Sunday, November 17, 2013

 "லாகுரைக் காணாத கண் என்ன கண்ணோ "

     ( உருது நாடகம் )

(ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் கிழக்கு,மேற்கு பஞ்சாப்,கராச்சி, சிந்து,டெல்லி,ராஜஸ்தான் குஜராத் மாநலமக்கள்  நெஞசம் விம்ம கண்கள் பனிக்க பார்த்து மகிழ்ந்த நாடகமிது ! டாக்டர் அஸ்கர் வஜாகித் அவர்கள் எழுதியது ! இது நாடக விமரிசனம் அல்ல )

பஞ்ச நதிபாயும் புண்ணிய பூமியை விட்டு தஞ்ச மாக இந்தியா வந்து கொண்டிருந்தனர் மாக்கள் கூட்டம் கூட்டமாக !

இந்தியாவை விட்டு தங்கள் சொத்து சொகத்தைவிட்டு  பாகிஸ்தான் சென்று கொண்டிருந்தானர் ! மற்றொரு பகுதியினர் !

லாகூரில் வசிக்கும் சனாதனமான் குடும்பம் இந்தியா வர முடிவு செய்கிறது ! மிகப்பெரிய கூட்டுக் குடும்பம் !  அதில் சிக்கல் ! வீட்டின் கிழவி மட்டு வரமறுக்கிறாள் ! இந்த நதியின் தீரம் என் புண்ணிய பூமி ! வரமுடியாது என்கிறாள் ! வே \று வழியில்லாமல் கிழவியை தனியே விடு விட்டு மற்றவர்கள் இந்தியா வருகிறார் கள் !

பிரும்மாண்டமான் ஆந்த வீட்டில் அந்த கிழவி மட்டும்தங்குகிறாள் ! இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வந்த குடும்பம் லாகுருக்கு வருகிறது ! அரசு இந்த வீட்டில் தங்க !வக்கிறது 

முதியவர் அவர்கள் தங்கக் குடாது என்று சண்டை போடுகிறாள் ! இறுதியில் ஒரு சிறு அறையில் அந்த குடும்பம் தங்க  அனுமதிக்கிறாள் !

தினம்சண்டைதான் ! குஞசும் குளுவானுமான குழ்ந்தைகள் படுத்தும் பாடு கிழவியை கோபம்செய்விக்கும் ! விடுமுழுவதும் சுற்றி விளாயாடும் ! கிழவி கத்திக்க் கொண்டு இருப்பாள் !

காலம் மாறுகிறது ! கிழவி குழந்தைகளுக்கு மட்டும்சுதந்திரம் கொடுக்கிறாள் !அவர்கள் கிழவியோடு மட்டும் பேசுவார்கள் ! விளையாடுவார்கள் ! 

வீட்டில் பெரியவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள் ! இப்போது வீடு புறாவும் இருவரும் பழகிக் கொள்கிறார்கள் ! கிழவிக்கு முடியாமல் போகிறது ! அவள் ஒரு தனியறையில் வசிக்க குடும்பம் வீட்டைப்  பராமரிக்கிறது !

விட்டின் இஸ்லாமியப் பெரியவர் கிழவியை ஆதுரமாகப் பார்த்து கொள்கிறார் ! கிழவிக்கு இப்போதெலாம் அந்தக் குடுமபத்தின் மீது கோபம் வருவதில்லை !

கிழவி மரண மறைகிறாள் ! இறுதி  நிகழ்ச்சி  பற்றி பேசுகிறார்கள் ! "அவர் என் தாய்க்குச் சமம் ! அவருடைய புத்திரானாக அவளுக்கான  கடமையைச் செய்வேன்" என்று அந்த முஸ்லிம் பெரியவர் அறிவிக்கிறார் !   
-----------------------------------------------------------------------------------------------------------

முத்து  மாணிக்கம் ஸ்டீபன் அருள்தாஸ் என்நண்பர் !என்னோடு பணியாற்றி  ஒய்வு  பெற்றவர் !  இளம் வயதில் பிராமண ப்பெண்ணை காதலிக்க அந்த திருமணத்தை தோழர் A .B  அவர்கள் தலைமையில் தோழர்கள் நடத்தி வைத்தோம் ! 

அவரின் மனைவியின் குடும்பத்தோடு தொடர்பில்லை ! ஒருகட்டத்தில் மனைவியின் தாயாரை பராமரிக்க வேண்டிய அவசியம் அருள் தாசுக்கு வந்தது ! 

சனாதன மான ஆசாரமான் அந்த அம்மையாரை தன்   வீட்டிலேயெ ஒரு தனியறையில் தங்க வைத்தார் !

அந்த அம்மையார் சென்ற மாதம் மறைந்து விட்டார் ! அவருக்கு அந்திம காரியங்களை வைதீக முறைப்படி " Doss Villa " வில் நடந்தது!


நானும் முத்து மீனாட்சியும் அவர் வீட்டில் தங்க நேர்ந்தது ! இரவு அந்த அம்மையாரோடு ஒரே அறையில் இருந்தோம் ! இரவு பெசிக்கொண்டிருந்தோம்  !

"ஐயா ! உங்கள் ஸ்டீபன் நான் பெற்றெடுக்காத பிள்ளை "என்று
நெஞ்சம் தழுதழுக்க பர்வத வர்த்தினி மாமி கூறினார் !

(M .S . அருள் தாஸ் தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார் ) 


 


   











2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அன்பிற்குத்தான் எவ்வளவு சக்தி. நன்றி ஐயா

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி ஐயா.