Sunday, May 25, 2014

அகதிகள் அல்ல ....!!!

  நாடற்றவர்கள் .....!!!


அப்போது எனக்கு 12  அல்லது 13 வயது இருக்கும் ! "பாப்பாகுடி ":என்பது எங்கள் கிராமத்தின்பெயர் !நெல்லை மாவட்டம்  முக்குடலிலிருந்து  "முக்கா" மைலி ருக்கும் !

என் உறவினர் அங்கு sub postmaster ஆக இருந்தார் ! ஒரு போஸ்ட்மன் பிரமநாயகம் ! ஒரு "ரன்னர் " ஆண்டி உண்டு ! இருவருக்கும் 60 -70ரூ   சம்பளம் !
போஸ்ட் மாஸ்டருக்கு 10ரூ    honourorium !

கீழப்பாப்பகுடி,கவாலி வாரை , முக்கூடல்வடக்கு  என்று குக்கிராமனகாளுக்கு மணியார்டர் வரும்  !  மாதம் 200க்கும்மெற்பட்டு வரும் ! அந்த மக்களில் பெரும்பகுதியினர் தாழ்த்தப்பட்டவர்கள் ! சிலர் வெதக்காரர்கலானவர்கள் !

பகலில் வயல் வேலைகளுக்கு சென்று விடுவதால் மாலை 6 மணிக்கு மேல் போஸ்ட் ஆபிஸ் வந்து காத்திருந்து பணம் வாங்கிச் செல்வார்கள் ! 

எல்லமே "ஸ்லான் " லிருந்து வந்த மணிஆர்டர்கள் ! 20 ரூ அல்லது 30 ரூ !  இதில் செட்டியார் பலசரக்கு கடையில் உப்பு,புளி,வத்தல் என்று வாங்குவார்கள் ! ஒரு பாட்டில்  மண்ணெண்ணையும் வாங்கிக் கொளவார்கள் !

"ஸ்லான்" தேயிலைத்தொட்ட்த்தில் வேல   பார்க்கும் ஆண்கள் அனுப்பும் பணம்  அது!  

இது தவிர பாவூர்,கயத்தாறு, கடலாடி,அருப்புகோட்டை,புதுகோட்டை, தஞ்சை என்று பிழைப்பு நாடி "ஸ்லான் "சென்றவர்களும் உண்டு !

"ஸ்லான்" சுதந்திரம் அடைந்ததும் இவர்களை வெளியேற்ற வெண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது ! 

இவர்கள் இந்திய வம்சா வழியினர் ! ஆகவே இந்தியா இவர்களை அழைத்துக்கொள்ள வேண்டு என்றனர் !

இவர்கள் நூறு , இருநுறு ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் காரர்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் ! இவர்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை ! என்று இந்திய அரசு கூறிவிட்டது !

இந்த தோட்டத் தொழிலாளர்களின் சந்ததிகள்" ஸ்லானி"ல்  அகதிகளாக இல்லை இல்லை நாடற்றவர்களாக எந்த  உரிமையும் இல்லாமல் !இருக்கிறார்கள் 

ஈழத்தமிழர்களும், நமது தேசீய குஞ்சுகளும் வாயத்திறப்பதில்லை !

"வேளி  நாட்டில் இருக்கும் "இந்து" கள் இந்தியாவிற்கு வரலாம் என்று புதிய பிரதமர் கூறியுள்ளதாக தெரிகிறது !

இலங்கையில் இருக்கும் தோட்டத்தொழிலாளர்கள் தலித்துகள் !!

அவர்களை இந்துக்களாக கணக்கிலெடுப்பாரா "மோடி'!!!





Wednesday, May 21, 2014

குத்தலும், குதர்க்கமுமாக .....!!!


மே மாதம் 20ம் தேதி நடந்தது ! முக  நூலில்  பார்த்தேன் ! நாடாளு மன்ற மைய மண்டபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தார்கள் ! 

இந்தியாவின் பிரபலமான நடிகர்கள் சத்ருக்னான் சின்ஹா ,வினோத் கன்னா , ஹேமமாலினி ஆகியோர் அமர்ந்திருந்தனர் ! முக்கியமான தலவர்கள் மேடையில் வீற்றி ருந்தனர் ! 

மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகளும்,உரைகளுமாக ,பார்வையாளனை நெகிழவைத்தன !

மைய மணடபத்தின் நுழைவாயிலின் வாயிற்படிகளில் தன்  சிரம் வைத்து பிரதமராக பதுவி ஏற்க விருக்கும் நரேந்திர தாமோதர மோடி வணங்கிய போது கொஞ்சம் உணர்ச்சி  பளிச்சிட்டது உண்மைதான் !

நிகழ்ச்சிகள் இந்தி மொழியில் நடந்தன ! 

என்னால்புரிந்துகொள்ள  முடியுமென்றாலும் நல்ல இந்தியை புரிந்துகொள்ள வக்கீலாக  நாகபுரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்  என் மருமகனும் உடன் இருந்தார் ! அவரும் உணர்ச்சிப்பிழம்பாகவெ இருந்தார் !

மூதறிஞர் லால் கிஷன் அத்வானி ' மோடி  அவ்ர்களின் "கிருபை"யினால் நமக்கு  இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது ! அவரைப் பிரதமர் பதவிக்கு முன் மொழிகிறேன் " என்று கூறிய போது கரவொலி அதிர்ந்தது ! பெரியவர் அத்வானியின் முகம் உணர்ச்சிகளால் இறுகி பார்த்துக் கொண்டிருந்தவர்களை சுண்டியிழுத்தது !

நரேந்திர மோடி இதனை தன்னுடைய ஏற்புரையில் குறிப்பிடவும் செய்தார் ! 

"இங்கு  வாஜ்பாய் அவர்கள் இல்லையே ! இருந்தாலும் அவருடையா ஆசிகள் என்னோடு இருக்கும் ! " என்று மொடி   நினைவுகூர்ந்தார் ! 

"அத்வானி அவர்களே  !  இன்னொரு முறை அப்படிச்சொல்லாதீர்கள் ! ஒரு தாயீற்கு மகன் செய்வதை  "கிருபை " என்று கூற முடியுமா ! கட்சிதான் எனக்கு தாய் ! இந்த தேசம் தான் எனக்குத்தாய் ! தாய்க்கு செய்யும் சேவையை "கிருபை" என்றுகூறலாமா ?தயவு செய்து இனி அப்படிகூறாதீர்கள் ! "
என்று குறிப்பிட்டார் ! அவரும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அருகிலிருந்த காண்ணடி டம்ளரிலிருந்து குடிநீரை பருகினார் !

இதற்கு முன்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஒரு நேரடி நேர்காணலில் உணர்ச்சி மேம்பட்டு குடிநீர் அருந்தியது நினவு தட்டியது !

"மாமா ! ரொம்பவும் உணர்ச்சிகரமான நிகழ்ச்சி இல்லையா ?" 
என் மருமகன் கேட்டான் !

"ஆமாம் ! அத்வானியும் சரி !மோடியும் சரி ! உணர்ச்சிவசப்பட்டிருந்தனர் ! ஆனாலும் ...! "

"என்ன மாமா !ஆனாலும் ! "

"அத்வானி "குத்தலாகவும்" மோடி "குதர்க்கமாகவும்" .......!"  மருமகன் இடை மறுத்தான் !

"எனக்கும்தான் தோறியது ! மாமா !" என்றான் !

எங்களுக்கு மட்டும்தானா ???


















































































 




Monday, May 19, 2014

கவலைப் படாதே  தோழா !!!

'84 ப் போல இதுவும் கடந்து போகும் .....!!!



1984 ம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டார் ! அதனை அடுத்து ராஜீவ் காந்தி பிரதமரானார் !

உடனடியாக மக்களவைத் தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது ! 

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 404 இடங்கள் கிடைத்தன ! அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 414 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சிக்கட்டிலில் ஏறியது காங்கிரஸ் !

பின்னால் திரும்பிப் பார்த்தால்  வெகு துரத்தில்  என்.டி . ராமராவ் அவ்ர்களின் தெலுங்கு தேசம் கட்சி 30  இடங்களோடு   கண்ணைச் சிமிட்டிக்கொண்டு நின்றது !

அதற்கு அடுத்து 22 இடங்களைப் பெற்று மார்க்சிஸ்ட் கட்சி இருந்தது ! இன்றய ஆளும்கட்சியான "பா.ஜ.க " இரண்டு இடங்களோடு நிறுத்திக்கொண்டது !

ராஜீவ் காந்தி நினைத்திருந்தால் எந்த சட்டத்தையும் ,ஏன் அடிப்படை அரசியல்சட்டத்தையும் திருத்தியிருக்கமுடியும் ! அன்று காங்கிரஸை எதிர்த்து நின்ற மார்க்சிஸ்டுகளும், தெலுங்கு  தேசமும் பலவீனமாகவே இருந்தார்கள் ! அவ்ர்களை புற்க்கணிபது என்பது அன்றய  ஆளும்கட்சிக்கு   பெரிய விஷயமல்ல !

எதிர்ப்பு இல்லாத பலவீனமான அரசியல்  களத்தில் அன்றய ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் பணியை சிறப்பாக செய்தன ! குறிப்பாக  "Indian express " மற்றும்  "The  Hindu " பத்திரிகைகள் மிக சிறப்பாக அப்பணியினைச் செய்தன  !

"போபர்ஸ் "  ஊழல் வெளிப்பட்டதும் அப்போது தான் !

ஐந்து ஆண்டுகள் கழித்து நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களையே பெற்முடிநதது ! வி.பி. சிங் தலைமையில் ஐக்கிய முன்னணிஆட்சி அமைந்தது !

நரேந்திர தாமோதர் மோடி பிரதமராகப் போகிறார் ! நமக்கு வருத்தமில்லை !
முழுக்க முழுக்க ஒரு ராஷ்ட்ரிய சங் பிரசாரகர் ஆட்சிகட்டிலில் அமரப் போகிறார் !

அந்த ஆர்.எஸ் எஸ் காரரை  இந்தியாவின் தலைவராக மாற்றுவது எதிக்கட்சிகளின் கடமை ! பலமான எதிர்க்கட்சி இல்லாத நிலைமையில் அந்த கடமையை ,ஊடகங்கள்  செய்ய வேண்டும் !

செய்வார்களா ?

நம்புவோம் !.

 







Sunday, May 18, 2014

"சுப்பையா"வின் நினவு தினம்  இன்று ....!!


"சுப்பையாவின் "

நினைவு தினம்!

 விவசாயிகளை ஒன்று திரட்டி லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் பங்கு போட்டு கொடுத்தார் ! மூன்று  ஆண்டுகள் ஆட்சி செய்தார் ! நிலமிழந்த ஜமீந்தார்களுக்கு ஆதரவாக  இந்திய ராணுவம் தெலுங்கானாவுக்குள் புகுந்த பொது அதனை எதிர்த்து தீரமிக்க போராட்டத்தை நடத்தினார் ! விவசாயிகள் உழுது கொண்டிருக்க வயல் வரப்புகளில் துப்பாக்கி ஏந்திய பொராளீகள் அவர்களை காத்தனர் ! இந்தியாவின் மையப்பகுதியில் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் மூன்ரு ஆண்டுகள் நடந்த பாட்டளிகளின் ஆட்சியை "நேருவும் ராஜாஜியும் " நய வஞ்சகம் பேசி நிர்மூலமாக்கினர் ! அந்த போராளிகளின் தள நாயகன் தான் எங்கள் சுந்தரய்யா ! ஹைதிராபாத்தில் உள்ள சுந்தரய்யா கேந்திரத்தை உணர்வுள்ள ஒவ்வொரு இடது சாரியும் சென்று பாருங்கள் ! அவருடைய நினைவு தினம் இன்று !!!!

("சுப்பையா" என்பது சுந்தரய்யாவின் ரகசிய பெயர் ) 

Saturday, May 17, 2014

வரலாறு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும் ........!!!


1967 ம் ஆண்டு மே.வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சி தூக்கி எறியப்பட்டது!

அஜாய்குமார் முகர்ஜி முதலமைச்சராகவும் ஜோதிபாசு துணை முதல் அமைசராகவும் பதவி ஏற்றனர் ! பொறுக்குமா ! காங்கிரஸ் தலமை ! ஆட்சி கவிழ்ந்தது ! 

அடுத்து தேர்தல் நடந்தது ! மார்க்சிஸ்டுகள் மிகபெரிய கட்சியாக வந்தார்கள் ! மத்திய காங்கிரஸ் ஆட்சி ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவந்து மார்க்சிஸ்டுகளை தடுத்தது !

சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் அரைப்பாசிச ஆட்சி நடந்தது ! அப்போது சத்திர பரிஷத் தலைவர்களாக (குண்டர்களாக ) பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி,சுபரதோ முகர்ஜி ,மம்தா பானர்ஜி ஆடிய ஆட்டம்  சொல்லமுடியாதது !
1972ம் ஆண்டு மீண்டும்தெர்தல் ! கட்சி ஊழியர்கள் விரட்டப்பட்டனர் ! தலவர்கள் தொகுதிக்குள் போக முடியாது ! ஜோதிபாசு அவர் தொகுதிக்குள் போக முடியவில்லை ! 

இந்த தேர்தலில் நான் கலந்துகொள்ளமாட்டேன் என்று அவர் அறிவித்தார் !
Jothi Basu concedes defeat என்று கோட்டை எழுத்துக்களில் பத்திரிகைகள் எழுதின!

மார்க்சிஸ்டுகள் 14 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள் ! பதினான்கு பெரும் சட்டமன்றம் சென்று பதவியை ஏற்க மறுத்தனர் ! பதவியை ஏற்காததால் மறு தேர்தல் நடத்தமுடியவில்லை ! சட்டமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை ! ஏனென்றால் அவ்ர்கள் பதவி ஏற்கவில்லை !

தமிழகத்தில் 1971ம் ஆண்டு தேர்தல் நடந்தது ! தன்னந்தனியாக மார்க்சிஸ்டு கட்சி தேர்தலை சந்தித்தது !

சர்வதேச அனாதைகள் என்று பத்திரிகைகள் வசை பாடின !  ரஷ்ய கட்சியையும், சீன கட்சியையும் விமரிசிக்கும் காரணத்தால்  இருவரும் ஆதரிக்கவில்லை !

இந்திரா காங்கிரஸ், தி.மு.க கூட்டு தேர்தலில் உருவானது !

கிட்டத்தட்ட 60 சட்டமன்ற தொகுதிகளிலும் , முடிந்த அள்வு நாடளுமன்ற தொகுதிகளிலும் நின்றோம் !

தோழா ! அத்துணை தொகுதிகளிலும் தோற்றோம் ! மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நின்ற மறந்த  ப.ராமமூர்த்தி அவர்கள் டெபாசிட் இழந்தார் ! போட்டியிட்ட  அத்துணை பெரும் டெபாசிட் இழந்தனர் !

திண்டுக்கல் தொகுதியில் நின்ற  எ.பாலசுப்பிரமணியம் மட்டுமே டெபாசிட்டை வாபஸ் வாங்கினார் !    

மத்திய காங்கிரஸ் ஆட்சி நர வேட்டை ஆடியது ! தி.மு.க துள்ளாட்டம் போட்டது !

அவசர நிலையம் வந்தது ! தமிழக ஆட்சி கலைக்கப்பட்டது ! கருணா நிதியின் கொட்டம் அடங்கியது !

அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் அ .தி.மு.க கூட்டணி ஏற்பட்டது ! சட்டமன்றத்தில் 12 உறுப்பினர்களோடு மார்க்சிச்டுகள்  நுழைநதனர் ! 

மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு தலைமையில் இடது முண்ணணி ஆட்சி பதவி ஏற்றது !

தொடர்ச்சியாக  35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது !

வரலாறு கற்றுக்கொடுத்துக் கொண்டேதான் இருக்கும் !

கற்போம் !!!







Thursday, May 15, 2014

அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் !

வாழ்த்துங்களேன் ...!!!

அவள் கல்லூரியில் முதுகலை பட்டம் முடித்தாள் ! அப்போது அவளுக்கு இருபத்திமூன்று வயது ! 

அவளுடைய திருமணத்திற்கு அவள் தந்தை ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார் !

நல்ல வடிவான முகத்தோற்றம் ! "அழகி " என்பதை விட கொஞ்சம்  கூடுதலான களையான முகத்தோற்றம் !

எதற்கும் இருக்கட்டும் என்று அவளுடைய விருப்பத்தை கேட்க விரும்பினார் !
"நீங்கள்  பார்த்து முடிவு செய்யுங்கள் ! ஆனால் வரதட்சிண கொடுக்கக்கூடாது" என்று கூறிவிட்டாள்  ! 

அதிகமாக தேடும் நிலை ஏற்படவில்லை ! நெருங்கிய பலகுடும்பங்களில் பெண்கேட்க விரும்பியிருந்திருக்கிறார்கள் ! அது பின்னல் தான்  தெரிந்தது !ஆனாலும் அவள் தந்தை  வெளியூரிலேயெ மாப்பிள்ளை பார்த்தார் !

மாப்பிள்ளை பையன் வெளிநாட்டில்" முனைவர்" பட்டத்திற்காக ஆராய்சியில் ஈடுபட்டிருந்தார் !

மாப்பிள்ளை வீட்டரிடம் அவள் தந்தை வரதட்சினை என்பது என்னுடைய "பட்ஜெட்டில் "இல்லை ! என் மகள் அதனைஒரு நிபந்தனையாக போட்டிருக்கிறாள் " என்று கூறிவிட்டார் ! " என் மகனும் வரதட்சிணை வாங்கக் கூடாது என்று கூறியிருக்கிறான் " என்று அவர்களும் பதில் கூறிவிட்டனர் !

திருமணம் உறுதி செய்ய நாள் குறிக்கப்பட்டது ! பெரியோர்கள் ,உறவினர்கள் முன்னிலையில் "நிச்சயதார்த்த" விழா நடந்தது !

அவர்கள் வழக்கப்படி திருமண நாள் குறிக்கப்பட்டு முகூர்த்த பத்திரிக்கை பெரியவர்கள் முன்னிலையில் எழுதப்பட்டது !

அதனை எல்லார் முன்னிலையிலும் வாசித்து சம்மதம் கேட்பார்கள் !

அதே போல் பெரியவர் அதன வாசிக்க "யாருக்காவது இதில் ஆட்சேபனை இருக்கிறதா ?" என்று கேட்டார்கள் !

சபை மவுனமாக இருந்தது ஒருநிமிடம் !

மெலிதான குரலில் "மாமா! ஒரு சின்ன திருத்தம் "என்று சன்னமான குரல் ஒலித்தது !

சபை அதிர்ந்து திரும்பிப்பார்த்தது !

மணப்பெண் தான் அந்த சன்னமான குரல் கொடுத்தது !

"என்னம்மா! என்னம்மா ?!" என்று மாப்பிள்ளையின் தந்தை கேட்டார் !

" பத்திரிகையின் வாசகத்தில் ஒரு திருத்தம் மாமா !  " கன்னிகாதானம் " என்று எழுதியிருக்கிறீர்கள் ! I  am not a commodity to be given in alms ! அந்த வார்த்தையை மாற்ற வேண்டும் !" என்றாள் அந்த பேண் !

 பெரியவர்கள் விவாதித்தார்கள் !அந்த மணமகளின் பெரியப்பா அதனை "மாற்ற" கூடாது என்றார் !

இறுதியில் மாற்றுவது என்றும் "கன்னிகா தானம்"    என்பதற்கு பதிலாக "பாணி கிரகணம் " என்று முடிவாகியது ! இதனையும் அவள் வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டாள் !

திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவனோடு அவள் வெளிநாட்டுக்கு செல்ல விருந்தாள் !

"குழந்தை ! எல்லாம் நல்லபடியாக முடிந்தது ! ஆனா எனக்கு ஒரு சந்தேகம் !"
என்றார் அவளின் தந்தை !

"என்னப்பா ?" 

"கல்யாணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் தான் மாப்பிளையே இந்தியாவிற்கு வந்தார் ! அவரைப் பார்க்காமலேயே நீ எப்படி சம்மதம் சொன்னாய் ?" என்று கேட்டார் !

" அப்பா ! இந்த பெண்பார்க்கும் படலம் மாதிரி அராஜகம் இங்கதான் உண்டு அப்பா ! நான் அவனுக்கு காப்பிகொடுக்கணும் ! அவன் வாங்கி குடிப்பான் ! சுத்தி பத்திபதினந்துபேர் என்னயே பாத்துக்கிட்டு இருப்பாங்க ! நான் அவன ஒரு fleeting  moment ல பாத்து ...! என்னப்பா அநியாயம் ! அப்படி பாத்து ...அவனோட past , future  எல்லத்தையும்கண்டுபிடிச்சுடுவேனா ! அப்படியே நான் வேணான்னு சொன்னாலும் நீங்க விடுவேளா  ! பாட்டிலேருந்து பக்கத்து வீட்டு ஆச்சி வரை "பையன் முக்கும் முழியுமா இருக்கான் ! அவனுக்கு என்ன குறை ? உடனே வெளிநாட்டுக்கு "ஜாம் ஜாம்"நு  பறக்கப்பேறே ! நு சொல்லி என்னச் சுத்தி கும்மியடிச்சு சம்மதிக்க வைக்கமாட்டீங்க !இதுல பாக்கறது என்ன பாக்கறது  "

அப்பா கேட்டுக் கொண்டிருந்தார் !

"இன்றைய நிலைல எங்களால இவ்வளவுதான் முடியும் ! காலம் மாறும் அப்பா ! "என்று முடித்தாள் !  

அந்த பெண் யாருமில்லை ?

ஹன்ஸா  காஷ்யப் ! M .A ; M Phil ;M L 

எனது செல்லமகள் !!!

மே மாதம் 16ம்தேதி அவளுடைய பிறந்த நாள் !!!

வாழ்த்துங்கள் !!!! 


  




Sunday, May 11, 2014

(புராண காலத்தில் ஸ்ரீ ராமனுக்கு கற்றுக்கொடுத்தவர் "ஜாபாலி " )

{இது ஒரு மீள் பதிவு }



 
HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Thursday, March 03, 2011

ஜாபாலி......
சிறு கதை


ஜாபாலி (காஸ்யபன்)

சத்யகாமனை நந்தவனத்திற்கு அனுப்பினாள் பாலா.சிறுவன் துள்ளிக் குதிதுக் கொண்டு ஓடினான்.சக தோழி ஜனகவல்லியிடம் சிறுவனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு பாலா நீராடச்சென்றாள்.

உள்ளே சென்ற அவளை பின்புறமாக இரண்டு கரங்கள் அணைத்துக் கொண்டன.ஆண்மை அவளை உறுத்த முன்புறம் மார்பகங்களை இறுக்கி...அவள் வலியில் "ஸ்ஸ் ஆஆ"என்றாள்.இன்பவெறியில்கூவுவதாக நினத்து அவன் மேலும் இறுக்கினான்.நீராடி முடித்து ஆடைகளை அணியாமல் போர்த்திக் கொண்டே உள்ளேசென்றாள் பாலா.தளபதியின் பேரன் அவளை அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு நீராடும் அறையிலிருந்து வெளியேறினான். 

அந்தப்புரங்களில் எழுதப்படாத ஒப்பந்தங்கள் உண்டு அரசன் ராணியிடம் விருப்பம் போல உறவாட முடியாது.இளவரசி, பிரபுக்களின் மனைவி என்று எவராக இருந்தாலும் அவர்கள் விரும்பினால் தான் கணவன்மார்கள் அவர்களிடம் உறவு வத்துக்கொள்ளமுடியும்.

தர்பாரிலும் மன்றங்களிலும் அரசன் தளபதி அமைச்சர்களருகில் அழகுப்பதுமையாக அமர வேண்டிய ராணிகளும் இளவரசிகளும் உடலழகைப் பதுகாத்துக் கொள்ளவேண்டும்.அவள் அவளுடைய "இச்சை"யைக் கூட கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படியானால் அரசனும்,அமச்சரும், தளபதியும்...அவர்களுக்குத்தான் அந்தப்புரத்தில் ஏராளனமானதாதிகள், தோழிகள் இருக்கிறார்களே.

பாலாவும் ஒரு தாதி.அவளுக்கும் இப்படிபட்ட வாழ்வு அமைக்கப்பட்டிருக்கிறது.

"அம்மா!நான் எப்போது குருகுலத்திற்கு செல்வேன்?" என்று சத்யகாமன் கேட்கும்போது பாலா மகனை ஆரத்தழுவிக் கொண்டாள்." உன் பிறந்த நாள் வருகிறது.அதன் பிறகு உன்னை அனுப்புவேன்" என்றாள் பாலா> 

சக தோழி ஜனகவல்லி :களூக்" என்று சிரித்தாள்.சத்தியகாமன் உயர்ந்து நிர்க்கும் ஜனகவல்லியை கழுத்து வலிக்கும் அளவுக்கு தலையை தூக்கிப் பார்த்தான்.

"ஏன் சிரிக்கிறாய்?" பாலா கேட்டாள்.

" குருகுலத்தில் உன் மகனுக்கு இடம் உண்டா?"

"ஏன் இருக்காது?"

" குழந்தையை வைத்துக்கொண்டு இந்த விவாதம் வேண்டாம்" என்றாள் ஜனகவல்லி.தூரத்தில் தளபதி வருவது தெரிந்தது.இருவருமே பிரிந்து சென்றுவிட்டார்கள்..

பாலா யோசனையில் இருந்தாள்.தளபதி அவள் அருகில் வந்து அமர்ந்து அவள் தோளைப் பற்றினார்.அறுபது வயது ஆனாலும் கைகளின் பலம் பாலாவின் தோள் எலும்புகளை நோகச்செய்தது.கண்களை மூடிகோண்டு மல்லாந்து சாய்ந்தாள்.

"நான் வியாசருடைய ஆசரமத்தில் சேரப்போகிறேன்" என்றான் சத்யகாமன்.

" முடியாது கண்ணா"என்றூ பதிலளித்தாள்ஞ்சனகவல்லி.

"ஏன்?" 

"நீ எந்த வம்சம் என்று வியாசன் கேட்பான்"

" நான் எந்த வம்சம்?

" உன் அம்மாவைக் கேள்""

சத்யகாமன் ஓடிச்சென்று அம்மாவிடம் கட்டிகொண்டு விழுந்தான்."அம்ம! நான் எந்த வம்சம்?"..பாலா பதில் சொல்லவில்லை.அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சத்யகாமன் யாருடைய வம்சம்...அமச்சரின் அந்தப்புரத்தில் சேவை செய்துகொண்டிருந்தேன். அமைச்சர்...அவரின்மைத்துனர்... அமைசரின் தம்பி..அப்போது ஜனித்தவனா?

தளபதி,தளபதியின்மகன் ,பேரன்...ஆடு...மாடு...நாய் ...ஆகியவற்றிற்கு உறவு முறை உண்டா?

சத்யகாமன் அம்மாவை உலுக்கினான்.நினைவு பெற்ற பாலாஅவனிடம் கூறினாள்" "வியாசனிடம் போகாதே.....அவனே....நீ கவுதமரின் ஆசிரமத்திற்கு போ...நான் சொல்வதைக் கவனமாகக் கேள்...அவரிடம் அட்சரம்பிசகாமல் சொல்....உன் பெயர் இனி சத்யகாமன் இல்லை...ஜாபாலி...பாலாவின் மகன் ...ஜாபாலி. 

ஹரிதுருமாத கௌதமரின் ஆசிரமத்தின் முன் சிறுவன் நின்றான்.

" உன் பெயர் என்ன குழந்தாய்?"

"ஜாபாலி"

" அது என்ன புதுப் பெயர்?" 

" என் தாயின் பெயர் பாலா.அவர்தான் என் பெயரை மாற்றீ ஜாபாலி என்று கூறச்சொன்னார்."

"நீ எந்த வம்சம்?" 

"பாலாவின் வம்சம்"

"உன் தந்தையின் பெயர் என்ன?" 

" எனக்கும் தெரியாது. என் தாய்க்கும் தெரியாது."

... " உன் தாய் எங்கிருக்கிறாள்?"

"தளபதியின் அந்தப்புரத்தில் ....அதற்கு முனபு அமைச்சரின் அந்தப்புரத்தில். நான் அமைச்சர் குடும்பத்தைச் சார்ந்தவனா? தளபதிகுடும்பத்தைச் சார்ந்தவனா? தெரியவில்லை?" " " உன் தாயார் என்ன சொன்னார்?"

"எவனால் ஜனித்தாய் என்பது முக்கியமல்ல மகனே.நீ பலா பெற்றெடுத்த மகன் ஆகையால் உன் பெயர் இனி ஜாபாலி என்றாள்"

"நீ வெறும் ஜபாலி அல்ல.உண்மையைச்சொன்னவன்.சத்யகாம ஜாபாலி. வா குழந்தாய்...வேதம் மட்டுமல்ல....உபநிஷத் மட்டுமல்ல....தர்க்க சாஸ்திரமும் உனக்குக் கற்பிப்பேன்" என்றார் கவுதமர்.

( ஆதரம்: சந்தோக்ய உபநிஷத்) 



(செம்மலர் மே மாதம் 2004ம் ஆண்டு பிரசுரமானது)

Friday, May 09, 2014

"ஆதி சங்கரா " திரைப்படமும் -

சிருங்கேரி மடமும் .....!!!


கர்நாடக மாநில திரைப்பட இயக்குனர் மறந்த G .V .Iyer  சமஸ்கிருத மொழியில் தயாரித்த படம் "ஆதி சங்கரா "(1983) ! பலவிருது களையும், பாராட்டுகளையும்பெற்ற படம் ! அந்த படம் பற்றி தனியாக ஒரு இடுகை போட நினைக்கிறேன் ! வரும் !

ஆதி சங்கரரின் தத்துவத்தில் மிகவும் முக்கியமானது "அத்வைதம்" !" நாம் வேறு ! இறைவன் வேறு இல்லை ! நம் "உள்" இருக்கிறான் ! நமது "ஆத்மா"  என்பது அதன் துகள் ! நாம் அத்துணை பேரும் அதன் வெளிப்பாடு ! " 
என்பார்கள் !

இதனை ,பரப்ப சங்கரர் அமைத்த மடங்கள் நான்கு ! வடக்கே பத்ரி மடம், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை,தெற்கே சிருங்கரி என்று அமைத்தார் !

"ஆதிசங்கரர்" திரைப்படத்தில்ஒருகாட்சிவரும்பத்திரிகைகளும்,விமரிசாகர்களும்வெகுவாக பாராட்டிய காட்சியாகும்   அது !

 சங்கரர் யாத்திரையாக வருவார்  ! எதிரே  சுடுகாட்டினை கவனித்துக் கொள்ளும் புலையன் வருவான் ! சங்கருடைய சீடர்கள் "தள்ளிப்போ -தள்ளிப்போ " என்று அவனைப்பார்த்து அலறுவார்கள் ! அவன் சட்டை செய்யாமல் வருவான் !சீடர்கள் அவனை த்ள்ளிப்போகச் சொல்லும்படி சங்கரரிடம் வேண்டுவார்கள் !  

புலையனை நோக்கி "தள்ளிப் போ " என்கிறார் சங்கரர் !

" யார் தள்ளிப் போக வேண்டும்? ! இந்த உடம்பா ? இல்லை இந்த உடம்பிற்குள் இருக்கும் ஆத்மா வா ? " என்று பதில் கேள்விகேட்கிறான் புலையன் !

A wonderful and poignant scene in the film !

சங்கர மடங்களின் தலவர்கள் தங்கள் கைகளில் நீளமான ஒரு குச்சியை வைத்திருப்பார்கள் !அதன் நுனியில் வெள்ளை துணி கட்டப்பட்டிருக்கும் ! அதனை "அன்னக் கொடி "என்பார்கள் !

அந்தக் கோடி இருக்குமிடத்தில் யார் வந்தாலும் உணவு  அளிக்கப்படும் !

சிருங்கேரி  மடத்திலும் உணவு அளிக்கப்படுகிறது !

பிராமணர்களுக்கு தனியிடத்தில் !

மற்ற வர்களுக்கு  வேறிடத்தில் !
( உடுப்பியில் பிராமணர்களுக்கு தனி இடத்தில் கோவில்களில் உணவு 
 அளிக்கப்படுவதை  எதிர்த்து பங்களுருவில் மார்க்சிஸ்ட் கட்சி "பந்தி பேத"த்தை எதிர்த்து  போராடும் செய்தியைப் பார்த்தேன் )











Wednesday, May 07, 2014

மகான் நரேந்திர மோடியும் ,

ஆதி சங்கரரும் .......!!!


தினமணி பத்திரிகையில் திருமண வாழ்க்கையைப் பற்றியும் மகான்களைப்பற்றியும் பேராசிரியர் ராசகோபாலன் அவர்கள் கட்டுரை எழுதியிருந்தார் !

அது பற்றி எதிர்வினையாக பலர் எழுதியுள்ளானர் ! 

மனித வாழ்க்கையில் மிக அத்தியாவசியமான தேவைகள் என்று சிலவற்றை சொல்வார்கள் ! 

மூச்சுவிடாமலிருக்கமுடியாது ! தூங்காமலிருக்கமுடியாது ! உண்ணாமலிருக்கமுடியாது ! மலஜலம் கழிக்காமளிருக்க முடியாது ! தன்னுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யாமலிருக்கமுடியாது !

அப்படி இருப்பதா சொன்னால்    அவன் மகா   "பொய்யன்" !

"சங்கர மடமே " இதற்கு உதாராணம் !

நான் "ஆதி சங்கரரை" குறிப்பிடுகிறேன் ! பாதியில்வந்தவர்களை அல்ல !!

சங்கரர் எட்டாம் நுற்றாண்டில் "அவதரித்தார் "என்பார்கள் ! 

அவர்  மண்டன் மிஸ்ரரோடு நடத்திய சம்வாதம்  மிக முக்கியமானதாக  சொல்லப்படுவது உண்டு !

இந்த சம்வாதத்தில் நடுவராக இருந்தது மண்டன்மிஸ்ரருடைய தர்மபத்தினி 
"உதய பாரதி "ஆவார் !

மண்டன் மிஸ்ரரர் தோற்றதாக அறிவிக்கப் பட வேண்டுமானால் அவருடைய தர்மபத்தினியான  என்னையும் தோற்கடிக்க  வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் ! சங்கரரும் ஏற்றுக்கொள்கிறார் !

விவாதம் ஆரம்பமாகிறது ! "ஆண் - பெண் உறவு " தாம்பத்திய சுகம்" 
"அதன் உச்சம் "  உதய பாரதி கேள்விகள் கேட்க நைஷ்டிக பிரும்மச்சாரியான சங்கரர் திணறுகிறார் !

பதினைந்து நாள் தவணை கேட்டு சங்கரர் இது பற்றி அறிய புறப்படுகிறார் ! 

இறந்து போன அரசனின் உடலுக்குள் பாய்ந்து அவனுடைய இரு ராணிகளோடு கூடி   களிக்கிறார் !

சம்வாதத்தில் வெற்றி பெருகிறார் !

உதய பாரதியின் அனுமதியோடு மண்டன மிஸ்ரர் சந்நியாசம் ஏற்கிறார் !

ஆதி சங்கரரே ஏற்றுக்கொண்ட நியதியை இந்த இருபத்திஒன்றாம் 
நூற்றாண்டு மகான்கள் .......!!!

நான் சந்தேகப்படவில்லை !!

தொலை பேசியை ஒட்டுக்கேட்ட விவகாரம் ஒருபக்கம் சூடாக இருக்கிறது !

பார்ப்போம் .....!!!






 







Monday, May 05, 2014

"மனிதன் மட்டும் நிரந்தரமானவன் "



Syamalam Kashyapan
7 mins · Edited · 
மனிதன் மட்டுமே நிரந்தரமானவன்....!!!
மனிதனின் தேடலில் மிகவும் முக்கியமானது அவன் இயற்கைக்கும் தனக்குமுள்ள தோடர்பு பற்றி அலைந்ததாகும்.! அப்படி அலைந்தவன் "கல்" இடறிக் கீழே விழுந்தான் ! இடறிய கல்லை எடுத்து கூத்தாட ஆரம்பித்தான் ! அவனுடைய தேடலும் அதோடு நின்றது !
2000 வது ஆண்டு பிறந்த போது " சென்ற ஆயிரம் ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த முக்கிய மான நிகழ்வு எது ?" என்று பத்திரிகையாளர்கள் அமார்த்திய சென் அவர்களிடம்கேட்டனர் ! "இசுலாம் இந்தியாவில் அறிமுக மானது தான்" என்று அவர் பதில் கூறியுள்ளார் !
தொன்மையான மதங்களில் மிகவும் இளமையானது இசுலாம் ! அதன் காரணமாகவே மனித வளர்ச்சியின் கூறுகளுக்கான நல்ல அம்சங்களுமந்த மதத்தில் கூடுதலாக இருப்பதாக அறீஞர்கள் கூறுவதுண்டு !
கிறித்தவ்ர்கள் நாங்கள் 2000 ஆண்டு மூத்தவர்கள் ! ஆகையால் நாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள் !
2500 ஆண்டுகளுக்கு முன் சித்தார்த்தன் வந்தான் ! புத்தான் ஆனான் ! புத்தமதம் தோன்றியது !
சமகாலத்தில் தோன்றியது தான் சமணமும் !
இவை எல்லவற்றிர்க்கும் மூத்தது இந்து மதம் ! நாங்கள் தான் முதலும்முடிவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்
விஷயம் என்ன வென்றால் நபிகள் நாயகம் அவதரிப்பதற்கு முன்பே அரேபிய மணல் வெளிகளில்
மனிதன் இருந்தான் - வாழ்ந்தான் - செத்தான் !
அவன் என்ன மதம் ?
கிறிஸ்து பிறப்பதற்குமுன்பும் ஐரோப்பிய நாடுகளில்மனிதர்கள் இருந்தார்களே!
அவர்கள் என்ன மதம்?
புத்த பிட்சுக்களைபிராமணிய மதத்தினர் அடித்து விரட்டினர் ! புகலிடம் தேடி பர்மாவுக்கும்,இலங்கைக்கும்,சீனாவுக்கும்,ஜப்பானுக்கும்சென்ற அவர்கள் அங்கே புத்தமதத்தை வளர்த்தனர் ! இவர்கள் போவதற்கு முன்பே அங்கு மனிதர்கள் இருந்தார்களே ?
அவர்கள் என்ன மதம் ?
மத்திய ஆசியாவிலிருந்து "இந்துகுஷ் "மலயை தாண்டி வந்தவர்கள் என்ன மதம் ?
அவர்கள் வரும்பொது ஹரப்பாவிலும்,மெகஞ்சதாரவிலும் வாழ்ந்தார்களே அவர்கள் என்ன மதம் ?
ஒருமதமோகொட்பாடோ உர்வாக வேண்டுமானால் மனிதன் வேண்டுமே ?
மனிதனே இல்லாமல் மதமா ? அப்படியானால் இத்தனை மதங்கள் வேண்டாமே ?
உண்மை வேறு விடமாக உள்ளது !
மனிதன் சாசுவதமானவன் !
மதம் என்பது அவனுக்கு ஏற்பட்ட விபத்து !
Man is eternal ! Religion is accidental !
அது இந்து மதமாக இருக்கலாம் ! புத்தம் சம்ணம்,கிறிஸ்துவ இசுலமாக இருக்கலாம் ! ஏன் ?ஒஷோ என்றும் ஒஹோ என்றும் உருவாகலாம் ! புதிய புதிய மதங்களும் கடவுள்களுமுருவாகிக்கோன்டே இருப்பார்கள் !
காரணம் மதமோ கடவுளோ நிரந்தரமல்ல ! மனிதன் நிரந்தர மானவன் !
இயற்கைக்கும் தனக்கும் உள்ள தோடர்பை தேடச்சென்றவன் கடவுள் என்ற கருத்தோடு முடித்துக் கொண்டான் !
கடவுளைத்தேடிச்சென்ற முனிவர்கள் ,ஞானிகள், மவுனமானார்கள் ! அவர்கள் கட்வுளைக் காணவில்லை ! மனிதனையே கண்டார்கள் !
ராமகிருஷ்ணரும்,விவேகானந்தரும்,வள்ளலாரும் இதனையே நிலை நிறுத்தினார்கள் !
அப்படியானால்மதம் தேவையில்லயா?என்ற கேள்வி எழுகிறது !
தேவை உள்ளவர்கள் வைத்துக் கொள்ளட்டும் !அதற்காக மற்ற மதத்தினர் மீது குரோதம்கொள்ள வேண்டாம் ! எந்த ஒருமத்திற்கும் ஆதரவான்போக்கை அரசு கடப்பிடிக்க வேண்டாம் ! அரசு விவகாரங்களில் மதம் தலையுட வேண்டாம் !
எந்த மதத்தோடுமரசு சாரதிஎஉக்கும் தன்மையையே மதஸ் சார்பின்மை என்கிறோம் !
இந்த கருத்தாக்கம் இன்றோ நேற்றோ உர்வானதல்ல ! 1800 ஆண்டுகளுக்குமுன்பு உருவானது !
கிறித்துவர்களும்,பாகன் களும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்துக் கொண்டிருந்ததை நிறுத்த 
ரொமாபுரியில் இருந்த அறிஞர்களும்,தத்துவ ஞானிகளும் உருவாக்கிய கோட்பாடாகும் இது !
அரசு மதத்திலும்,மதம் அரசிலும் தலயிடக்கூடாது என்ற கருத்து மெல்ல மெல்ல உருவாகி 
வலுப்பேற்றது !
secularisam என்ற மதச்சர்பின்மை கோட்பாடூ உருவானது !
இதற்கு நேர்மாராக மதம் புனிதமானது என்ற sacred school of though என்ற கருத்தும் வந்தது !
இறுதியில் மதச்சார்பினமை என்பது நாகரீக சமூகத்தின் ஒப்பந்தமாக உருப்பேற்றது !
யாருடைய விருப்பத்தின் காரண்மாகவோ,பெருந்தன்மையின் காரண்மாகவோ உருவாகவில்லை !
மனித குலம்தன்னைனாகரிகப்படுத்திக் கொள்ள உருவனது !
இந்தியா சுதந்திரம் பெற்றதும் முஸ்லீம்கள் அதிகமாக உள்ள பாகிஸ்தான் உருவானது ! இசுலாம் அரசு மதம் என்று பாகிஸ்தான் அறிவித்தது !
இந்தியாவிலும் அரசு மதம் இந்துமதம் என்று அறிவிக்க வேண்டும் என்று குரலெழும்பத்தான் செய்தது !
நம்து அர்சியல் நிணயசபை விவாதித்தது ! நமது முன்னோர்கள் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று மிகச்சரியாக அறிவித்தார்கள் !
நாம் அதனக் காக்கும்கடமையைக் கொண்டவர்கள் !
காப்பொம் !!!
Like

Thursday, May 01, 2014

நீயா ? நானா ? எழுப்பிய கேள்வி :

ஆண்டு தோறும் " இன்கிரிமென்ட் "

எதற்கு ...?


சென்ற ஞாயிறு  நீயா ? நானா? நிகழ்ச்சியில் IT கம்பெனிகளில் பணியாற்றுபவர்கள் பற்றிய விவாதம் நடந்தது !

அந்த ஊழியர்கள் பணி ,வேலைபளு , வேலை நேரம் , ஒழுக்கம், மேலதிகாரிகள், பணி நிரந்திர மற்ற நிலை என்று விவாதித்தார்கள் !

பங்கு பெற்ற ஒருவர் ஆண்டுதோறும் appraisal என்ற பெயரில் ஊழியர்களின் வேலை பளுவை அதிகரிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார் !!

ஒவ்வொரு ஆண்டும் increment கெட்கிறீர்களே ? அது மட்டும் நியாயமா ? என்று கோபி நாத் கேட்டார் !

இதற்கான பதில் நிகழ்ச்சியில் சொல்லப்படவில்ல 

மேலை நாடுகளில் ஊதிய ஒப்பந்தங்கள் போடுவதற்கும் நம் நாட்டிற்கும் வித்தியாசம் உண்டு ! தற்போது வாங்கும் ஊதியத்திலிருந்து 10% அல்லது 15% கூடுதலாக தரப்படும் என்று முடிவு செய்வார்கள் ! ஒட்டுமொத்த ஊதியத்திலிருந்து கூடுதல் ஊதியம் நிர்ணயிக்கப்படும் !

நம் நாட்டில் இது கொஞ்சம் மாற்றி அமைக்கப்படுகிறது !

 மொத்த ஊதியத்தில் ஒப்பந்தகாலம் முடியும் வரை எந்த மாற்றமும் இருக்காது ! அடுத்த பேச்சு வார்த்தையில் தான் அது மாற்றப்படும்!

புதிதாக பணியில் சேருபவர் 1000/- ரூ வாங்குகிறார் ! அடுத்த ஆண்டும் அதே ஊதியம் என்பது நியாய மில்லை ! 

அவருடைய திறமை ஓராண்டு அனுபவத்தில் கூடியிருக்கும் ! இரண்டாவது ஆண்டிலவர் செய்யும் பணி அதே தான் என்றாலும் அவருடைய செயல் திறன் கூடியிருக்கும் ! அதையும் கணக்கில் கொண்டு அவருக்கு ஆண்டு வருமானத்தில் கூடுதலாக கொடுக்கப்பட வேண்டும் என்பது நியாயமானதாகும் !

இது  தவிர அவருடைய வளர்ச்சி ,பொறுப்பு ஆகியவையும் கூடுதலாகும் ! அவருக்கு திருமனமாகலாம் ! குழந்தைகள் பிறக்கலாம்  ! சமுக அந்த்ஸ்தும்பொறுப்பும் கூடுதலாகும் ! அவருடைய ஊதியத்தில் அதற்கும் இடம் கொடுக்க வேண்டும் ! இது ஆண்டுதோறும் மாறும் ! 

ஆண்டு increment என்பது இதனை இட்டு நிரப்ப உருவானது !

இதில் ஒரு சில ஆண்டுகளுக்கு இடையே   அவருடைய செயல்திறனும் பரிசீலிக்கப்படும் ! அதற்காக Eficiency Bar என்ற தடையையும் வைத்திருக்கிறார்கள் ! அதன் படி குறிப்பிட்ட  ஆண்டுகளுக்கு இடையே அவருடைய திறமையும் பரிசீலிக்க வாய்ப்பும் உள்ளது !

Annual increment is the right of the employee based on his ever increasing efficiency and also his increasing social responsibilities !












கரந்தை ஜெயக்குமார்
01 மே 2014
  3/3

ஹியூகோ சாவேஸ்
   


ஆண்டு 2002, ஏப்ரல் 11. நாடு முழுக்கக் கலவரம் பரவத் தொடங்கியது. அரசுக்கு ஆதரவுக் கூட்டம் ஒரு புறம், கலகக்காரர்கள் ஒரு புறம் என மோதல்கள் வெடிக்கத் தொடங்கின. கலகக்காரர்களுடன், இராணுவ ஜெனரல்கள் சிலரும் கை கோர்க்கவே, கலவரம் போர்க் களமாய் மாறியது.

     அதிபர் மாளிகையில், அதிபர் அமைச்சர்களுடன் ஆலோசனையில் இருந்தார். இராணுவமே எனக்கு எதிராகவா? பின் எதற்காக நான் அதிபராக இருக்க வேண்டும்.

நான் ராஜினாமா செய்கிறேன்

இந்த நிமிடம் முதல், மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது. கலவரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கலகக்காரர்களிடம் சொல்லுங்கள்.

     2002 ஏப்ரல் 12. விடியற்காலையில் தொலைக் காட்சி, ஒரு வரிச் செய்தி ஒன்றினை ஒளிபரப்பியது.

அதிபர் ராஜினாமா செய்துவிட்டார்.

     அதிபர் கைது செய்யப்பட்டு, டியூனா கோட்டையில் அடைக்கப் பட்டார். பெட்ரோ கார்மோனா (Pedro Carmona) என்பவர் இராணுவத்தால் இடைக்கால அதிபராக நியமிக்கப் பட்டார்.

     நண்பர்களே, உலகில் வேறு எங்கிலும் இதுவரை நடக்காத செயல், கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத காட்சி, அதன்பின், அந்நாட்டில் அரங்கேறத் தொடங்கியது.

     மக்கள் முதன் முறையாக களத்தில் குதித்தனர். அதிபர் உண்மையிலேயே ராஜினாமா செய்துவிட்டாரா? அப்படியானால் அதிபர் இப்போது எங்கே இருக்கிறார்? யார் இந்த பெட்ரோ? நாங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தவரை வெளியே அனுப்பிவிட்டு, இந்த பெட்ரோவுக்கு முடிசூட, இராணுவத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது?

     மக்கள் அதிபரைத் தேடத் தொடங்கினார்கள். இருண்டிருந்த எங்களது வாழ்வினில் ஒளியேற்றிய எங்கள் அதிபர் எங்கே? படுக்கவே இடமின்றிப் பரிதவித்த எமக்கு நிலம் கொடுத்த அதிபர் எங்கே? தற்குறிகளாய், கை நாட்டுப் பேர்வழிகளாய், தெருவில் சுற்றித் திரிந்த எங்களுக்கு, எழுத்தறிவு புகட்டிய, அந்த உத்தம அதிபர் எங்கே? மக்கள் தேடத் தொடங்கினர்.

         மக்கள் ஒவ்வொருவராய் அதிபர் மாளிகையின் முன் கூடத் தொடங்கினர். நூற்றுக் கணக்கில் திரண்ட மக்களின் எண்ணிக்கை, சிறிது நேரத்தில் ஆயிரக் கணக்காய் மாறியது. நேரம் ஆக ஆக, கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததே தவிர குறையவேயில்லை. இலட்சக் கணக்கான மக்கள், பல இலட்சக் கணக்கான மக்கள் அதிபர் மாளிகையையே சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.

      இராணுவத்தினர் கண்ணீர் புகை, தடியடி என என்னென்னவோ செய்து பார்த்தார்கள், கூட்டம்  கலையவேயில்லை. மாறாக கூடிக் கொண்டே இருந்தது.

     இன்னும் சிறிது நேரம் தாமதித்தால், அதிபர் மாளிகையின், ஒவ்வொரு செங்கற் கல்லையும் பிரித்து எடுத்து, மாளிகையையே தரை மட்டமாக்கி விடுவார்கள் போலிருந்தது.

எங்கே எங்கள் அதிபர்?

மக்களின் குரலில், அதிபர் மாளிகையே கிடுகிடுத்தது.

     அதிபர் மாளிகையினுள் இராணுவத்தினர், முதன் முறையாக உட்கார்ந்து யோசித்தனர். அதிபருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கின் முழு பலத்தையும், கண் எதிரிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறாகள் அல்லவா?

அதிபர் விடுவிக்கப் பட்டார்.

ஒரு நாள் மட்டுமே அதிபராக இருந்த பெட்ரோ கார்மோனா வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

      நண்பர்களே, இது ஒன்றும் கற்பனைக் கதையல்ல. நம்புவதற்கு வேண்டுமானால் சிறிது கடினமாக இருக்கலாம், ஆனால் உண்மை, நடந்த உண்மை. வரலாற்றின் பக்கங்களில் இருந்து, என்றென்றும் அழித்து எடுக்க முடியாத, கல்வெட்டாய் பொறிக்கப் பட்ட உண்மை.

     நண்பர்களே, மக்களே ஒன்று திரண்டு அதிபரை மீட்ட நாடு எது தெரியுமா?

வெனிசூலா

மீட்கப்பட்ட அதிபர் யார் தெரியுமா?

ஹியூகோ சாவேஸ்.
---
     வெனிசூலாவில் அமைதி தொலைந்து கொண்டிருந்தது.

      படித்தவர்களுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தாலும சம்பளம் கிடைக்கவில்லை. அப்படியே சம்பளம் கிடைத்தாலும், அது வயிற்றுக்குக் கூடப் போதவில்லை.

     ஒரு பேரூந்தில் ஏறி, நான்கு நிறுத்தங்கள் தள்ளி இறங்கினால், கால் வாசி சம்பளம் காலி. ஒரு ரொட்டி சாப்பிட்டுவிட்டு, ஒரு டீ குடித்தால் இன்னொரு கால் வாசி சம்பளமும் காலி.

     என்னத்தான் செய்வார்கள் மக்கள். செய்தித் தாட்களைப் பிரித்தால், உலக வங்கியிடம் கடன் வாங்கி இருக்கிறோம். வட்டி கட்டவே வழியில்லை. கஜானாவில் காசே இல்லை என ஆட்சியாளர்களின் புலம்பல். உலக வங்கியிடம் கடன் வாங்கி, என்ன செய்தார்கள் என யாருக்கும் தெரியவில்லை.

     பள்ளிப் படிப்பை முடித்த ஹியூகோ சாவேஸ்க்கு ஓர் ஆசை. இராணுவப் பயிற்சிப் பள்ளியில் சேர வேண்டும் என்று. லத்தீன் அமெரிக்காவிலேயே மிகவும் பழமையான பள்ளியாகிய, Venezulean Academy of Military Sciences  என்னும் இராணுவப் பள்ளியில் சேர்ந்தார். இந்த இராணுவப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக அமைந்தவர்தான், சாவேஸுக்குப் புதுப் புது புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார்.

     சாவேஸ் படித்தப் பாடங்களிலேயே அவரை அதிகம் கவர்ந்தது அரசியல். குறிப்பாக மாவோ.

     வாசிக்க வாசிக்க சில விசயங்கள் அவருக்குத் தெளிவாய் தெரிந்தன. போர் என்பது துப்பாக்கிகளோ, டேங்குகளோ, குண்டு வீசும் விமானங்களோ அல்ல, போர் என்றால் மனிதர்கள். போரில் மனிதர்கள்தான் முக்கியமே தவிர, ஆயுதங்கள் அல்ல.

      பால் குடித்தப் பூனையாக மாறினார் சாவேஸ். புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தார். சைமன் பொலிவரை அவர் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கியது இங்குதான். பொலிவரைப் போல் சாவேஸின் மனதில்  அத்தனை ஆழமாகப் பதிந்து போனவ்ர்கள் யாரும் இல்லை.

      இராணுவப் பள்ளியில் இருந்து வெளியேறிய சாவேஸ், 1983 ஆம் ஆண்டு, ஜுலை 24 ஆம் நாள், பொலிவரின் 200 வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், பொலிவர் புரட்சி இராணுவம் 200 ( Bolivar Revolutionary Army 200)  என்னும் அமைப்பினைத் தொடங்கினார்.

       துப்பாக்கி ஏந்தி களத்தில் இறங்கினார். கைது செய்யப் பட்டார்.



   
அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த சாவேஸ் கைது செய்யப் பட்டார். சிறையில் அடைக்கப் பட்டார் என்னும் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஒரே இரவில் நாடு முழுவதும் சாவேஸ் பிரபலமாகி விட்டார். நமக்காகத்தான் இவர் போராடுகிறார். நமக்காகத்தான் இவர் சரணடைந்திருக்கிறார்.


     சிறையில் சாவேஸ் நடந்து முடிந்த சம்பவங்களை அசை போட்டுக் கொண்டே இருந்தார். தன்னுடைய இயக்கம் தோல்வியைத் தழுவியதற்கு இரண்டு காரணங்களைக் கண்டார்.

    ஒன்று மக்களின் ஆதரவு. நாமாகவே சிந்தித்தோம். நாமாகவே ஆயுதம் தூக்கினோம். நாமாகவே போராட முடிவெடுத்து விட்டோம். ரஷ்யா, கியூபா, சீனா போன்ற நாடுகளில் புரட்சி அரசாங்கம் நிறுவப் பட்டது என்றால், அது முழுக்க முழுக்க மக்களின் ஒத்துழைப்பினால் மட்டுமே நிகழ்ந்ததாகும்.

     லெனின் செய்தது இதைத்தான். காஸ்ட்ரோ செய்தது இதைத்தான். மாவோ செய்ததும் இதைத்தான்.

     இரண்டாவது ஆயுதப் போராட்டம். அதுதான் ஓரே தீர்வு என்ற முடிவுக்கு ஏன் வந்தோம்? யார் சொல்லி ஆயுதத்தைத் தூக்கினோம், மக்களா? இல்லையே.

    மொத்தத்தில் தவறு யாரிடம்.

     என்னிடம்தான் என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

    1993 இல் வெனிசூலாவில் தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது. கால்டேரா என்பவர் அரசை எதிர்த்துக் களமிறங்கினார்.

     அன்புள்ள வெனிசூலா மக்களே, நாங்கள் உங்களுக்காகவே போராடப் பிறந்தவர்கள். பிப்ரவரி 1992 இல் நாங்கள் நடத்திய வீரப் போராட்டத்தை நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். உங்களுக்காகவே எங்களது அண்ணன், தானைத் தலைவர், சிங்கத் தளபதி ஹியூகோ சாவேஸ் அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். சாவேஸின் ஆசி பெற்றவர்கள் நாங்கள். எனவே உங்களது பொன்னான வாக்குகளை ....

       செய்தியறிந்த சாவேஸ் சிறையில் கர்ஜித்தார். துப்பாக்கி ஏந்திய, ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம் என உறுதியளித்து, கடைசியில் கழுத்தறுத்தவர்கள் அல்லவா இவர்கள். இப்பொழுது என் பெயரைச் சொல்லியல்லவா ஓட்டுக் கேட்கிறார்கள்.

     நண்பர்களே, 1994 இல் நடைபெற்றத் தேர்தலில் கால்டேரா வெற்றி பெற்றார். ஆட்சியைப் பிடித்த கால்டேரா செய்த ஒரே உருப்படியான காரியம், சாவேஸை விடுதலை செய்ததுதான். சாவேஸின் பெயரைச் சொல்லியல்லவா வெற்றி பெற்றிருக்கிறார். சாவேஸை உள்ளேயே வைத்திருந்தால், முரண்பாடாகத் தோன்றுமில்லையா? அதற்காக விடுதலை செய்தார்.

      சாவேஸ் சிறையை விட்டு வெளியே வந்ததும், வராததுமாக, இயக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். இயக்கத் தோழர்களை அழைத்தார்.

இதற்கு முன்னாள் நாம் செய்யாத பல விசயங்களை இனி செய்யப் போகிறோம்.

     வெனிசூலா வரைபடத்தைப் பிரித்து வைத்துக் கொண்டார். கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி, மத்தியப் பகுதி என மூன்றாகப் பிரித்தார்.

       ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனிக் குழு. ஒரு சந்து, பொந்து விடாமல் முழுப் பகுதியையும் சுற்றி வரவேண்டும். சுற்றி வருவது என்றால், ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, ஒலிப் பெருக்கியை அலற விட்டுக் கொண்டு அல்ல.

     ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்ட வேண்டும். வீட்டிலுள்ள ஒவ்வொருவரிடமும் பேச வேண்டும். மாணவர்கள், வயதானவர்கள், வேலைக்குப் போகிறவர்கள், வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரையும் சந்திக்க வேண்டும்.

     மக்களின் வாழ்க்கை நிலையை ஆராயுங்கள். அவர்களுடைய வீடுகளை ஆராயுங்கள். அவர்களுடைய பொருளாதார நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய அரசியல் உணர்வுகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள்  என்ன? அரசாங்கத்திடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

     சந்து பொந்தெல்லாம் சென்றார்கள். ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டினார்கள். பேசினார்கள்.

     நண்பர்களே, ஒரு நாள் இரு நாள் அல்ல, ஒரு மாதம் இரு மாதமல்ல. இரண்டு ஆண்டுகள் சுற்றினார்கள். கதவுகளைத் தட்டினார்கள். சாவேஸும் சுற்றினார். சுற்றிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு வீட்டின் கதவாகத் தட்டிக் கொண்டே இருந்தார்.

      தனது இயக்கத்தின் பெயரை ஐந்தாம் குடியரசு இயக்கம் என மாற்றினார்.

     1998, டிசம்பர் 6 ல் வெனிசூலாவில் தேர்தல் நடைபெற்றது. 1999, பிப்ரவரி 2 ஆம் நாள், வெனிசூலாவின் அதிபராக ஹியூகோ சாவேஸ் பொறுப் பேற்றுக் கொண்டார்.

        அதிபர் பதவியேற்றவுடன் மக்கள் முன் உரையாற்றினார்.

     இன்று போர் தொடங்குகிறது. இந்தப் போர் லத்தீன் அமெரிக்க மண்ணில், அராஜகமாகக் குடியேறிய, ஐரோப்பிய, அமெரிக்க, கரீபிய ஆட்சியாளர்களுக்கு எதிரானது. இந்தப் போரில் மடிவதைத் தவிர வேறு வழியில்லை. இனி பணிந்து போவது இயலாது. வெனிசூலாவின் இந்தப் புரட்சிகர மாற்றம், ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்கப் புரட்சிக்கும் முன்னோடியாகத் திகழும்.  தன்மானத்துடன் கூடிய சமாதானத்துக்கானப் போராட்டம் இது.

     ஏப்ரல் 1999. இராணுவ உயர் அதிகாரிகளை வரவழைத்துப் பேசினார்.

      இன்று முதல் வெனிசூலா இராணுவம் நாட்டுக்காக சில உருப்படியான வேலைகளைச் செய்யப் போகிறது. வெனிசூலாவைக் கட்டமைக்கும் பொறுப்பை உங்களிடம் வழங்கப் போகிறேன். இந்த நிமிடம் தொடங்கி உங்கள் அத்தனை பேருடைய பொறுப்பும் மாறப் போகிறது.

