Saturday, May 29, 2010

apimanyu

சென்னை வந்த பிறகுதான் செம்மோழி கருத்தரங்கு நடப்பது தெரிந்தது."சிகரம்" செந்தில்நாதனைத்


தொடர்பு கொண்டேன். "வாருங்கள், புறப்படுவோம்" என்றார்.அண்ணாமலை மன்றத்தை அடைந்த போது எழுத்தாளர் "அபிமன்யு" எங்களை வரவேற்றார்.செம்மலரின் ஆரம்பகால எழுத்தாளர்களில்

அபிமன்யுவும் ஒருவர்.காலையிலிருந்து மாலைவரை என்னுடன் அமர்ந்து கவனித்துக்கொண்டார்.பழ

ங்கதைகளை பேசி மகிழ்ந்தோம்.

செம்மலர் எழுத்தாளர்கள் ஆண்டுக்கு மூன்று முறையாவது கூடிப்பேசுவோம்.த.ச.

ராசாமணி,வையைச்செழியன்,தணிகை,காவிரிநாடன்,ச.மாதவன்,நெல்லை கந்தசாமி,தி.வ என்று

பலர் கலந்துகொள்வார்கள்.எங்கள் படைப்பு,செம்மலரைச் செழுமைப்படுத்துவது என்று விவாதிப்போம்.கு.சி.பா,கே.எம் ஆகியோர் நெறிப்படுத்துவார்கள்.தோழர் சங்கரய்யா கலை இலக்கிய,அரசியல் போக்குகள் பற்றி உரையாற்றுவார்.என் போன்றவர்களுக்கு அது கூட்டமல்ல;

ஞானச்சாலை.

இப்படிப்பட்ட கூட்டம் ஒன்றில்தான் எழுத்தாளர்களுக்கு ஒரு அமைப்பு பற்றிய

பேச்சு எழுந்தது.அப்போது இருந்த கலை இலக்கிய பெருமன்றம் செயல் பாடு திருப்தியாக இல்லாம

லிருந்தது.புதிய அமைப்பை உருவாக்குவது,அதன் கோட்பாடு இவை பற்றி விவாதிக்க வேண்டியிருந்தது





"நானும் கே.எம் அவர்களும் கலந்து கோண்டு சோல்கிறோம்"என்று சங்கரய்யா கூறினார்.வேளி

யேவந்த அபிமன்யு என் கையைக் குலுக்கினார்.நிச்சயம் சங்கம் உருவாகும் என்றார்.த.மு.எ.ச.வின்

விதை ஊன்றப்பட்டுவிட்டது.

தெற்கு ரயில்வே ஊழியர் சங்க(D.R.E.U)த்தலைவர் இளங்கோ தான் அபிமன்யு என்ற எழுத்தாளர்.

0 comments: