Friday, December 19, 2014

இயக்குனர் மகேந்திரன் 

"கருப்பு கருணா" வை தெரிந்திருக்க மாட்டார் ....!!



சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது ! கோ ட்டு போட்ட பெரியவர்கள் ,சரத்குமார் ஆகியொர் ஆங்கிலத்தில் பேசினார்கள் !  தமிழக அமைச்சர் பேசும் போது விழாவுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதைக் குறிப்பிட்டார் !

இயக்குனர் மகேந்திரன் பேசினார் !

"உலகத்திரைப்படங்களைப் பற்றி அறிவேன் ! திரைப்பட உலகத்திப் பற்றி அறிந்து கொள்ளவில்லை " என்று ஆரம்பித்தார் !

" நமது கதாநாயகர்களும்,நாயகிகளும் இன்னும் மரத்தைசுற்றி வருகிறார்கள் ! இதை நிறுத்தப்போகிறோமா ? அயல்நாட்டு படங்கள பார்த்து ,அவர்களின் பண்பாட்டு, பழக்கவழக்கங்களை அறிந்து கொள்கிறோம் ! நமது ரசனையை விரிவு படுத்து கிறோம் ! இதற்கு இத்தகைய விழாக்கள் உதவுகின்றன ! "

"சென்னையத்தாண்டி இந்தப்படங்களை கொண்டு போக வேண்டாமா ! அதற்காக என்ன செய்யப்போகிறோம் ! செய்யவேண்டாமா ? "என்று கேட்டார் !

" ஐயா ! இவை நடக்கத்தான் செய்கின்றன ! "என்று கத்தவேண்டும் போல் தோன்றியது !

"சாலையே இல்லாத குக்கிராமத்திற்கு" புரொஜெக்டரை " தோளில் சுமந்து கொண்டு "கருப்பு கருணா "என்ற எங்கள்  எஸ்.கருணா உலக த்தின் மிகச்சிறந்த படங்களை போட்டு காண்பிக்கிறான் ! ரயிலே போகாத "கம்பம் நகரில் " சர்வதேச திரைப்பட விழாவை நடத்து கிறான் ! அவனுக்குத் துணையாக எங்கள் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்கம்  இருக்கிறது ! "

"மத்திய மாநில அரசுகளிடமிருந்து "மூக்கா துட்டு " பெறாமல் மூச்சு காட்டாமல்    இது நடக்கிறது !"

இயக்குனர் லெனின் போன்ற சில நல்லவர்கள் எங்களுக்கு உதவியாக இருக்கிறார்கள் !

வளர்ந்து வருகிறோம் !

மாற்று சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவோம் !!!  

உங்களையும் அழைப்போம் ! 

வாருங்கள் ! பாருங்கள் !

அந்த மக்கள் சர்வதேச திரைப்பட விழாவை !!!

 எல்லாப் புகழும் த.மு.எ.க.சங்கத்திற்கே !!!

  "  


1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல செயல்...
தொடரட்டும்.