Wednesday, December 05, 2012








சமஸ்கிருத

மொழியும் கவிதாயினிகளும்.....!!

சமீபத்தில்

சென்னையில் பெண்கள் சம்மந்தமாக த.மு.எ.க.சங்கத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கு நடந்தது.அதுபற்றிய விபரங்களை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அங்கு

சில கருத்துரயாளர்கள் சமஸ்கிருத மொழியில் கவிதாயினிகளே கிடையாது என்ற கருத்தை வலியுருத்தியதாக கூறப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 60 வருடங்களாக சம்ஸ்கிருத மொழி தமிழகத்தில் கற்பிகப்படுவதில்லை. சம்ஸ்கிருதம் பற்றிய நமது புரிதல் என்பது மிகக்குறைவானதாகீ விட்டது. கிறித்துவத்தைப் பிரச்சாரம் பண்ண வந்த கால்டுவெல்,பிரிட்டோ போன்றவர்கள் கூறிய தவறான தகவல்கள் வரலாறாக்கப் பட்டு அதுவே இன்று நம்பபபடுகிறது.

சம்ஸ்கிருதம்

தேவ பாஷை என்றும்,அந்து அந்தணர்களின் மொழி என்றும் நம்பப்படுகிறது .உண்மையோ முற்றிலும் வேறானது.ராமாயனத்தை எழுதிய ரட்சன் (வால்மீகியோ) னோ கீதையை எழுதிய வியாசனோ,காளிதாசனோ பிராமணர்கள் இல்லை. சமனமும்

,பௌத்தமும் ஓங்கியிருந்து வேத மதம் பலகீனமாக இருந்த போது அதனை மீட்டுருவாக்க முயற்சிகள் நடந்தன.சங்கரன் நம்பூதிரி என்ற தத்துவ விசாரகர் அத்வைத( .Monism) பிரச்சாரம் செய்துவந்தார்.இந்தியா பூராவும் பயணம் செய்தார்.மத்தியப்பிரதேசத்தில் இருந்த மண்டன் மிஸ்ரர் என்ற தத்துவ வாதியோடு விவாதித்தார். அதில் வேற்றி பெற்றர். ஆனால் மண்டன மிஸ்ரரின் மனைவி உபவ பாரதி என்ற பெண் என்னோடு விவாதம் செய்து வேற்றி பெற்றல்தான் நீங்கள் வெற்றி பெற்றதாக எடுத்துக் கோள்ளமுடியும் என்று அறிவித்தார். சங்கரரும் விவாதத்தில் பங்கு பெற்றார். அவர் தோல்வியுற்றர். இங்கு முக்கியமானது சங்கரரின் தோல்வியல்ல.தத்துவ விசாரணையில் பெண்ணும் பங்கெடுத்துக் கொள்ளும்வாய்ப்பு இருந்தது என்பதை சுட்டிக்காட்டுவதுதான் நோக்கம்.

சம்ஸ்கிருத

மோழியில் கவிதாயினி இல்லை என்ற கூற்றுக்கு வருவோம். "செம்மலரில்" வரும் முற்போக்கு கதைகளை சம்ஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்து பிரசுரம் செய்யும் எழுத்தாளார் முத்து மீனாட்சி அவர்களிடம் கேட்டபோது அவர் சிலகுறிப்புகளை கோடுத்தார். தொன்மைக்

காலத்திலேயே பல கவிதாயினிகள் இருந்ததாகக் குறிப்பிட்டார் ."விஜ்ஜிக்கா","ஷீலாபத்தாரிகா", " விகட நிகம்பா"என்று கவிதாயினிகளின் பெயர்களை அடுக்க ஆரம்பித்தார். கொஞ்சம் பிற்காலத்தில் "க்ஷமராவ்","கமல் அப்யங்கர்" என்று பிரபலமானவர்களின் பெயரைக் குறிப்பிட்டார்."அக்னிக்ஷிகா:" என்ற தொகுப்பை எழுதிய புஷ்பா தீக்ஷித் என்ற கவிதாயினி பற்றியும் கூறினார் நவின கவிஞர்கள் பற்றி நான் கேட்கவில்லை. .

சம்ஸ்கிருத

மொழியில் கவிதாயினிகள் இல்லை என்று கூறமுடியாது என்பதை சுட்டுவது மட்டுமே இந்தக்கட்டுரையின் நோக்கம்.

3 comments:

hariharan said...
This comment has been removed by the author.
ஓலை said...

Oriental schools in Tamilnadu teaches Sanskrit.

kashyapan said...

தகவலுக்கு நன்றி தோழர் ஓலை அவர்களே! ---காஸ்யபன்.