Sunday, August 31, 2014

விநாயக சதுர்த்தியும் ,

நானும் ........!!!


நான் குடியிருக்கும் அடுக்ககத்தில் 70  குடும்பங்கள்  உள்ளன ! கூட்டாஞ்சோறு  பொங்குவது மாதிரி தலைக்கு 500/-​ரூ வசூல் செய்து இந்த ஆண்டு கொண்டாடுகிறார்கள் !

காலையிலும் ,மாலையிலு ம்வழி பாடு இருக்கும் ! து ணைவியார் செல்வார் ! பொறுப்பாளர் "சார் வரவில்லையா ? " என்று கேட்டுள்ளார் !

"இங்கு எல்லாருமே இந்துக்கள் ! ஒன்றோ இரண்டோ கிறிஸ்துவர்களும்,இசுலாமியர்களும் இருந்தால் என்ன செய்வீர்கள் "

"அதிகமா இருக்கும் இந்துக்காளொடு சேர வேண்டியது தான் ! சார் என்ன நாத்திகரா ? "

அம்மையார் இல்லை என்றும் சொல்லாமல் இருக்கு என்றும் சொல்லாமல் மையமாக தலை  அசைத்துவிட்டு வந்துள்ளார் !

"இந்தியாவில் நாத்திகர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் ? " வீட்டிற்கு வந்ததும் என்னிடம் கேட்டார் !

1954-57 ம் ஆண்டுகளில் மேட்டூரில் பணியாற்றினேன் ! 1951ம் ஆண்டு  சேலம்  மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 50000  பேர் தங்களை நாத்திகர்கள் என்று பதிவு செய்திருந்தார்கள் !

61  ம் ஆண்டில் இதுமிகவும் குறந்து விட்டது ! சமூக செய்ல்பாட்டாளர் ஒருவரிடம் விசாரித்த் பொது இளம் தலை முறையினரை கவர ஏற்பாடுகள் இல்லை ! இருப்பவர்களையும் தத்துவார்த்த போதன செய்வது குறைந்து விட்டது ! மூத்தவ்ர்களை மரணம் ஆட்கொண்டுவிட்டது ! என்று விளக்கினார் ! 

இன்றைய கணக்கில் இந்தியாவில் சுத்த சுயம் பிரகாசமான நாத்திகர்கள் 1,00,000 பேர் இருக்கலாம் என்று கருது கிறேன் ! கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் தோகையில்  இது கணக்கிலேயே வராது ! 

அப்படியானால் மிச்சமுள்ளவர்கள் ஆத்திகர்களா ?  பளிச்சென்று பதில்  கூற  முடியாத கேள்வி இது !  

இறை நம்பிக்கை நிரந்தரமாக மனிதனை வசப்படுத்துவது இல்லை ! அவன் அவ்வப்போது பல கேள்விகளுக்கு தன்னை உட்படுத்தி  கொள்கிறான் !

"ஆண்டவன் ஆகாசமத்தில் தூங்கு கிறானே !
மாந்தரெல்லாம் மாநிலம் மேல்  ஏங்குகின்றாரெ !

நம் அனைவருக்கும் அவன் ஒரு தந்தை என்றாலே !
சிலர் கொடுப்பவர் சிலர் எடுப்பவர் என்று இருப்பதெதாலே !

கூன்,குருடு , நொண்டி ,செவிடு,ஊமை பிறப்பதெதாலே !
நிறை குறைகளுக்கோ இதுவரைக்கும்பதிலும் தெரியலே !!

என்று தமிழ்க் கவிஞன் கேட்டான் !

இதற்கும் பதில் சொல்லி விட்டர்கள் !"மறு பிறவி " என்று கூறிவிட்டார்கள் ! அந்த சின்னஞ்சிறு சிசு தன முற்பிறவியில் செய்த தவறின் பலனை இந்த பிறவியில் அனுபவிக்கிறது என்று விளக்கினார்கள் ! விளக்கினவனுக்கு பாதிப்பில்லை  ! பெத்தவனுக்கு ... !! இறைவன் ஏன் இந்த குழந்தையை இப்படிப் படைக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி விடை கிடைக்காமல்  திக்குமுக்காடுகிறான் ! அவன் நம்பிக்கை ஆட்டம் காணுகிறது !!   இறைவன் இல்லையோ என்று சந்தேகம் கொள்கிறான் !

உன் அனுபவத்தில் இறைவன் மீதான நம்பிக்கை சிதறும் போது "இறைவன் இல்லை " என்றுஓங்கி சொல்லவேண்டியது தானே ! சொல்ல பயப்படுகிறான் ! "ஒருவேளை  இருந்து தொலைத்துவிட்டால் "  !கோபபட்டு தண்டித்து விட்டால் !இவர்களை agnostics என்கிறார்கள் ! இவர்கள் தான் 99% சதம் உள்ளனர் ! இவர்கள் தெளிவு பெறாமல் குழப்பி வைப்பது தான் இந்த பூஜை, விழாக்கள் எல்லாம் ! 

சுத்த சுயம் பிரகாசமான் ஆத்திகர்கள் மிகக்குறைவு ! " என்னைப் பொறுத்தவரைகடவுள் இருக்கறார் ! நான் நம்புகிறேன் ! " என்று இருப்பவர்  ஆத்திகரே !

"என் வாழ்க்கையை நடத்த கடவுள் தேவை இல்லை " என்பவர் நாத்திகரே !கடவுளே இல்லை  எனும் நாத்திகனுக்கு கடவுளோடு சண்டைபோட  வெண்டிய அவசியமில்லை !

 "கடவுள் உண்டு " என்பவன் அவன் நம்பிக்கையை விடப் போவதில்லை ! அவனுக்கு எவரோடும் பகைமை இல்லை !

இந்த இரண்டும் கெட்டான்கள் தான் குழப்பி குட்டிசுவராக்குகின்றன !!!!!!!




Wednesday, August 27, 2014

வாஜ்பாய் அவர்களும் , 

யு.ஆர்.அனந்தமூர்த்தியும் ...!!


அனந்த முர்த்தி அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ! சிறந்த சோசலிஸ்ட் ! ராம் மனோகர் லோகியாவின் சீடர் ! கர்நாடகாவில் லோகியா ஆதரவாளர்கள் அதிகம் ! குறிப்பாக அவருடைய சாதி மத எதிர்ப்பு பிரச்சாரத்தா ல் கவரப்பட்ட இளைஞர்கள் உண்டு !

அவசர நிலைமையை எதிர்த்தவர்களில் யு.ஆர்.அ முக்கியமானவர் !

அவருடைய படைப்புகள் இந்தி உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் வந்துள்ளன ! இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட வாஜ்பாய் அவர்கள் அனந்த மூர்த்தியின்படைப்புகளை ஆழமாக படித்தவர்! யு.ஆர் .அ  அவர்களும் வாஜ்பாயின் கவிதைகளை விரும்பிபடிப்பவர்! இருவரும்  பரஸ்பர அபிமானிகள் !

பிரதமரானதும்  வாஜ்பாய் பங்களா தேஷ் சென்றார் ! அப்பொது அவரோடு பங்களா தேஷ்  சென்றவர் அனந்தமூர்த்தி !

பா.ஜ.கட்சி உத்தம சீலர்களின் கட்சி என்று நான் கூறமாட்டேன் ! காந்தி அடி களைக் கொன்றவர்களின் வாரிசுகள் தான் ! காந்தி மரணத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடியவர்கள் தான் ! 

அனந்த மூர்த்தி மரணத்தையும் பட்டாசு வெடித்து கொண்டாடி யுள்ளார்கள் !

கிறுக்குப்பிடிச்ச அணிகள் இருக்கட்டும் ! ஒரு தலைவனாவது "ஙப்பங்களா ! இப்படி செய்யாதீங்கனு !" சொன்ன மாதிரி தெரியலையே!

  




Monday, August 25, 2014

த.மு. எ .க .சங்க நண்பர்களுக்கு 

ஒரு வேண்டுகோள் ........!!!


கம்பம் நகரில் ஒருவாரம் நடத்திய உலக திரைபட விழா மிகவெற்றிகரமாக நடத் தியதை தெரிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை !

அரசாங்கம் செய்ய வேண்டியதை சிறு  குழுவாக சாதித் துள்ளீர்கள்  !

கர்நாடகாவில் "கொப்பல் "என்ற கிராமாம் ! அந்த கிராமத்து மக்களுக்கு "அகிரா குரசோவா"வின் படைப்புகள் தெரிந்த அளவுக்கு ராஜ்குமாரை தெரியாது ! "ரோஷமான் கேட்  "படத்தை அக்கு வேரு அலகு  வேறாக பேசி விவாதிப்பார்கள் ! கோதார்டும், ஐசண்டைனும் அவர்களுக்கு நல்ல பரிச்சயம் ! கர்நாடக திரைப்பட கழகத்தின் சாதனைகளில் அதுவும் ஒன்று !

அதோடு அவர்களுக்கு காசரவள்ளீயை , கிரீஸ் கர்நாடை ,கராந்தை,ஜி.வி அய்யரை ,கௌ தம் கோஷ,சத்தியஜித் ரே அவர்களை தெரியும் !

உலகத்திரைப்பட விழாவோடு இந்தியதிரைப்பட விழாவையும் நடத்துங்களேன் !

கௌதம் கோஷின் 

பார் (இந்தி )  

மா பூமி (தெலுங்கு)

ஜெயகாந்தனின் 

உன்னைப் போல் ஒருவன் (தமிழ் )

கிரீஸ் கர்னாடின் 

சலுவி (கன்னடம் )

சம்ஸ்காரா (கன்னடம் )

ஸ்யாம் பெனிகலின் 

நிஷாந்த் (உருது)


ஆகிய படங்களை என் ஆலோசனையாக வைக்கிறேன் ! 

வரும் ஆண்டுகளில் நீங்கள்  தேர்ந்தெடுக்கப் போகும் நகரத்தில் இதனைச் செய்ய முற்சி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் !  

வாழ்த்துக்கள்  தோழர்களே  !!!



































உன்னைப் போல் ஒருவன் (தமிழ்)

Saturday, August 23, 2014

யு .ஆர். அனந்த  முர்த்தி அவர்கள்

 இலக்கியாவாதி  மட்டுமல்ல .......!!!

   

கன்னட இலக்கியத்தின் நவீன  போக்கினை "நவ்வா " இயக்கம் என்று அழைக்கிறார்கள் ! உடுப்பி ராஜகோபாலாச்சார்ய அன்ந்தமூர்த்தி அந்த இயக்கத்தின் முகமும் முகவரியும் ஆவார் !

 அவர் எழுதிய முதல்நாவலான "சம்ஸ்காரா " கன்னட இலக்கிய உலகை புரட்டிப் போட்டது ! அதன் திரைப்பட வடிவம் கன்னட திரைப்பட உலகை சர்வதேச அளவிற்கு  கொண்டு சென்றது ! 

 அடிப்படையில் பழமை வாதத்தையும் ,பத்தாம் பசலித்தனத்தையும் வெறுப்பவர் யு.ஆர் அ ! 2004ம்  பா .ஜ .க. எதிர்த்து போட்டியிட்டவர் அவர் ! இந்துக்கள் மதவெறி பிடித்தவர்கள் ஆனால்   இந்தியாவை காப்பாற்ற  முடியாது என்று  நம்புபவர் அவர் !

அவசர நிலைக் காலத்தில் கடுமையாக எதிர்த்தவர் ! இந்திராவை   ஜனதா கட்சி எதிர்த்தபோது ஆதரித்தார் !  வசதி உள்ளவரகளின் கூட்டு தான் ஜனதா கட்சி என்று உணர்ந்து மனம் சஞசலப்பட்டார் !

பின்னாளில் தேவ கவுடா பதவிக்காக பா ஜ.கவுடன் கூடிய போது அவரைக் கடுமையாக  விமரிசித்தார் !     

ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன்  நட்பு வைத்திருந்தார் !   அவசரநிலையின்   போது பெர்ணாண்டஸ் தலை மறவாயிருந்தார் !  தயாரிப்பாளர் சீதாராம ரெட்டியின்  உதவியோடு அவரைச் சந்திதார் !

"காரில் செல்லும் போது என் கண்களை கட்டிகொண்டேன் !  போலிஸ் என்னைச் சித்திரவதை  செய்தால்  மறைவிடத்தை சொல்லாமல் இருக்க  ஏற்பாடு! ஒரு சர்ச்- ஒரு அறையிலோருகட்டில் ! அதில்மாறுவேடத்தில் ஜார்ஜ் இருந்தார் ! வெகு நேரம் இலக்கியம் அரசியல் என்று  பேசினோம் ! அவசர நிலை மக்களை நிலைகுலைத்துள்ளது! அரண்டு போய் உள்ளனர் ! அவர்கள் மீள  வேண்டும் ! நடிகை சினேகலதா ரெட்டி விதான் சொவ்தாவில் யாரும்பயன்படுத்தாத சிதிலமான கழிப்பறையில் இரவு 12 மணிக்கு வெடிக்கும்  குண்டினை வைக்கப்  போகிறார் ! இதன் மூலம் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாது ! ஆனால் இந்த சம்பவம் மக்கள்   பயத்தை போக்கும் ! நீங்கள் உதவவேண்டும்   என்று  என்னைக்கேட்டுக்   கொண்டார் ! "             

தன்னுடைய நினைவலையில் யு ஆர் .அ எழுதியுள்ளார் !

அவர் எழுதி வெளியான "சம்ஸ்காரா "படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சினேகலதா ரெட்டி ! சிதாராமி ரெட்டியின் !மனைவியுமாவார்  ! ஆனால் போலீசவரைப்பிடித்துவிட்டது ! பெர்ணண்டஸ் பற்றிய  தகவலைகூற சித்திரவதை செய்தது ! வதை தாங்காமல் சினேகலதா சிறையிலேயே இறந்தார் ! பெர்னாண்டஸ் பற்றி எதையும் கூறவில்லை !இது அவசர நிலைக்கலத்தில் நடந்தது !

அதே பெர்ணானடஸ் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில்அமைசரான பொது அவர கடுமையாக துரோகி என்று விமரிசித்து அறிக்கை விட்டார்!

"பதவியும்,பவிசும் அந்த புரட்சியாளனை சிதைத்துவிட்டது ! இன்று பேசமுடியாமல், கை கால் அசைக்க முடியாமல் இருக்கிறார் "என்று குறிப்பிட்டார் ! 

சினேகலதா ரெட்டி நடிகை மட்டுமல்ல !

அனந்த மூர்த்தி எழுத்தாளர் மட்டுமல்ல ! 

சமூக செயல்பாட்டாளர்கள் !

எம் அஞ்சலிகள் !!

        


        

 

          

 

Wednesday, August 20, 2014

(இது இரு மீள் பதிவு )

    


 
HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Wednesday, March 14, 2012

தேச பக்தர் வ.உ.சி.யின் பேரனும் "தீக்கதிர்" பத்திரிகையும்.......
தேச பக்தர் வ.உ.சி. யின் பேரனும் "தீக்கதிர்" பத்திரிகையும்........... 

நான் முதன் முதலாக "தீக்கதிர்" அலுவலகத்திற்குள் நூழையும் போது மதுரைமீனாட்சி அம்மன் கோவில் வடபகுதியிலிருந்த 1ம் நீர் சந்தில் இருந்தது . அங்குதான் தீக்கதிரில் துணையாசிரியர்களாக பணியாற்றிய மூன்று பேரைச்சந்தித்தேன் .த.மு.எ.சவை உருவாக்கிய வர்களில் ஒருவரான தோழர் வரதன் அதில் ஒருவர்.வரதன் அல்லிநகரத்தை சேர்ந்தவர்.விவசாயி.நாட்டுப்புரப்பாடல்கள் பற்றி ஆராய்ந்தவர்.கவிஞர். ஓவியர். 

கட்சி நிகழ்சிகள்பற்றி அல்லி நகரத்தில் தட்டிபோர்டுவைப்பது.சுவர் விளம்பரங்கள் செய்வது அவருடைய முக்கிய பணியாக இருந்தது. அவரோடு சுவர்களில் எழுதவந்தவர் தான் பால் பாண்டி. பால் பாண்டிதான் பின்னாளில் பாரதிராஜாவாக புகழ்பெற்றார்.

இரண்டாமவர் திண்டிவனத்தச்சார்ந்த வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்.இன்று கோயம்புத்தூரில் பிரபல கிரிமினல் வக்கீலாகத் திகழும் ஞான பாரதி.

மூன்றாமவர் "ஆ.ச."என்று நாங்கள் அன்போடு அழைத்துவந்த ஆவன்னா.சண்முக சுந்தரம் .சுதந்திரம் என்பிறப்புரிமை என்று கூறியதற்காக ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டு தீவாந்திர சிட்சை பெற்று கோவை சிறையில் செக்கிழுத்த தேசபக்தர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பேரன்.

என்னிடம் அமெரிக்காவிலிருந்து வரும்" டைம்" பத்திரிகையிலிருந்து ஒரு சிறு பத்தியைக்கொடுத்து தமிழில் எழுதச்சொன்னார்கள். எழுதினேன்."அட! நல்ல எழுதரீங்களே" என்றார். ஆ.ச .என்னுடைய எழுத்து நானே திரும்பிப டிக்கமுடியாத வடிவழகை கொண்டது. "இவ்வளவு பொடியா எழுதாதீங்க. அச்சுகோக்கிரவங்க படிகணும்லா. எழுத்துக்களை சேத்து சேத்து எழுதவேண்டாம்.தனித்தனியா கலக்கம் கலக்கமா எழுதுங்க "என்றார்.ஆ.ச.

இந்த மூன்று ஆசிரியர்களுக்கும் மாதம் 30 ரூ சம்பளம்.காபிக்காக தினம் 4அணா படிக்காசு. தினம் மாலை 4மணிக்கு அதை வாங்கிகொண்டு அருகில் உள்ள கையெந்துபவனில் வடையும் காப்பியும் சாப்பிடலாம்.வரதன் காப்பி சாப்பிட மாட்டார். அதற்கு இரண்டு இட்லி சாப்பிடுவார்.விவசாயி அல்லவா!


கிட்டத்தட்ட இரண்டுமாதங்களுக்குப்பிறகுதான் ஆ.சா.பற்றி தெரிந்து கொண்டேன். ஆகா! எப்பேற்பட்ட குடும்பம்.எவ்வளவு அண்மை!இப்போது நினத்தாலும் புல்லரிக்கிறது.! 

எந்த உதவியும் இல்லாமல் குடும்பம்.படித்த ஆ.சவிற்கு காமராஜர் உதவினார். "பிளாக் டெவலப்மேண்ட் ஆபீசர் பதவியளித்தார்.புதுக்கோட்டை அருகில் வேலை..வி.பி சிந்தனும் காமராஜரும் வெல்லுர் சிறையில் ஒன்றாயிருந்தவர்கள்.இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்களிருவருக்கும் ஆங்கிலம் கற்க ஆசை .சிறையில் பி.ஆர் மூலம் ஆங்கிலம் கற்றார்கள்.ஆ.ச.வுக்கு விபிசி மூலம் இடதுசாரிகளொடு பழக்கம் ஏற்பட்டது. "ஒரு கட்டத்தில் அரசுபணியில் இருக்கமுடியாது என்ற நில எற்பட்டது..முழுநேர ஊழியராக முடிவு செய்தேன்.வி.பி.சி தான் தீக்கதிரில் போய் வேலை செய் என்று அனுப்பிவைத்தார்".என்றார் ஆ.ச.
ஆ.சவிற்கு ஒருமகளூம் மகனும் உண்டூ .மனைவி அரசுமருத்துவ மனையில் பணியாற்றினார். அவருடைய மகளுக்கு சிறு வயதிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 78ம் ஆண்டு வாக்கில் சென்னை சென்றுவிட்டார். சட்டம்படித்தவராதலால் தோழர் செந்தில்நதனோடு ஒரே அறையில் தொழில் செய்தார். 2004 ம் ஆண்டு மறைந்தார்.
    

Tuesday, August 19, 2014

"நீயா ? நானா ? " வும்

டாக்டர்களும் ...........!  



சென்ற ஞாயிறு  (17-8-14 )  அன்று  விஜய் தொலைக்காட்சியின் "நீயா ? நானா ? " நிகழ்ச்சியில் மரூத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி  விவாதம் நடந்தது ! ஒருபக்கம் மருத்துவர்களும்மறுபக்கம் பொதுமக்களும் இருந்தனர் ! பொது மக்கள் பக்கத்தில் ஒரு சில  டாக்டர்களும் பங்கு பெற்றனர் !

டாக்டர்கள் test என்றும் ,LAB என்றும் அநியாயத்திற்கு காசு புடுங்குகிறார்கள் ! தேவையற்ற டெஸ்ட் களை  எடுக்க சொல்கிறார்கள் ! அவர்களுக்கும் இந்த LAB களுக்கும் தொடர்பு இருக்கிறது ! என்று குற்றச்சாட்டு எழுந்தது !

டாக்டர்கள் இதனை எதிர்த்தனர் ! தேவையான டெஸ்ட் களை தான் எடுக்கிறோம் ! என்றனர் !

எதிர் தரப்பில் இருந்த ஒரு டாக்டர் பெரிய மருத்துவமனைகளில் டாக்டர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் ! அவர்கள் முலம் லேப் களுக்கு மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு நோயாளிகள் அனுப்பப் படவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்க படுவதாக கூறினார் !

டாக்டர் கோபிநாத் என்பவர்  Aiims நிறுவனத்தின் அறிக்கையை சுட்டி காட்டி தேவையற்ற ,கூடுதலான டேஸ்ட்களால் பயனில்லை என்று நிறுவினார் !

நடுவர்களாக புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமார் ,டாக்டர் புகழேந்தி ஆகியொர் வந்திருந்தனர் !

டாக்டர் ராஜ்குமார் பல குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டார் ! உங்களுடைய சொந்த மாற்றல், பதவி உயர்வு என்று ஒன்றுபட்டு போராடும் டாக்டர்கள் மக்களுக்காக ஏன் குரல்கொடுப்பதில்லை  என்று கோபிநாத் "நீயா? நானா?" சார்பில் கேட்டுக் கொண்டார் !

விஷயம் இதோடு முடிந்தது என்று தான் எண்ணியிருந்தோம் !

திங்கள் அன்று முக நூலில் விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக குரல்கள் வெளி வந்தன ! இந்திய மருத்துவர் (IMA )சங்கத்தின் சார்பில் கண்டன அறிக்கையும்   ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிப்புகள் வந்துள்ளன !

மக்களின் ஆரோக்கியத்திற்கு பொறுப்பானவர்கள் டாக்டர்கள் ! Doctors health care ! இது இப்போது நிவாகத்தின் பொறுப்பகிவிட்டது !Management  health care ஆகிவிட்டது என்று டாக்டர் கோபிநாத் கூறினார் !

"Education and Medicare are the noblest profession " என்பார்கள் !

மக்களை நேசிக்கும் டாக்டர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் !

அவர்கள் தலையிட்டு நிலைமையை சீர்செய்ய வேண்டும் !





Thursday, August 14, 2014

தமிழ் கற்பது எளிமையானது ...!!!


நான் பலமுறை டெல்லி சென்றுள்ளேன் ! சில முறை டெல்லி தமிழ்ச் சங்கம் சென்றுள்ளேன் ! அதில் மிக விரைவில் தேர்தல்  நடக்க விருக்கிறது ! அது பற்றி எழுதப்போவதில்லை !

ஒரு முறை அவர்கள் அலுவலகம் சென்ற போது ஒரு சிறிய அறையில் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் !  பீஹார்,உத்திர பிரதேசம்,ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த மாணவ மாணவிகள் ! சுமார் பத்தி பேர் இருக்கலாம் !

எல்லாருமே ஐ.எ.எஸ் பரீட்சை எழுத்து பவர்கள் ! பணியில் சேர விருப்பமாக தமிழ் நாட்டை தேர்ந்தெடுத்துள்ளார்கள் ! வெற்றி பெற்றால் தமிழகத்தில் பணியில் சேர விரும்புபவர்கள் ! முன்கூட்டியே தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள் !

இதே போல் கல்கத்தாவில், மும்பையில் சில தமிழ் அமைப்புகள் நடத்துவதாக தெரிந்து கொண்டேன் !

சமீபத்தில் நாகபுரியில் ஒரு நண்பர் அவருக்குத் தெரிந்த பையனுக்கு தமிழின் ஆரம்ப பாடங்களை சொல்லித்தர முடியுமா ? என்று கேட்டிருந்தார் ! அவருக்கு ரயில்வே தொழிலாளி ஒருவரை அறிமுகப்படுத்திவிட்டேன் !

வடநாட்டுக் காரர்களுக்கு தமிழ் மொழி பற்றி  மிக வியப்பும் ஆச்சரியமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் ! அவர்களுடைய வரி வடிவம் "சதுர்வர்க்கம் " !  க,க்க ,gக ,gg க என்று நான்கு எழுத்துக்கள்  உண்டு ! அதனால் திணறுவார்கள் ! "அத்தான் "என்பதையும் "வந்தான்" என்பதையும் உச்சரிக்க தயங்குவார்கள் ! எந்த இடத்தில எந்த எழுத்தினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குழம்பி போவார்கள் ! 

ரயில்வே தொழிலாளி  அனுபவம் மிக்கவர் ! அந்தப்பையனுக்கு வரி வடிவம் சொல்லிக் கொடுக்கவில்லை ! முதலில் பேச கற்று கொடுத்தார் ! மழலையாக ஆரம்பித்து பேச ஆரம்பித்தவன் தயங்கித் தயங்கி சரளமாக கொஞ்சம் ஆங்கில வார்த்தைகளை கலந்து பேச ஆரம்பித்தான் ! 

ஒரு கட்டத்தில் அவனுக்கு ஒரு சிலேட்டை கொடுத்து எழுத சொன்னார் ! வடமொழியில் க,ச,ட ,த.ப என்ற உச்சரிப்புக்கு நான்கு எழுத்துவேண்டும்! நான்கு உச்சரிப்புக்கு மொத்தம் இருபது எழுத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டும் ! தமிழில் ஐந்தே எழுத்து தான் ! "அத்தான்" என்றாலும் அதே தான் ! "வந்தான் " என்றாலும் அதே தான் ! பேச்சுப் பழக்கத்தில் உச்சரிப்பு மாறும் ! பழகப்பழக ஒரே எழுத்தாக இருந்தாலும் பழகிவிட்டால் சரியாகிவிடும் !

அந்தப் பையன் மகிழ்ச்சியில் " it is easy to learn tamil " என்று கூவினான் !

அதை தமிழில் எழுதி காட்டு என்றேன் !

எழுதினான் ! 

"தமிழ் கற்பது எளிமையானது " 

  

!


Wednesday, August 13, 2014

(இது ஒரு மீள்பதிவு )

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Friday, December 13, 2013


நாத்திகம், பகுத்தறிவு , பார்ப்பன எதிர்ப்பு .....!


சர்வதேச அளவில் நடந்த செமினார் ஒன்றுக்கு அழைக்கப்பட்டென் ! Interfaith seminaar ! எல்லா மதத்தவர்களும் வந்திருந்தர்கள்.என்முறை வந்த போது " I am not a believer ! But I beleive those who believe in God ! Because the are my fellow human beings !  என்று ஆரம்பித்தேன் ! வெளி நாடுகளிலும் நாத்திகர்கள் உள்ளார்கள் ! சர்வதெச அளவில் Rationalist assn கள் உள்ளனர் ! கடவுள் இல்லை என்பவன் நாத்திகன்! அவனுக்கும் இல்லாத கடவுளுக்கும் பகை இருக்க வாய்ப்பில்லை ! தமிழகத்தில் தோன்றிய கடவுள் மறுப்பு வாதம் பார்ப்பன எதிர்ப்பாக சுருங்கியது தான் சோகம் ! கடவுளில்லை என்பதை மறுக்க முயற்சிகள் எடுப்பது சிரமம்! பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பில் கடவுள் இல்லை என்பதையும் அரைப்பாடமாக வாவது  வைத்திருக்க நாம் முயற்சிக்கவில்லை! இன்று அமெரிக்காவில் அந்த முயற்சி நடைபெற்று வருகிறது ! சோவியத்தில் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்யமுடியும் ! புரட்சிக்கு முன்பு அது முடியாது ! நம் கல்லூரிகளில் பல்கலைக்கழக்ங்களில் தத்துவம் படிக்கும் மானவர்களுக்கு கூட நாத்திகம் பற்றி அறிவியல் பூர்வமாக கற்றுத்தர வழியில்லை ! காலையில் வானோலியில் ஐயப்பமார் பாட்டு, பஜனை, எல்லம்  உண்டு  !கடவுள் மறுப்பு பற்றி கிடையாது ! ஊடகங்கள், பத்திரிகைகள், எல்லாம் கடவுள் உண்டு என்று பிரச்சாரம் செய்ய முடியும் ! நாத்திகர்கள் பலவீனமானவர்களாக்கப்பட்டு விட்டர்கள் !  வெறும் பர்ப்பன எதிர்ப்பு என்பது பகுத்தறிவு வாதம் அல்ல ! புத்தியோடு பிழையுங்கள் தோழர்களே! 


Saturday, August 09, 2014

நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களும் 

"மீமாம்ச "  தத்துவமும்........!!!


"கடவுள் இல்லை ! வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் எவருமே இருந்ததில்ல ! வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளை நியாயப்படுத்த கடவுள் பெயர்களை  குறிப்பிடுகிறார்கள் "

"கடவுள் இல்லை ! தேவையும் இல்லை ! மனிதன் வாழ சில கட்டுப்பாடுகள் ,விதிகள்வேண்டும் ! அதனை தர்மம் என்று அழைத்துக் கொள்ளலாம் ! அந்தவிதிப்படி நடக்கலாம் "

"மீமாம்ச " தத்துவத்தின் அடிப்படை கிட்டத்தட்ட இது தான் !

நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவ்ர்கள் "மிமாம்ச தத்துவமும் தர்மத்தின்விதிகளும் " என்றா நூலினை எழுதியுள்ளார் ! அற்புத மான அந்து நூலுக்காக அவருக்கு "கவுரவ டாக்டர் "பட்டம் அளித்துள்ளது லால் பகதூர் சாஸ்திரி பல்கலை கழகம்  !  Amity பல்கலைகழகம் சட்டத்துறைக்காக  அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது !

நிதிபதி ஒருவர்" ஓண்ணங்கிளசிலேருந்து வேதம் சொல்லிக் கொடுக்கணும் ! அரை க்ளாசிலேருந்து பகவத் கீதை சொல்லிக் கொடுக்கணும் நு சொன்னாரு " !  எதயுமே வெளிப்படையாக சொல்லும் கட்ஜு நீதிபதியின் இந்த கருத்தை எதிர்த்து அறிக்கை விட்டார் !

பொதுவாக இவருடைய கருத்துக்கு அறிவு ஜிவிகளிடையே மிகுந்த ஆதரவு இருக்கும் ! அதன் காரணமாகவே  இந்துத்வா காரர்களுக்கு இவரை பிடிக்காது !

சம்ஸ்கிருதம் பற்றி இவர் சமிபத்தில்  சில கருத்துக்களை சொன்னார் ! நம்ம ஊரு  தேசிய குஞ்சுகளுக்கு  கோபம் வந்திட்டு !

வரலாறு,மொழியியல், சரித்திர பொருள் முதல் வாதம் ஆகியவை பற்றி அடிப்படை  அறிவில்லாதவர்கள் முகநூலில் "குண்டக்க மண்டக்க" எழுதுவதைப் பார்க்கும் போது சங்கடமாக இருக்கிறது !

என்ன செய்ய !!!



   

Thursday, August 07, 2014

நாட்டின் உற்பத்தியில் 

முக்கால் பங்கு "கள்ளப்பணம்" !!!

ஒரு நாட்டின் உற்பத்தியில் 75 % சதம் கள்ளக்கணக்கில் வரும் என்றால் நாம் உருப்படுவது எங்கே ? 

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு எவ்வளவு என்று தெரிந்து கொள்ள பல புத்தகங்களை தேடினேன் !  "கூகிளை " யும் அளைந்தேன் !  

உள்  நாட்டு உற்பத்தி என்றால் என்ன ? பதிலை தேடாதீர்கள் ! தேடினால் கிறுக்கு பிடித்து அலைய வேண்டியது தான் !  நாட்டின் மொத்த பண்ட உற்பத்தி, அரசு சிலவு,தனியார் உற்பத்தி, சேவை, இன்னும் பல - வேண்டாமண்ணே ! பேசாம நண்பர் ஒருவர் கிட்ட கேட்டேன் ! தொழிற்சங்க தலைவர்களுக்கு நிதி நிலை  அறிக்கை , அரசின் பொருளாதார கொள்கை ஆகியவற்றை விளக்கும் தலைவர் அவர் !

சமீபத்திய  புள்ளி விபரப்படி இந்தியாவின் மொத்த உற்பத்தி (gross domestic product )  114.12 லட்சம் கோடி ! 

இதுல கணக்குலகாட்டம மறைச்சது கிட்டத்தட்ட 84 லட்சம் கோடி ! மறைச்சது சுப்பனும் குப்பனும் இல்லை ! பன்னாட்டு,இந்நாட்டு பெரும் கம்பெனிகள் ! உற்பத்தி யான பொருள்களின் எண்ணிக்கயிலிருந்து ,மானியம் வரை கள்ளக்கணக்கு எழுதி காட்டினவங்க !

நோக்கியா ஒன்னு போரும் உதாரணத்துக்கு ! 

அம்புட்டு பயகளும் திருட்டுப் பயக !

எனக்கு மாசம் 2000 /-ரூ வரை மருந்துக்கு செலவாகுது ! வீட்ல கொண்டாந்து கொடுப்பாங்க ! எவ்வளவுன்னு பாத்து செக்கு போட்டு கொடுத்துடு வேன்  !

 இந்தமாசம் என்னாச்சுன்னா ? அண்ணே ரோக்கமாகுடுங்க ! செக்கு வேணாம்னு சொல்லிட்டாரு !

 செக்குன்னா கணக்குல ஏறும் ! பில்லு போடணும் ! கொள்முதல், விற்று வரவு ,விறபனை வரி கணக்கு வழக்கு  ?  சிக்கல் எதுக்கு ? ஆடிட்டர் சொன்னாராம் ! ரொக்கம் தான் சரி நு !

கொஞ்சம் கணக்குல காட்டு ! மற்றதை தனியா கொள்முதல் ,விற்று வரவு நு உன்கணக்குல வச்சுக்கோ ! ஆடிட்டர் சொன்னாராம் !

சர்க்காருக்கு காட்டற கணக்கு வேற  ! இவருக்கு உள்ள கணக்கு வேற ! இதுக்கு ஒரு ஆடிட்டர் ! இவங்களை தூக்குல ... ஆத்தாடி! வன்முறைய தூண்டப்படாது !

2000/- ஓவா வுக்கே இம்புட்டுனா அம்பானி ,அதானி, சிங்கானியா என்னாகும் !

இதை தடுக்க முடியுமா ? முடியும் ! எப்படி ?

எதுனாலும் ரொக்க பட்டுவாடா கிடையாது நு வை  ! வித்தது ,வாங்கினது பூராம் கணக்கில வரும் தானே !

credit card மூலம் வாங்க வை ! கணக்குல வந்துடும்ல !

அமெரிக்காவுல அப்படி தானாமே !

செய்ய மாட்டங்க ! நம்மாளு அதுலயும் ஆட்டைய போடறவன் இருக்கான் !!

ஆனா கள்ள பணம் குறையலாம் ல ! 

மாட்டங்க !  கொஞ்சமா செலவளிச்சு பதவிக்கு வாராங்க ! "கட்காரி" என்ன கஞ்சிக்கு இல்லாதவரா ? பாவம் ! அத்வானி ! அவருக்கே சொந்தமா கம்பெனி இருக்காம் ! 

நாம அனுப்பிச்சவன் எல்லாம் என்ன மாணிக் சர்க்காரா ? இ.எம்.எஸ்   ஸா? 

ஓண்ணும் பண்ண முடியாது போல இருக்குண்ணே  !

ஆனா ஏதாவது செஞ்சாகணும்  ணே !!!







Tuesday, August 05, 2014

எதை எழுத .......?

காலையில் எழுந்த உடன் என் கை பேசியில் முகநூல் பார்ப்பது வழக்கம் ! இரவு முழுவதும்"டொக்கு.டொக்கு " என்ற சத்தத்தோடு வந்திருக்கும் செய்திகளை முதலில் பார்ப்பேன் ! 

இரா எட்வின் அவர்களிடமிருந்து " தோழர் குமரேசனின் பலமும் உயிருமாக " என்று படிக்கும் போதே அதிர்ச்சியும். அவநம்பிக்கையும் தோன்ற அடுத்து டாக்டர் ரவிகுமார் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிவித்து விட்டார் !

மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாடு ! அரசரடி பேருந்து நிறுத்ததில் மக்களுக்கான கண் காட்சி ! முழுக்கமுழுக்க அசாக் அவ்ர்களின் தயாரிப்பு ! விடிய விடிய உழைத்திருக்கிறார் ! முடிந்ததும் தன இளம்மனைவி அதனை முதலில் பார்க்க வேண்டும் என்று என்று நினைக்கிறார் ! என்னிடம் என் "மெல்லுந்து" தனை தரமுடியுமா ? என்று கேட்கிறார் ! நான் அப்பொது ஒரு பழைய "விஜய் " வண்டியை ஓட்டையாகிபோனது வைத்திருக்கிறேன் ! இளம் மனைவியை அழைத்துவர சரிபட்டு வராது என்பதால் கொடுக்க வில்லை ! 

வீடு சென்று சைக்கிளில்  அம்மையாரை அழைத்து வருகிறார் ! 

அவர் முகத்தில் வெட்கம் கலந்த பெருமை ! அசாக் கம்பீரமாக என்னைப் பார்க்கிறார் !

வழுக்கையும், எள்ளும் அரிசியுமான தடியும் கொண்ட அசாக் அல்ல அவர் ! எங்கள் நாடகக் குழுவின் கதாநாயக நடிகர் ! "  ரூபா " அம்மையாரை விரும்பி வெற்றிகரமாக கரம் பிடித்தவர் !

தன கணவன் செய்து வந்த தொழிலை விட்டு விட்டு கட்சியின்முழு நேர ஊழியனாக மாறிய போது என் போன்றவர்கள் பயந்தோம் ! ஆனால் "ரூபா"அம்மையார் கஷ்டங்கள் என்ன என்று தெரிந்தும் அவருக்குபலமாக  இருந்து  வெற்றி பெறச்செய்தார் !

அன்றைய காலத்தில் கட்சிப் பணி எவ்வளவு கடினமானது   என்பதையும் எவ்வளவு தூரம் சுயத்தை விட்டுக்கொடுத்து வாழ்க்கையின் சவால்களை சந்திக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து செயல் பட்டவர் ரூபா அம்மையார் !

மதுரையிலிருந்து வேறோடு புடுங்கப்பட்டு சென்னை வந்ததும் மனம் கோணாமல் அசாக் அவர்களின் பின்னால் நின்று காத்தவர் !

காலமெல்லாம் காத்திருந்து மகன்கள் காலுன்றி நிற்கிறார்கள் !

சென்ற ஆண்டு அசாக் அவர்கள் உடல் நலமின்மையால் மருத்துவ மனையில் இருந்த போது அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன் ! அவரது இல்லம் சென்றிருந்தேன் ! எந்த சலனமும் இல்லாமல் அவரை கவனித்துக் கொண்டிருந்தார் ! 

காலை 5 மணிக்கு அசாக்கை தொடர்பு கொண்டேன் ! "நான் இதே நோயால் படுத்தபோது என்னை கவனித்துக் கொண்டார் ! நான் அவருக்கு பணிவிடை செய்வதால் எனக்கு கஷ்டமாகுமோ என்று நினைத்துவிட்டார் போலும் ! Masive Heart attack அவரை கொண்டுபோய்விட்டது !" என்றார் !

அசாக் எட்வின் கூறியது  போல் "உங்கள் பலமும் உயிரும் "அவர்தான் !

முதுமையில் தனிமை கூடாது !

நீங்கள் தனிமையில் இல்லை ! 

ஆயிரக் கணக்கான தோழர்கள்  உங்களுக்கு இருக்கிறோம் !

any way the loss is irrepairable !!!