Monday, December 15, 2014

"அவா " பாடப்போறா ,

"இவா "ளுக்காக ....!!!




சென்ற  வரம் முழுவதும் சென்னையில் இருந்தேன் ! கடுமையான குளிர் பகுதியிலிருந்து வந்தவனுக்கு சென்னையின் மிதமான குளிரும் ,அவ்வப்போது பெய்த மழையும் ரம்மியமாக இருந்தது ! 

நகரத்து "பிளக்ஸ் " போர்டுகளில் நித்யஸ்ரீ அவர்களும்,சௌம்யா அவர்களும் கர்நாடக இசையை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் !

ம்யுசிக அகாடமி,நாரதகான சபா என்று பட்டியலிட்டு .ரவா தோசை,அடை அவியல், பூரி கிழங்கு, என்று எந்தெந்த காண்டீனில் எது நன்றாக இருந்தது என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்து விட்டன !

ஒய்வு பெற்ற ஐ.பி.எஸ் ஆபீசர் நட்ராஜிளிருந்து மாயவரத்தான் வரை விமரிசிக்கப் போகிறார்கள் !

சில நாட்களுக்கு முன்பாக டி .எம்.கிருஷ்ணா எழுதிய கட்டுரை நினைவு தட்டியது!

"இசைக்கு சாதி உண்டா ? நாதஸ்வரத்தை குறிப்பிட்ட சாதியினரே பாடுகிறார்கள் ? கர்நாடக இசை  "அந்த " சாதிக்கு மட்டுமே உள்ளதா ?"

கிருஷ்ணா தன கட்டுரையில் எழுப்பியுள்ள கேள்விகள் இவை !

இன்று காலை கோவை வக்கீல் தோழர் ஞான பாரதியை நலம் விசாரித்தபோது அவர் சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது !

இசையில் ஆரோகணம்,அவாரொகணம் என்பது முறை ! இதனை மீறி  ஆரோகணம் மட்டுமே கொண்ட இசையை நிகழ்த்திக் காட்டியவர்  இளைய ராஜா ! பிஸ்மில்லாகான் "சாஸ்த்ரீய "சங்கிதத்தில் போற்றப்படுபவர் !" என்று அவர் விளைக்கினார் !

--------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருக்கிறது "உரூர்-ஒல்காத் குப்பம் "!

முழுவதும் மீனவ சமூகத்தைச் செர்ந்தவர்கள் வாழும் பகுதி ! இங்கு மார்கழி விழா கொண்டாட விருக்கிறார்கள் !

செவ்விசையை கார்போரெட் நிருவனங்கள் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக உருவான அமைப்பு "வெட்டிவேர் கூட்டமைப்பு "என்பதாகும் !இந்த அமைப்பைச் சேர்ந்த திவ்யா நாராயணன் !"செவ்விசை மேட்டிமைத்தனமாகிவிட்டது ! இதனை பலதளங்களை சார்ந்த மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் ! நாட்டுப்புற இசையோடு இவற்றையும் உழைக்கும்  மக்களூக்கு கொடுக்க வேண்டும் !"என்கிறார் !

குப்பத்தில் உள்ள கோவில் வாயிலில் இந்த விழா நடை பெறவிருக்கிறது !டிசம்பர் 29,30 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது !

குப்பத்து குழந்தைகளின் வில்லுப்பாட்டோடு  29ம் தேதி நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன !

அன்று மாலை 6.30 க்கு பி உன்னிகிரு ஷ்ணன் செவ்விசை நிகழ்ச்சி அளிக்கிறார் ! அதன் பிறகு :"கட்டைகூத்து " நிகழ்ச்சி நடக்கிறது !

மறுனாள் ஆர்.குமரேஷ் (வயலின்) ஜெயந்தி (வீணை ) சங்கரநாராயணன் (மிருதங்கம்) அருண்குமார் (மோர்சிங் ) நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது ! பின்னர் கலாக்ஷேத்ரா குழுவினரின் நடன  நிகழ்ச்சி உள்ளது ! 

"செவ்விசை மக்களை சென்றடைய வேண்டும் -இசைக்கு சாதி,மத மாச்சரியங்கள் கிடையாது "என்று செயல்படும் கிருஷ்ணா  இதன் பின்னணியில் உள்ளார் என்பது சொல்லாமலேயே விளங்கும் செய்தியாகும் !






4 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...


எங்கள் மாயவரம் பகுதியில் தலைஞாயிறு, சீர்காழி போன்ற ஊர்களில் பறையர்கள் மிகுதியான அளவில் நாதஸ்வரம் இசைக்கிறார்கள். 7 பேர் 8 பேர் கொண்ட பெரிய குழுவாக இணைந்து நாதஸ்வரக் கச்சேரி செய்கின்றனர். அதுவும் ஆண்களும் பெண்களும் இணைந்து இசைக் கச்சேரி நடத்துகின்றனர். அனைவரும் இசைப் பள்ளியில் இசை பயின்றவர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

செவ்விசை மக்களை சென்றடைய வேண்டும் -இசைக்கு சாதி,மத மாச்சரியங்கள் கிடையாதுதான்

சிவகுமாரன் said...

வேண்டாம் இசைக்குள் சாதி

'பரிவை' சே.குமார் said...

இசைக்குள் ஜாதி மதங்கள் இணைந்து வரக்கூடாது... அது காட்டாறாய் எல்லாப் பக்கமும் பரவ வேண்டும்... செவ்விசை மக்களைச் சென்றடையட்டும் ஐயா...