Tuesday, March 12, 2013

நீதி ராஜன் ,நீதி நாயகம் ,

வன்கொடுமை தடுப்புச் சட்டம்  


அருமை தோழர் நீதிராஜன் அவர்கள் சென்னையில் தாராபூர் கோபுர வாசலில் நடக்க விருக்கும் ஆர்ப்பாட்டம் பற்றி இடுகை இட்டிருந்தார்! வன்கொடுமைச் சட்டத்தைபலப்படுத்த வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தி எழுதியிருந்தார் !

1955ம் ஆண்டு சட்டம் வந்தது! சட்டத்தை கொண்டுவந்தவர்கள் முழு மனதோடு கொண்டுவரவில்லை என்பதும் தெரிந்தது தான்! அதில் தெரிந்தே அரசியல் சட்டத்திற்கு முரணாக சில  அம்சங்களைச் சேர்த்திருந்தனர்!ராமதாஸ்     மற்றும் சிலர் அதன சுட்டிக்காட்டி எதிர்க்கின்றனர் !

1989ம் ஆஅண்டு இந்த சட்டம் விரிவு படுத்தப்பட்டது! இதன் நன்மை தீமை பற்றி பலசந்தர்ப்பங்களில் விவாதிக்கப் பட்டுள்ளது! இது பற்றி பிரம் குமார் ஷிண்டே ஒரு புத்தகம் எழுதியுள்ளார்! "dalith --The broken future என்ற அந்த நூல் தீண்டாமைஎதிர்ப்பு முண்ணணி நண்பர்கள் அவசியம்படிக்க வேண்டிய ஒன்றாகும் !

நான் பணியாற்றிய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இட ஒதுக்கீடு ஆரம்பத்திலில்லை! அது அரசு நிறுவனம் அல்ல என்று காரணம் சொன்னா ர்கள்!ஊழியர் சங்கம் (aiiea ) கடுமையாகப போராடி இட ஒதுக்கீடு வந்தது !
தலித் நண்பர்களுக்கு அந்த சலுகையைப் பெற்றுத்தந்தது!

வெளியில் உள்ள தலித் உதிரி தலவர்கள் தங்களுக்கு க்கிடைத்த வாய்ப்பாக கருதி புதிய சங்கத்தை Lic க்குள் கொண்டுவர முயன்றனர் ! 

1989ம் ஆண்டு சட்டத்தில் "தலித் அல்லாத ஒருவர் தலித் ஒருவரை சாதி சொல்லி குறிப்பிட்டால் அது தண்டனைக்குரியது "என்ற விதியுள்ளது!

இந்தவிதியினை பயன்படுத்தி aiiea சங்க முன்னணியினரை இம்சைப்படுத்த சுய நல தலித் தலைவர்கள் முயன்றனர்!

சேலம்,சென்னை,தஞ்சை,மதுரை ,கோவை பகுதிகளிலிப்படியான வழக்குகள் பதியப்பட்டான!இதனை சட்ட ரீதியாக சந்திப்பதை தவுர வேறு வழியில்லை என்ற நிலைமை உருவாகியது ! 

அப்போது Writ மனுமூலம் தடை வாங்குவதில் சாமர்த்தியசாலியான  இளம் வக்கீல் சந்துரூ  அவர்களை அணுகினோம்! தடை உத்திரவு பெற்றுத்தந்த சந்துரு அவர்கள் இந்த வாழ்க்கை மேற்கோடு தொடர வேண்டாம் என்று கூறி னார்! 

நங்கள் சங்கத்தின் தலைமையை அணுகினோம்! அவர்களும் சந்துரு அவர்கள்யோசனைதான் சரி  என்று அபிப்பிராயம் கூறினார்கள்!

"தமிழகத்தில் உள்ள தலித்துகள் கொஞ்சம் பரவாயில்லை! மத்திய பிரதேசம்,மராட்டியம்,உ.பி,பிஹார் ஆகிய வட மானிலங்களில் உள்ள தலித்துகள் மனிதததன்மையற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள்! அவர்களுக்கு உள்ள ஒரே பாதுகாப்புஇந்த சட்டம் தான்! மேல் முறையீடு செய்தால் சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ultrevires என்று சட்ட புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டு விடும்! ஆகவே அந்த நிலையை நாம் உருவாக்க கூடாது" என்பது தான் ஆலோசனையாக வந்தது!

சட்டத்தைம்கொண்டுவந்தவர்கள் இண்டு இடுக்குகளை வைத்தே தான்
கொ ண்டு வருவார்கள்! அவர்கள் சட்டத்தை எதிர்ப்பவர்களையும் மனதில் கொண்டுதான திரிவார்கள் !

இந்த சட்டம் மேலும் பலப்படுத்தபட  வேண்டும்!

தமிழாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் ஒய்வு பெற்ற நீதி  நாயகம் சந்துரு,மற்றும் சமுக ஆர்வலர்கள் இணந்து இது பற்றி விவாதித்து தலித் மக்களின் உரிமை களை பாதுகாக்க முடிவுகளை எடுக்க வேண்டும்! 





 



0 comments: