Monday, July 23, 2012

இந்தியாவின் வருமானமும்
இந்தியனின் வருமானமும்.............


                        நான் வேலைக்கு  செர்ந்தமாதம் நான் என் கிராமத்திற்கு போயிருந்தேன்! என்  நண்பன்  படிப்பு  அதிகமில்லாதவன்  .கிளை  தபால் அலுவலகத்தில், "பாக்கர்"  வேலைக்காக  முயன்று  கொண்டிருந்தான்  .பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்.எனக்கு வேலை கிடைத்தது பற்றி மகிழ்ச்சி  தெரிவித்தான்."எவ்ளவு டே சம்பளம்?"
                              "என்ன!130 ரூ கொடுப்பான்!" அவ்ளவு தான் கத்தி கேட்டவார்த்தைசொல்லி " ஏய் இந்தப் பயலுக்கு நுறு ருக்கு மேலசம்பளம் ! எம்மா! ஆத்தா! என்ற கூவி னா ன் ! 

                         பின்னர் சம்பளம் கூடும் பொது நண்பர்களிடம் in  hundres தான் சொல்ல ஆரம்பிப்பேன்  .நான்  ஒய்வு  பெரும்  பொது  ஆயிரத்தில்  சொல்ல   ஆரம்பித்தேன்!

                               இப்போது என் பேரன் பேத்திகள் I.T. கம்பெனிகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் In Lacks  தான் சொல்லிக் கொள்கிறார்கள்!

    .                             இந்திய குடிமகன் ஒவ்வொரு மகனுக்கும் ஆண்டு வருமானம்  எவ்வளவு தெரியுமா? அரசு சென்ற ஆண்டு  கொடுத்த புள்ளிவிவரத்தின் படி  தனி நபர் ஆண்டு வருமானம் ஒவ்வொரு இந்தியனுக்கும்   54000 ரூபாயாகும் . அதாவது   இந்தியாவின் தேசிய வருமானம் அதிகரிக்க அதிகரிக்க  தனிநபர் வரூ  வருமானமும்  அதிகரிக்கிறது.அதாவது இந்த புள்ளி விவரப்படி பள்ளபட்டி குட்டி பஞ்சாயத்துல     வேலை பாக்கிற தொட்டி முனி  யான்டிக்கும் ஆண்டு வருமானம் 54000 ரூ . அவன் மனைவி,மகள்,மகன் எல்லாருமாஸ் சேர்ந்து ஆண்டுக்கு 2,00,000 கும்  மேல கிடக்கும்!   

                                 உண்மைல கிடைக்குதா? அப்பா முனியாண்டிக்கு கிடைக்க வேண்டியது எங்க போசு? எப்படிப் போச்சு?

                                 கொஞ்சம் யோசிச்சா புரியற மாதிரி இருக்கு! நான் ஆண்டுக்கு 1,08,000 வருமானம் வாங்கறேன்னா  நான் வேற ஒருத்தன் வேலையை பறிச்சுகிட்டு அவன் வருமானத்தை நான் வாங்கிக்கறேன் . என்சம்பளம்  கூடும்போது மற்றவன் கூலியை  என்னுடைய தாக்கிக் கொள்கிறேன்!  அதாவது அரசு சராசரி வருமானத்த சொல்கிறது.


                                   நாம இந்த கணக்குப்படி பாத்தா  மத்தவன் வயித்துல மண்ணள்ளி போட்டுட்டு தான் ப்ரிட்ஜ், ஸ்கூட்டார் எ.சி  எல்லம்வாங்கரமா? ஐம்பது அருபதுவர்ஷ்த்துக்குமுன்னால எமன் நகரத்துல பெட்ரோல் பம்புல காருக்கு பெட்ரோல் நிரப்பின அம்பானி
அப்படித்தானா?    பிகார் காடுகளல கஞ்சாவை பதப்படுத்தி சினா வுக்கு நுறு  ஆண்டுகளுக்குமுன்பு அனுப்பி பிழைத்த ஜெம்ஷ்ட்ஜிகளப்படித்தானா?,

           கணக்குல எங்கேயோ தப்ப இருக்கு!

                            நேர் செய்ய வேண்டும்!

6 comments:

சிவகுமாரன் said...

நேர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு அய்யா இருக்கிறது.
வெளிநாட்டு வங்கிகளில் தூங்கிக் கொண்டிருப்பதை கொண்டு வந்தாலே போதுமே ? யார் செய்வார்கள்?
வேதனையாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

இதெல்லாம் நேர் செய்ய முடியுமா என்று தெரியவில்லை ஐயா...
படங்களில் வரும் வசனம் போலே, "பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிறான். ஏழை இன்னும் ஏழை ஆகிறான்."
நன்றி.
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

John Chelladurai said...

கண்டிப்பா கணக்குல தப்பு இருக்கு ஐயா.
ஜன நாயகத்தின் அடிப்படை பண்பு பகிர்ந்து கொள்ளுதல். அதன் பெயரிலேயே தனி நபர் அளவற்ற வளர்ச்சிக்கு உரிமம் வழங்கிவிட்டது பரிதாபம். கட்டமைப்பு மாற்றம் தேவை - ஜன நாயகம், பொருளாதாரம் இரண்டிலும்.

பொருளாதார மேதை ஒருவர் நாட்டின் தலைமகனாகும் இத்தருவாயில் ஆலோசனைக்கொத்த நல்லதொரு கருத்தை நயம்படத் தந்துள்ளீர்கள் ஐயா, நன்றி, வணக்கம்.

kashyapan said...

இந்தப் புள்ளிவிபரத்தைக் கொடுத்த டாக்டர் ஜாண் அவர்களே பின்னூட்டமிட்டிருப்பது பெருமையாக இருக்கிறது!---கஸ்யபன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பட்டுக்கோட்டை எழுதிய ”திருடாதே பாப்பா திருடாதே” ஒரே பாடல் போதும் தீர்வுக்கு.

ஆனால் மனம் வேண்டுமே தீர்வுக்கு.

www.eraaedwin.com said...

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருக்கு தோழர். நிச்சயம் சரியாகும். நம்பிக்கை இழக்காமல் போராடுவோம்