     கவனமாகக் கேளுங்கள். நம் நாட்டு மக்கள் ஏழ்மையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். வீடில்லை, நிலமில்லை, நல்ல உணவு இல்லவே இல்லை. ஆகவே அவர்களுடையப் போராட்டத்தில், நீங்கள் அனைவரும், உங்களையும் இணைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.

புரியவில்லையே

உங்களுடைய சீருடை, துப்பாக்கி எல்லாவற்றையும், ஒரு மூலையில் வைத்துவிட்டு, மக்களுக்காக வேலை செய்யுங்கள். இத்திட்டத்தின் பெயர் பொலிவர் திட்டம் 2000.

     மொத்தம் 40,000 படை வீர்ர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

     மக்களின் தேவையை உணர்ந்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்கள். வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லையா? மருத்துவரை வரவழைத்தார்கள். சாலைகளைச் செப்பனிட்டனர். கிணறுகள் தோண்டினர்.

     இராணுவப் படை விமானங்கள் பயணிகள் விமானங்களாக மாறின.

     போர்க் கப்பல்கள், கடல் பகுதியில் வாழும் மக்களுக்கு உதவத் தொடங்கின. மீன் பிடித்தொழில எப்படி நடக்கிறது என அருகில் இருந்து பார்த்தார்கள். இதே தொழிலை எப்படி, முறைப்படி செய்தால், ஆதாயம் கிடைக்கும் என்பதைப் புரிய வைத்தனர். மீனவர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தனர்.

     பரான்கோ யோபல் ( Barranco Yopal ) என்றொரு பகுதி. வெனிசூலாவுக்குள் இருக்கும் ஒரு சோமாலியா இது பழங்குடியினர் நிரம்பிய பகுதி.

      இப் பழங்குடியினருக்கு மருத்துவ மனைகள். குழந்தைகள் படிப்பதற்குப் பள்ளிக் கூடங்கள் கட்டப் பெற்றன.

      இராணுவ மருத்துவ மனைகள் பொது மக்களுக்காகத் திறந்து விடப் பட்டன. குட்டி, குட்டியாக பல அரசு மருத்துவ மனைகள், அவசர கதியில், ஊரெங்கும், நாடெங்கும் தோன்றின.

     இராணுவத்தையும், மக்களையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து சாதித்துக் காட்டினார் சாவேஸ்.

      நண்பர்களே, இது மட்டுமல்ல, வெனிசூலாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தையே திருத்தி, மாற்றி எழுதினார் சாவேஸ்.

      சாவேஸ் திருத்தி எழுதிய வெனிசூலாவின் அரசியலமைப்புச் சட்டம்தான், இன்று உலகிலேயே மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டம்.

      தேசத்தின் பெயரையும் மாற்றினார். வெனிசூலா என்பது வெனிசூலா பொலிவரியக் குடியரசு ( Bolivarian Republic of Venezula)  என மாற்றப் பட்டது.

     அடுத்து, சாவேஸின் கவனம் நிலத்தின் மீது திரும்பியது. நாட்டிலுள்ள 75 சதவிகித நிலங்கள், வெறும் ஐந்து சதவிகித மக்களிடம் இருந்தது.

      அதிகப் படியான நிலம் வைத்திருப்பவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது.

     உங்களிடம் உள்ள நிலத்தில் எண்பது சதவிகிதத்திற்கும் மேல் உபயோகப் படுத்தப் படாமல் இருக்கிறது. ஏன்? உடனடியாக விளக்கம் அளிக்கவும்.

     பதில் வரவில்லை.

     நிலத்தை ஒப்படைத்து விட்டு ஓடிவிடுங்கள். இல்லையேல் சட்டம் பாயும்.

     பண்ணையார்கள் நிலத்தை விட்டு விட்டு வெளியேறிக் காணாமல் போனார்கள்.

     கைப்பற்றப் பட்ட நிலங்கள், ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டன. அரசே விவசாயிகளை வரவழைத்து நிலங்களை வளப்படுத்திக் கொடுத்தது.

      நண்பர்களே, திட்டங்கள் அனைத்திலும் சீரியதாய், மேலானதாய் ஓர் திட்டம். ராபின்ஸன் திட்டம். எழுத்தறிவிப்பதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
கற்றுக் கொடுக்க விரும்புகிறவர்கள் முன்னால் வாருங்கள்.
கற்க விரும்புகிறவர்கள் தயாராகுங்கள்.

      நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான ஆர்வலர்கள் துடிப்புடன் முன் வந்தனர். அனைவருக்கும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும், படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சின்னச் சின்னக் கணக்குகளை போடத் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் பாடத் திட்டம்.

      ஒரே ஆண்டில் 1,250,000 பேர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர். வெனிசூலாவின் இன்றைய எழுத்தறிவு சதவிகிதம் 99.

      நண்பர்களே, சாதித்துக் காட்டிய இவர்தான் சாவேஸ்.

     ஆண்டு 2006, செப்டம்பர் 20. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றார் சாவேஸ்.

     சபை நிரம்பியிருந்தது. உரை நிகழ்த்த வேண்டிய சாவேஸ், தன்னுடன் ஒரு மருத்துவரையும், ஒரு பாதுகாப்பு அதிகாரியையும் உடன் அழைத்து வந்திருந்தார். ஆனால் அமெரிக்க அரசாங்கம், அவர்கள் இருவரையும், பார்வையாளர்களாகக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரக இல்லை. அவர்களை பிடித்துக் கொண்டு போய், அவர்கள் வந்த விமானத்திலேயே அடைத்து வைத்தது.

     தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, அமைதியாய் மேடை ஏறினார் சாவேஸ். கையில் ஒரு புத்தகம்.

     உலக நாடுகளை ஆளும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளே, அனைவருக்கும் என் வாழ்த்தும், வணக்கமும்.

     மிகவும் அமைதியாகத்தான் தன் உரையைத் தொடங்கினார். கையோடு கொண்டு வந்திருந்த, புத்தகத்தை, அனைவருக்கும் தெரியும்படி உயர்த்திக் காட்டினார்.
   




இதுவரை நீங்கள் யாரும் வாசித்திராத, இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைவரும், மிகுந்த மரியாதையுடன் போற்றும், ஓர் அறிவு ஜீவி நோம் சாம்ஸ்கி ( Noam Chomsky) , இவர் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள புத்தகம் இது.
Hegemony or survival: The Imperialist Strategy of the United States.
இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் என்னென்ன நிகழ்ந்தன, இப்பொழுது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் வாழும் இந்த பூமி எதிர் கொண்டுள்ள பெரும் அபாயங்கள், ஆபத்துகள் என்னென்ன, என்பது போன்ற அத்தனை விசயங்களையும் விரிவாக புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்.

     ஐ.நா சபை உறுப்பினர்கள் அனைவரும் சாவேஸை உன்னிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தனர். காரணம் நோம் சாம்ஸ்கி ஒரு அமெரிக்க எதிர்ப்பாளர். குறிப்பாக புஷ் எதிர்ப்பாளர்.

     சாவேஸ் தனது வழக்கமான தொனிக்கு மாறினார். அவரது முகம் இறுகியது.

    அந்த சாத்தான் இதே இடத்திற்கு நேற்று வந்திருந்தது. இதோ இந்த இடத்தில் (மேடையைச் சுட்டிக் காட்டுகிறார்) இங்கேதான் நின்று பேசிக் கொண்டிருந்தது. அது வந்து சென்றதன் அடையாளமாக, துர்நாற்றம், இன்னமும் இங்கே அடித்துக் கொண்டிருக்கிறது.

     சாவேஸின் உரையை நேரடியாக பதிவு செய்து கொண்டிருந்த தொலைக் காட்சிக் காமிராக்கள் ஒரு நிமிடம் அதிர்ந்தன. கூடியிருந்த உலகநாடுகளின் தலைவர்களுக்கு, பேச்சு மூச்சு இல்லை.அதிர்ச்சியில் உறைந்தனர்.

இப்படியும் ஒரு மனிதரால் பேச முடியுமா?
எத்தனை நெஞ்சுரம்
எத்தனை துணிச்சல்.

     நண்பர்களே, யாருக்கும் அஞ்சாத சாவேஸ். மிகவும் பின் தங்கிய, பொருளாதார பலம் இல்லாத தேசமாக இருந்த வெனிசூலாவை, தனது திறமை மிகுந்த ஆட்சியாலும், அச்சமற்ற நடவடிக்கைகளாலும, வளரும் நாடுகளில் ஒன்றாக உயர்த்திக் காட்டிய சாவேஸ், கேவலம் புற்று நோய்க்குப் பலியானதுதான் சோகத்திலும் சோகம்.


ஹியூகோ சாவேஸைப் போற்றுவோம்.





சாவேஸ் இறுதி ஊர்வலக் காட்சிகள்