Friday, July 25, 2014

"நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமி !!!"


மூடப்பழக்க வழக்கங்களை முடிவுக்கு கொண்டுவர தன்  வாழ்  நாள் முழுமையும் போராடியவர் டாக்டர் .நரேந்திர தபோல்கர் !

பில்லி ,சூனியம், பேய்,பிசாசு ஓட்டும் மந்திரவதிகளிலிருந்து, ஏசு  வருகிறார் ,புட்டபர்த்தி   சாய்பாபா என்ற போலிச்சாமியார் வரை ஓட ஓட விரட்டியவர் அவர் !

ஏசுவின் கண்களிலிருந்து கண்ணிர் வருகிறது என்று கூறி அதனை புனித நீராக குடிக்கும் கிறிஸ்தவர்களிடம் அது புனித நீரல்ல , மாடியில் உள்ளகழிபிடத்திலிருந்து கசியும் "கழிவு நீர்" என்று நிருபித்த "இடமருகு" அவர்களின் துணையாக இருந்தவர்" தபோல்கர் "!

மராட்டிய மாநில மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அவர் !  

2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20   நடை பயிற்சியில் சென்று கொண்டிருந்த போது அவரை சுட்டுக் கொன்றார்கள் !

மராட்டிய முதல்வர் காந்தியைக் கொன்றவர்கள் தான் தபோலகரையும் கொன்றார்கள் என்று பகிரங்கமாக அறிவித்தார் !

மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கான அவசர சட்டத்தையும் அறிவித்தார் !

இந்த கொலைகாரர்களைகண்டுபிடிக்க புனே நகர போலீஸ் கமிஷனர் "குலாப் ராவ்  போல் "தலைமையில்  ஒரு குழு செயல் பட்டு வருகிறது ! 

ஒருவருடம் நெருங்கி விட்டது ! அவர்களால் "கண்டுபிடிக்க" முடியவில்லை !

தற்போது புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ! 

விளக்கு ஏற்றி கோலம் போடுகிறார்கள் ! அதன் முன் கோலம் போட்டு ஒருபலகையை வைத்தார்கள் ! சாமிகும்பிட்டு அதன் மெலொருகிண்ணத்தை வைத்து "ஆவி" யை வரவழைத்து "குறி "கேட்கிறார்கள் !

"Gulaab rao Pol  using  planchet to crack Narendra Dabholkar s  murder mystery " TOI - 26-7-14   

"நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமி "

(என் பிரியமான தாய் நாடே  உன்னை வணங்குகிறேன் ) 




2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆவியை வரவழைத்துக் குறி கேட்பதா?
டாக்டர் .நரேந்திர தபோல்கர் அவர்களை அவமானப்படுத்தும் செயல் அல்லவா?

அப்பாதுரை said...

வருந்துகிறேன்.
மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கம் பற்றி தெரிந்தால் எழுதுங்களேன்?