Thursday, June 12, 2014

இது மீனவர்பிரச்சினை மட்டுமல்ல ...!!!


தமிழக முதல்வர் "அம்மா "அவர்கள்  பிரதமரிடம் சொல்லி விட்டா ர்கள் .மீனவர்கள் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டிக் கொண்டுள்ளார்கள் !

நம்மூர் அவசர குடுக்கைகள் கச்சதீவை திரும்ப் பெறவேண்டும் என்கிறார்கள்    கச்சதீவோடு பிரச்சினைமுடியாது!

நமது பாரம்பரிய மீன்பிடி உரிமை என்பது முக்கியமானது ! கச்ச்தீவின் கிழக்கே 21 கடல்மைல், வடக்கே 15 மைல் , நெடுந்தீவுக்கு கிழக்கே 11மைல் ,தெற்கே 4மெயில்,ராமேஸ்வரத்திற்கு பக்கம்,தலைமன்னாரிலிருந்து 21 மைல் ,தற்போது இலங்கைக்கு சொந்தமான தீவுகள் என்று காலங்காலமாக ,மீன் பிடிக்கும் உரிமையை பாரம்பரியமாகக் கொண்டவர்கள் நாம் !

இந்த உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை  ! 

கடல் எல்லைகளை குறிக்க சர்வதேச விதிமுறைகலுள்ளன ! 1971மாண்டு வாக்கில் ஜமைக்கா நாட்டில் சர்வதேச மாநாடு நடந்தது ! மிகக்குறுகிய கடல் பகுதியில் இருக்கும்  நாடுகள் கடல் எல்லையை வகுக்க விதிகள் இந்த மாநாட்டில் வகுக்கப்பட்டுள்ளன உள்ளன ! 

பாதுகாப்பு க்கான பகுதியில் மட்டும்  கடல் எல்லை  வகுக்கலாம் ! மற்ற பகுதிகளில்   இரு நாட்டவரும் பயன்படுத்தலாமேன்பது விதி ! எந்த காரணம் கொண்டும் நாம் இதனை விட்டுக் கொடுக்கக் கூடாது !

ஆண்டுக்கு 25000 கோடி வருமானம் கிடைக்கிறது ! அந்த மீ னவர்களுக்கு கொள்முதல் விலையில் டீசல் கொடுக்க வேண்டும் ! 

சேது கால் வாய் திட்டம் வந்தால் மன்னாருக்கு வடக்கே சென்று மீன்பிடிக்கமுடியும் ! ஆனால் தற்போது மணல்மேடுகள் உள்ளதால் நமதுமீனவர்கள் சிரமப்ப்படுகிறார்கள் ! அங்கு வாய்க்கால்  வெட்டி கொடுத்தால் அவ்ர்கள் சென்று வரமுடியும் ! 

கேரள மீனவர்கள் சுற்றி வந்து அங்குள்ள மீன் வளத்தினை  அனுபவித்து வருகிறார்கள் !

இறல்மீனுக்கான  கிராக்கி அதிகம் ! மீன் வியாபாரிகள் நமதுமீனவர்களிடம் ஈன கிரயத்திகு வாங்கி ஏற்றுமதி செய்து கொள்ளைலாபம் ஈட்டுகிறார்கள் !

தஞ்சையிலும் ஆந்திராகடற் கரையிலும்மீன்பண்ணைகள் இருக்கின்றன! இவற்றில் இறால் வளர்க்கிறார்கள்,! தாய்லாந்திலிருந்து குஞசு  மீன்களை இறக்குமதி செய்து வளர்க்கிறார்கள் ! அவை எடை கூட வேண்டும் என்பதற்காக குஞ்சாக இருக்கும் போது அவற்றின்  "கண்களை " குத்தி குருடாக்கிவிடுவார்கள் ! குருட்டு மின்கள்  ரசாயனம் கலந்து உணவினை உண்டு கொழுக்கின்றன !    

மிகக் குறந்த விலையில் நமது வியாபாரிகள் வாங்கி ,கடல்  இறாலோடு ,பண்ணை இறாலைக் கலந்து  ஏற்றுமதி செய்கிறார்கள் !

இதன்க கண்டுபிடித்த வெளிநாட்டு எற்று மதியாளர்கள் இந்திய மீனுக்கு தடைவிதிக்க எற்பாடு செய்து வருகிறார்கள் !

இவை எல்லாம் "செக்ரட்டரி லெவல்மீட்டிங்கில்" வெளிவராது !

மீனவ சங்க \ங்கள் தான் இவற்றை தெரிந்தவை !

எல்லா சங்கங்களும் இவற்றை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளுமா?

பேச்சு வார்த்தைக்கு முன்னால்  குறைந்த பட்சம் சி.ஐ.டி .யு  சங்கத்தை கலந்து கொள்ளுங்களேன்  !

பலன் நிச்சயம் கிடைக்கும்  !!!


  

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லது நடக்கட்டும் ஐயா

அப்பாதுரை said...

மீனவர் நலன் மீன் வளம்.. இவற்றுக்காக ஒரு அமைச்சர் உண்டா?
எல்லாமே ஜெவும் மோவும் தானா?