Thursday, March 06, 2014

மக்கள் ஒற்றுமைப் பணியில் 

த.மு.எ.ச ........!!!


அசோக் , மற்றும்  அன்சாரி பற்றிய பதிவினை எழுதும் , போது தமிழ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி  நினைவிலாடியது !

கோவையில் நடந்த கலவரமும் ,அதன ஒட்டிய அடக்கு முறையும் மனதில்தோன்றி  மறை ந்தது !

சிறபான்மை முஸ்லிம் மக்கள் வாழுமுக்கடம்,கோட்டைமெடுபகுதியில் வசிக்கும் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல்தவித்தனர் ! 

நகரத்தில் நடந்த கலவரத்தில் வியாபார தலங்கள் தாக்கப்பட்டன ! பிரும்மாண்டமான ஜவுளிக்கடைகளான "ஷோபா,மற்றும் ராஜேந்திரா என்ற நிறுவனங்கள் தாக்கப்பட்டன ! இது பற்றி கேட்க யாருமின்றி நகரமே ஸ்தம்பித்து இருந்தது !

இந்த சந்தர்ப்பத்தில் தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு கோவையில் நடை பெற்றது !

பிரும்மாண்ட மான முறையிலிந்த மாநாட்டில் சீத்தாராம் எச்சூரிகலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் ! பின்  நவீனத்துவம்  பற்றி அவ்ர் பேசிய உரை தனியாக பிரசுரமாக சங்கத்தால் போடப்பட்டது !

இறுதியினாளன்று வழக்கம்போல கலை இர்வும் நடத்தப்பட்டது ! கலவரம் நடந்த பின்னணியில் எந்த பொது நிகழ்ச்சியும்னடத்தப்படாத நிலையில் நிர்வாகிகள் மக்கள்மத்தியில் கலைஇரவு நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது !

"நாம் மக்களுக்காக இருக்கிறோம் ! நம்மை அந்த மக்கள் பாதுகாப்பார்கள் " உறுதி பட முடிவு செய்த தலைமையின் கூற்றை  மெய்பிப்பது போல பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர் !

மேடையில் ஷோபா  ஜவுளிக்கடை முதலாளி அழை க்கப்பட்டிருந்தார் ! அவருக்கு அருகில் ராஜேந்திரா ஜவுளிக்கடை முதலாளி அமர்ந்திருந்தார் ! இதனைப்பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்த நிகழ்ச்சி என் வாழ்நாளில் பார்த்திராத ஓன்று ! 

ஷோபா கடை பாய் ராஜேந்திரா முதலாளிக்கு  பொன்னாடை போர்த்தினார் ! ராஜேந்திரா முதலாளி ஷோபா கடைமுதலாளிக்கு பொன்ஆடைபோர்த்தினார் ! 
இருவரும் மேடையை விட்டு இறங்க " நிகழ்ச்சியை நடத்துக்கொண்டிருந்த கவிஞர் நந்தலாலா " ஒருநிமிடம் ! நில்லுங்கள் " என்றார் ! 

கூடியிருந்த மக்கள் ஸ்தம்பித்து நின்றனர்1
 "ஐயா ! நீங்கள் இருவரும் உங்களுக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாடைகளை   மாற்றி கொள்ளுங்கள் " என்றார் !
மாற்றிக் கொண்டனர் !!
ஆயிரம் ஆயிரமாக கூடியிருந்த அந்த மக்கள் கண்கள் பனிக்க கைதட்டி ஆரவரித்த் அந்த காட்சி !!!

தோழர்களே  ! உங்களால்தான் முடியும் !
உங்களால் மட்டுமே முடியும் !!!!!  









  

 

0 comments: