நினைச்சு பாக்கமுடியுமா ? சார் ! ராத்திரி பத்து மணிக்கு  போலீஸ்காரன் வந்துஇன்ஸ்பெகர் குப்பிடராறு ம்பான். நேர  அவருக் நு இருக்கர லாட்ஜுக்கு போகணும்."
அவர் கண்களில் கண்ணிர் வழிந்தது. நடிக்க வில்லைஇப்போது.

"டாப் ஸ்டார இருந்த  நடிகைகள் கதை  தெரியும்தானே சார் !  இப்ப நான் இன்னாருடைய மனைவி ! ஒரு பாதுகாப்பு இருக்கு !எனக்கு  ஒரு சுயம் வந்திருக்கு " 

பெருமூச்சு விட்டார். "எல்லாம் முடிஞ்சு போச்சு சார்.! என் மகளை ஹாஸ்டல்ல போட்டிருக்கேன் சார். என்னை புரிஞ்சுகிட்டா ! அவ காலேஜ் லக்சரர ஆகணூம்ன்கா !  நான் ஐ.எ.எஸ் படிங்கன். முதலாளி தான்  படிக்க வைக்கறார்."  

சரியாக பத்துமணிக்கு அந்த மாவட்டத்தில் eb  காரன் grid மாத்துவான் .30 வினாடி லட் அணைஞ்சு எரியும்..  

"மணி பத்தாயிட்டுது சார் ! நீங்க தூ ங்குங்க " என்றார் அந்த அம்மையார்.

"தூக்கமா ? இன்னிக்கு இல்லை " என்று நினைத்து கொண்டே எழுந்தேன்.






Thursday, November 05, 2015

சின்னய்யா காசி அவர்களின் ........2 !!!






அவர்களை "லைட்  பாய் " என்று அழைப்பது சரி அல்ல. ."  லைட்  அங்கிள்" "லைட் தாத்தா " என்று தான் கூப்பிட வேண்டும்..

அந்த ஸ்டூடியோவில் டப்பிங் நடந்தது . நானும் போயிருந்தேன் . வேறு  படங்களுக்கான படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது.நாங்கள் ஓய்வாக வேடிக்கை பார்த்துக் கொண்டருந்தோம்.

ஊர்வலக்க்காட்சி . .கதாநாயகன் தலைமையில் .. ஒரு பள்ளமான பகுதியில் இருந்து மேடேறி வாரவேனும். வெகு துரத்தில் இருந்துகாட்சி ஆரம்பிக்கும். கதாநாயகன் நெருங்க நெருங்க காமிரா அவரை குறிவைக்கும். பலகோணங்கள்.பல பக்க வாட்டு தோற்றங்கள் என்று நெளிசலை எடுத்து விட்டார்கள் .இவை அத்துணைக்கும் ஈடு கொடுத்து விளக்குகள் இருக்க வேணும் . சூரிய ஒளியானதால், கூடுதலாக reflector  பயன் படுத்தப்[பட்டது. கதா நாயகனின்  மூக்கு நிழல் அவன் உதட்டில் விழாமல்  reflector  ஐ கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க நெருங்க உயர்த்தி பிடிக்க வேண்டும்..படப்பிடிப்பு முடிந்தது . காமிரா காரர் இயக்குனர்காதில் கிசுகிசுத்தார். 
"சார் ஒன்மோர்   ஷாட்" .  
"போய்யா ! வேலையைபாரு ! எல்லா எடிட்டிங்க்ல  பாத்துக்கலாம்"என்றார் நடிகர்.
அவர்களுக்கு சந்தேகம் முக்கு நிழல் பிரச்சினைதான் . " எவண்டா  reflector பிடிச்சவன் ." இயக்குனர்.
அந்த லைட் அங்கிள் "நான் தான் சார் " என்றார்.
அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்
."60000 ரூ போச்செல ! ஓங்கப்பனா கொடுப்பான்"
"packup "   எல்லாரும் கலைந்து சென்றனர். 

பின்னாளில் அந்த ஷாட்  சரியாகவே வந்திருந்தது என்பது தெரிய வந்தது    ;.

1979 -80 ஆண்டுகளில்கோடம்பாக்கம் "ராம்" தியேட்டர் அருகில்  துணை நடிகர்கள்  காத்திருப்பார்கள் .8 மணியிலிருந்து  எஜெண்டுகள்  வந்தபின்  "கால்ஷிட் " கிடைத்தால் சம்பளம்.
கிடைக்காதவர்கள்  தியேட்டர் அருகில் உள்ள சந்திற்கு போய் 
காத்திருப்பார்கள். இதில் துணை   நடிகர்களிளிருந்து டெக்னிஷியன்களும் உண்டு.

8.30 மணிக்கு பெரிய கொத்தனார் கள். பெயிண்ட் கன்ட்ராகடர்கள், கலயாண சமயல்  கான்ட்ராக்டர்கள் வருவார்கள். 

" on the waterfront " திரைப்படத்தில் வருவது போல அன்றைய கூலி வேலைக்காக ,இந்த டாக்டர்களும்,வக்கீல் களூம் முண்டி அடித்துக் கொன்டு போட்டி போடுவார்கள். 200 -300 ரூ  கொண்டு போனால் தானே அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்.







  


Sunday, November 01, 2015

( 2012 ம் ஆண்டு  நான் இட்ட இடுகை .இப்போது மிள்  பதிவாகிறது .)


CONTACT

LOG IN

Monday, January 16, 2012


டாக்டர் ஜாண் செல்லதுரை அவர்களின் இடுகையை பதிவு செய்துள்ளேன்.

JAN

16

பசு வதை தடையா, தடையால் வதையா?

கடந்த சில வருடங்களாக தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் ஆடத் தேர்ந்தெடுத்திருக்கும் புதிய பகடை 'பசு'.


'பசு பாதுகாப்பு சாம்பியன் நானே' என சுயபிரகடனப் போட்டியை இராஜஸ்தானிலும், பசு சென்டிமெண்ட் கண்ணீர் வடிக்கும் ஒரு கூட்டத்தை குஜராத்திலும் பார்க்கிறோம். மத்திய பிரதேச அரசு ஒரு படி மேலே சென்று, பீஃப் வைத்திருந்தாலே 7வருடம் சிறைத்தண்டனை என சட்டமியற்றி தனது 'பசு'மையை காட்டியுள்ளது. காந்திய வாதிகள், குறிப்பாக வினோபா பக்தர்கள் தம் பங்கிற்கு, 'பசு பாதுகாப்பு' இயக்கத்தை நிர்மாணத்திட்டமாக்கி 'லாபி' (lobby) செய்கின்றனர்.


இவ்வாறு பசு பாலிடிக்ஸ் ஆகிவிட்ட நிலையில் அதன் கெமிஸ்ட்ரி, எகனாமிக்ஸ், சமயம், கலாசாரம் என மற்ற அம்சங்களையும் பார்த்து விட்டால் என்ன என்று தோன்றுகிறது.


தாய்மை: பால் என்பது உயிரோட்டமான சரி விகித உணவு. விளையாட்டுப்பருவமுதல், வீர விளையாட்டுப்பருவம் வரை உகந்த போஷாக்கு. அரிய தனிமங்கள்( rare elements), தலையாய விட்டமின்கள், நோய் எதிர்ப்பு சக்தி என சகல மருத்துவ குணமும் கொண்டது. பசு நெய்யில் லேகியம் செய்வதும், வெண்ணெய் பூசிக்குளிப்பதும் இந்திய பாரம்பரியம். சாண எரிவாயு, தொழு உரம் என சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தவையும் அதிலுண்டு.


இப்படி எல்லா விகிதத்திலும் வாழ்விற்கு பக்கபலமாக, பலனை சற்றும் எதிர்பாராமல் வாழும் ஓர் சக ஜீவனை அன்பின் வடிவமாக்கி பாதுகாத்தல் ஒரு கைமாறு மட்டுமல்ல, நம்மில் மனிதத்தை வளர்ப்பதற்கு ஓர் ஒப்பற்ற வழியும் கூட என 'கோ ரக்-ஷன்' பிரசாரகர்கள் வைக்கும் வாதத்தில் ஆன்மீக நியாயம் உண்டு.


விபரீதம்: ஆழமான தத்துவ பின்னணி கொண்ட இந்த தாய்மையின் வடிவைக் காப்பாற்ற 'எத்தனை தலை வாங்கவும் (தரவும் அல்ல) தயார்' என ஒரு சாரார் குரல் எழுப்பும் போதுதான் விஷயம் விபரீதமாகிறது.


மறுபக்கம்: இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, அமுக்கமாக மாட்டிறச்சியை உண்டு களிக்கும் ஒரு பெருங்கூட்டம், மாட்டிறைச்சிக்கு ஆதரவாக ஏகப்பட்ட வாதங்களை வாளாக்கி களத்தில் குதிக்கத் தயாராகி இருக்கிறது.


அண்மையில் டெல்ஹியில் நடந்த ஒரு மாநாட்டின் உணவு வேளை விவாதமாக வந்து சேர்ந்தது 'பசுவதை'. மேசையில் நால்வர்: ஒரு கேரளம், ஒரு நாகலாந்து பெண்மணி, ஒரு ஜார்கண்ட் மனித உரிமை ஆக்டிவிஸ்ட். நான்-வெஜியாக இருந்து வெஜிடேரியனாக மாறியுள்ள நான் அம்மேசையில் 1/4 மைனாரிடி. பரிமாறப்பட்ட மட்டனை (மட்டன்?) கடித்துக் கொண்டு அவர்கள் சுவையாக பரிமாறிய வாதம்:


'நம் நாட்டின் புரதத் தேவையில் நாற்பது சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் உணவாக அசைவம் உள்ளது.


அதில் நான்கில் ஒருபகுதி பீஃப் (beaf). பசுவதை என மாட்டிறைச்சியை தடை செய்துவிட்டு நாட்டின் 10 சதவிகித புரதத் தேவையை இவர்கள் எவ்வாறு சமன் செய்யப் போகிறார்கள்' என ஜார்கண்ட் வாதத்தை துவக்கிவைத்தார்.


'பசு வதைத் தடை என்பதைல்லாம் 'கறி'க்குதவாத வாதம். அப்படி வாதம் செய்கிறவர் யாராவது மாட்டை வைத்து பொழப்பு ஓட்டுகிறார்களா? பால் மாடு வைத்திருக்கும் விவசாயிட்ட போய் கேளுங்க; அவனுக்கு அது ஒரு பொருளாதாரம். பால் கறந்தா கறவை மாடு, மறுத்தா அடிமாடு. ஐயோ பாவம்! நம்மைக் காப்பாற்றிய மாடு, அதனை நாமும் காப்பாற்றணும் என்பது அபப் பொருளாதார ( uneconomic)வாதம். ஐம்பது ரூபாய்க்கு தீவனம் போட்டால் எண்பது ரூபாய்க்கு பால் தருவதே பெரும்பாடா இருக்கு. இதுல மலட்டையும் கிழட்டையும் சேர்த்துக்க யாரால் முடியும்.'


'இந்தியாவைப் பொருத்தவரை 'பீஃப்' ஆனது பால் பொருளாதாரத்தின் ஒரு உபப் பொருள் ( Byproduct). இறைச்சிக்காக மாட்டுப் பண்ணை என்பது இங்கே கேள்விப்படாத ஒன்று. பால் உற்பத்தியானது ஏழை மற்றும் கீழ் நடுத்தர வகுப்பு (லொயர் மிடில் க்ளாஸ்) மக்களின் தொழில். அவங்க யாரும் பால் மாட்டையோ திடகாத்திரமான காளைமாட்டையோ அடிமாடாக சந்தைக்கு அனுப்புவதில்லை. பல்லு போனதையும், சினைபிடிக்காததையும் வைத்து அவன் என்ன செய்வான்? கோடை வறட்சியில, உள்ள மாட்டுக்கே புல்ல காணோம்ங்கிர நிலையில வெத்துமாட்டுக்கும் சேர்த்துப் போடுவது அவனால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.' என கேரளக்காரர் பொரிந்து தள்ளினார் தனது மலையாளம் கலந்த ஆங்கிலத்துல.



இப்படி (விவசாயியின் பொருளாதாரத்தால்) ஒதுக்கப்பட்ட மாடுகளே 'மாட்டிறைச்சி' என்பதால் இது பால் பொருளாதாரத்தின் உபப் பொருள். உபப் பொருள்25% முதலீட்டில் நமக்குக் கிடைக்கும் லாபகரமான பொருள். இதனால் விவசாயிக்கு லாபமோ இல்லையோ, இது (இந்த ரீ-சைக்ளிங்க் வருமானம்) இல்லாமல் அவன் பால் தொழில் செய்யவே முடியாது என தனது இரண்டாங்கட்ட வாதத்தையும் வைத்து விட்டு தட்டில் இருந்ததை ஒரு கடி கடித்தார்.


'ஆட்டுக்கறி 350-400ரூபான்னு விற்கும் நேரத்துல, உபப் பொருளாக சந்தைக்கு வர்ரதனாலேதான் ஏழைகளுக்கு சௌரியமா ரூபாய் 80 - 100ன்னு மாட்டிறைச்சி மலிவா கிடக்குது. இப்ப அதுல மண்ணை அள்ளிப் போட முனைராங்க.'


அடி மாட்ட 'புனிதமாய்க்' கருதி மேய விட்டோம்னா பால் மாட்டுக்குத் தீனி பத்தாம (புல்வெளி இல்லாத நிலையில், குறைந்த அளவே வைக்கோல் தீவனம் உள்ள நிலையில்) பால் உற்பத்தி 20-30 சதவிகிதம் நசிவடைய சாத்தியம் இருக்கு" என மலையாள நண்பருக்கு ஓரிரு இணையங்கம் வாசித்துவிட்டு "உங்களுக்குத் தெரியுமா?" என சுவாரசியமாக் ஆரம்பித்தார் ஜார்கண்ட். "மும்பையில் ஐந்து பெரிய அபடாய்ர் (மாடு அடி நிலையம்) இருக்கு. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யறாங்க. அதுல முதல் மூன்றுக்கு சொந்தக்காரர் ஜைனர்கள் (Jains). விஷயம் எங்க நிக்குது பார்? விற்கலைன்னா பொழப்பு போயிரும் என்று சந்தைக்கு வரும் விவசாயிகிட்ட தத்துவம் பேசிட்டு, அங்க போய் அதுலேயே பில்லியன் பிஸினஸ் பண்ணுவதுதான் சாமர்த்தியம்."


'விவசாயி பசுவை கறவைக்கும், காளையை உழவுக்கும் வைத்திருந்தான். நாம கலப்பின பசுன்னு விளம்பரம் பண்ணி காளையையும் கலப்பினமாக்கிட்டோம். அது நடக்கவே குடை கேட்குது. வெயில்ல வந்தாலே வீஸிங்க் ஆகுது. தெண்டத்த வைத்து என்ன செய்யறது? காளையை கலப்பினமாக்கியது விவசாயியா? அவன விக்கக்கூடாதுன்னு சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கு?'


'எப்படியோ இந்த மாடுகள வச்சு உழலாம்னு போனா, தெருவுக்கு இரண்டு டிராக்டர் இறக்கி விட்டிருக்காங்க, வண்டி மாட்ட ஓரம் கட்டணும்னே ட்ரக்குகளை ஓட விட்டிருக்காங்க. இதுல அகிம்சை தத்துவம் வேற. எவ்வளவுதான் விவசாயிய இம்ச பண்றது?" இது என்னங்க நியாயம்?' என மனித உரிமைக் குரல் கொடுத்தார் ஜார்கண்ட்.


எனது தட்டு காலியாகி கை காய்ந்து கொண்டிருக்க, எழும்ப எத்தனித்த நான் அதுவரை அசைவத்தோடு ஐக்கியமாயிருந்த அம்மணி ஆரம்பித்தவுடன் அமர்ந்துவிட்டேன். "பீஃப் எங்களது (நாகலாந்து) இஷ்ட உணவு" என தொடங்கினார்.



'மாட்டிறைச்சி உணவு எங்களது பாரம்பரிய கலாச்சாரம். ஒரு கலாச்சாரத்தைக் கேள்விக்குறியாக்கும் அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அப்படிச் செய்வது எங்களை அவமானப்படுத்தும் செயல்' என உணர்வு மேலோங்கக் கூறியவர், சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, 'பசுவை பூஜிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிவதற்கு முந்தய காலத்திலிருந்தே பீஃப் எந்தளது கலாசார உணவாக இருந்துவந்துள்ளது. ஒரு சாராரின் பக்தியை அவமானப்படுத்துவது எங்களது நோக்கமாகவோ, உள்நோக்கமாகவோ இருந்ததில்லை எனும்போது, இதனை வாதப்பொருளாக்குவது எப்படி நியாயமாகும்?' தர்க்க ரீதியாக யோசிக்க வைத்தவர் அதனை வலுவாக்கும் விதமாக மேலும் ஒரு கேள்விய போட்டார், "ஏங்க, எங்க கலாச்சாரத்தில ஒன்றிய ஒரு உணவை தடை செய்யணும்னு பேசறாங்களே, நாங்களும் ஒரு சொல்லுக்கு சொல்லுறோம், எங்க கலாசாரத்துக்கு சற்றும் பொருந்தாத இட்டிலி தோசையை தடை செய்ன்னு, (டாக்டர்கூட சொல்ரார், தோசையும் தாளித்த சட்னியும் கார்சினோஜீனிக் என்று) நல்லதுக்காகவே இருந்தாலும் உங்களால அத விட முடியுமா? அது இல்லாத உணவுக் கலாச்சாரத்த உங்களால கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா? அப்படித்தான் மாட்டிறைச்சி எங்களுக்கும்" அப்படின்னு சொல்லிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. "இப்படி பல்வேறு விஷயங்களிலும் எங்கள அற்பமா எண்ணி, எங்க உணர்வுகள உதாசீனப்படுத்துவதாலதான், நாகலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்கள்ல நாங்க தனி நாடு கேட்டு போராடுறோம்கிறத நீங்க புரிஞ்சிக்கணும்."



ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி, இந்த அம்மா நம்ம இட்டிலி சட்டினியிலிருந்து எல்லைவரைக்கும் ஒட்டு மொத்தமா 'வேட்டு' வைக்குதே! நான் கிளம்பி விட்டேன் 'கை கழுவ'.


பொருளியல் பார்வை: மூலப் பொருளிலிருந்து அதிகப்பட்ச உற்பத்திப் பொருளை வெளியெடுப்பதே நல்ல உற்பத்தியாளருக்கு அழகு என்கிறது பொருளாதார தத்துவம். நிலக்கடலை விவசாயமே எண்ணெய் உற்பத்திக்காகத்தான் என்றாலும், அதன் காய்ந்த செடி கால்நடை தீவனமாகவும், சண்டு (shells) எரிபொருளாகவும், சக்கை (oil cake) புரத உணவாகவும் மாற்றப் படுவதில்லையா. அதனாலேதான் கடலை எண்ணெய் விலை ரூபாய் 100க்குள் நிற்கிறது. உபபொருள் உற்பத்தி சாத்தியம் இல்லையெனில் பால் கூட லிட்டர் 30ரூபாய்க்கு கிடைக்காது.


டிமாண்ட் சப்ளை உறவு பொருளியலில் ஒரு விசேஷமான சம்பந்தம். டிமாண்ட் இல்லை எனில் உற்பத்தி சாத்தியமே இல்லை. பால் நுகர்ச்சிதான் பால் உற்பத்திக்கான தலையாய உந்துதல் என்கிற பார்வையில், பால் நுகர்வோரே மாடுகள் 'அடிமாடா'க முதல் காரணம் (பால் உற்பத்தியில் உபப்பொருள் உற்பத்தி தவிர்க்கமுடியாத ஒன்று என்கிற நிலையில்). பாலை நான் குடித்துவிட்டு, அதனால் ஏற்படும் விழைவை நீ கட்டி அழு என விவசாயியை கூறுவது தேசிய பார்வையற்ற வாதம்.


கருணை: ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்: இரண்டுகோடி பசுமாடுகள் உள்ள நம் நாட்டில் மாட்டிறைச்சித் தொழிலை நிறுத்தி விட்டால், (பிறப்பதில் ஒன்றுக்குப்பாதி ஆண் மாடு, மீதியில் கால்வாசி மலடு மற்றும் கிழட்டு மாடு என்கிற நிலையில்) ஏறக்குறைய ஒண்ணேகால்-ஒண்ணரை கோடி வெற்று மாடுகளை என்ன செய்வது? கட்டி வைத்து தீனி போட முடியாத நிலையில், விவசாயி அவற்றை அவிழ்த்துவிடுவதைத் தவிர்த்து வேறு என்ன செய்ய முடியும்? அனாதையாக தெருத்தெருவாக அலைய விடுவது எந்த வகையில் கண்ணியமான செயலாக இருக்கும்? பசு வதை தடுப்பு வாதம் செய்வோரும், பால் நுகர்ச்சியாளரும் அதற்கு நாங்கள் பொருப்பு இல்லை என வாதம் செய்யப் போகிறார்களா?


பசுவின் மீது பாசம் எல்லோருக்கும் உண்டு. ஏழை விவசாயி அவன் மாட்டை பெயர் வைத்துத்தான் அழைக்கிறான். மாட்டுப்பொங்கலில் பார்த்திருபீர்கள், 'அவளை' மிளிரச்செய்து உச்சி முகர்வான். மழையானால் பசுவை வீட்டிற்குள் கட்டி, திண்ணையில் ஒதுங்குகிறான். அதற்கு வெட்கையானாலும், வேட்கையானாலும் அதனை தணிக்க அழைத்துக்கொண்டு பல மைல் தூரம் நடந்து செல்வான். பசுவை பாசத்துடன் வைத்துக்கொள் என அவனுக்கு சொல்வது பட்டதாரிக்கு பால பாடம் எடுத்த கதை.'



துவைதம் (Dilamma): பாசம் உண்டு. ஆனால் பால் தராத மாடு அவனுக்கு 'பேரிடி'. யதார்த்தத்திற்கு வருவோம். நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்தில், பென்ஷன் இல்லாத கையில் சொத்தே இல்லாத முதியவர்களை நம்குடும்பங்களில் எப்படிப் பார்க்கின்றனர்? பிள்ளைகளுக்குப் போக, வந்தவர்களுக்குப் போக, உழைப்பவர்க்குப் போக மிஞ்சியதே 'பெருசுக்கு' என்கிற அவலம் நம் வீடுகளில் இல்லையா? பிள்ளைக்கு முடியலைன்னா அன்றைக்கும், கட்டியவளுக்குன்னா அடுத்த நாளும் மருத்துவரிடம் போகும் ஏழை, தனக்குன்னா 'அதுவா சுகமாகட்டும்'னு நாலு நாள் இழுத்துப்பார்த்து, வீட்ல எல்லோரும் விரட்டின பிறகுதான் டாக்டரிடம் செல்கிறான். ஏழை பெற்றோர் முடியாம போனால், இத்தோடு 'முடிஞ்சிருமா' ('முடிஞ்சுடாதா)ன்னு எட்டிப்பார்க்கும் அவலம்தான் அங்கு இருக்கு. அன்பு இல்லை என்றில்லை, ஏழையின் பட்ஜட்ல பாசம் எப்பொழுதுமே ஒரு டெஃபிசிட் ஐடம் தான். ஏழ்மைக்கும் பாசத்திற்கும் நடக்கும் போராட்டத்தில், ஏழ்மையை இறக்கி வைக்க முடியாத நிலையில் பாசத்தின் எல்லையை சுருக்கி தன் தெம்புக்குள் போராடும் அவன் சம்யோசிதனாகவே திகழ்கிறான். கம்யூன் வாழ் நாளில் எங்களுக்குக் கிடைத்த பாடம்*; ஏழையாகிப்பாருங்கள் யதார்த்த வலி புரியும்..


நடைமுறை மாற்றுவழி: அதையும்மீறி பசு பாதுகாப்பு உணர்வு நம்மில் மேலோங்கினால், நாம் வெரும் நுகர்வோராக, பார்வையாளராக இருந்து பேசுவது போலித்தனமாகிவிடும். நாம் நுகரும் பாலுக்கான மாட்டை நாமே வளர்க்கணும், அதன் எதிர்காலத்திற்கு உகந்த காப்பீட்டுத்திட்டத்தை துவங்கி எட்டுவருடம் பால் தந்த மாட்டை மேலும் பத்துவருடம் பாதுகாத்து வரலாம். இயலாத பசுவை பேணுவதுன்னா என்னங்கிர ஞானம் நமக்கும் கிடைக்கும், கஸ்தூரிபா அம்மையாருக்குக் கிடைத்தமாதிரி.


அது சாத்தியமில்லை என்று தோணினால் பால் நுகர்ச்சியை விட்டுவிடணும். பால் நுகர்ச்சி 'மானிட' உணர்வுக்கு எதிரான செயல். பிள்ளையின் முதல் எட்டு பத்து மாதங்களே தாய்ப்பால் உணவு என்கிற இயற்கை நியதியை மீறி ஆயுளுக்கும் அவள் முலைப்பாலுக்கு ஏங்கி, 'நாசுக்கா'க செய்த ஏற்பாடே மாட்டுப்பால். சுதந்திரமான ஜீவன்களை டொமஸ்டிகேட் செய்வது எந்த வகையில் நியாயமான செயல்? வாழும் ஜீவராசிகளில் யாரும் செய்யத்துணியாத, மிருகத்தனத்தைவிட கேவலமான செயல் ஆயுளுக்கும் பால் அருந்துவது என வாதம் செய்யும் மேனகா காந்தியின் அகிம்சை எவ்வளவோ போற்றதக்கது. அதுவே யதார்த்ததிற்கு உகந்த 'பசு' பாதுகாப்பு வாதம்.



ஒத்திசைவு(complementarity): பல்வேறு மொழி, இனம், மதம், நடை, உடை, பாவனை என வேறுபாடுகளை சரளமாகத் தனதகம் கொண்ட பாரதத்தாய், தனது பெருங்குடும்பத்திற்கு அழகு சேர்க்கும் அணி அலங்காரமாகவே அவற்றைப் பார்க்கிறாள்.


வேஷ்டி கட்டினால் அழகு, குர்தா பைஜாமாவும் அழகு; அங்கவஸ்திரமும் 'டை'யும் இங்கே ஒரு சேர வேலை செய்யும்; தேனினும் இனிய தமிழ் மொழி தாண்டவமாடும் அதற்கு கன்னடமும் தெலுங்கும் பின்னிசைக்கும். சாமிக்கு நேர்ந்து சடாமுடி வளர்ப்பது மனநிறைவென்றால், அதே சாமிக்கு மொட்டை அடிப்பது முழுநிறைவு; சாமி சிலையை பின்னொருவர் காயப்படுத்தினால் மதக்கலவரம், அதே சாமியை அலங்கரித்து மேளதாளத்துடன் நீர் நிலையில் ஊர்கூடி போட்டுடைத்தால் இறைவிழா. முரணாகத் தெரியவில்லை?


தெரியவில்லையே! இவையெல்லாம் பல்வேறுபட்ட வழிமுறைகள் என உணரும் மனபக்குவம் உள்ளதால் நமக்கு முரணாகத்தெரியவில்லை.


இப்படித்தான் வாழ்வின் ஒவொவொரு அம்சமும் எதிரும் புதிருமானதாக உள்ளது. விவசாயி இராப்பகல் கண்விழித்து ஆடு மாடு மேயாமல் பயிரை பாதுகாப்பான், கடன் வாங்கியாவது உரமிட்டு வளர்ப்பான் பின்னர் அவனே நாள் குறித்து ஆள் கூட்டி மொத்த பயிரையும் அறுதெடுப்பான். குஞ்சு பொரிக்க பழுதற்ற முட்டைகளை அடைவைப்போம்; உடையாத முட்டை இருபத்தியோராம் நாள் உடைந்தால்தான் குஞ்சு உடையாவிட்டால் அது கூமுட்டை. இருபது நாள் உடைந்துவிடக்கூடாதே என ஏங்குவதும், இருபத்தியோராம் நாள் உடையணும் உடையணும் என வேண்டுவதும் நமக்கு முரண்பாடாகத் தெரிவதில்லை. சூரியன் இன்றி வாழ்வில்லை; எட்டு மணி நேர வேலைக்குப்பிறகு எப்பண்டா அவன் அடைவான் என ஏங்குவோம்; மழைவேண்டி வர்ணஜெபம், கழுதை கல்யாணம் நடத்துவோம், கொட்டுமழை நிற்கட்டும் சாமி என வேண்டுதல்ஜெபமும் நடத்துவோம். வேண்டப்பட்டவரை பார்க்கத் துடிப்போம், அவரே கண்ணை மூடிட்டால் 'சவத்த எப்ப தூக்கப் போரீங்க' ம்போம்.


எதிரும் புதிரும் என்பது ஒன்றுக்கொன்று விரோதமானது என நாம் தப்புக்கணக்கு போடுகிறோம். உடலியலால் ஆணும் பெண்ணும் எதிரும் புதிருமே. இந்த இனம் நீடிக்க அவர்கள் எதிரும் புதிருமாயிருப்பதே அடிப்படை. அவை முரண் அல்ல, ஒன்றுக்கொன்று ஒத்தாசையானவை (complementary), நீ விட்டதை நான் முடிப்பேன் என ஓடும் ரிலே ரேஸ் போல.


இரவும் பகலும் போல; வளர்ப்பதும் போற்றுவதும் பின்னர் வீழ்த்துவதும் விவசாயத்திலிருந்து விநாயகர் சதுர்த்தி வரை ஒன்றுக்கொன்று இணக்கம் (compatible) கொண்டதே என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. பொருளாதாரம் சார்ந்த உணவியல் ஒன்றும் விதிவிலக்கல்ல.


ஒன்றுக்கொன்று இடம்கொடுத்து வாழ்ந்தால் பசு வதையும் இல்லை, அதனால் சமூக வதையும் இல்லை