Saturday, September 13, 2014

கேரள கவர்னர் நீதிபதி சதாசிவம் ,

பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் ,

கொலைகாரன் தரா சிங் ............!



பழங்குடி மக்கள் வாழும் பகுதி மொகின்பூர்  !  ஓடிஸா மாநிலத்தில் இருக்கிறது ! இந்தமக்களுக்கு சேவை செய்து வந்தவர் பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ்சும் அவர் மனைவியும்!

பழங்குடி பெண்கள் மார்பக புற்று நோயால் அவதிப்பட்டனர் ! தங்களுக்கு வந்துள்ளது புற்று நோய் என்பது தெரியாமல் வாழ்ந்தவர்கள் அவர்கள் ! அவ்ர்களுக்கு கச்சை அணிய சொல்லிக்கொடுத்து (Bra ) உதவியவர் கிரஹாம் அவர்களின் மனைவி ! மாதாமாதம் படும் துன்பத்திலிருந்து விடுபட ,சுகாதாரம் கற்றுக் கொடுத்து அவர்களுக்கு நாப்கின் (napkin ) வழங்கி பழக்கினார் !

கிரஹாம் குஷ்ட ரோகிகளுக்காக மருத்துவமனை கட்டி அவர்களுக்கு  உதவியாக இருந்தார் !

பஜ்ரங் தளத்திச் சேர்ந்தவன் தாரா சிங் ! இவன் வேறு  மாநிலத்தவன் ! இஸ்லாமியர் என்றால் வெறுப்பவன் ! தற்போது கிறிஸ்துவர்களையும் வெறுக்கக் கற்றுக்கொடுத்துள்ளார்கள் !

பாதிரியார் கிரஹாம் ஒருநாளிரவு ஜீப்வண்டியில் (van ) தன 11வயது 7 வயது மகன்களோடு தூங்கிக் கொண்டு இருந்தார் ! தாராசிங் அவனது கூட்டாளிகள் 12 போரோடு வந்து வண்டிய பெற்றோல் ஊற்றி தீவைத்து பாதிரியார் ,அவர் மகன்கள் ஆகியோரை  கொளுத்தி கொன்றான் !

சி.பி.ஐ விசாரித்து வழக்கு போட்டது ! நீதிமன்றம் தாராசிங் குக்கு மரண தன்டனை விதித்தது !

அவன் உயர் நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்தான் ! உயர் நீதி மன்றம் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது! சி.பி ஐ இதனை எதிர்த்து உச்ச நிதிமன்றம் சென்றது !

"கிரஹாம் பாதிரியார் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுகிறார் ! அவருக்கு பாடம் கற்பிப்பது தான் என்நோக்கம் ! அவரை  கொல்வது என் நோக்கமல்ல ! " என்பது தான் தாராசிங் வாதம் ! 

உச்ச நீதி மன்றம் இதனை விசாரித்தது !" பாதிரியாருக்கு பாடம் கற்பிக்கவே தாராசிங் முயன்றிருக்கிறார் ! இதனை தீர விசாரித்து உயர் நீதி மன்றம் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது சரியே  ! நாங்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பி னோடு  உடன் படுகிறோம் " என்று தீர்பளித்தது !

உச்ச  நீதி மன்ற நிதிபதியாக இருந்தவர் தற்போதைய கேரள கவர்னர் பழனிச்சாமி சதாசிவம் அவர்கள் 1!!







1 comments:

சிவகுமாரன் said...

அடப் பாவிகளா ?!!!